செருப்பை
வாசலில் விட்டுவிட்டு
கோவிலில்
நுழையச் சொன்னார்கள்
வழமையான
வேண்டுதல் பட்டியலில்
இப்பொழுது ஒன்று
கூடுதலாய்.
---------
மிக நீண்ட பேரத்தில்
படிந்த செருப்பு
கடிக்கிறது
சற்று கூடுதலாகவே.
--------
அந்த மண்டபம்
எங்கிருக்கிறது என்றவன்
அடுத்தாகவும் கேட்டான்
அந்த மண்டபத்திற்குள்
செருப்பை அணிந்து செல்லும்
சௌகரியம் இருக்கிறதாவென!
---------
ஐநூறு ரூபாய் மதிப்புள்ள
செருப்பை
காலிலிருந்து
கழட்டி விட்டு
மண்டபம் முழுக்க
மனதினில்
தூக்கியலைந்தேன்.
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ