treecuttingசுயநலத்துடன் வளர்த்தாலும்
பொதுநலத்துடன் தான்
வளர்கிறது மரம்
*
அறுக்கப்பட்டு செதுக்கப்பட்டு
அடுக்கப்பட்டு
பயணம் செய்வதைவிட
நின்ற இடத்தில்
நிற்பதொன்றும்
குறையில்லை மரங்களுக்கு
*
மக்கட் பண்பில்லா
மரங்களால்
நிரம்பி வழிகிறது
கான்கிரீட் வனம்
*
வளர்க்க வக்கற்ற வாழ்க்கை
வருடியாவது கொடு
இறந்த மரங்களை
வாசிக்கும்போதாவது

- சேயோன் யாழ்வேந்தன்