பேயை விரட்டியவனின் வேப்பிலைகளை
விரட்டிக்கொண்டிருந்தது
காற்று
________________________
தொலைந்த முகங்கள்
பத்திரமாய்
நினைவுகளில்
_________________________
மலையிலிருந்து
மழை
சறுக்கி விளையாடுகிறது
_________________________
அடரிருளிலும்
பளிச்செனத் தெரிகிறது
காகத்தின் சப்தம்.
_________________________
உயர் ஜாதி நாயொன்று
மனிதனை
இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது.
- எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ