எவ்வளவு அழகான உயிர்
கைகளின் உள்ளே படபடக்கிறது

இரயிலும் தண்டவாளமும் போல
உயிரும் உடலும்

சிறிது கீறல் விழுந்தவுடன்
பலூன் காற்றை போல்
வெளியேற தொடங்கும்

புண் மூடி வளரும் தோல்
தடவ வழவழவென தழும்பு

வரேன் வரேன் என சாவும்
வா வா என உயிரும்
துரத்தி விளையாடும்
தட்டாண் தோட்டம்

தட்டாண்களெல்லாம்
மரித்து போன நாளில்
ஒரு மிகப்பெரிய
பாம்பின் சட்டை
கிடைக்கிறது

- குமரகுரு