வேலி முள்ளெடுத்து
விரையும் காக்கை
வேம்பின் இடுக்கில்
சிருஷ்டிக்கிறது
அன்றொருநாள்
சனத்திரள் நடுவே
பெருங்குன்று நோக்கி
சிலுவை சுமந்தவனின் கிரீடத்தை .
வேலி முள்ளெடுத்து
விரையும் காக்கை
வேம்பின் இடுக்கில்
சிருஷ்டிக்கிறது
அன்றொருநாள்
சனத்திரள் நடுவே
பெருங்குன்று நோக்கி
சிலுவை சுமந்தவனின் கிரீடத்தை .