ஏதுமற்றதில் எல்லாவுமாய் இருந்து
மிக நேர்த்தியாக மீட்டிச் செல்கிறது
பெருந்துயரத்தின் கருணையற்றப் பிடியிலிருந்து
கடந்து செல்லும் பரிச்சயமற்றப் பள்ளிக் குழந்தையின்
ஒரு எளிய புன்னகையும்
சிறு கை அசைப்பும்!