கைஉயர்த்தி
அடித்தொண்டையில் இருந்து
பீறிட்டெழும்
முழக்கங்களில் கனலும்
எதிர்க்குரல்கள்

தடியடிகளிலும்
கண்ணீர்ப்புகையிலும்
பீச்சியடிக்கப்படும்
சரமாரியான
நீர் அம்புகளிலும்
உருகி வழிந்தோடுகின்றன
மக்களின்
ரௌத்திரங்கள்

எரிந்துகொண்டிருக்கும்
கொடும்பாவியின்
தீச்சுவாலைகளில் தெரிகிறது
நசுக்கப்பட்ட மக்களின்
கோபக்கனல்

இத்தனைக்கும் நடுவே

நரமாமிசம் புசித்து
ரத்தம் குடித்து
பிணவாசனைகளில்
லயித்திருக்கின்றனர்
சிம்மாசனாதிகள்