அவசரத்தேவை
வேறு
வழியேயில்லை.
தேடிச் சென்ற
நண்பன்
நாசூக்காய்
கைவிரிக்க..
உறவுகள்
உதட்டைப்
பிதுக்க..
பழகிய சில
இடங்களில்
'பழைய பாக்கியே
இன்னும்..' என
இழுக்க..
ஏதோ ஒரு
பேருந்தில்
ஏறி அமர்ந்தேன்.
நல்லவேளையாய்
காசு இருந்தது
டிக்கெட்டுக்கு.
நெஞ்சு வெடித்து
விடக் கூடாதென
அஞ்சு வரி
அதன் பின்னே
நுணுக்கி எழுதி
'அவமானம்' எனத்
தலைப்பிட்டேன்.
அழகாய் வந்திருக்க
ஆறியது சற்றே
மனசு..
கைமாத்தாகக்
கவிதையாவது
கிடைத்ததே என்று.
- ராமலக்ஷ்மி, பெங்களூர்
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- ராமலக்ஷ்மி
- பிரிவு: கவிதைகள்
விடக் கூடாதென//
ஏமாற்றத்தின் வலியினை மறக்க
ஏதோ ஒன்று அவசியப்படுகின்றது,
சிலருக்கு சில நேரங்களில் கவிதையாக,
சிலருக்கு சில நேரங்களில் உணர்வற்ற மெளனமாக.
நல்ல கவிதை மேடம்.
RSS feed for comments to this post