வெட்கம்

உணர்த்துகிறாய்.

 

சிணுங்கி

சிரிக்கிறாய்.

 

கோபம்

காட்டுகிறாய்.

 

கேள்வி

கேட்கிறாய்.

 

எதிர்ப்பு

காட்டுகிறாய்.

 

ஒப்புதல்

தருகிறாய்.

 

எப்படி வாய்த்தது

இப்படியொரு

வார்த்தைச்சிக்கனம்

உனக்கு மட்டும் ?

 

ஓரெழுத்து வார்த்தையில்

உணர்ச்சிகளனைத்தும்

காட்டிச்செல்ல

- க.ஆனந்த்

 

Pin It