*
பாதையோரமாய்
கசங்கிக் கிடக்கிறது
யாரோ ஒருவர்
தவறவிட்டுச் சென்ற
பிரபஞ்சமொன்று
அதனுள் நிரம்பி நிற்கும்
அழச் செய்த
ஆதங்கங்களை
சமுத்திரத்தின்
பேரலைகளோடு
ஒப்பிடலாம் ..
நிஜ உலகின்
பூவொன்று
மலரும் அதிர்வில்
துகள்களாகச்
சிதறிப்போனது
அண்ட சராசரத்தின்
பெரும் பகுதி ஓன்று..
***
- கலாசுரன்