எல்லாமும் தேவதைதான்..
ஒன்று காளியாய்
ஒன்று சூலியாய்
ஒன்று சரஸ்வதியாய்
ஒன்று வராஹியாய்
ஒன்று லக்ஷ்மியாய்..
 
பெயரெழுதிய
சோறைப்போல
தனக்கானதை மட்டும்
உண்ணும்
ஒழுக்கம் வளரட்டும்..
 
எல்லா தேவதையும்
சிறகடித்து
கண்முன்னே
பறந்து கொண்டிருக்கலாம்
தன் சுய தேவதையோடு
கை கோர்த்து..
 
தேவதைகளின்
தரிசனத்தில்
தனக்கான ப்ரத்யேக
தேவதையைத்
தொலைத்துவிட்டு
 
இன்னொன்றைத்
தேடித்  தொடர்ந்து
தூக்கமும் கனவுமற்று
விழித்தே இறக்காமல்
 
விழிப்புற்று
கிடைத்ததே வரம்தானென
தன் தேவதையின்
இறகு பிடித்து
மறைந்து கொள்ளலாம்
அல்லது பறந்து
அதனோடு களிக்கலாம்..