இது நாள் வரையிலான
சிரமங்களின்
இறுதி மதிப்பீடு
இனியும் வெளிவராவண்ணம்
இருப்பில் முடக்கியதொரு நெஞ்சம்
எதிர் வரும் தருணத்து
இக்கட்டான கதிர் வீச்சின்
அழைப்பு மணியோசை கேட்க
துயரத்தின் சாவியிட்டு
இலகுவான நிரந்தரங்களை
இழக்க காத்துக்கிடக்கிறது.
கண்ணீரின் அங்கீகாரம்
கவனிக்கப்படாமல்
முடங்கியே கிடக்கிறது.
தளர்ந்து போன மனதில்
முனகல் சத்தம் மிச்சமிருக்கக்கூடும்.