ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த கருங்கம்மாள் என்ற தலித் பெண்ணை, அக்கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மற்றும் முத்து என்ற சாதி இந்துக்கள் 1.3.2006 அன்று பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தியுள்ளனர். இவர்கள் வசிக்கும் ராமநாதசுவாமி நகரில் தலித் மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளுமில்லை. குறைந்தபட்சம் கழிப்பறைகூட இல்லாததால், அம்மக்கள் அருகில் இருக்கும் வேதனைகுழை தோப்பைத்தான் கழிப்பறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட, இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட கருங்கம்மாளே தனக்கு நேர்ந்த கொடுமைகளைப் பதிவு செய்தும் முதல் தகவல் அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல்கள் பதிவாகியுள்ளன. பாலியல் கொடுமை நடைபெற்ற 24 மணி நேரத்தில், மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும். ஆனால், ஒரு வாரத்திற்கும் மேலாக இதைச் செய்யாமல் காலத்தைக் கடத்தி வருகிறது காவல் துறை. இங்கு பாலியல் வன்கொடுமைகள் தொடர, காவலர்களின் மெத்தனப் போக்கே காரணம். முனியசாமி மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யக் கோரியும், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அருந்ததியர் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
- பூமிநாதன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?
- கருஞ்சட்டைத் தமிழர் மார்ச் 23, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தேர்தல் பத்திரங்கள் மூலம் மெகா மோசடி
- நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
- நான் கேரண்டி
- விவரங்கள்
- பூமிநாதன்
- பிரிவு: தலித் முரசு - ஏப்ரல் 2006