வெகுதூரம் எடுத்துச்செல்கிறது

அந்தக்கடல் பறவை

என் பார்வைகளை.

prema_eelamபறவையின்  கால் நகம் என் பார்வையை

சிதைக்காமல் இருக்கும் பொருட்டு

மிகவும் கவனமாக இருக்கிறது.

பறத்தலின் விதியிலும்

எந்த வித ஊறும் விளையாதபடிக்கு

கடந்து போக வேண்டிய

கடமையும் அதற்கிருந்தது.

மாதங்கள் இரண்டு கழிந்த பிறகு

என் உள்ளங்கைகளில்

தந்திரமாகத் திணிக்கிறது

கொத்திக்கொண்டு சென்ற

என் பார்வைகளிரண்டை.

எங்கும் மரண ஓலங்கள்

உறவுகள் தொலைத்து

அனாதையான அவலங்கள்.

உயிர் வாழ்தலே மையப்புள்ளியாய்

வாழ்க்கையை நகர்த்த வதைபடும்

என் இன மக்கள்.

கனவுகளைத் தொலைத்து

சுய கௌரமும் இழந்து

என் மக்களின் கண்ணீர்

மிகக்கொடிய அமிலமாகி

கடலில் பெருமளவில் கலக்க

கரைகளெங்கும் சிதறிக்கிடக்கிறது

என்னைப்போல

ஒரு கோடி அமிலக்கண்கள்.

 

-பிரேம பிரபா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It