கல்வி என்பது வெறுமனே பட்டம் பெறுவதற்கும், பதவி பெறுவதற்குமான ஒரு துருப்புச்சீட்டு அல்ல. கல்வி என்பது விடுதலையின் திறவுகோல். ஆளுமையின் குறியீடு. விழுமியங்களின் அடையாளம். வளர்ச்சியின் திசைகாட்டி. அங்கன்வாடி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை கல்வியின் ஒவ்வொரு அடுக்கிலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இத்தகைய புரிதலின் அடிப்படையில் கல்வியை அணுகினால், சில காத்திரமான இலட்சியங்களை நாம் தொகுத்துக் கொள்ள முடியும். இந்தப் புரிதலின் அடிப்படையில் கீழ் கண்ட பரிந்துரைகள் மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கும் குழுவிற்கு முன் வைக்கப்படுகின்றன. ஒரு பகுதி பள்ளிக் கல்வி குறித்தும், மற்றொரு பகுதி உயர்கல்வி குறித்தும் அமைந்துள்ளன.

பகுதி -1

பள்ளிக் கல்வி குறித்த பார்வையும்-பரிந்துரைகளும்

மழலையர் கல்வி :

தொடக்கக்கல்வி :

எல்லாவற்றைக் காட்டிலும், ஆங்கிலவழிக் கல்வி இல்லை என்றால், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும், வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடும் எனும் நியாமான அச்சம் பெற்றோர்களிடம் உள்ளது. அதைப் போக்குவதற்கான ஆக்க வழியிலான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

எனவே இப்படிப்பட்ட நம்பிக்கையை ஊட்டத்தக்க மாற்றுப் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதன் வழியாக மட்டுமே பெற்றோர்களிடையே தமிழ் வழிக் கல்வி குறித்த நம்பிக்கையை உருவாக்க முடியும்.

வண்ணங்களின் கலவைகள் குழந்தைகளின் மனதில் மகிழ்வை ஊட்டுவதால், ஒன்றைப் படைக்க வேண்டும் என்ற உணர்வு இயல்பாகவே உந்தப்படும். குழந்தைகள் தங்கள் படைப்பை மகிழ்வோடு பிறருக்குக் காட்டுவதால், தனது உணர்வை மற்றவர்களோடு பகிர்தல் என்ற பண்பு வளரும். அது போன்று பிறரின் படைப்புகளைப் பார்த்துப் பாராட்டும் பண்பும் வளரும். இவை போன்ற பல பண்புகள் வளர்வதற்குக் காரணமாக இருப்பது கலைக்கல்வி. இதைத் தொடக்கப் பள்ளியில் இருந்து குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.

உயர்நிலைப்பள்ளிக்கல்வி :

மேனிலைப் பள்ளிக்கல்வி :

கல்லூரிக் கல்வி சேர்க்கை :

தேர்வுகள் குறித்த அணுகுமுறை :

பள்ளிக் கல்வி நிர்வாகம் குறித்த அணுகுமுறை :

பள்ளிக் கல்வியை நிர்வகிக்க இப்பொழுதுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஒரு மாவட்டத்திற்கு ஒரேயொரு முதன்மைக் கல்வி அதிகாரி என்பது போதுமானதல்ல. குறைந்த அளவு இரண்டு முதன்மைக் கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அதேபோல் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாவட்டக் கல்வி அதிகாரிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப் பட வேண்டும். கோத்தாரி கல்விக்குழுவும் கண்காணிப்புப் பணியில் கூடுதல் அலுவலர்களை நியமிக்கப் பரிந்துரை செய்துள்ளது இங்கு கருதத் தக்கது.

கல்வி நிறுவனங்களில் சமூகநீதி :

பள்ளிக் கல்வி குறித்த பிற கோரிக்கைகள்

கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கு ...

இன்று கல்வி, பன்னாட்டு நிறுவனங்களின் தேவைக்கானதாக மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. அதே போல், தேசிய இனங்களின் கல்வி இறையாண்மை முற்றிலும் ஒன்றிய அரசால் பறிக்கப்பட்டு விட்டது. 1964 - 66 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசால் அமைக்கப்பட்ட கோத்தாரிக் கல்விக்குழு, மாநிலங்கள் அளவில்தான் கல்வி இருக்க வேண்டும் என்பதை மாற்ற வேண்டாம் என வலியுறுத்திய பின்னரும், 1976 நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, கல்வி, மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

விளைவாக, கல்வி மையப்படுத்தப் பட்டதாக மாறிவிட்டது. இதனால் ஆங்கில மருத்துவக் கல்விக்கு மட்டுமின்றி, தமிழ்ச் சித்த மருத்துவம் படிப்பதற்குக் கூட இந்திய ஒன்றிய அரசின் ஒப்புதலுக்குக் காத்துக் கிடக்க வேண்டிய அவலநிலை உருவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து தனியார்மயமாகவும், மதமயமாகவும் கல்வி மாறிவிட்டது.

தமிழ்நாட்டு அரசின் ஆளுகையின் கீழ் அரசுப் பள்ளிக்கூடங்களும், மெட்ரிக் பள்ளிக்கூடங்களும்.. J இயங்குகின்றன. சிபிஎஸ்சி, கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்கள் இந்திய அரசின் நேரடித் தொடர்பில் இயங்குகின்றன. இவை தவிர பல நூற்றுக்கணக்கான பன்னாட்டுப் பள்ளிக்கூடங்களும் தமிழ்நாட்டில் இயங்குகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டு அரசு இயற்றிடும் கல்வி தொடர்பான ஆணை, அது எதுவாக இருந்தாலும், அரசு மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்களில் மட்டுமே அது செல்லுபடியாகுமே அல்லாமல், இந்திய அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனம் தொடர்பான பள்ளிக்கூடங்கள் எவற்றிலும் செல்லுபடியாகாது. அக்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டு அரசை மதிப்பதே இல்லை. தமிழ்நாட்டு அரசின் கல்விக்கூடங்களை இந்திய அரசுக் கல்விக்கூடங்களும் ஏற்பதில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசுக்கு மட்டுமே கல்வியில் முழு அதிகாரம் என்கிற வகையில் கல்வித்துறையை மாற்றாமல், நாம் முன் வைக்கிற எந்தக் கோரிக்கையையும் நிறைவேற்ற முடியாது. தமிழ்நாட்டின் கல்வியைப் பிற அரசுகள் தீர்மானிக்க முடியாது. தமிழ்நாடு அரசுதான் அதைத் தீர்மானிக்க முடியும். அந்த வகையில் மாநிலங்களுக்குத்தான் கல்வி உரிமை என்பது அடிப்படைத் தேவைக்குரியதாகிறது. எனவே அதை முதன்மையான கோரிக்கையாகத் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

பகுதி - 2

உயர்கல்வி சார்ந்த கொள்கைக்கான பரிந்துரைகள்

பாடத்திட்டம்

 - பொதுவான குறிக்கோள் பட்டியலில் இன்னும் சிலவற்றைச் சேர்க்கலாம்.

இந்த நோக்கங்களை நிறைவேற்ற புதுமையான மற்றும் உயிரோட்டமான கற்றல் சூழ்நிலைகள் தேவைப்படலாம். மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட நடைமுறைகள் வழக்கமான பாடத்திட்டத்தில் வடிவமைக்கப்பட்டு இடமளிக்கப்பட வேண்டும்.

பாடத்திட்ட வடிவமைப்பு:

நிதி குறித்த கொள்கைகள்

ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள்

ஒட்டுமொத்த கல்வி முறையின் முதுகெலும்பாக ஆசிரியர்கள் இருப்பதால், ஆசிரியர்களின் திறன்கள் மற்றும் முன்னோக்குகளை வலுப்படுத்துவதில் மாநில அரசு மிகுந்த கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். வழக்கமான புத்துணர்ச்சி மற்றும் நோக்குநிலை படிப்புகளை நடத்துவதைத் தவிர, அனைத்து நிறுவனங்களிலும் சில நடைமுறைகள் மேற்கொள்ளப்படலாம். அவற்றில் சில:

பணி நியமன மற்ற விதி முறைகள் குறித்த பரிந்துரைகள்

கல்விக் கட்டணம்

மாணவர் நலன்

கல்வியில் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பிறர் நலன் காத்தல்

ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு

கற்பித்தலின் தரத்தை மதிப்பிடுவதற்கு ஒரே மாதிரியான கட்டமைக்கப்பட்ட அளவுகோல் இருக்க முடியாது.

______________________________________________________________________________ _______________________

ஒருங்கிணைப்பாளர்கள்:

பேரா.இரா.முரளி

பேரா.வீ. அரசு

பேரா.பா.சிவக்குமார்

கல்வியாளர் கண குறிஞ்சி

ஆசிரியை உமா மகேஸ்வரி