அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்னும் இளைஞரைக் காதலித்த ஒரே செயலுக்காக, பறையர் சாதியைச் சேர்ந்த கோகிலா என்னும் இளம்பெண் விழுப்புரம் மாவட்டத்தில் சொந்தக் குடும்பத்தினராலேயே கொல்லப்பட்டிருக்கிறாள். ஜுனியர் விகடனில் இச்செய்தி வெளிவந்திருக்கிறது. ஆனாலும் தமிழகம் எவ்வித எதிர்ப்பையும் வெளிப்படுத்தாமல் மயான அமைதி காப்பது, ஏனோ தெரியவில்லை. இச்சூழலில் கார்த்திகேயனிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் பேசியவற்றையும், வெளிவந்திருக்கும் செய்திகளின் அடிப்படையிலும் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.
செய்திக்குள் போவதற்கு முன் தமிழ்நாட்டில் தலித் உட்பிரிவு சாதிகளிடையே நிலவும் சாதி ஏற்றத்தாழ்வு பற்றிச் சிலவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட இதே சாதி ஏற்றத்தாழ்வு நிலை தான் இந்தியா முழுவதும் இருக்கிறது என்றே சொல்லலாம். பறையர்கள், பள்ளர்கள், அருந்ததியர்கள் ஆகிய மூன்று பிரிவுகள் தாம் தமிழ்நாட்டில் உள்ள மூன்று முக்கியமான தலித் சாதிகள் ஆகும். இவர்களுள் பறையர்கள் கல்வியில் மற்ற இரு பிரிவுகளைக் காட்டிலும் ஓரளவு முன்னேறிய பிரிவினராக இருக்கிறார்கள்; பள்ளர்களுக்குச் சில இடங்களில் கொஞ்சம் நிலபுலன்கள் இருக்கின்றன. அருந்ததியர்கள் செருப்புத் தைக்கும் தொழிலிலும், துப்புரவுத் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது, அருந்ததியர்களைக் காட்டிலும் பள்ளர்களும் பறையர்களும் கொஞ்சம் மேலோங்கிய நிலையில் இருக்கிறார்கள்.
அதற்காக, வன்னியர், கவுண்டர், தேவர் ஆகிய சாதிகள் அருந்ததியர்களை எப்படிப் பார்க்கிறார்களோ அதே போல் தான் பள்ளர்களும் பறையர்களும் அருந்ததியர்களைப் பார்க்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இம்மூன்று சாதிகளும் ஒற்றுமையாக நல்ல புரிந்துணர்வுடன் இருக்கிறார்கள். ஆனாலும் அது சில பகுதிகளில் மட்டும் தானே தவிர, எல்லாப் பகுதிகளிலும் இல்லை. பறையர் சாதியில் உள்ள படித்த சிலர், இச்சாதிகளுக்குள் நிலவும் உறவைக் கெடுக்கும் வேலையைச் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
கவனித்துப் பாருங்கள் – பறையர் சாதியைச் சேர்ந்த அறிவுஜீவிகளுள் ஒருவர் கூட, இதுவரை தாழ்த்தப்பட்டவர்கள் எல்லோரும் சமம் என்று சொல்லியதில்லை. இது இப்படியே போகட்டும். குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று என்னவென்றால், அருந்ததியர் சாதியைச் சேர்ந்த ஓர் ஆண், பறையர் சாதியையோ பள்ளர் சாதியையோ சேர்ந்த ஒரு பெண்ணை மணப்பதை பறையர் சாதியும், பள்ளர் சாதியும் ஏற்றுக்கொள்வதேயில்லை.
தருமபுரியில் பறையர் மக்களுடைய வீடுகளைச் சூறையாடிய வன்னியர்களைப் போலவே (தருமபுரி கொடுமைக்கு முன்பாகவே) பறையர்களும் வன்கொடுமையைச் செய்திருக்கிறார்கள். வன்கொடுமை நடந்த இடம் – விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகில் உள்ள பள்ளிநெல்லினூர். இவ்வூரில் 40 பறையர் வீடுகளும் மூன்று அருந்ததியர் வீடுகளும் உள்ளன. தம்முடைய மனைவியை அவளுடைய அப்பாவும், உறவினர்களும் சேர்ந்து கொன்று விட்டதாகக் கடந்த நவம்பர் 10ஆம் நாள் கார்த்திகேயன் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கூறியிருக்கிறார்.
இனி தினக்கூலியாக வேலை பார்க்கும் கார்த்திகேயன் சொல்வதைப் பார்ப்போம்:
"எட்டாண்டுகளுக்கு முன்னர் நான் கோகிலாவும் கண்டமங்கலம் வள்ளலார் உயர்நிலைப்பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். நாங்கள் இருவருமே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் வேறு வேறு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அவள் பறையர் சமூகம், நான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன். கோகிலாவின் பெற்றோர், எங்களுடைய திருமணத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதால் நாங்கள் கமுக்கமாகக் கடந்த 1.12.2010 அன்று கடலூரில் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொண்டாலும் இருவருடைய பெற்றோரும் ஒப்புக்கொள்ளும் வரை இருவரும் தனித்தே வாழ்வது என முடிவு செய்து கொண்டோம். கோகிலா பக்கத்தில் உள்ள மருத்துவத்துறை சார்ந்த நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம்.
எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்த விடயம் அண்மைக் காலத்தில் கோகிலாவின் அப்பா, அம்மாவுக்குத் தெரிய வந்தது. தெரிய வந்தவுடன் அவளை வேறு யாராவது ஒருவருக்கு மணம் முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அவளுடைய பெற்றோர் மாப்பிள்ளை தேடத் தொடங்கிவிட்டார்கள். அதைக் கோகிலா கடுமையாக எதிர்த்ததால் அவளை மாமா வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அங்கு அவளை மிக மோசமாக அடித்து உதைத்துத் துன்புறுத்தி வேறு ஒரு திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவள் அதற்கு மறுத்துவிட்டாள். திடீரென 2012 நவம்பர் 8ஆம் நாள், ‘நாங்கள் உன்னையும் உன் கணவனையும் சேர்த்து வைத்து விடுகிறோம்’ என்று அவளிடம் சொல்லி அவளை வீட்டுக்குக் கூட்டிச் சென்று விட்டார்கள். அங்கு அவளைத் தனியறையில் மூன்று நாட்கள் அடைத்து வைத்து, தற்கொலை செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார்கள். நடந்த இவை எல்லாவற்றையும் என்னிடம் கோகிலாவே சொன்னாள். அவள் சொன்னவாறே கொடுமைகள் நடந்திருக்கின்றன என்பதற்கு என்னிடமும் பல சான்றுகள் இருக்கின்றன.
நவம்பர் 9 ஆம் நாள் நான் கோகிலாவை அலைபேசியில் கூப்பிட்டேன். ஆனால் அவளுடைய எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மறுநாள் காலை அவள் இறந்து விட்டதாக என்னிடம் தகவல் சொன்னார்கள்.
கோகிலாவை அவளுடைய பெற்றோரே கொன்றுவிட்டார்கள். உடனடியாகப் பக்கத்தில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று நான் புகார் கொடுத்தேன். காவல் ஆய்வாளர் எங்கள் ஊருக்கு வந்து கோகிலாவின் சடலத்தைத் தருமாறு கேட்டார். ஆனால் அவளுடைய பெற்றோர் கொடுக்க மறுத்துவிட்டனர். பின்னர் சடலத்தை அவர்கள் எரித்து விட்டார்கள். இப்போது அடிக்கடி அவளுடைய பெற்றோர் என்னைக் கூப்பிட்டு ‘புகாரைத் திரும்ப வாங்கு அல்லது கோகிலாவிற்கு நடந்தது தான் உனக்கும் நடக்கும்’ என மிரட்டுகிறார்கள்."
ஜூனியர் விகடனில் வெளிவந்த செய்தியைப் பார்ப்போம்.
நான் (நிருபர்) கோகிலாவின் நண்பர்களுடன் பேசியபோது அவர்கள் தெரிவித்ததாவது: “கோகிலா கார்த்திகேயனைக் காதலித்ததும் அவர்கள் திருமணம் செய்து கொண்டதும் உண்மை. கார்த்திகேயன் கோகிலாவை அடிக்கடி துவிச்சக்கரவண்டியில்(பைக்) கொண்டுபோய் கோகிலா வேலை பார்க்கும் இடத்தில் விட்டு விட்டு வருவார். கோகிலா தானும் கார்த்திகேயனும் திருமணம் செய்து கொண்டதாகவும் அது அவளுடைய பெற்றோருக்குத் தெரியாது எனவும் தெரியவந்தால் மிகப் பெரிய சிக்கலாகிவிடும் என்றும் அடிக்கடி கூறுவாள். ஆனால் அண்மைக்காலமாக அவள் தன் தந்தையிடம் தன்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்லிவிடப் போவதாக எங்களிடம் கூறிவந்தாள். ஆனால் அவள் தன் தந்தையிடம் சொல்லவே இல்லை. நாங்கள் அதைப் பற்றிக் கேட்டபோது அதற்கு அவள், “என் தந்தை மிகவும் கௌரவமாக வாழ்ந்து வருகிறார். என்னுடைய திருமணம் பற்றிய உண்மை தெரிந்தால் அவருடைய கௌரவத்திற்குக் களங்கம் ஏற்படும். என்னால் என்னுடைய பெற்றோருக்கு எந்தத் துன்பமும் வரக்கூடாது” என்று கூறினாள். கோகிலா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குக் கோழையான பெண் அல்ல. அவள் தான் 'கார்த்திகேயனுடன் இணைந்து வாழ்வேன்' என்று சொன்னாள்.”
அந்தச் சிற்றூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலிமையாக உள்ளது. ஆனால் அவர்கள் இந்த விவகாரத்தில் அமைதி காக்கிறார்கள். இதன் பொருள் என்ன?
இந்த விவகாரத்தைப் பற்றி யாருமே பேசாதது அதிர்ச்சி அளிக்கிறது. தருமபுரி கொடுமை பற்றி இணையத்தில் செய்திகள் பரவிக்கிடக்கின்றன. ஆனால் இந்த விவகாரத்தைப் பற்றி மிகச் சிறிய அளவிலேயே செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழகத்தில் அருந்ததியர்கள், பறையர்களால் சாதிய வன்கொடுமைக்குள்ளாக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இந்தச் சாதிய வன்கொடுமை, சாதியக்கொடுமை மட்டுமல்ல; இது பெண்களுக்கு எதிரான வன்முறையாகும். ஒரு பறையர் சமூகத்துப் பெண் ஒரு துப்புரவு தொழிலாளியை மணக்கக் கூடாது என்ற சாதி மனப்பான்மையே இந்த கொலைக்குக் காரணமாகும். உண்மை அறியும் குழுக்கள் பல தர்மபுரிக்குச் சென்றன. ஆனால் யாரும் இந்த விவகாரத்தைப் பற்றி விசாரிக்கச் செல்லாதது ஏன்? (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: கடந்த சில தினங்களுக்கு முன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளர் அரங்க.குணசேகரன் தலைமையில் உண்மை அறியும் குழு சென்று விசாரணை செய்திருக்கிறது)
தலித் இயக்கங்களும் தலைவர்களும் தர்மபுரி நிகழ்வே சாதிய வன்கொடுமைக்குச் சிறந்த சான்று என்று பேசி வருகின்றனர். ஆனால் அவர்கள் இங்கே பெண்களுக்கு எதிரான வன்முறை, சாதிய வன்முறையாக உருவெடுத்துள்ளதைப் பற்றிப் பேச மறுக்கின்றனர். ஒவ்வொரு சாதியும் தம் சமூக மக்களின் எண்ணிக்கையைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றன. இதற்குப் பெண் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதால் (வேறு சாதியைச் சார்ந்த ஆணைக் காதலித்து விடுவாள் என்பதால்), பெண்கள் ஆணாதிக்கத்திற்கு மிக எளிதாக இலக்காகின்றனர்.
பறையர் சமூகத்துப் பெண்களை மணந்ததற்காக அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த ஆண்கள் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும், அந்த ஆண்களின் சகோதரிகள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட நிகழ்வுகளும் அதிகம். காதல் திருமணமே தர்மபுரி வன்முறைக்குக் காரணம் என்று பலரும் பேசி வருகின்றனர். ஆனால் ஆதிக்க சாதியைச் சார்ந்த பெண், தன்னைவிட தாழ்ந்த சமூகத்தைச் சார்ந்த ஆணைக் காதலிக்கக் கூடாது என்ற ஆதிக்க சாதி மனப்பான்மையே வன்முறைக்குக் காரணமாகும். தமிழ்நாட்டில் வன்னியர்கள் தங்கள் சமூகத்துப் பெண்கள் பறையர் சமூகத்து ஆண்களைத் திருமணம் செய்வதை எதிர்க்கின்றனர். ஆனால் அவர்கள் வன்னிய ஆண்கள், பறையர் பெண்களைத் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்வதில்லை. பறையராக இருந்தாலும் சரி, பள்ளராக இருந்தாலும் சரி, வன்னியராக இருந்தாலும் சரி, ஆணாதிக்கமே சாதிய அமைப்பின் அடிப்படையாக இருக்கின்றது. பறையர்கள் தங்களுடைய பெண் தங்களை விட சாதிப்படிநிலையில் கீழ்நிலையில் உள்ள அருந்ததிய ஆணைத் திருமணம் செய்ததற்காக அவளைக் கொன்றதையே மேலே குறிப்பிட்ட நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
கடந்த காலங்களிலும் சரி, நிகழ்காலத்திலும் சரி, அருந்ததியர்களின் சிக்கல்கள் கவனம் பெறுவதில்லையே ஏன்? தலித் தலைவர்களும் அறிவுசீவிகளும் உட்சாதி முரண்களைக் களைய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. மேலும் அவர்கள் அமைதியாக இருப்பதன் மூலம், அருந்ததியர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஆதரவளிக்கின்றனர். மேற்சொன்ன விழுப்புரம் நிகழ்வு இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
ஆங்கிலத்தில் - இரவிச்சந்திரன்
தமிழாக்கம் - முத்துக்குட்டி, நரேந்திரன்
படம் நன்றி: ஜுனியர் விகடன்
இரண்டு பேருக்குள்ளுமே ஒரு வெறுப்பு உண்டு, இதில் மேல் கீழ் எல்லாம் எதுவும் இல்லை.
ஆனால் அருந்ததியர் பொருளாதர அளவிலும் எண்ணிக்கையிலும் பின் தங்கி உள்ளனர்.
அளவுகள் பண்புகளை தீர்மானிக்கும் என்பது போல பறையர்களுக்கு ஆதிக்க உணர்வை இது தந்து இருக்கிறது. ஆனால் இதில் மேல் கீழ் என்ற தெளிவான உளவியல் கூறு இதில் இல்லை.
இரண்டு பேருமே மற்றவரிடம் பெண் எடுப்பதையோ குடுப்பதையோ கீழாக பார்கிறார்கள்.
இதில் பெண் எந்த சாதியோ அவர்கள் (அருந்ததியர் அல்லது ஆதிதிராவிடர்) தங்கள் கெளரவம் குறைந்ததாக எண்ணுகிறார்கள்.
எனவே இதை சாதிய வன்கொடுமையாக ஏற்றுக்கொள்ளகூட ாது. அதே நேரத்தில் இது கண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்ப்படவ ேண்டும்.தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இருவரும் திருமணத்தில் கலக்க ஒரு ஒருகிணைப்பு வேண்டும். நான் ஒரு பறையர் இனத்தை சேர்ந்தவன் ,ஒரு அருந்ததி பெண்ணை மணக்க போகிறேன். இதில் உள்ள சிக்கல்கள் எனக்கு முழுமையாக தெரியும். புரட்சிகர சக்திகள் இதில் பங்கேற்று ஒரு புதிய இணைப்பிற்கு துவக்கம் ஏற்படுத்த வேண்டும் என அழைக்கிறேன்.
இன்றைக்கு இருக்கும் நிலைமையைப் பார்த்தால், இன்னும் குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு, ஒரு கூட்டத்திற்கு கவலையில்லை என்றே தோன்றுகிறது.
கொடியது.சாவு வரை விடாது.திருந்து ங்கள் சகோதரர்களே!நாம் அனைவரும் படைத்த இறைவனின் பிள்ளைகள்.ஒரு தாய் மக்கள். தமிழன் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு! இல்லையேல் வீழ்வு!
அவரது ஆகச்சரியான கருத்துப் பதிவுக்கும். திருமணத்திற்கும ்...
Ii is very pathetic to see your statement that parayers don't have any motivation to undertreat arunthathiyars. This is very untruth statement as it should be quantified by the way and nature of atrocities carried out by paraiyers on arunthathiers.
As per the ground reality, there is hardly any report or incident of such artocities are carried out by arunthathiyers on paraiyers are reported here, that is arunthathiyars had attacked paraiyers on any matters like intercaste marriage, etc. This itself is a clear evidence of atrocities of paraiyers on arunthathiyers.
Also your untrue statements that arunthathiyars are less in numbers is also another false information if you could see 1991 census of tamilnadu that one third of tamil nadu scheduled caste population is arunthathiyars. 2001 data is wrongly interpreted.
Also it is true that arunthathiyars are facing more atrocities from paraiyers than the caste hindus in another truth.
Lots of your information is pro-paraiyer position rather than for social thought process.
Above all this fact finding team didn't come with truth. This is rather pro-parayers castist report.
Don't think paraiyer can alwaysfool every one that they are clear in the mind and thought process and are good ambedkarite.
Anyway long live paraiyer way of social change.
tamil
தொடர்ந்து விவாதிப்போம்.
தலித்துகளுக்கு இடையே உள்ள பிரச்சனையில் நில சாதி ஆதிக்கம் இல்லை, அதே நேரத்தில் எல்லாத் தலித்களிடமும் சாதி வேறுபாடுகள் , உணர்வுகள் , முரண்பாடுகள் உள்ளன. அவை நிலத்தின் உரிமையாலும், அது ஏற்படுத்திய உறவினாலும், இந்து சமயத்தின் நியாப்படுத்துதல ினாலும் ஏற்பட்டவை அல்ல, உண்மையில் அவை அடிமைதனத்தின் விளைவுகள் .
இவை கொங்கு பறையர், கிழகத்திய பறையர், மேற்கத்திய பறையர்களிடமும் உண்டு.
கொங்கு பறையர் கொங்கு கவுண்டர்களிடம் அடிமை வேலைப்பார்தனர் எனவே அதே போல் விதவைகள் வெள்ளை நிறத்தில் ஆடை அனிந்தனர், அனியாத மற்றவரை கீழாக கவுண்டர் கண்ணோட்டத்தில் பார்த்தனர்.
கிழக்கத்திய பறையர் - பந்த படையாச்சிகளிடமும்
மேற்கத்திய பறையர்- அரச படையாட்டிகளிடமு ம் இருந்து அவர்கள் திருமண சடங்கை அடிமைத்தனத்தின் விளைவாகப் பெற்றனர். மற்றவரை கீழாக ஆதிக்க மனோநிலையில் பார்க்கின்றன்ர்.
இதே தான் அருந்ததியர் விசயத்திலும் நடந்துள்ளது.
மன நிலையில் பறையரை கீழாக பார்த்துக்கொண்ட ு அவர்களால் எந்த பறையரையும் உடலியல் ரீதியாக சாதி வேறுப்பாட்டை காட்டவில்லை என்றால் இதன் பொருள் என்ன? தமிழ்.
ஆதிக்க சாதிகள் இந்த முரண்பாட்டைத்தா ன் எதிர் பார்கின்றன. ஒரு வேளை வன்கொடுமை சட்டம் பறையர் மீது அருந்ததியரோ, அருந்ததியர் மீது பறையரோ ஏவும் நிலை வந்தால், என்னவாகும்?
அதிக்க சாதி மீது அருந்ததியர் வன்கொடுமை புகார் கொடுத்தால் பறையரை பகடைகாயாக்கி ஆதிக்க சாதி புகார் தந்த அருந்ததியர் மீதே வன்கொடுமை ஏவும். இது மறுதலையாகவும் நடக்கலாம்.
இது நட்பு முரண்பாடக பார்க்கவேண்டும் தமிழ். (கொடுமை பெரிதாக நடந்தால் அப்படி பார்ப்பது மிகச்சிரமம்தான்)
இதை தவிர்க்கத்தான், தடுக்கத்தான் , கண்டிக்கத்தான். ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பு வேண்டும் என்கிறேன் ,
நான் தயார் அந்த அமைப்பை உருவாக்க, நீங்கள் வருவீர்களா?
அங்கே சொல்லுங்கள் உங்கள் நியாங்களை . நடுநிலை தவறாத நீதியுடன் நடத்துவோம் , இணைவோம் முரண்பாட்டை களைய!
These types of leveling of issues are older things which was debated by parayer when parayer VCK (this is not representing the whole dalit people is another information)sta rted beating/killing /raping arunthathiyars in the parayer dominated areas.
Your statements are thoroughly parayarist statements. If you are very serious for the social change you should have taken part in both the dharmapuri incident as well as in the kandamangalam incident(villup uram). The whole proclaimed tamil progressive organisation is suppressing the kandamangalam incident at the cause of dharmapuri incident. If any one seeks for atrocities act against dharmapuri incident and neglecting the kandamangalam incident is a clear example of castism.
Every one is brought up in the caste atmosphere, but your position(of progressinvenes s) is decided on how and where you stand is at the time of crucial decision. Will you be able to give one example in the arunthathiyar dominated place, where parayer boy or girl is murdered/raped and killed for this type of inter-caste marriage by arunthathiyar people?. Is there is any arunthathiyar organisation is behind any such incidents?.
In case of kandamangalm incident whole parayers and VCK party is behind the incident. The present president of kandamangalam village president is from VCK-party. The whole victim family voted for the vck candidate and made him won(except the kokilas husband karthikeyan),bu t the president stood with his parayer caste with the blessing of VCK leaders.
Your way of calling for the negotiation for the murder in case of arunthathiyar issue and calling for the strong action against is a nothing but castism.
I am not very much surprised with your statements. These type of your statements are old wine my dear, you are the new bottle thats it.
This is a chance given for the parayer by the arunthathiyar to evolve from your castist attitude. Even now if educated people like you are not ready to evolve and educate parayer kin and kith and it will be difficult for you to evolve. I surprised why arunthathathiya rs are not so firebrand like anyother suppressed community by holding weapons for the self protection. That is a serious thing to be analysed.
Anyway long live parayer ambedkarism and psuedo progressiveness.
Tamil
சாதி மறுப்புத் திருமணம் செய்ய விழையும் தோழர் இமயவரம்பன் அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுதல்களைய ும் கூறிக்கொள்கிறேன ். காசிமேடுமன்னாரு .
all dalits are one and one only. there should not be a differentiation amongst us. then only we can fight against the so called higher caste people. As such we are not fighting , we are trying to save our lives and hard earned. Donot create upper or lower in our sector itself. Atleast the intelluctuals try to spread the message we are all one blood and we will unite to atleast save our innocent brotheren .
RSS feed for comments to this post