சாதியப் பிரச்சினைகள் பற்றி ஹரிஜன் பத்திரிக்கையில் காந்தியார் எழுதிய கருத்துகளுக்கு அண்ணல் அம்பேத்கர் பதிலளிக்கும்போது "இவ்வாறு நான் அவருக்குப் பதில் அளித்து உள்ளதால், அவர் கூறியுள்ளவை முக்கியமானவை என்று பொருளாகாது. இந்துக்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாக மதிப்பதோடு, அவர் வாய் திறந்தால் பிறர் தம் வாயை மூடிக் கொள்ள வேண்டும், தெருவில் போகும் நாயும் குரைக்கக் கூடாது என்ற அளவுக்கு அவருடைய சொற்கள் போற்றப்படுவதனாலேயே இதைச் செய்துள்ளேன்" என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், பாரதியார் மானுட விடுதலைக் கருத்தியலுக்கு முற்றமுழுக்க எதிரானவர் என்று பெரும்பான்மை மக்கள் உணராத நிலையிலும், அவருடைய மானுட விடுதலை எதிர்ப்புச் சிந்தனையை மறைத்து அவரை உத்தமபுத்திராகச் சித்தரிப்பதில் பார்ப்பனர்கள் மட்டுமல்லாது ஒடுக்கப்பட்ட மக்களும் பெருமளவு இணைந்து இருப்பது வருத்தத்திற்கு உரியது.
பாரதியார் தமிழ் மொழியில் புலமை மிக்கவர். வெண்பா, ஆசிரியப்பா, விருத்தம் இன்னும் பல வடிவங்களில் செய்யுட்களை இயற்றுவதில் வல்லவர். அதைவிட முக்கியமான விஷயம் பண்டிதர்களிடையே சிறைபட்டுக் கிடந்த தமிழ் மொழியை அவர்களிடம் இருந்து விடுவித்து, எளிய, பாமர மக்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பணியை நேர்த்தியாகச் செய்தார். இதை நிச்சயமாகப் பாராட்டித் தான் ஆக வேண்டும். ஆகவே புலமையிலும் எளிமையிலும் அவரை ஒரு மகாகவி என்று கூறுவது பொருத்தமே ஆகும். ஆனால் அவர் பெண் விடுதலைக்காகவும், சாதிய விடுதலைக்காகவும் போராடியவர் என்றும் பொதுவுடைமைக் கொள்கையைத் தூக்கிப் பிடித்தவர் என்றும் கூறுவது பொருத்தமற்றது மட்டுமல்ல; உண்மைக்கு நேர் எதிரானதும் ஆகும்.
முதலில் பெண் விடுதலையை எடுத்துக் கொள்வோம். அவர் தன்னுடைய 'மாதர்' என்ற கட்டுரையில் "பெண்ணை ஸம்பாத்யம் பண்ணி பிழைக்கவிடக் கூடாது. அவளுக்குப் பிதுரார்ஜிதத்தில் பாகம் இருக்க வேண்டும். கலியாணம் செய்து கொண்டால் புருஷனுடைய சொத்து அவளுடையதாகவே பாவிக்க வேண்டும்" என்று கூறிவிட்டு, பின் பற்பல கற்பனாவாதங்களை, அவை கற்பனாவாதங்கள் என்று நன்கு புரிந்து கொண்டே அடுக்கிக் கொண்டே போகிறார். இவற்றைக் காணும் ஒருவர் எப்படி எப்படி முயன்றாலும் அவர் ஒரு பெண் விடுதலைவாதி என்று நினைக்கவே முடியாது. பெண்கள் பொருளாதார சுதந்திரம் அடையாத வரையில் அவர்களுக்கு உண்மை விடுதலை இல்லை. 'பெண்ணைப் பொன் போல் போற்ற வேண்டும்' 'பெண்கள் வீட்டின் கண்கள்' 'பெண்களைக் கண்டால் ஆண்கள் வணங்க வேண்டும்' என்ற பித்தலாட்டஙகள் எல்லாம் புராணக் குப்பைகளிலேயே கூட உள்ளன. இவற்றை மீண்டும் கூறுவதினால் ஒருவர் எப்படி பெண் விடுதலையை முன்னெடுப்பவராகக் கொள்ள முடியும்? அதுவும் ஐரோப்பியப் பெண்கள் வேலைக்குப் போய்ப் பொருளாதார விடுதலை பெற வேண்டும் என்று போராடுகிறார்கள் என்று தெரிந்து கொண்ட பிறகும் "ஐரோப்பிய ஸ்திரி ஸ்வதந்திர முயற்சிக்காரருடைய அபிப்பிராயத்திலிருந்து என் அபிப்பிராயம் பேதப்படுகிறது" என்று கூறியிருக்கிறார் என்றால் பெண் விடுதலை பற்றிய ஞானம் இல்லை என்றோ பெண் விடுதலை கூடாது என்பதற்காகக் குழப்புகிறார் என்றோ தான் நினைக்க வேண்டியுள்ளது. எப்படி இருந்தாலும் பெண் விடுதலை உணர்வாளர் என்று கூறவே முடியாது.
'பெண்மை வாழ்க' என்று கூறப் புறப்பட்ட பாரதியார் "பெண்ணறத்தினை ஆண் மக்கள் வீரந்தான் பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை" என்றும் 'பெண்கள் விடுதலைக் கும்மி'யில் "சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவோம்" என்றும் கூறி, பெண்களின் பாதுகாப்பு ஆண்கள் கையில் தான் என்பதையும், ஆண்களைச் சமையல் வேலை செய்ய வைத்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வையும் வெட்டவெளிச்சமாகவே காட்டி இருக்கும் பாரதியாரைப் பெண் விடுதலைப் போராளியாக .. வேண்டாம்.. பெண் விடுதலை விரும்பியாகவாவது எப்படி நினைக்க முடியும்? அவருடைய விருப்பம் எல்லாம், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைவதன் மூலம் ஆண்கள் அதிக சுகத்தை அனுபவிக்க முடியுமே என்ற ஏக்கத்தில் நிலைத்து இருந்ததே ஒழிய, பெண்கள் விடுதலை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் துளியும் இருந்ததில்லை.
சரி! இப்பொழுது பாரதியாரின் சாதிய விடுதலை உணர்வையும் பொதுவுடைமைக் கருத்தின் மீதான காதலையும் அலசிப் பார்ப்போம். "ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி" என்ற சொற்களை வைத்துக் கொண்டு பாரதியாரின் பொதுவுடைமைக் காதலைப் பலவாறாகப் பாராட்ட வேண்டும் என்று பாரதி புகழ்பாடிகள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இப்பாடல் ரஷ்யாவில் 1917 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதலாளிகள் அரசைக் கைப்பற்றியதில் மகிழ்ந்து எழுதினாரா அல்லது நவம்பர் மாதத்தில் லெனின் ஆட்சியைக் கைப்பற்றியபோது எழுதினாரா என்பது பற்றிய தெளிவில்லை. இப்பாடலில் லெனின் பற்றியோ பொதுவுடைமை இயக்கம் பற்றியோ ஒரு சொல் கூட இல்லை. பிப்ரவரி மாதத்தில் முதலாளிகள் ஆட்சியைக் கைப்பற்றியபோது ஜார் அரசன் வீழ்ந்ததைப் பற்றித் தான் பாரதியார் கூறியிருக்கிறார்.
சரி! ஐயமுள்ள விஷயத்ததைப் பற்றி விவாதிக்க வேண்டாம். சோவியத் ஆட்சி அமைந்த பின், சுரண்டலாளர்களுக்கு எதிராக லெனின் அரசு எடுத்த நடவடிக்கைகளுக்காக, பாரதியார் தெளிவாகத் தெரிவித்து உள்ள கருத்துகளை அலசிப் பார்க்கலாம்.
பாரதியார் தன்னுடைய 'தொழிலாளர் பெருமை' கட்டுரையில் ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே கூர்மை அடையும் முரண்பாடுகளை விளக்கி விட்டு இந்தியாவில் இது போன்று முரண்பாடுகள் கூர்மை அடைய விடக் கூடாது என்றும் ஆரம்பத்திலேயே கவனித்து கிளர்ச்சிகள் நிகழா வண்ணம் வர்க்க சமரசத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறார். அதாவது வர்க்க சமரசம் ஏற்பட வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கமே ஒழிய தொழிலாளர் விடுதலை அடைவது அவருடைய நோக்கம் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆகவே முதலளித்துவவாதிகள் வேண்டுமானால் பாரதியாரைக் கொண்டாடிக் கொள்ளலாமே ஒழிய, பொதுவுடைமைவாதிகள் நிச்சயமாக பாரதியாரை ஏற்றுக் கொள்ள முடியாது.
பொதுவுடைமைவாதிகள் பாரதியாரை எற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவரை நிராகரிக்க வேண்டியது இல்லையே என நினைப்பவர்கள் அவருடைய செல்வம்(1), செல்வம் (2) என்ற கட்டுரைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். சோஷலிச அரசை அமைத்த பிறகு அதை எதிர்த்துக் கலகம் செய்த உள்நாட்டு வெளிநாட்டுச் சுரண்டலாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகைள அறிந்து கொதித்துப் போகிறார். சிலர் சோவியத் அரசைப் பற்றிய தவறான தகவல்களின் அடிப்படையில் அப்படி எழுதி இருக்கலாம் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை என்று அவருடைய சொற்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றன. சுரண்டலாளர்கள் மீது பலாத்காரத்தைப் பிரயோகிக்கக் கூடாது என்றும் அன்பினால் மட்டுமே அவர்கள் மனதை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். தாங்கள் தாக்கப்படும்போது எதிர்த் தாக்குதல் தொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாக லெனின் கூறுவதைச் சுட்டிக் காட்டி விட்டு "லெனின் வழி சரியான வழியில்லை" என்றும் இது போன்று சுரண்டலாளர்களைப் பலாத்காரமாகத் தண்டிப்பவர்கள் பரம மூடர்கள் என்றும் கூறுகிறார். இவ்வாறு 'லெனின் வழி சரியான வழி இல்லை' என்று நேரடியாகவும் 'லெனின் பரம மூடர்' என்று மறைமுகமாகவும் கூறியுள்ள பாரதியாரை முதலாளித்துவவாதிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொள்ளலாம். பொதுவுடைமைவாதிகள் பாரதியாரை நிராகரிக்ககாமல் இருப்பது கொடும் குற்றமாகும்.
சரி! பாரதியாரின் பொதுவுடைமை எதிர்ப்பு இத்துடன் நின்று விடவில்லை. பொதுவுடைமையின் மூலம் மானுட விடுதலை கிடைக்காது (!?) என்று தெளிவாகப் புரிந்து கொண்ட பாரதியார், மானுட விடுதலைக்காக அளித்துள்ள தீர்வைப் பார்த்தால், இப்படிப்பட்ட மகானுபவரை உலகம் இது வரை கண்டதில்லை என்றும் இனியும் காண முடியாது என்றும் நிச்சயமாகத் தோன்றும். அவருடைய தீர்வு என்ன தெரியுமா? ஒவ்வொரு ஊரிலும் உழைக்கும் மக்களும் சுரண்டல்வாதிகளும் அவ்வூரிலுள்ள கோயிலின் முன் ஒன்று கூடி எதிரெதிரில் நின்று கொள்ள வேண்டும். சுரண்டலாளர்கள் தங்கள் உடைமைகள் யாவும் தவறான வழிகளிலேயே பெறப்பட்டு இருந்தாலும், அவற்றைப் பிடுங்கிக் கொள்ளக் கூடாது என்று சொல்வதை உழைக்கும் மக்கள் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். (வாசகர்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும்; தவறான வழியில் பெறப்பட்ட உடைமைகளையும் பிடுங்கக் கூடாது என்று பாரதியார் தெளிவாகக் கூறுகிறார்) அதன் பின் உழைக்கும் மக்கள் கடமை தவறாமல் சுரண்டும் வர்க்கத்தினருக்காக உழைக்க வேண்டும். சுரண்டல் வர்க்கத்தினரோ உழைக்கும் வர்க்கத்தினரை விட்டால் வேலை செய்வதற்கு ஆட்களில்லை என்பதால் அவர்களுடைய கஷ்டங்களை நினைத்து நெஞ்சு உருகுவதாகவும் இனிமேல் அப்படி கஷ்டப்பட விட மாட்டோம் என்றும் தெரிவிப்பார்கள். பின் அவரவர்கள் தங்கள் தொழில்களைச் செவ்¨வாயகச் செய்ய வேண்டும் என ஒப்புக் கொண்டு அப்படி ஒரு பட்டயம் எழுதி அதைக் கோயிலில் அடித்து வைத்து விட வேண்டும். இது தான் சமூகப் பிரச்சினைகளுக்கு பாரதியார் தரும் தீர்வு. இது பெரும் நகைப்புக்கு உரியது என்பது ஒரு புறம் இருந்தாலும், பழைய வர்ணாசிரம முறையில் இருந்து இம்மியளவும் மாற்றமில்லாதது என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு வர்ணாசிரம தர்மத்திற்காக ஏங்கும் ஒருவர் சாதிய விடுதலையை முன்னெடுப்பவர் என்று எப்படி நினைப்பது?
பொதுவுடைமை கருத்துகள் வலுப்பெற்றால், தங்கள் இன நலன்களுக்கு முடிவு வந்து விடுமோ என்ற அச்சமும், பார்ப்பன ஆதிக்கப் படிப்பு தளர்ந்து விடக் கூடாது என்ற வெறியும் கொண்ட பார்ப்பனர்கள் பொதுவுடைமை இயக்கங்களில் ஊடுருவி உள்ளதால் தான் பொதுவுடைமைக் கொள்கைக்கு நேர் எதிராகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்ட பாரதியார் பொதுவுடைமைவாதியாகவும் மானுட விடுதலைப் போராளியாகவும் உண்மைக்கு மாறாகச் சித்தரிக்கப்படுகிறார். பொதுவுடைமை இயக்கங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்புத் தோழர்கள் உண்மையை உணர வேண்டும். பொதுவுடைமை இயக்கங்களில் இருந்து பார்ப்பனர்களைக் களையெடுத்தால் ஒழிய அவ்வியக்கங்கள் தவறான திசையில் பயணிப்பதைத் தடுக்க முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
- இராமியா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: கட்டுரைகள்
ஆனால் அந்த கையோடு பாரதி மீது சேற்றையும் வாரி பூசியிருக்கிறார ். பாரதியிடம் அவர்கண்ட குறைகளை பலவாகச் சொல்லலாம். நாம் அதைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.
1. பாரதி பார்ப்பணக் குலத்தில் பிறந்தவர். இதற்கு பாரதி என்ன செய்ய முடியும்? வேறு யார்தான் என்ன செய்ய முடியும்? எந்த ஒரு மனிதனுக்கும் தான் பிறக்கும் சாதியைத் தேர்வு செய்ய முடியாதே! மதத்தை வேண்டுமானாலும் பிறந்து வளர்ந்த பிறகு தேர்வு செய்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் சாதி? அதை மாற்ற யாராலும் மாற்ற முடியாதே! எனவே பாரதி பார்ப்பனக் குலத்தில் பிறந்தவர் என்பதற்காக அவரை பழித்தல் சரியன்று. பார்ப்பனக் குலத்தில் பிறந்த காரணத்தால் அவருக்கு சில வாய்ப்புகள் எளிதில் கிட்டியிருக்கலா ம். அதற்கும் அப்பொழுது நிலவிய சமூக அமைப்பே அன்றி பாரதியின் தனிப்பட்ட தவறு என்ன இருக்கிறது? பார்ப்பனக் குலத்தில் பிறந்ததை நல்ல வாய்ப்பாக கருதி அதைப் பயன்படுத்தி பெயரையும் புகழையும் தேடிச் சென்றிருந்தால் நாம் பாரதியைக் குறை சொல்வதில் நீதி இருக்கிறது. ஆனால் பாரதியோ இதற்கு நேர் எதிரான பாதையில் சென்றவன். இயன்ற பொழுதில் தன்னுடைய எதிர்ப்பை வெளியிட்டவன்.பா ர்ப்பனப் பிறப்பை கைவிட்டவன். இரு பிறவியாளன் என்பதே பார்ப்பனுக்கு உள்ள மரியாதைகளில் தலை சிறந்தது. அதற்கு ஒரு அடையாளமாகவே பூணூல் அணிவிக்கப்படுகி றது. அதையே அறுத்து எறிந்தவன் பாரதி. அது ஒரு நூல்தான் அதை யார் வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என்பதைக் காட்டுவதற்காகவே தாழ்த்தப்பட்டவர ான கனகலிங்கத்திற்க ு அதை அணிவித்தவன். அவன் தன்னுடைய வாழ் நாள் முழுவதும் பார்ப்பனக் கடமைகளைச் செய்தான் என்பதற்கு சான்று கிடையாது.(
சந்தியாவ ந்தனம்., வேள்வி செய்தால் ........ ........ இவையே பார்ப்பனக் குலத்திற்கும், வர்ணாசிரம் தர்மத்திற்கும் அளவு கோலாகும். இவை எதையும் செய்யாதவன் பாரதி. அப்படிபட்டவனை பார்ப்பனன், வர்ணாசிரம் தர்மத்தை தூக்கிப் பிடித்தவன் என்றெல்லாம் கூறுவது நேர்மையான ஆய்வாளர்களுக்கு ............... .. ஆனால் பெரியார் வாதிகள் அதை காலம் காலமாய் செய்து வருகிறார்கள். அதையே இராமியாவும் சற்று வேறு மாதிரி செய்திருக்கிறார ். நன்று. பெரியார் தெலுங்கு பேசும் .....பஜலிகா.... .......... கன்னட........ நாயுடு குலத்தில் பிறந்தவர். செல்வந்தர். வணிகர். அதனால் அவர் தமிழரன்று என்று வாதிடுபவர்களுக் கும் இவருக்கும் என்ன வேறுபாடு? இருசார்பினரும் பிறப்பை வைத்து மட்டுமே மனிதனை எடை போடுகிறார்கள் என்பதால் இதுவும் ஒரு வகை புதிய பார்ப்பனீயமே அன்றி வேறில்லை.
பார்ப்பனக் குலத்தில் பிறந்தாலும் பாரதி பார்ப்பனர்களை போற்றவில்லை. அவர்களிடம் இருந்து எந்த உதவியையும் பெறவில்லை. அவர்களும் பாரதி உயிருடன் இருந்த காலம் வரையிலும் அதற்கு பிறகு சிறிது காலம் வரையிலும் பாரதியை மதிக்கவில்லை. மாறாக மிதித்தவர்கள்.ப ாரதி ஒரு கவியே அல்ல என்று உரைத்தவர்கள். பாரதியும் அவ்வாறே தன்னுடைய பள்ளுப். பாட்டில் பார்ப்பானை அய்யரென்றே காலமும் போச்சே. வெள்ளைப் பரங்கியை துரை என்ற காலமும் போச்சே. என்று ஆனந்தப்பள்ளு ........... பாடியவன். ....சூத்திரனுக் கு ஒரு நீதி தண்டச் சோறு உண்ணும் பார்ப்பனுக்கு ஒரு நீதி. என்று வசை மாரி பொழிந்தவர். அவரை பார்ப்பனன் வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடித்தவர் என்று கூறுவது பொருந்தாத கூற்றாகும். ராஜாராம் மோகன் ராயைப் பற்றிக் கூறுகையில் பாரதி இவ்விதம் எழுதுகிறார். "சிறந்த சமூக சீர்திருத்தவாதி யான இவர் இறக்கும் பொழுது அவருடைய மார்பில் பூணூல் தவழ்ந்ததாம். இறைவனுக்கு பார்த்த திரு நாட்டில் சுத்த.. வீரன் ஒருவனைப் பிறப்பிக்க இன்னும் மனம் வரவில்லை. போலும்". இதன் உட்பொருள் இறந்த பிறகும் கூட பூணூல் அணிந்து/ அணிவித்து இருப்பது சமூக நீதிக்கு எதிரானது அதை தமது கொள்கையை வெளிப்படுத்துகி றது அவர் இறந்த பொழுது அவருடைய மார்பில் பூணூல் இருந்தது என்பதற்கு சான்றுகள் இல்லை. அப்படிப்பட்ட கவியை பார்ப்பனக்கவி என்பது சரியன்று. அந்த காலத்தில் பெரியாரையும் திராவிடக்கழகத்த ினரையும் தவிர மற்றவர்கள் பார்ப்பனர்களை. அய்யர் என்றே அழைப்பர்.பார்ப் பனர்களை எதிர்த்து பேசும் அண்ணா போன்றவர்கள் கூட ஆரியர்கள், ...வடவர்கள்.... . மாற்றார்கள் என்றுதான் பேசுவார்கள். ஆனால் பாரதியோ பார்ப்பனன் என்று துணிவாக தன்னுடைய பாடலில் முழங்கினான்.அது அவனுடைய மன உறுதியையும் ஏய்த்து பிழைக்கும் பார்ப்பனர்பால் இருந்த வெறுப்பையும் காட்டுகிறது. அதனால் தீமைகள் பல்லாயிரம் வந்த போதும் தன்னுடைய கருத்தினை மாற்றிக்கொள்ளவி ல்லை. மற்ற பார்ப்பனர்களும் அவரைத் தம்முடைய இனமாக அங்கீகரிக்கவில் லை. அவர் இறந்து பலகாலம் சென்று அவருடைய கவிதை மேதமையை உலகம் புகழ ஆரம்பித்த பிறகுதான் அவரை பார்ப்பனர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்".
2. பாரதி ஒரு கவிஞன். எனவே அவனுடைய கவிதைகளில் நால்வகை பகுப்பு முறையை ஆதரித்து, தொடர்ந்து எழுதி இருக்கிறானா என்றுதான் நோக்கவேண்டும். அதை விடுத்து ஞான ரதத்தில் எழுதி இருக்கிறார்.கட் டுரையில் எழுதி இருக்கிறார். பாரதியின் கவிதைகளே விடுதலை வேள்வியில் துணையாய் நின்றவை. அவருடைய ஞான ரதத்தை படித்தவர்கள் எத்தனை பேர்? மேலும் ஞான ரதத்தில் எந்த இடத்தில்நால்வகை பகுப்பு முறையை ஆதரித்துள்ளார் என்று தெளிவுபடுத்தினா ல் நல்லது.
3. பாரதி பெண்விடுதலையை பற்றி பாடவில்லையாம்.அ ரைத்த மாவையே அரைத்தவனாம். நெஞ்சறியப் பொய் சொல்கிறார் இராமியா. சொல்புதிது,சுவை புதிது என்று நவநவமாய் புதிய செய்திகளைத் தமிழுக்குத் தந்தவன். சென்றிடுவீர் எட்டுத்திக்கிலி ருந்தும் கலைச் செல்வங்கள் கொணர்ந்து இங்கு சேர்ப்பீர் என்று கட்டளையிட்டவனை பார்த்துஅரைத்த மாவையே அரைத்தவன் என்கிறார். பெரியார் சொன்னதை மட்டுமே வைத்துக்கொண்டு காலத்தை போக்கும்பெரியார ் வாதிகளைப் பார்த்து இதைச் சொல்லியிருந்தால ் சரியாக இருந்திருக்கும் . சொந்த புத்தி வேண்டாம். பெரியார் தந்த புத்தி போதும். என்று முழங்குபவர்கள் அல்லவ?! அவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் .அப்படித்தான்.. ..... தெரியும்.
பெண் விடுதலைப் பற்றி பாரதிக்கு முன்னும் ஏன் பின்னும் கூட (மத நூல்களை விடுங்கள்). தமிழ்நாட்டில் உள்ள சங்கப்பாடல் முதல் வள்ளுவர் வரை யாராவது பெண் விடுதலை குறித்து பாரதியைப் போல் உரத்துப் பாடி இருக்கிறார்களா? சாதம் செய்ய வந்தோம் என்று பாடினார். அதன் மூலம் ஆண்கள் சமையல் செய்யக்கூடாது என்று வகை செய்தார். என்று எழுதுகிறார். இராமியா நெஞ்சறியப் பொய் சொல்கிறார். அதற்கு அடுத்தாற் போல் சட்டங்கள் செய்யவும் பட்டங்கள் ஆளவும் பாரினில் பெண்கள் பிறந்து வந்தோம். என்று எழுதியிருப்பதை படித்தும் மறைத்துவிட்டார் . ஒருவேளை சட்டம் என்றால் மரசட்டம், பட்டம் என்றால் வானில் பறக்கும் பட்டம் என்று எண்ணிவிட்டார் போலும். தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை. என்று சொன்னதால் தொட்டிலை பெண்களுக்கு ஒதுக்கி செய்துவிட்டார். என்றால் தொல்லுலகை ஆளும் கை என்பதன் மூலம் உலகத்தையே பெண்களுக்கு ஒதுக்கீடு செய்துவிட்டாரென ்று சொல்லமுடியுமா?ப ெண்ணியம் பற்றியகருத்தாக் கத்தின் உச்ச கட்ட உரைகல் கற்பு பற்றியகருத்தாகு ம். இதிலும் நேர்மையாக இருந்தவர் பாரதியார்.
தொல்காப்பியம் முதல் வள்ளுவம் , கம்பராமாயணம் வரை அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்று பிதற்றிக் கொண்டு இருக்க அச்சமும் நாணமும் நாயகட்கு வேண்டுமாம் என்று சீறியவன் பாரதி. கற்பென்று சொல்ல வந்தால் அதை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம். என்று நீதி செய்தவன். வள்ளுவர் கூட பரத்தையிடம் செல்லாதே என்றுதான் கண்டித்தார். அதற்கு முன்பிருந்த புலவர்கள் பரத்தமையைத் தமிழருக்கான ஒழுக்கமாகவே செய்துவிட்டு போனவர்கள். பாரதிதான் முதலில் கற்பென்றால் அது இருவருக்கும் வேண்டும். என்று சொன்னவன். பின்னர் பெரியாரும் அதை வலியுறுத்தி தனக்கே உரிய பாணியில் சொன்னவர். இத்தகைய பாரதி பெண் விடுதலையைப் பற்றி அரைத்த மாவையே அரைத்தவன் என்கிறார். ஒரு வேளை அவர் படித்த மனு நீதி நூலில் பெண்களுக்கு இத்தகைய உரிமைகள் உண்டு போலும்.
பாரதியார் தனது சீடராக விளக்கிய கனக சுப்புரத்தினத்த ிற்கு பாரதிதாசன் என்று பெயர் சூட்டியதை அடிமைத்தனம் என்கிறார். சீடன் கேட்டார். குரு அளித்தார். இதில் இராமியாவிற்கு ஏன் குத்தல். சுயமாக சிந்தி நான் சொல்லுவதையெல்லா ம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. என்று பரப்புரை செய்தவர். பெரியார் அவருக்கே பெரியார் தாசர்களும், பெரியார் அடிமைகளும் பெரியார் .அட்ப்பொடிகளும் .. இருக்கிறார்கள். கண்ணதாசன், கம்பதாசன், சக்திதாசன் என்று ஏராளமான தாசர்கள் உண்டு. இது தமிழனின் தனிக்குணம் அதற்கு பாரதியை ஏன் குறை சொல்ல வேண்டும்? தனக்கு பிடிக்காவிட்டால ் பாரதிதாசன் அந்த பெயரை அப்பொழுதே தூக்கி எறிந்திருக்கலாம ே? பாரதியப் பற்றி மிக உயர்ந்த கருத்துக் கொண்டு வாழ்ந்தவர் பாரதிதாசன். சிந்தனைச் சிற்பி, செந்தமிழ் தேனி,நீடு துயில் போக்க பாடி வந்த நிலா,படரும் சாதி.படைக்கு ஓர் மருந்து என்று போற்றியவர். அப்படி இருக்க இராமியா ஏன் துடிக்கிறார். செல்லியின். கவிதைகளில் ஈடுபாடு கொண்ட பாரதியார் தனக்கேஷெல்லிதாச ன் என்று புனைப்பெயர் சூட்டிக் கொண்டார் என்பதை அவர் அறிவாரோ என்னவோ?
எட்டப்பனை (எட்டையபுரத்து அரசனை) பாடியவர் கட்டபொம்மனைப் பாடவில்லை என்பது இராமியாவின் பெருங்குற்றம். எட்டய புரத்து அரசனைப் பற்றி என்ன பாடிவிட்டார்? தன்னிடம் பணம் இல்லாத போது பணம் தரச் சொல்லி ஒரு சீட்டுக் கவி எழுதி அனுப்பினார். கட்டபொம்மன் அவர் காலத்தில் இருந்திருந்தால் அவனையும் பாடியிருப்பார். மேலும் கட்டபொம்மன் விடுதலை போராட்ட வீரனா அல்லது தனது அரசைக் காப்பாற்றிக் கொள்ள போரிட்ட அரசனா என்பதே அய்யமாக இருக்கிறது. பார்ப்பனர்களைப் ,பற்றித்திட்ட வேண்டுமானால் சோவைத் திட்டலாம் சு. சாமியைத்திட்டலா ம் அல்லது நான் ஒரு பாப்பத்திதான் என்று சட்ட அவையில் உரக்க அறிவித்துக்கொண் டவரை,பற்றிதிட்ட லாம் ஆனால் ராமியாவிற்கு செத்துப்,போன பாரதிதான் கிடைத்துள்ளான் அய்யோ பாவம்
உங்கள் உரைகல் படிப் பார்த்தாலும் 30 கோடி மக்களின் முழுமைக்கும் சம உரிமை என்பது உஅரைகள்படியும் பாரதியை மானுடவிடுதலைக்க ாரனாகவே காட்டு கிறது .உண்மையை உங்கள் கண்ணாடி வழியாகத்தன் எல்லோரும் பார்க்கவேண்டும் என்பதுதான் கொடுமை
நாம் கூறும் விகிதாசாரப் பங்கீட்டு முறை மட்டுமே நிலைமையைத் தலை கீழாகப் புரட்டிப் போட்டு விடும் என்று என்றைக்குமே கூறவில்லை. இது ஆரம்பம் என்று தான் கூறுகிறோம். இது முடியாத பட்சத்தில் மற்றவை பயனற்றுப் போகும் என்றும் கூறுகிறோம்.
இதற்கு சான்றூ? ஒருவேளை தாங்கள் நீதிகட்சியை பாரதியார் எதிர்த்தார் என்பதை வைத்து கூறுகிறிர்கள் என்று எண்ணுகிறேன் நீதிக்கட்சி வெள்ளையர் ஆட்சியை விரும்பியது அடிமையாக் இருப்பதையும் விரும்பியது பார்ப்பன அடிமையாக இருப்பதை விடவும்வெள்ளையர ் அடிமையாக இருப்பதுமேல் என்றும் கருதியது . அதனால்தாணே பெரியார் 1947ஐ துக்க நாளக அறிவித்தார்? அத்தகைய நீதிக் கட்சியின் செயல் திட்டத்தை பாரதி போன்ற தீவிர தேசிய வாதிகள் எதிர்த்ததில் ஒன்றும் வியப்பில்லை வெள்ளையானவெளியே றிய பிறகு நமது சண்டைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிய குழுவில் அவரும் ஒருவற் அதில் பிழை ஒன்றும் இல்லையே
RSS feed for comments to this post