தமிழகத்தில் முன்னெப்போதும் இல் லாத வகையில் வரலாறு காணாத கடுமையான மின்வெட்டு 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம்வரை அமலில் உள்ளது. கிராமப்புறங்களில் பல இடங்களில் ஒரு நாளில் வெறும் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம்தான் மின் சப்ளை வழங்கப்படுகி றது.

இதனால் மக்கள் படும் அவதி சொல்லி மாளாது. மின் வெட்டால் தொழில் நிறுவனங்கள், ஆலைகள், சிறு தொழில்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது என்பது ஒருபுறமிருக்க, மக்களின் இயல்பு வாழ்க் கையே வெகுவாக பாதிக்கப்பட்டு, சொல்லொண் ணாத் துயரத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

மின் விசிறி, குளிர்சாதனப் பெட்டி, மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சிப் பெட்டி என்று பழக்கப்பட்டுவிட்ட மக்கள் இரவில் தூக்கமிழந்து அவதிப்படுகின்றனர்.

மனிதனின் அதி முக்கிய அடிப்படைத் தேவையே உணவு, உடை, இருப்பிடம், குடிநீர், சுகாதாரம் ஆகிய வைதான். இதற்கு அப்புறம்தான் ஏனைய தேவைக ளும் வசதிகளும். ஆனால் இந்த அடிப்படைத் தேவைகள் மின்சாரத்தின் மூலமே பூர்த்தியாகிறது என்கிற வாழ்க்கை முறைதான் இன்று வியாபித்திருக் கிறது.

அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படும்போது அல்லது கிடைக்காதபோது கோபம் என்பது இயல் பாக ஏற்படும். இதனால்தான் மின்சார அலுவல கங்களைக் கூட தாக்கத் தொடங்கியிருக்கின்றனர் பொது மக்கள்.

சாலை மறியல், போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி என்ற ஜனநாயக வழிமுறைகளைக் கடை பிடித்து மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த மக்கள், இன்று வன்முறையைப் பிரயோகிக்கும் நிலைக்குச் சென்றிருப்பதற்கு அர சாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஏற்கெனவே மின் சப்ளை இல்லாமல் தூக்கம் தொலைத்து மன ரீதியாக எரிச்சலும், வெறுப்பும், கோபமுமான மனநிலையில் மக்கள் இருந்து வரும் நிலையில், பல மணி நேர இருட்டை பயன்படுத்தி திருடர்கள் தங்கள் கை வரி சையைக் காட்டும்போது அவர்கள் கொலை வெறிக்கே சென்று விடுகின்றனர். இதன் விளைவுகள்தான் மின்சார அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் என்று சொன்னால் அது மிகை யில்லை.

முந்தைய ஆட்சியில் வெறும் ஆறு மணி நேரம் தான் மின் வெட்டு இருந்தது. அதற்கே திமுக அர சைக் கரித்துக் கொட்டினர் பொது மக்கள். கடந்த தேர்தலில் திமுக தோற்றதற்கான காரணங்களில் மின் வெட்டுப் பிரச்சினையும் பிரதானமானது.

திமுக ஆட்சியே பரவாயில்லை என்கிற மன நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். 16 வயதினிலே திரைப் படத்தில், “ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, நாய் வளர்க்கலே” என்று கமலஹாசன் சொல்வது போன்ற ஒரு காட்சி வரும். இந்த டயலாக்கை தமிழக முதல்வரோடு ஒப்பிட்டு, “ஆத்தா மின் விசிறி கொடுத்தா, மிக்ஸி கொடுத்தா, கிரைண் டர் கொடுத்தா ஆனா கரண்டு மட்டும் கொடுக்கலை” என்று ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் கமெண்ட்டுகள் எழுதப்படுகின்றன.

இதேபோல, திமுக ஆட்சியில் மின்துறை அமைச் சராக இருந்த ஆற்காடு வீராசாமிக்கு மெúஸஜ் வைக்கும் வகையில், “நாங்கள் உங்களை மின்வெட் டுக்காக கடுமையாக திட்டியிருக்கிறோம். அது தவறு தான். மன்னித்துக் கொள்ளுங்கள்...” என்றும் வலைத ளங்களில் கமெண்ட்டுகள் களைகட்டுகின்றன.

முன்பெல்லாம் அரசின் செயல்பாடுகள் ஏடுகளில் கார்ட்டூன் படங்களாக வெளியாகி நக்கலுடன் விமர் சிக்கப்படும். இன்று வலைதளங்களும் இந்த விமர்ச னங்களை முன் வைக்கின்றன. இந்த கமெண்ட்டுக ளெல்லாம் வெறுமனே சிரித்து வைக்கும் வகைப்பட் டதல்ல... சிந்திக்க வைக்கிறது. மக்களின் மன ஓட் டத்தையும், வேதனைûயையும் இவை பிரதிபலிக் கின்றன என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வ தாகத் தெரியவில்லை.

சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நாள் ஒன் றுக்கு 1 மணி நேரம் என்று இருந்த மின்வெட்டு, 2 மணி நேரமாக பரிணாமம் அடைந்திருக்கும் அறி விப்பையும் அரசு வெளியிட்டு, சென்னை மக்க ளையும் டென்ஷன் ஆக்கியிருக்கிறது.

வெளிநாட்டு தொழிற்சாலைகளுக்கும், ஐ.டி. துறை போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மட்டும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப் படுகிறது. உள்நாட்டுத் தொழில் நிறுவனங்கள் கடும் மின்வெட்டைச் சந்திக்கின்றன.

அரசின் விழாக்கள், ஆடம்பர நிகழ்ச்சிகள், சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிகள் என அவசிய மற்ற வகையில் மின்சாரம் வீணாக்கப்படுகிறது. இதில் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க அரசு தயாராக இல்லை. அரசு அலுவலகங்களிலும் மின் சிக்கன நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுவதில்லை.

தாராளமயமாக்கல் கொள்கையின் மூலம் தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு பெரும் லாபத் துடன், மானியங்களும் வழங்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட பின்பும், தனியார் நிறுவனங்கள் உறு தியளித்த மெகாவாட் அளவுகளில் கால் பங்கு மின்சாரத்தைக் கூட அவை வழங்கியதில்லை.

மாறாக தமிழகத்தை விட்டு அதிக லாபம் கிடைக் கும் மாநிலங்களுக்கு பல தனியார் நிறுவனங்கள் ஓடி விட்டன.

மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரத்தை கேட்டுப் பெறலாம் என அறிவு ஜீவிகள் அரசுக்கு ஆலோ சனை சொன்னால், மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் கொண்டு வர மின்தட வசதியில்லை என்கிறது அரசு. ஆனால் நெய்வேலி போன்று தமிழகத்தில் தயாராகும் மின்சாரத்தை பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல எப்படி மின்தட வசதிகள் உள்ளன என்பது விளங்க வில்லை.

நெய்வேலி முதல் அலகு மின் நிலைய விரிவாக்கத் திலிருந்தும், ஆந்திர மாநிலம் சிம்மாத்ரி அனல் மின் நிலையத்திலிருந்தும் தமிழகத்திற்கு வர வேண்டிய மின்சாரத்தை தமிழக அரசு ஏன் கேட்டுப் பெற வில்லை என்று தமிழக முதல்வரை நோக்கி கேள்வி கள் எழுப்பப்படுகின்றன.

குஜராத் மாநிலத்தில் இருப்பது போன்று சூரிய மின் உற்பத்திக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை நிறைவேற்றலாம் என்றும் தமிழக அரசுக்கு ஆலோசனைகள் வழங்கப்படு கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் மின் தடையை ஓரளவிற்கு தவிர்க்கலாமே!

ஆனால் இவற்றையெல்லாம் தமிழக அரசு கவ னத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. இந்த மின் வெட்டு என்பது அரசின் நிர்வாகச் சீர்கேட்டைத் தான் தெளிவுபடுத்துகிறது. மின் பற்றாக்குறை இயல் பாக இருந்தாலும், அக்குறையை நீக்கும் நிர்வாகத் திறமை தமிழக அரசிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Pin It