ஹைதராபாத் தில்சுக் நகர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்று இதுவரை விசா ரணை அமைப்புகளால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஏறக் குறைய மூன்று வார காலங்களாக தேசிய புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள், மாநிலக் காவல் துறை, மஹாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் படை என பல அமைப்புகள் குண்டு வெடிப்பு குற்றவாளிகளைத் தேடி வரு கின்றன. இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

அப்பாவி முஸ்லிம் இளைஞர் களை பிடித்து படம் காட்டிக் கொண்டிருக்கின்றன விசாரணை அமைப்புகள்.

லஷ்கரே தய்யிபா, இந்தியன் முஜாஹித்தீன் போன்ற அமைப்பு களையெல்லாம் குண்டு வெடிப்புக்கு காரணம் காட்டிய விசாரணை அதிகாரிகளால் எந்தத் தட யத்தையும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

விசாரணை தொடங்கி மூன்று வாரங்களை நெருங்கியும், எந்தத் துப்பும் கிடைக்காததால் உள் துறை அமைச்சகம், விசாரணை அதிகாரிகளுக்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறது. எதிர்கட்சி கள் வேறு குண்டு வெடிப்பு சம்பவத்தை வைத்து அரசியல் செய்து வருவதால் யாரையாவது பிடித்து தில்சுக் நகர் குண்டு வெடிப்பு வழக்கை ஜோடித்து விட வேண்டும் என்ற இலக்கை நோக்கி விசாரணை அமைப்புகள் நகரத் தொடங்கியுள்ளன.

இந்த தில்சுக் நகர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் இந்துத்து வாக்களின் கை இருக்கிறது என்று நாம் தொடர்ந்து எழுதி வருகி றோம். இதற்கு ஆதாரங்களாக... கடந்த காலங்களில் இதே ஹைத ராபாத்தில் இந்துத்துவா நடத்தி யிருந்த பயங்கரவாதச் செயல்க ளையும், ஹைதராபாத்தில் சார்மி னார் விவகாரத்தை வைத்து சில மாதங்களாக மதக் கலவரத்தை உருவாக்க இந்த தீய சக்திகள் முயன்று வருவதையும், கடந்த காலங்களில் வழிபாட்டுத் தலங் களை அசிங்கப்படுத்தி முஸ்லிம் கள் மீது பழியைப் போட்டு கல வரங்களை உருவாக்கியதையும், வெளி மாநிலங்களிலிருந்து ஹைத ராபாத்தில் வந்து தங்கியுள்ளவர் கள்தான் மதப்பதட்டத்தை உரு வாக்கி வருகிறார்கள் என்று ஹைத ராபாத்வாசிகள் தொடர்ந்து சொல்லி வருவதையும் விரிவாக விளக்கியிருந்தோம்.

புலனாய்வு அமைப்புகள் இது வரை குற்றவாளிகள் யாரையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருவதற்குக் காரணம், இந்துத் துவா சக்திகளின் பக்கம் அதன் பார்வை இதுவரை திரும்பாதது தான்.

பல கோணங்களில் ஒரு சம்ப வத்தை விசாரிக்க வேண்டிய புல னாய்வுத்துறை, அப்பாவி முஸ் லிம் இளைஞர்களை கைது செய் வதில் தீவிரம் காட்டும் புலனாய் வுத்துறை, குண்டு வெடிப்பு நடத் தியிருப்பார்கள் என்று கருத முகாந்திரம் இருக்கும் இந்துத் துவா சக்திகளின் மீது தனது சந் தேகப் பார்வையை பதிக்காமல் இருக்கும்வரை விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை.

இந்தியாவின் துணை நிலை இராணுவப் படையினர் மீது தாக் குதல் நடத்தி வருகின்ற மாவோ யிஸ்ட்களும், ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுக்கு இந்துத் துவா சக்திகள்தான் காரணமாக இருப்பார்கள் என கூறியுள்ளனர்.

மாவோயிஸ்ட்களும், தீவிரவா தக் களத்தில் நிற்பவர்கள்தான் குண்டு வெடிப்புகளை நடத்துப வர்கள்தான். அதனால் வெடிகுண் டுகள், அதை வெடிக்க வைக்கும் கருவிகள் போன்றவற்றில் மாவோ யிஸ்ட்களுக்கு நன்கு பரிச்சய முண்டு. அதனால் ஹைதராபாத் குண்டு வெடிப்பு தன்மையை அறிந்து இந்துத்துவாவை அவர் கள் சந்தேகிக்கின்றனர். அவர்க ளின் இந்தக் கூற்றை நிராகரித்து விட முடியாது.

“ஹைதராபாத் குண்டு வெடிப் புக்கு பின்னணியில் சர்வதேசத் தீவிரவாதிகளின் கையோ, வேறு தீவிரவாத அமைப்புகளின் கையோ இல்லை. இது முழுக்க முழுக்க இந்துத்துவா தீவிரவாதி களின் கைவேலைதான். இவர்கள் வெளிநாட்டு சக்திகள் மற்றும் பெரு முதலீட்டாளர்களின் பெரும் சதித்திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கிறார்கள்...'' என தெரிவித் துள்ளார் வடக்குத் தெலுங்கானா மாவோயிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ஜகன்.

மேலும் அவர், “அஜ்மல் கசா பையோ, அஃப்ஸல் குருவையோ தூக்கிலிடுவதால் பிரச்சினைகள் தீராது. தேசிய ஒருமைப்பாட் டிற்கு அச்சுறுத்தலாக இருக்கிற இந்துத்துவா தீவிரவாதத்தை தடுத்து நிறுத்துவது உடனடி தேவையாக இருக்கிறது. சமூகத் தில் பிளவை ஏற்படுத்த சமூகத் தின் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் குறி வைக்கப்படுகிறார்கள்.

தீவிரவாதத் தாக்குதல்கள் மற் றும் குண்டு வெடிப்புச் சம்பவங் களோடு ஒரு குறிப்பிட்ட சமூகம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது அவர்களை துன்புறுத்துவதென் பது ஜீரணித்துக் கொள்ள முடி யாத விஷயம்...'' என்றெல்லாம் தெரிவித்துள்ளார் ஜகன்.

இதுவரை அப்பாவி முஸ்லிம் களையே பிடித்து வைத்து விசா ரணை என்ற பெயரில் அலைக ழித்துக் கொண்டிருக்கிறது ஹைத ராபாத் போலீஸ். முஸ்லிம்க ளையே குறி வைத்து துரத்திக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, இந்துத்துவாவை நோக்கி தனது கவனத்தை திசை திருப்பட்டும் புலனாய்வு அமைப்புகள். இது தான் விசாரணையில் முன்னேற் றத்தை தரும். உண்மையான குற்ற வாளிகள் யார் என்பதும் அம் பலப்படும். இதற்கு விசாரணை அமைப்புகள் தயாராக வேண்டும்.

- அபு

Pin It