இந்தியனாக இருக்கச் சொல்கிறான்
ஒருவன்...
மற்றொருவனோ திராவிடனென்று
பெருமைபட்டுக் கொள் என்கிறான்...
தமிழன் என்று சொல்
தலை நிமிர்ந்து நில் என்கிறான் 
இன்னொருவன்...
அடைகாத்துக் கொள்ளும் அடையாளங்கள்
ஆதாயம் இருப்பவனுக்கே...
மலமும், சிறுநீரும் வாழ்கையாகி 
பொதுக்கழிப்பிடமே வீடாகிப்
போன எனக்கு...
எல்லா மயிரும்
ஒரே மயிர்தான்.

- ஐயப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It