இந்தியத் தேசிய ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகளாகவும், இந்தியத் தேசியத்தின் ஊதுகுழலாகவும் வலம் வருகின்ற மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த ‘சர்வதேசியவாதிகள்’”, தமிழ்த்தேசியம்” மீதான அவதூறுகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். ம.க.இ.க. போன்ற போலித்தனமான, முற்போக்கு” வேடமிட்ட ஆளும் வர்க்கக் கைக்கூலிக் கும்பல்களின் இவ்வாறான கூற்றுகள், ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் உரிமைக் குரல்களை மேலும் ஒடுக்குவதாய் தான் இருக்கும் என்பதில் நமக்கு ஐயமில்லை.
ஒரு தேசிய இனம், இன ஒடுக்குமுறையின் கீழ் இருக்கும் பொழுது, இரண்டு தீர்வுகளை நாம் முன்வைத்துச் செயல்படலாம். முதலில், ஒடுக்கப்படுகின்ற தேசிய இனம், தம்மை ஒடுக்குகின்ற தேசிய இனத்தின் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் துணையுடன், அத்தேசிய அரசைக் கைப்பற்றி, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட ஓரு புதிய தேசிய அரசை படைக்கலாம். இரண்டாவதாக, ஒடுக்கப்படுகி்ன்ற தேசிய இனம், ஒடுக்குகின்ற தேசிய இனத்தின் தேசிய அரசின் கீழ் வாழ விரும்பாத பட்சத்தில், ஒடுக்கப்படும் தேசிய இனம் தமக்கான சுயநிர்ணய உரிமையை முன்னிறுத்தி, தமக்கான புதிய, தனித்த தேசத்தை, தனித் தேசிய அரசை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, ஒடுக்கும் தேசிய இனத்தின் அரசின் கீழிருந்து விடுதலை பெறலாம்.
ஈழத்தில், தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக் குரல்களை அங்கீகரித்துச் செயல்படக்கூடிய, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளக்கூடிய சிங்களப் பாட்டாளி வர்க்க சக்திகள் வலுவாகவும், வீரியமானதாகவம் இல்லை. சிங்கள ஆளும் வர்க்கத்தின் இன ஒடுக்குமுறையின் மூர்க்கத்தனங்கள், இதுவரை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் வந்திருந்தனவே ஒழிய என்றுமே குறைந்ததில்லை. ஆதலால் தான் ஈழத்தமிழர்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றிட “தமிழீழம்” என்ற தனியரசைப் படைப்பது என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தான் குறுந்தேசியவாதம் என்று விமர்சிக்கிறது, ஆளும் வர்க்கத்தின் ஒட்டுக் குழுவான ம.க.இ.க.
ஆரிய பார்ப்பனிய இந்தியாவால், தமிழ்நாடு ஒடுக்கப்படுகின்றது. நேரடியான ஆயுதந்தாங்கிய முறையில் அல்லாமல், தமிழ்நாட்டின் மீதும் பிற தேசிய இனங்களின் மீதும் இந்தியத் தேசிய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை இந்தியாவில் நிலவுகின்றது. இவ்வாறான, இன ஒடுக்குமுறை தம்மீது ஏவப்படுகின்றது என்ற விழிப்புணர்வு பெறாத நிலையிலேயே பெரும்பாலான தேசிய இனங்கள் இந்தியாவில் ஒடுக்குமுறையை அனுபவிக்கின்றன.
காசுமீர், அசாம், நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகளின் இவ்வொடுக்குமுறைக்கு எதிரான நேரடி ஆயுதந்தாங்கியப் போராட்டம் நடைபெறுவதால், இந்தியத் தேசிய அரசு அதனை ஆயுதந்தாங்கி ஒடுக்கி வருகின்றது. தமிழ்நாட்டில், இந்தியத் தேசிய அரசின் தேசிய இன ஒடுக்குமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்ற தமிழ்த் தேசிய அமைப்புகளால் இந்தியத் தேசியத்திற்கு அச்சுறுத்தல் நிலவுகின்றது. எனவே, தமிழ்த் தேசிய சக்திகளை, தமிழ்த் தேசிய அரசியலை, ஆரிய இனவெறி நாடான இந்தியா “பிரிவினைவாதம்” என்றும், “பிராந்தியவாதம்” என்றும் இழிவுபடுத்துகின்றது. “தமிழ்த் தீவிரவாதம்” என்று மக்களுக்கு அச்சமூட்டுகின்றது. இந்தியத் தேசியத்தைத் திரை கிழிப்பது “நாங்க தானுங்கோ” என்று வாய்ச்சவடால் அடிக்கும், ஆளும் வர்க்கத்தின் துணைப் படையான ம.கஇ.க., இந்தியத் தேசிய ஆளும் வர்க்கத்தின் குரல்களை மார்க்சிய சொல்லாடல்களைக் கொண்டு வாந்தி எடுக்கின்றது.
தமிழ்த் தேசியத்தை, “பிரிவினைவாதம்” என்கிறது இந்தியத் தேசியம். “குறுந்தேசியவாதம்” என்கிறது ம.க.இ.க. “பிராந்தியவாதம்” என்கிறது இந்தியத் தேசியம்.
“குறுந்தேசியஇனவெறி” என்கிறது ம.கஇ.க. பார்ப்பன இந்து” பத்திரிக்கை, ஈழத்தமிழர்கள் மீதான போரை நிறுத்து என்று தமிழகத்தில் போராடிய அமைப்புகளை, “தமிழ் இனவெறி அமைப்புகள்” என்று மாலினி பார்த்தசாரதி என்ற பார்ப்பன இனவெறியரைக் கொண்டு எழுதியக் கட்டுரையில் வர்ணித்தது. தமிழ் இனத்தின் உரிமையை பேசும் இதே அமைப்புகளை “இனவாத அமைப்புகள்” என்று “இந்து“வின் குரலிலேயே எழுதியவை தான் ம.க.இ.க.வின் புதிய ஜனநாயக, கலாச்சாரப் பத்திரிக்கைகள். என்ன ஒரு ஒற்றுமை!
நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் ஆகியோரது பேச்சை எடுத்துக் காட்டி, தமிழ்த் தேசியத்தை பாசிசமாக சித்தரித்திருக்க முயன்றிருக்கிறது, ம.க.இ.க.வின் சர்வதேசியவாதிகள் இணையதளம்.
மராட்டிய இன உணர்வைக் கையிலெடுத்த ராஜ்தாக்கரே போன்ற பிற்போக்கு பார்ப்பன பாசிச சக்திகளின் செயல்பாடுகளை வைத்துக் கொண்டு இன உணர்வைக் கையிலெடுப்பவர்கள் எல்லோருமே பாசிஸ்டுகள் தான் என்றும் நிறுவ முயல்கிறது ம.க.இ.க. பாசிஸ்ட் கும்பல். அவ்வாறெனில், இன்றைக்கு கம்யுனிசத்தின் பெயரால் சீனாவும், கியுபாவும் இன்னபிற கம்யுனிச” நாடுகளும் செயல்படுவதை வைத்து, கம்யுனிஸ்டுகள் அனைவருமே தேசிய இன விடுதலையை “பயங்கரவாதம்“ என்று இழிவுபடுத்தும் பிற்போக்குவாதிகள் தான் என்றால் ம.க.இ.க.வினர் ஏற்றுக் கொள்வார்களா? கம்யுனிசத்தின் பெயரால் ஆட்சி நடக்கும் சீனாவில், அந்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்படும் சனநாயக விரோத அடக்குமுறைகளை கம்யுனிசம்” மக்கள் மீது தொடுக்கும் அடக்குமுறை என்றால் ம.க.இ.க. ஏற்றுக் கொள்ளுமா?
ம.க.இ.க. போன்ற முற்போக்கு வேடமிட்ட, இந்திய” வெறி பாசிஸ்டுகள் வேண்டுமானால் இவற்றை கூட அப்படியே ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்வர். ஆனால், மார்க்சியத்தை வழிகாட்டும் நெறியாக ஏற்றுக் கொண்ட உண்மையான தமிழ்த் தேசியர்கள் இவ்வாறான திரிபுவாதங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஒரு இனத்தின் தாயகத்தை பறித்திடும் நோக்கோடு, அத்தாயகத்தில் வேற்று இனத்தவர்களை குடியமர்த்திடும் ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தை எதிர்த்துப் போராடுவது தான் அவ்வினத்தின் தற்காப்பாக இருக்க முடியும். இதைத் தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினரும், நாம் தமிழர் இயக்கத்தினரும் கூறுகின்றனர். இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்தியத் தேசிய வெறியூட்டலால் தமிழ்நாட்டில் அளவுக்கு மீறிய அளவில் குடியமர்ந்து, ஆதிக்கம் செலுத்துகின்ற அளவிற்கு உயர்ந்தும் நிற்கின்ற அயல் தேசிய இனத்தார்களை வெளியேற்ற வேண்டும் என்ற் நியாயம் இந்தியத் தேசியவாதிகளுக்கு மட்டுமல்ல, முற்போக்கு வேடமிடுகின்ற ம.க.இ.க.வின் பார்ப்பனக் கண்களுக்கும் கூட பாசிசமாகத் தான் தெரிகின்றது. ஒரு இனத்தின் தாயகத்தை பறித்திடும் நோக்கில் ஆளும் வர்க்கம் செயல்படுத்தும் வேலைத்திட்டங்களை எதிர்க்கவே கூடாது என்கிறதா ம.க.இ.க.?
“ஆம். எதிர்க்கக்கூடாது தான். தமிழ்நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் வரட்டும். இங்கு வந்து தமிழர்களின் வேலைகளை பறிக்கட்டும். இவ்வாறான தொடர் வேலைப் பறிப்புகள் மூலம் தான் தமிழ்நாட்டைத் தமிழர்களின் தாயகம் என்ற நிலையிலிருந்து மாற்றி, தமிழ்நாட்டில் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்ற நிலையைக் கொண்டு வர முடியும். இவற்றால், தமிழ்நாட்டுத் தமிழன் வேலையிழப்பதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், எங்கிருந்தோ வருகின்ற அயல் இனத்தாரின் நலன் மட்டும் தான் எங்களுக்கு முக்கியம். இங்கு தமிழன் இருந்தால் என்ன வேலையிழந்து செத்தால் என்ன?” என்கிறது, இந்திய ஆளும் வர்க்கம். இதனையே வழிமொழிகிறது ம.க.இ.க. இப்படிப்பட்ட ம.க.இ.க. தான் தமிழ்த் தேசியத்தை பாசிசம் என்று உளறித் தள்ளி நடுங்குகின்றது.
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் ஆதிக்கத்தை எதிர்க்கக் கூடாது என்று இப்பொழுது கூக்குரலிடுகின்ற ம.க.இ.க. எப்பொழுதும் போல் இதிலும் இரட்டை வேடதாரிகளாகவே இருக்கின்றனர் என்பதே உண்மை.
அண்மையில் ம.க.இ.க.வின் புதிய ஜனநாயகத்தால் “ஈழம் : ஒரு நேர்மையான மீளாய்வு” என்ற புத்தகம் வெளியிடப்பட்டிருந்தது. அப்புத்தகத்தில், “ஒரு தேசிய இனத்தின் பிரதேசங்களைக் கைப்பற்றுவது, அல்லது ஆக்கிரமிப்பது என்பது அதை அழியச் செய்வதில் முடியும் என்பது மிகவும் முக்கியமான விசயம். காசுமீரிலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இந்தி பேசும் மற்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் குடியமர்ந்து, அங்கே கணிசமான அளவு பொருளாதாரத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்பதை இந்திய ஆளும் வர்க்கம் செயல்படுத்தி வந்தது. ஆனால், காசுமீர் மக்களின் போராட்டத்தை ஒட்டி அந்த முயற்சி தடுக்கப்பட்டது. அங்கு அன்னியர்கள் யாரும் சொத்து வாங்குவதைத் தடை செய்யும் 370-வது சட்டப்பிரிவு இன்னமும் உள்ளது” (பத்தி 1 முடிவில், பக்கம் 20, மேற்கண்ட நூல்) என்று எழுதியிருந்தது பு.ஜ.
அதாவது, ஒரு தேசிய இனத்தின் பிரதேசங்களைக் கைப்பற்றுவது, அல்லது ஆக்கிரமிப்பது என்பது அதை அழியச் செய்வதில் முடியும்” என்று பு.ஜ.வும் ம.க.இ.க.வும் நன்கு உணர்ந்திருப்பதாகவும் சொல்கின்றது. மேலும் இந்திய ஆளும் வர்க்கம்தான், இந்தி பேசும் மக்களை காசுமீர், வடகிழக்கு மாநிலங்களில் குடியமர்த்துவதாகவும் பு.ஜ. கூறுகின்றது. இவற்றிலிருந்து, காசுமீர், வடகிழக்குப் பகுதிகளில் எழுகின்ற தேசிய இன சுயநிர்ணய உரிமைக் குரல்களை முடக்க, அத்தேசிய இனங்களின் தாயகங்களைப் பறித்தெடுக்கும் வேலைத்திட்டத்தை இந்திய ஆளும் வர்க்கம் செயல்படுத்தி வருவதை ம.க.இ.க. நன்கு அறிந்தும் வைத்திருக்கிறது.
தற்பொழுது தமிழ்நாட்டில், இந்தி பேசுபவர்கள் மத்திய அரசு அலுவலகங்களில் அதிகமாக பணிக்கு அமர்த்தப்படுதல், கட்டுமானப் பணிகளில் அயல் தேசிய இனத்தவர்கள் அதிகமாக ஈடுபடுத்தப்படுதல், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் நிலங்கள் வாங்குவதிலும், விற்பதிலும், குடியேறுவதிலும் அயல் மாநிலத்தவர்கள் ஆதிக்கம், வட்டித் தொழில், ஆன்லைன் வணிகம், மஞ்சள் வணிகம், துணி விற்பனை, திரைத் தறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அயல் தேசிய இனத்தவர்கள் ஆதிக்கம் என தமிழ்நாடு வேகமாக தம் தனித்தன்மையை இழந்து, தமிழ்நாட்டு நகரங்கள் தமிழர்களுக்கே அந்நியமயமாகி வருகின்ற சூழலைக் காண்கிறோம். சென்னையில் பல அப்பார்ட்மெண்ட்களில் தமிழர்கள் உள்ளே சென்று வரக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு, தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்ற நிலையிலிருந்து மெல்ல அயல் தேசிய இனத்தவர்களின் ஆதிக்கக் கோட்டையாக மாறி வருகின்றது.
மேலும், ஈழத்தில் அண்மையில் நடைபெற்ற போர் தமிழ்நாட்டில் தமிழர்களிடம் தமிழ்த் தேசிய உணர்வையும், தாம் வாழும் இந்நாடு நம்முடையது தானா என்ற கேள்வியையும் பலமாக எழுப்பியுள்ளது. இவ்வுணர்வலைகளை முனை மழுங்கச் செய்ய வேண்டுமென இந்திய ஆளும் வர்க்கம் விரும்புவதாலேயே இந்திய அரசு இவ்வாறான அயல் தேசிய இனத்தவர் ஆக்கிரமிப்பை ஆதரிக்கிறது. இதனைக் கண்டித்து தான் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், நாம் தமிழர் இயக்கமும் குரல் கொடுக்கின்றன; குற்றம் சாட்டுகின்றன. இதிலென்ன தவறு கண்டது ம.கஇ.க.?
காசுமீர் மக்களின் போராட்டத்தை ஒட்டி அங்கு வெளி மாநிலத்தவர் நிலம் வாங்குவது தடை விதிக்கப்பட்டது என்று கூறுகின்ற ம.க.இ.க., காசுமீர் மக்களின் போராட்டம் போல தமிழ்நாட்டில் மக்கள் போராடக் கூடாது என்று தான் விரும்புகிறது. அதனால் தான் அயல் தேசிய இனத்தாரின் ஆக்கிரமிப்பை ஆதரித்தும், எதிர்த்தும் மாற்றி மாற்றிக் குரல் கொடுத்து முழுவதுமாக அம்பலப்பட்டு நிற்கிறது ம.க.இ.க.
காசுமீரைப் போல தமிழ்நாட்டில் குரல்கள் எழுந்தால் அதனை மட்டும் “பாசிசம்” என்று புளுகி ம.க.இ.க. வரிந்து கட்டிக் கொண்டு எழுதுவது ஏன்? இந்திய ஆளும் வர்க்கத்தின் தமிழ்த் தேசியத் தாயகப் பறிப்புத் திட்டத்திற்கு துணைபோவது ஏன்? தமிழ்நாட்டை ஆக்கிரமித்து இங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் மார்வாடி குசராத்தி சேட்டுகள் குறித்து நீங்கள் என்றாவது வாய்த் திறந்திருக்கிறீரா? இது குறித்து ம.க.இ.க. வின் விமர்சனம் என்ன? காசுமீருக்கும் வடகிழக்கு தேசிய இனங்களுக்கும் ஒரு நீதி, தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசிய இனத்திற்கு ஒரு நீதியா? இது தானே ம.க.இ.க.வின் மனுநீதி”. இதனால் தானே நாங்கள் ம.க.இ.க.வை பச்சைப் பார்ப்பனியக் கட்சி என்கிறோம்.
சிங்கள இனவெறி அரசு தமிழ் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றுவதை ம.க.இ.க. கண்டிக்குமாம். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்தி பேசும் மக்கள் குடியமர்த்தப்படுவதை ம.க.இ.க. கண்டிக்குமாம். காசுமீரில் இந்தி பேசுபவர்கள் குடியேற்றப்படுவதை ம.க.இ.க. கண்டிக்குமாம். ஆனால், தாம் ஊன்றி நிற்கும் தமிழ்த் தேசத்தில் மார்வாடி, வந்தால் என்ன குசராத்தி வந்தால் என்ன, அவர்களும் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் உழைக்கும் மக்கள் தானே என்று பேசுமாம். ம.க.இ.க.வின் மனுநீதி”ப் பார்வை அப்பட்டமாக சந்தி சிரிக்கிறது. தமிழ்நாட்டில் மார்வாடி, குசராத்தி சேட்டுகள் உள்ளிட்ட வந்தேறிகளின் ஆதிக்கத்திற்கு எதிராக இதுவரை ம.க.இ.க. என்னென்னப் போராட்டங்களை நடத்தியிருக்கிறது? ம.க.இ.க.வில் உள்ள தமிழர்கள் இக்கேள்வியை ஏன் அதன் தலைமைக்கு எழுப்பவில்லை?
உலகிலேயே பெரிய சனநாயகவாதி போலும், முற்போக்குவாதி போலவும் வேடமிடுகின்ற ம.க.இ.க. தமிழ்நாட்டில் வெளியார் ஆதிக்கம் இருப்பதை ஏற்றுக் கொண்ட அமைப்பு தான் என்பது பலருக்குத் தெரியாது. இதோ அது குறித்த தகவல்....
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் “வெளியாரை வெளியேற்றுவோம்!” என்ற மாநாடு 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈரோட்டில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டில், தமிழ்நாட்டின் தொழில் வணிகங்களை ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்தும் மார்வாடி, குசராத்தி சேட்டுகள் உள்ளிட்ட அயல் தேசிய இனத்தாரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. அம்மாநாடு நடக்கக் கூடாதென முட்டி மோதிக் கொண்டு காவல்துறையிடம் புகார் அளித்தனர் பார்ப்பன பாசிஸ்டுகளாக பா.ச.க.வினர்.
ஏனெனில், இம்மாநாட்டின் நோக்கமே, அவர்கள் கட்டி அழுது கொண்டிருக்கிற பார்ப்பன பனியாக்களின் பாசிச இந்தியாவிற்கு வெடி வைப்பதாக இருந்தது. பார்ப்பனர்களின் மலக்கழிவான தினமல(ம்)ர் நாளேடு அலறித் துடித்தது. மாநாட்டை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்டுத் தன் வெறியைத் தீர்த்துக் கொண்டது. இந்து - இந்தி - இந்தியத் தேசியத்திற்கு உலை வைக்கும் இம்மாநாட்டிற்கு எதிராக பார்ப்பன பாசிஸ்டுகளான தினமல(ம்)ரும் பா.ச.க.வும் எப்படி துடித்தனவோ, அதே அளவில் துடித்தவர்கள் தான் ம.க.இ.க.வினர். ம.க.இ.க.வினரால் ஓடுகாலிகள்” என்று விமர்சிக்கப்படும், தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியினரும், இச்சமயத்தில் ம.க.இ.க.வினருடன் இணைந்து கொண்டு வேலை செய்ததும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இம்மாநாட்டிற்கு எதிராக செய்த பெரும் புரட்சிகர” நடவடிக்கை என்ன தெரியுமா?
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக குழுமியிருந்த தோழர்களிடம் போய் “தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒரு இனவெறிக் கட்சி. வர்க்க ஒற்றுமைக்கு எதிரான கட்சி. எனவே அதிலிருந்து வெளியேறுங்கள்” என்ற பாணியில் ஒரு துண்டறிக்கை கொடுத்தனர், இந்தப் புரட்சி”யாளர்கள்.
அத்துண்டறிக்கையில் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியுமா? அயல் தேசிய இனத்திலுள்ள ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களும், தமிழ்த் தேசிய இன உழைக்கும் மக்களும் இணைந்து சர்வதேசியப் புரட்சி பற்றி தான் பேச வேண்டுமாம். ஒரு தேசிய இனம், மற்றொரு தேசிய இனத்தின் உரிமைகளை அபகரிப்பதைப் பற்றிப் பேசினால் அது வர்க்க ஒற்றுமைக்கு பின்னடைவை ஏற்படுத்துமாம். அடேங்கப்பா..! இவர்களின் சர்வதேசிய”க் கண்ணோட்டத்தை பார்த்து நமக்கு சிரிப்புத் தான் வருகின்றது.
மார்வாடியும் குசராத்தியும் இந்தியர்கள் தானே” என்று பார்ப்பன பனியாக்கள் எழுப்பும் குரலுக்கு, மார்க்சிய சாயமடித்து, பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை கொண்டு அதற்கு மேக் அப் போட்டு வந்து நிறுத்தியது, ம.க.இ.க.வும் தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சியும். மார்க்சியத்தை வெறும் வறட்டுவாத சூத்தரமாக கருதுகின்ற மனோபாவமும், தான் சார்ந்து நிற்கின்ற இந்தியத் தேசியக் கருத்தியலும் தான் ம.கஇ.க. போன்ற மார்க்சிய லெனினியக் குழுக்களை வழிநடத்துகின்றது. இதனால் தான், இக்குழுக்கள் மார்கசியம் வலியுறுத்துகின்ற உண்மையான சர்வதேசியத்தை மூடி மறைத்துக் கொண்டு, புதியதொரு கற்பனாவாத சர்வதேசியக் கண்ணோட்டத்தை வலியுறுத்துகின்றனர். பார்ப்பன இந்தியத் தேசிய அரசால் ஒடுக்கப்படுகின்ற தமிழ்த் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களின் வேலைகளை பிடுங்கிக் கொள்ளும் பொருட்டு செயல்படுகின்ற அயல் தேசிய இனங்களுக்கு முதலில் இவர்கள் சர்வதேசியத்தைப் பற்றி பாடமெடுக்கட்டும்.
ம.க.இ.க.வினர் “மார்வாடிகள் தமிழகத்தில் தொழில்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதையோ அந்த ஆதிக்கத்தை முறியடிக்க வேண்டும் என்பதையோ நாங்கள் மறுக்கவில்லை” என்றும் தாம் வெளியிட்ட அத்துண்டறிக்கையில் எழுதியிருந்தனர். அதாவது அயல் தேசிய இனத்தவர்களின் ஆதிக்கத்தை இவர்கள் மறுக்கவில்லை என்பார்களாம். அதே ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடினால் அதை பாசிசம் என்பார்களாம். என்ன ஒரு நியாயம்...! மனுநீதி” நியாயம்!
ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசுகின்ற ஓட்டுப் பொறுக்கி சந்தர்ப்பவாதிகளுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல ம.க.இ.க.வினர் என்பதனை இச்செய்திகள் அம்பலப்படுத்துகின்றன.
கலப்பு மணங்கள் சாதியை ஒழித்துக் கட்டுமாம். கலப்பு இனங்கள் இனத்தை ஒழித்துக் கட்டுமாம். சர்வதேசியவாதி எழுதித் தீர்த்திருக்கிறார். எப்பேர்பட்ட அறிவியல் ரீதியான ஆய்வு. ஒருவனுக்கு கீழ் இன்னொருவன் அடிமைப்பட்டே கிடக்க வேண்டும் என்ற ஒடுக்குமுறைக் கருத்தியலான சாதியும், தமக்கென தனித்த பண்பாடு, வரலாறு, மொழி கொண்ட ஓர் தேசிய இனமும் ஒன்றாம், ம.க.இ.க.வினர் பாடமெடுத்திருக்கின்றனர். அப்படியெனில், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறோம் என்று ம.க.இ.க.வினரின் அலறல்களைப் போல, சாதிய சுயநிர்ணய உரிமைகளையும் இவர்கள் அங்கீகரிப்பார்கள் போலும். சாதியைப் போலவே இனமும் ஓர் ஒடுக்குமுறைக் கருத்தியல் என்று மார்க்சிய வேடமிட்டுக் கொண்டு எழுதுகின்ற ம.க.இ.க. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகக் கூறுவதெல்லாம் வெறும் வாய்ச்சவடாலுக்குத் தானா? உங்களது அணித் தோழர்களை தேற்றி வைப்பவதற்காக மட்டும் தானா?
மார்க்சியத்தை முன்னிறுத்திக் கொண்டு, போலி வேடந்தரித்து நிற்கின்ற ம.க.இ.க. போன்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் துணை அமைப்புகளை, முற்போக்கு வேடமிட்ட இந்திய” வெறி பாசிஸ்டுகளை தமிழ்த் தேசியர்கள், உணர்வாளர்கள் புறந்தள்ள வேண்டும். ம.க.இ.க. போன்ற அமைப்புகளில் உள்ளவர்கள் இனிமேலாவது சிந்திக்க வேண்டும். பாசிசத்தை நோக்கி பயணமெடுப்பது தமிழ்த் தேசியமல்ல, ம.க.இ.க. போன்ற ஆரிய இந்திய” வெறி அமைப்புகளே என்று உணர வேண்டும்.
- அதிரடியான்
எனக்கொரு ஞாணம் பிறக்கிறது!
சிங்களர்கள் பாஸிஸ்டுகள் என்பது சந்தேகத்திற்கு சிறிதும் இடமில்லாமல் உலகத்தால் உணரப்பட்ட விடயம்.
சில தினங்களுக்கு முன்பு, இலங்கை பாராளுமன்றத்தில ், இந்தியாவிற்கு நன்றிகள் சொல்லப்பட்டன. 12,000 கோடிகள் உலக வங்கிக் கடன் பெற இந்தியா உதவியதாம். அது கிடைக்கா திருந்திருக்கும ானால் இந்தாயாவே அந்தக் கடனை இலங்கைக்கு கொடுக்கும் என்று மன்மோகன் சொல்லி இருந்தாராம். அந்தக் கடன் இலங்கைக்கு கிட்ட பிரணாப்முகர்ஜி பெரும்பாடு பட்டாராம். பாஸிஸ சிங்களனே தனது பாராளுமன்றத்தில ் வைத்த விபரங்கள் தாம் இவை எல்லாம்!
இந்தியா என்பது அஹிம்சாவாதி, சத்யாகிரகி, மஹாத்மா என்ற அக்மார்க் சத்தியவானான காந்தியைப் பெற்றதேசம், பஞ்ச சீலக்கொள்கையை வகுத்த தேசம், அணிசேரா தேசம். அப்பேர்பட்ட "யோக்கியவான்" தேசமான இந்தியா, சிங்களர்களை அதாவது பாஸிஸ்டுகளை கூச்சமில்லாமல் ஆதரிக்கிறது என்றால், அந்த பாஸிச தத்துவத்தின் மகாத்மியத்தை உணர்ந்ததால் தானே!
அப்பேர்ப்பட்ட மஹாத்மியத் தத்துவத்தை தமிழர்களாகிய நாம் ஏன் புறந்தள்ள வேண்டும் தோழர்களே! இந்தியா அந்த பாஸிஸ தத்துவத்தை ஆதரிக்கிறதென்றா ல், அந்தத் தத்துவம் சரியானதென்றோ அல்லது இன்றைக்கு அது தேவை என்றோதானே பொருள்?
எனவே, தோழர்களே! நமது நாடான இந்தியா செய்வதை நாமும் செய்வது தானே முறை? அப்போது தானே நாம் "தேசபக்தியுள்ளவ ர்கள்" ஆவோம்!
எனவே இனிமேல் ம.க.இ.க., தமிழர்களை பாஸிஸ்டுகள் என்று அழைத்தால் கூச்சப்படாதீர்க ள்! இந்தியாவின் கொள்கையை ஏற்றுள்ள நமக்கு அவர்கள் செய்யும் மறியாதை என்று கொள்ளுங்கள்!
புத்தனுக்கு புத்தன்!
பாஸிஸ்டுக்கு பாஸிஸ்ட்!
ஊரோடு ஒத்துவாழ் என்று ஒரு பழிமொழி உண்டு! ஊரோடு மட்டுமல்ல நாம் நமது நாட்டோடு ஒத்துவாழ்வோம்! ஜெய் பாஸிஸ இந்தியா! ஜெய் பாஸிஸம்!!
எனக்கு இன்று வந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பைத் தருகிறேன். சில நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவைக் காணுங்கள்!
www.youtube.com/.../a
கொதிக்கிறதா உங்களது உள்ளம்? செயல்படுங்கள்!!!!!
ஓ! காந்தி சாரி.. பூந்தி தேசமே...........!
ஒட்டாத பண்டத்தைத் தான் பூந்தி என்போம்.
நமது இலக்கு புரிகிறதா? நமது அயராத செயல்பாடுகளுக்க ாக காத்திருக்கிறது "நமது" தேசம்!
பிரபாகரன் இறந்து விட்டார் என்ற உண்மை உங்களை உறுத்து வந்து ஊட்டுவதாலேயே காலம் காலமாக இங்கு குடியேறி இருக்கும் மார்வாடி சேட்டு போன்ற ஆதிக்க வர்க்கங்களை மாத்திரம் இப்போது விரட்ட வேண்டும் என்கின்றீர்கள். அவர்களது இடத்தில் திடீர் பணக்கார தமிழ் ரவுடிகள் வந்து அமர்ந்தால் உங்களது கொள்கைக்கு பாதிப்பு இல்லைதானே..............
கட்டிட வேலைக்கு வந்த பீகார் காரனால்தான் தமிழன் ஓட்டாண்டி ஆனான் என்று நீங்கள் சொல்வது சரி என்றால், அதனை விட அதிகமான நியாயம் தமிழர்கள் மீது பெங்களூருவில் தாக்குதல் நடத்தும் வட்டாள் நாகராசுவுக்கும் உள்ளது எனக் கொள்ளலாமா...
வடகிழக்கு மற்றும் காசுமீர் பற்றி தமிழகத்தை ஒப்பிடுவதற்கு உங்களுக்கு சிரிப்பாக வரவில்லையா... குடியமர்த்துவது தமிழகத்தில் நடைபெறுகிறதா... தமிழன் பிற மாநிலங்களில் குடியேறுவது நடக்கவில்லையா.. . உலக மாற்றத்தை கொஃசம் புரிந்து கொள்ள முயற்சியுங்கள். சிறிய நாடுகளில் புரட்சி தோற்றுக் கொண்டிருக்கும் வேளையில் தங்களது தனித்தமிழ் நாடு கோரிக்கையின் சாத்தியத்தை விளக்க முடியுமா... அப்போது யார் வறட்டு வார்த்தைகளை மாத்திரமே வைத்து இருக்கிறார்கள் என்பது தெரிய வரும்..
இந்தியா ஒரே நாடு என பாஜக போன்ற வலதுசாரிகள் சொன்னாங்க அதையே இடதுசாரிகளும் சொன்னாங்க அப்படின்னீங்கழ. .. நீங்க கூடத்தான் வேலைவாய்ப்பை வடநாட்டவர் பறிக்கிறாங்க அப்படின்னு சொல்றது மூலமா இந்தியா இருக்கு அப்படிங்கறத ஒத்துக்குறீங்க• . அத தாண்டி இந்தியா ன்ன்னு ஒன்னு இருக்கு அத எதுத்துதான் நீங்க கூட போராட வேண்டி இருக்கும்.. இதப் புரியாமா பேசினா என்ன பண்றது... இரண்டு பேரும் ஒரே வார்த்தைய சொன்னாங்க அதுனால செவப்பு சேல கட்டுனவா எல்லாம் எம் பொண்டாட்டி அப்படின்னு பேசுனா அதுதான வறட்டு சூத்திரம். காண்டக்சுட்டுக் கு பொருத்தமா எடுக்கத்தெரியாம அதையே சந்தர்ப்பவாதம்ன ு புரிந்து கொண்டால் என்ன பண்ணுவது...........
ஆனாலும் உங்களுக்கு கொஞ்சம் நகைச்சுவை உணர்வு ஜாஸ்திதான்.. பிரபாகரன் செத்த்துனாலதான தமிழ்நாட்டுல வடமாநிலத்திலிரு ந்து குடியேற்றம் அதிகமாகி விட்டது அப்படிங்களது கொச்சம் அதிகமா தெரியல
வடகிழக்கின் எதிரிகளும் இந்திய ஆளும்வர்க்கம்தா ன் என்பதை அவர்கள் பலமுறை நிரூபித்து உள்ளனர். அவர்களது அகிம்சை போராட்டம் கூட அரசு மற்றும் ராணுவத்துக்கு சவால் விடும் முறையில்தான் இருந்துவருகின்ற து. மூல இனம் என்ற முறையில் கூட அவர்கள் தங்களை விடுவிக்க வேண்டிய அவசியமும், அரசின் கைவிடப்பட்ட சமூக அவலமும் அங்கே நிவ்வி வந்த்து. ராணுவ ஒடுக்குமுறை இரண்டு மாநிலத்திலும் உள்ளது.
தமிழகத்தில் தனிநாடு கோரியவர்கள் முதலில் திராவிடம் பிறகு தமிழ் பிறகு கைவிடல் மற்றும் காரணங்கள் அப்படியே உள்ளது. அப்புறம் ஒருத்தர் வந்தார் தமிழக்த்தை மூன்றாகப் பிரித்தால்தான் வன்னியர் என்ற சாதியே வாழும் என்றார்...சரி அது எல்லாம் தனிக்கதை... அறியப்பட்ட தமிழ் தேசிய வாதிகள் அனைவரும் ஒரு மாநில அரசாங்கம் என்ற முறையில் கேரளா மற்றும் ஆந்திர மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களை மாத்திரமே இதுவரை குறைசொல்லி வந்தார்கள். அந்தக் குறைகளில் நியாயம் இருந்த்து உண்மைதான்.. ஆனால் அக்குறையை மதிப்பிடுவதில் தமது அகவயமான முடிவுக்கே சென்றனர்.
முதலில் அரசு மற்றும் அரசாங்கம் இவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பிறகு அரசுவை புரிந்துகொள்ள முயன்றவர்கள் அதில் நாரயணனையும் நிருபமா ரைவையும் மாற்றினால் போதும் என்றார்கள்.. அம்முடிவுகளை எப்படி வந்தடைந்தார்கள் அதற்கு எந்த த்த்துவம் உதவியது என்பதை அவர்களையும் கேட்க முடியாது.. அதாவது ரா வைப் பயன்படுத்தி தனிஈழம் அடையலாம் என்பதற்கு ஆண்டன் பாலசிங்கம் எந்த த்த்துவத்தை பிரபாகரனுக்கு தந்து உதவினார் என்று கேட்க முடியாதோ அது போல
எதிரி யாருன்னா பொதுவா வடக்கு மாநிலம்... கொஞ்சம் பக்கத்துல போய் கேட்டா மலையாளி மற்றும் தெலுங்கன்.. அப்புறம் இந்திய பார்ப்பனியம்... ஈழத்துக்கு இந்திய பார்ப்பனியம் உதவினா ஏத்துக்குவீங்கள ா ன்னா ஆமாம்பாங்க•.. இல்லன்னு சொன்னாலும் புலிகள் ஏத்துக்கிட்டுதா ன போராடுனாங்க கடசி வரைக்கும்... அப்புறம் அதில இருந்தே வெளிய வர போராடுவாங்களாம் ... ஆனா இந்தியா ங்குற எதிரிய இவளவு கேணயனா இருப்பான்னு குறைச்சு மதிப்பிட்டு தோற்பதற்கும் ஒரு திறம வேணும்.. என்ன நான் சொல்றது
சுரண்டல் என்றால் என்ன?... ஆதிக்கம் என்றால் என்ன?...சுரண்டல ் என்பது வெறும் பொருளாதார சுரண்டல் மட்டுமா ?... ஆதிக்கம் என்பதும் வெறும் பொருளாதார ஆதிக்கம்மட்டும் தானா?.. சிறிது விளக்குவீர்களா?
ஒடுக்குமுறை,அடக ்குமுறை உங்கள் அகரதியில் என்ன பொருள் என்று எங்களுக்கு விளக்குவீர்களா?
அதன் பிறகு தன்னுரிமை பெறுவதற்க்கு
தேசியஇனங்களின் விடுதலை தேவையா? இல்லையா? என்பதைப் பற்றி விவாதிக்கலாம்.
பிராமனியம் (பார்ப்பனீயம்) என்பது ஒரு மிக, மிகக் கொடிய கருத்தியல். இதற்கு இணையானது என்றால் அது ஹிட்லரின் என்ற ஆரியனின் நாசிசம் தான். உலகிலேயே தாம் தான் உயர்ந்த இனம் என்ற இவர்களுக்கும் "பொது உடைமைக் கருதித்தியலுக்க ும்" எந்த சம்மந்தமுமில்லை . இவர்கள் தாம் பொது உடைமை வாதிகள் என்றால் அது ஒரு வேஷமே! ஹிட்லர் கூட தன்னை ஒரு "சோஸலிச ஜனநாயகவாதி" என்று அழைத்துக் கொண்டுதான் நாசிசத்தைக் கட்டினான்.
சிறிய மக்கட் கூட்டமான இவர்கள் இந்தியாவிலேயே மிகவும் பலம் பொருந்திய இனம். சு. சாமி என்ற ஒரு பாரப்பானுக்காக, வரலாற்றில் என்றுமில்லாமல், உயர்நீதி மன்றத்திலேயே அத்துமீறி நுழைந்து, நரவேட்டை நடத்தப்பட்டதே இவர்களின் அரசியல் பலத்திற்கு ஒரு ஒப்பற்ற சான்று.
தமிழகத்தில் இருந்து கொண்டே சிங்களனின் தமிழின அழிப்பு நடவடிக்கையை ஆதரித்து பத்திரிகைகள் நடத்தும் அளவுக்கு இவர்களுக்கு துணிச்சல் வருவது இவர்களின் இந்திய வலைப்பின்னல் கொடுக்கும் தெம்புதான்.
இந்தியா இவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தங்களின் சுயநலத்திற்காக உலகமயத்தை வரவேற்று, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி , இட ஒதுக்கீட்டை நிர்மூலமாக்கி, ஏகாதிபத்தியங்கள ை வளர்த்து விடுகிறார்கள்.
இந்தியைப் புகுத்தி, இந்திய மொழிகளை அழித்துவிட்டு, ஹிந்தி தேசியமாக மாற்றுவதே இவர்களின் நீண்டகாலத் திட்டம். சொந்த மொழியும் நாடும் அற்ற பார்ப்பானுக்கு இது மிக இயல்பான தற்காப்புத் திட்டம்.
இந்தியாவின் அரசில், பொருளாதார, பண்பாட்டு சீர்கேடுகளுக்கு பார்ப்பனீயம் ஒன்றே முழுக்காரணம்.
இந்தக் கொடிய நாகங்களின் பல்லைப் பிடுங்க வேண்டுமானால், இந்திய தேசிய இனங்கள் தன்னுரிமை பெருவது ஒன்றே அதற்கான வழி. இது ஒன்றே தமிழத் தேசியத்திற்கான அடிப்படையாகக் கொள்ள முடியும். வேறெவ்வளவோ காரணங்களுக்கும் இது தான் மூலக் காரணம். இது ஒன்றே போதும்!
மக்கள் தொகை அடிப்படையில் தமிழகம் உலகின் 12 வது தேசமாகக் கூடிய அளவுக்கு இது ஒரு பெரிய தேசம். இது விடுதலைக்கு போராடினால் பெறுவது உறுதி!!!!!!!
வெறும் 4,00,000 லட்சம் வன்னி மக்களின் தற்கால வீழ்ச்சியைக் கண்டு யாரும் அயரத் தேவையில்லை! உலகில் மாற்றம் ஒன்றே நிலையானது! இந்தியா நிலையற்றது!
நான் பொருளாதாரத்தை மாத்திரமே பார்க்க கூடியவன் எனக் கருதினால் அதனை நேர்மறையில் சொல்லுங்கள். அதற்கு நான் பதில் சொல்கிறேன். சுயநிர்ணய உரிமையை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிமை என்று சொல்வதால் அதனை எப்பொதுமே கோர வேண்டுமா.. என்பதை முதலில் சொல்லுங்கள். விவாதிப்போம்.
இன ஆதிக்கம் மற்றும் இனச் சுரண்டலுக்கும் என்ன வேறுபாடு எனச் சொல்ல முடியுமா.. உங்களது கேள்வியைப் புரிந்து கொள்ள உதவும்.
ஒடுக்குமுறைக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் அது எவர்மீது நிகழ்த்தப்பட்டா லும் எதிர்ப்போம். அதில் இன பேதம்
பார்ப்பதில்லை உங்களைப் போல•
இந்தியாவில் ஒடுக்குகின்ற தேசிய இனம் இன்னது என்று சொல்லுங்கள்.. அதன்பிறகு தமிழ்தேசிய விடுதலையின் அவசியத்தைப் பேசலாம். ஒடுக்குவது இனமா அல்லது வர்க்கமா என்பதை புரிந்து கொண்டு பேசுங்கள்.. ஒடுக்கும் தேசிய இனத்தின் பொதுப்பரப்பு, பொதுமோழி, பொதுஉணர்வு, ..இவற்றை விளக்குங்கள்.
டா.பா...
பாப்பான்கிறது இனமா அல்லது சாதியா... இனம்னா அவனுக்கு சொந்த மொழி இல்லன்னு சொல்றீங்களே அப்படி இருக்க முடியுமா...
ஒரு பெரிய மக்களதொகைதான ் தனிதேசம் அமைவதற்கான முன்நிபந்தனைய ா... இந்த அறிவு கம்யூனிஸ்டுகள ுக்கு வராதுதான்... என்ன செய்ய சமூக அறிவியலை கணிதச் சூத்திரமாகச் சுருக்க தமிழின வாதிகளைப் போல கண்ணைக் கட்டிக் கோண்டு உலகத்தை இருட்டாக்க எங்களுக்கு முடியாது சாமி...
அது சரி பாப்பானப் பத்தி எனக்கு ஏன் எழுதினீங்க•. அத மூஞ்சிக்கு நேரக் கூட சொல்ல தைரியம் இல்லையா
ம.க•இ.க இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டதாக உங்களால் நிரூபிக்க முடியுமா..
ஆனால் பிரபாகரனும், புலிகளின் ஆதரவாளர்களும் அதனை ஏற்றுதான் பயிற்சி பெற்றார்கள். கடைசியில் போரின் இறுதியில் கூட சிங்களவர்களை விட இந்திய தேசியத்திற்கு நம்பிக்கைக்கு உரிய நண்பர்கள் நாங்கள் என்றார்கள்.. இன்னும் ஒருபடி மேலே போய் பார்ப்பன இந்திய தேசியத்தின் பிற்போக்கு கட்சியான சங்கபரிவாரங்களி டம் தூது போனார்கள்... அவ்வளவு ஏன் பால்தாக்கரே வை புகழ்ந்து சமீபத்தில் மும்பையில் பேசிய சீமானை என்ன சொல்லுவது...
இந்த இலட்சணங்களை மடியில் வைத்துக் கொண்டு ஆதாரமில்லாமல் வாய்க்கு வந்தபடி பேசுவது தமிழினவாதிகளுக் கு கைவந்த கலைதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்க ின்றீர்கள்..
என் கேள்விக்கு நீங்கள்
“நான் பொருளாதாரத்தை மாத்திரமே பார்க்க கூடியவன் எனக் கருதினால்அதனை நேர்மறையில் சொல்லுங்கள். அதற்குநான் பதில் சொல்கிறேன்.” என்று சொல்லியிருக்கிற ீர்கள். நான் அப்படி கருதுவதும் அல்லது அப்படி கருதாமல் இருப்பதும் பற்றிய கவலை உங்களுக்கு தேவை இல்லை. நீங்கள் நான் எப்படி கருதுகிறேன் என்பதை பொருட்படுத்தாமல ் உங்கள் நேர்மையான பதிலைச் சொல்லுங்கள்.
அதுதான் முறையாகும்.
“ சுயநிர்ணய உரிமையை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிமை என்று சொல்வதால் அதனை எப்பொதுமே கோர வேண்டுமா.. என்பதை முதலில் சொல்லுங்கள். விவாதிப்போம்.”. .. சுயநிர்ணய உரிமையை ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிமை என்று நான்சொல்வதோ அல்லது நீங்கள் சொல்வதோ அல்ல?. மார்க்ஸீய-லெனிய
கோட்பாடு என்ன சொல்கிறது என்பதைச் சொல்லுங்கள். அதன் பிறகு எப்போதுமே கோரலாமா அல்லது வேண்டாமா? என்ற உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
“இனமா அல்லது வர்க்கமா என்பதை புரிந்து கொண்டு பேசுங்கள்.. ” நண்பர் மணி அவர்களே இந்திய இடதுசாரிகளுக்கு அதாவது உங்களைப் போன்றவர்களுக்கு caste or class அதாவது சாதியா அல்லது வர்க்கமா ,இல்லை வர்க்கமா அல்லது சாதியா என்று கூடி விவாதித்து கலைந்து மீண்டும் கூடி விவாதித்து கலைந்து சாதியே முதன்மை என்று சொல்லவும் மனமின்றி வர்க்கப்போராட்டத்துடன்
இணைந்தே சாதிஒழிப்பு போராட்டத்தையும் நடத்தவேண்டும் என்று முடிவு எடுக்க எண்பத்தைந்து ஆண்டுகாலம் முடிந்து விட்டது.
ஆகவே நாங்கள் நன்றாக புரிந்து கொண்டோம். உங்களுக்கு இது புரிய இன்னும் ஒரு நூறு ஆண்டுகள் ஆகலாம்.
இந்தியாவின் கல்வி, மனப்பாடக் கல்வி. அது மதிப்பெண்களைக் கொடுக்கும், அதற்குமேல் வேறெதற்கும் பயன்படாது. இவர்களின் மனப்பாட மார்க்ஸியமும் அப்படித்தான். நாம் சாணி என்று பாரத்தவுடன் அறிவதை, இவர்களால் மூக்கில் ஒட்டிக்கொண்டு தான் அறியமுடியும். ஆதனால் தான், வர்க்கத்தை மிஞ்சிய சாதியின் ஆதிக்கத்தை, இவர்கள் புரிந்துகொள்ள 70 ஆண்டுகள் பிடித்தது.
வரட்டுவாதிகள். அடிபட்டு அழப்போகும் போது கூட, மார்க்ஸிய வழிகாட்டுதலுக்க ாக, புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருப்பார்க ள். எல்லாமே அதில் சொல்லப் பட்டிருக்க வேண்டும். தேர்விலே Theorem மட்டும் மனனம் செய்து எழுதி, Problems களைக் கடைக்கண்ணால் கூட பார்க்காமல் பாசானவர்கள்.
தமிழத்தேசியர்கள ின் கட்டுரைகளும், பின்னூட்டங்களும ் நறுக்கென்று இருக்கும். மனப்பாட கேஸ்கள், கேள்வியையே புரிந்துகொள்ளாம ல், உப்பைப்பற்றிக் கேட்டால் பப்பைப் பற்றி எழுதுவது போல, இவர்களின் பதில்கள் இருக்கும். திருத்துபவர்களை கேணயன்கள் என்று எண்ணி, பொய்க் கதைகளை எல்லாம் சேர்த்து பக்கத்தை நிரப்பி எழுதும், மனப்பாடக் கேஸ்கள் இவர்கள்.
தத்துவங்கள் திசைகாட்டிகள் தாம். ஆனால், இவர்கள் அவற்றைப் பாதையாகவேக் கொண்டு, திக்குத் தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பார்க ள். நாதியற்று தம்முடன் வருபவர்களையும் சேரத்து சுற்ற வைப்பார்கள்.
இவர்கள் மனனம் செய்த புத்தகங்கள் கூட, இவர்கள் தலைவர்களால், "சாமர்த்தியமாக" தமிழாக்கம் செய்யப்பட்ட புத்தகங்கள் தாம். சொல்லவும் வேண்டுமோ?
தாங்கள் நான் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு பதில் சொன்னபதிவில் டா. பா. என்று குறிப்பிட்டு அவர் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லியுள்ளீர்க ள். இதுமுறையில்லை இது எனது கேள்விக்கான உங்களின் பதில்களின் மூலம் கீற்று வாசகர்களை திசைதிருப்பும் முயற்சியாகும். நீங்கள் குறிப்பிட்டிருக ்கும் திரு. டா.பா. அவர்களுக்கு தனி பதிவின் மூலம் பதில் சொல்லியிருக்க வேண்டும். அதுதான் நேர்மையாளர்களுக ்கு அழகுசேர்க்கும். சரி பரவயில்லை.நிற்க .
//...”ஒரு பெரிய மக்களதொகைதான ் தனிதேசம் அமைவதற்கான முன்நிபந்தனைய ா... இந்த அறிவு கம்யூனிஸ்டுகள ுக்கு வராதுதான்... என்ன செய்ய சமூக அறிவியலை கணிதச் சூத்திரமாகச் சுருக்க தமிழின வாதிகளைப் போல கண்ணைக் கட்டிக் கோண்டு உலகத்தை இருட்டாக்க எங்களுக்கு முடியாது சாமி”.../// .
நண்பர் மணி அவர்களே சமூக அறிவியலை நன்கு கற்று உணர்ந்து தெளிந்த மார்க்ஸீய ஆசான்கள் உலகசமூகம் எந்த திசைவழியில் செல்லும், செல்லவேண்டும் என்பதற்காகத்தான ்
தாங்கள் கற்றவறை மார்க்ஸீய தத்துவமக சமூக அறிவியலை வளர்த்து எடுத்துள்ளனர்.
புராதன பொதுவுடமை சமுதாயம், அடிமை சமுதாயம்,நிலப்ப ிரபுத்துவசமுதாய ம்,முதலாளித்துவ சமுதாயம், பிறகு ஏகாதிபத்தியமாக மாறுகிறது. சமூகம் ஏன் இந்தக்கணக்கீட்ட ின் படி மாறவேண்டும் ,ஏன் தலைகீழ் மாற்றமாக மாறவில்லை.உற்பத ்திஉறவுகளில் ஏற்படும் மாற்றம் தான் சமூகமற்றத்தில் கொண்டுபோய் விடுகிறதுஎன்ற விதியை (சூத்திரத்தை-la w) கண்டு கொண்டனர். இந்த விதியை கண்டுகொள்வதற்கு கணக்கீடு சூத்திரம் மிக முக்கியாமான ஒன்றாக இருக்கிறது என்பது தெளிவாகிறது. மேலும் அறிவியலையும் கணக்கீடுகள் இல்லாம ல் புரிந்துகொள்ள இயலாது.இது சமூக அறிவியலுக்கும் பொருந்தும் என்பதே உண்மை. கணிதசூத்திரம் சுருக்கமாகத்தான ் இருக்கும். ஆனால் அதுதான் அடிபடை விதி. அதன் விரிவுகள் எல்லைகளற்றது. ஆனால் அதுதான் உங்களுக்கு பிரச்சினை.என்ன செய்ய?....
ஒரு பழமொழி நினைவிற்கு வருகிறது. அதாவது ஒருவன் தன் நண்பணிடம் ஆல இலை எப்படி இருக்கும் என்று கேட்டான். அதற்கு அவன் இது தெரியாதா? அது புளிய இலை போல வேலியில் படர்ந்து இருக்கும் என்றானாம். அது போல் இருக்கிறது உங்கள் பதில்.என்ன செய்ய உங்களுக்குத்தான ் கணிதசூத்திரம் பிடிக்காதே
ஐன்ஸ்டீனின் சார்புநிலைத்த்த ்துவமும் நியூட்டனின் உலகம் பற்றிய கொள்கையும் வேறு வேறானது. முன்னதுதான் இயக்கவியலோடு இயைந்து இருக்கிறது என்பதை ஒரு பார்முலா மூலம் அனைவருக்கும் விளக்க முடியாது. மார்க்சிய பொருளாதாரமோ அல்லது மார்க்சியம் தேசிய இனப்பிரச்சினையை ப் பற்றி என்ன சொல்கிறது என்பதையோ சிறுசிறு பகுதிகளாக எழுதினால் கூட குறைந்த்து ஏ4 சைஸ் பேப்பரில் 80 பக்கமாவது எனக்குத் தெரிந்தே ஆகும். அதற்கு பின்னூட்டமோ அல்லது தனிப்பதிவோ சாத்தியமில்லை. எனவேதான் மார்கசிய லெனிய கோட்பாடு இவற்றை தவறாக அணுகுவதாக நீங்கள் கருதினால் அந்த இடத்தை குறிப்பிட்டு காட்டுங்கள் விவாதிக்கலாம்.
மற்றபடி விமர்சனம் வைப்பவர்தான் பாயிண்டுகளை எடுத்துவைக்க வேண்டும் என்ற அனைவருக்கும் தெரிந்த முறையை உங்களுக்கு சுட்டிக் காட்டி மடையடைக்க விரும்பவில்லை. உதாரணமாக குறளில் தவறு கண்டுபிடித்து விமர்சனம் செய்ய முன் வருபவன் அதனைக் கேட்டுக் கொண்டிருப்பவனிட ம் அனைத்துக் குறளையும் எழுதி அதற்கு பொருள் விளக்கம் கூறு அதற்கு பிறகு அதில் நொட்டம் சொல்கிறேன் என்றால் சான்றோர் நிறைந்த அவை அதை ஏற்றுக் கொள்ளுமா என நீங்கள்தான் சொல்ல வேண்டும்..
தனிப்பதிவு போட வேண்டும் பாண்டியனுக்கு என நேர்மையாளர்களின ் நடத்தைபற்றி எனக்கு நீங்கள் பாடம் எடுத்திர்கள். நான் அவரிடம் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் சொல்ல அவர் மவுனம் காக்கிறார். நீங்களோ பதில் சொல்ல முனையவுமில்லை.
நீங்கள் சாதியை ஒழித்தால் போதும் என்கின்றீர்கள். . அப்படி ஒழித்து அமையப் போகும் சமுதாயத்தில் எந்த்த் த்த்துவம் சமூகத்தை வழிநடத்தும் என சொல்லுங்கள். தனியாக சாதி ஒழிப்பு எப்படி சாத்தியம் என த்த்துவம் கூட வேண்டாம். நீங்களாவது விளக்குங்கள்...
டா.பா...
அடிபடும்போது கூட மார்கசிய புத்தகத்த தேடுனொம்னு சொன்னீங்க•. புத்தகத்த் புரட்டுவத விட அரசைத் திருப்பிடலாம்னு இந்திய அரசுக்கு ஈழத்தின் இறுதிப்போரில் மாபெரும் நெருக்கடி கொடுக்க நினைத்த இனவாதிகள் தோற்றதற்கு தியரம் எப்படி பயன்படுத்துவது எனத் தெரியாத தன்மை காரணம் இல்லையா..
சமூக மாற்றத்தின் பல்வேறு உற்பத்தி முறைகளும் மாறுவதில் பின்னாலும் போக முடியும். ஒன்றுவிட்டு ஒன்று தாவ்வும் முடியும். உதாரணம் இன்றைய சீனா மற்றும் ரசியா, மற்றும் சீனா. இது பார்முலாவை இயங்காவியலில் வைத்து நோக்கினால் புரிந்து கொள்ள முடியாது. அப்புறம் சீனா ஒரு விவசாய தேசம் அங்க முதலாளித்துவம் வந்துதான் சோசலிசம் வரணும். நேர வரக்கூடாது அப்படின்னு சொல்லிருப்பீங்க • சோசலிசம் வீழ்ந்த பிறகு முதலாளித்துவமா. .. பின்னாடி எல்லாம் உற்பத்திமுறை போக்க் கூடாது அப்படிம்பீங்க•. . அறிவியல் துறையிலும் உங்களைப் போன்றவர்கள் இருக்கின்றார்கள ். அது ஒரு தனி சப்ஜக்ட்.. கடந்த நோபல்பரிசு அதற்கு பலமுனைகளில் இயக்கவியல் பார்வை இன்மையால் முடக்கப்படவுள்ள சிதம்பரம் வெங்கியின் ஆய்வுகளின் நீட்சிகள்
... இப்படி பேசுவதற்கு நிறைய இருக்கிறது. மாறாநிலைத் த்த்துவத்தின் வாரிசுகளான உங்களால் எப்படி சிந்திக்க முடியும் என்பதற்கு ஒரு 22 ஆண்டுகள் பின்னால் போக வேண்டியுள்ளது.
1987 இல் சினிமா நடிகர் பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள் நால்வர் சுதா என்ற மலையாளியான துணைநடிகையை படப்பிடிப்பு என வரச் சொல்லி, சென்னை அண்ணா நகரில் உள்ள பாண்டியனது பங்களாவில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தனர். போலீசில் புகார் செய்யப்பட்டும் மருத்துவப் பரிசோதனைக்கு மாதக்கணக்கில் காலம்கடந்து செல்லாமல் போனதும் தனிக்கதை... விசயம் அது அல்ல•.. அன்றைய நடிகர்கள் சங்கம் தமிழ் உணர்வோடு வெளியிட்ட கருத்து என்ன தெரியுமா... பச்சைத்தமிழனான பாண்டியனை அவரது புகழைக் கெடுப்பதற்காக மலையாளிப் பெண் அவதூறு செய்கிறார். மலையாளிப் பெண் என்றாலே விபச்சாரி என நமக்குத் தெரியும்.... என்று போகிறது அவர்களது அறிக்கை.. தூய இனவாதம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சரவணபவன் அண்ணாச்சியின் காம லீலைகளுக்கு தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக ஆரியர்கள் நடத்தும் யுத்த்த்துக்கு எதிராக வக்கலாத்து வாங்கியது..
உங்க தியரத்த நீங்க சரியா புரிந்து கொள்ளாவிடில் எப்படி தவறான ஆன்சர் கிடைக்கும் என்பதற்கு இன்னும் எடுத்துப்போட உதாரணங்கள் ஏராளம் உள்ளது...
சிக்கலைத் திசை திருப்புவது, பொய்ச்சான்றுகளை வைப்பது, தமக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை என்று பீற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்.
இந்தக் குணக்கேடுகளின் நாயகன் தற்போது கருணாநிதி என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால்,
"என்னை விட்டுவிட்டீர்க ளே! நான் அவரைவிடக் கில்லாடி! கருணாநிதி ஜெயலலிதாவை திருமதி என்று அழைத்தால், நான் இந்த டா. பா வுக்கு பொம்பளப் பொருக்கி பாண்டியனை நினைவூட்டுவேன்!
கருணாநிதி என்ன பெரிய கலைஞனா, எனக்கு நோபல் ஆய்வெல்லாம் அத்துப்படி!"
என்றெல்லாம் ஓலமிட்டுக்கொண்ட ு வந்துவிடுவார் இந்த மணி. ஒரு மார்க்ஸிய வாதிக்கு முதன்மை அழகே அவரது நேர்மை தான். அது இல்லாமல் இயக்கவியல், இயங்காவியல், மாற்றவியல் மாறாவியல் எல்லாம் வீண் ஜம்பங்கள் தாம்!
இந்த மணி எப்பேர்பட்ட அடிப்படை ஞாணயமற்றவர் என்பதற்கு ஒரே ஒரு சான்று சொல்லி முடிக்கிறேன். இந்தப் பின்னூட்டங்களில ேயே, "ஆண்டன் பாலசிங்கம், பிரபாகரனுக்கு RAW வின் உதவியோடு தனி ஈழம் அமைத்துவிடலாம் என்று கற்பித்தார்" என்று அபாண்டமான, அயோக்கியத்தனமான பொய்யைச் சொல்கிறார்.
ஆனால், அனிதா பிரதாப், பிரபாகரன் 80 களில் தனக்குத் தந்த பேட்டியில், தற்போது உதவிசெய்யும் இந்தியாவை நாளை நாங்கள் எதிர்த்து நிற்கவேண்டிய கட்டாயம் வரும். தனி ஈழம் அமைவது இந்தியாவுக்குப் பிடிக்காது என்று சொன்னதாகச் சொல்லியுள்ளார்.
மார்க்ஸிய இயங்கும், இயங்காவியலெல்லா ம் கரைத்துக் குடித்து, நோபல் பரிசு முதற்கொண்டு அத்துனை நாட்டு நடப்புகளையும் மார்க்ஸிய தராசிலே நிறுத்துப் பார்க்கிறவருக்க ு, அனிதா பிரதாப் பல காலமாகச் சொல்லும் இந்த உண்மை தெரியாதா? தெரியும்! பிறகு ஏனிந்த அபாண்ட தூற்றல்?
பரிபாகரனின் கால் தூசிக்குக் கூடச் சமமில்லாத இந்தக் கயவர்களின் காழ்ப்புணர்ச்சி தான் காரணம். ஈழம் அமையக்கூடாது. அந்தப் பழி இந்தியாவின் மீது வந்து விடக்கூடாது. இந்தியாவின் தவறென்று உறுதியானால், தமிழர்கள் விழித்துக்கொண்ட ு தனிநாடு கேட்பார்கள். இந்திய தேசிய வியாதிகளான இவர்கள் பழியைப் புலிகளின் மீதே போடும் Cosmic அட்டூழியம் தான் இது!
நேர்மையும், தௌிவானப் பேச்சும் இல்லாத இவர்கள் மார்க்ஸியர்கள் அல்லர்.
இவரின் இந்தப் பின்னூட்டங்களே இதற்குப் போதுமான சான்று!!!
என்னுடைய அறிவு நாணயம் பற்றிய உங்களது மதிப்பீட்டில் ஒரு சிறிய சந்தேகம். அனிதா பிரதாப் முதலில் பிரபாகரனை சந்தித்தாரா அல்லது ஆண்டன் பாலசிங்கம் பிரபாகரனை சந்தித்தாரா.. உங்களது அறிவு நாணயத்தை நான் இங்கு கேள்விக்குள்ளாக்குகிறேன்.
அடுத்து பிரபாகரனின் கால்தூசிக்கு கூட நாங்கள் சமமில்லை என்பதை எந்த அடிப்படையில் அல்லது உங்களது எந்த அறிவியல் முறையில் சொல்கின்றீர்கள ் என விளக்க முடியுமா.. மற்றபடி அவரது திறமை மற்றும் அரசியல் அறிவு அபிமன்யு போல கருவிலே கூட இருந்திருக்க முடியும்.. அப்படியெல்லாம் பிறப்பாலே திறமைசாலி என நான் சொல்லவில்லையே..
அடுத்து தனி ஈழம் அமைந்தால் இந்தியா மீது பழிவிழும் என்பது புரியவில்லை.. அறிவுசார் அறிஞராகிய தாங்கள் எங்களுக்கு அதன் தர்க்கரீதியான பக்கத்தை மாத்தரம் விளக்க முடியுமா..
மற்றபடி என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்லி உள்ளேன்.. நீங்கள் சொல்வீர்களா மாட்டீர்களா என்பதற்கு இனிமேல்தான் சுவடி பார்க்க வேண்டும்..
RSS feed for comments to this post