மனிதகுலம் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் அறிவியல் - தொழில் நுட்பம் - அரசியல் துறைகளில் கண் டுள்ள மாற்றமும் முன்னேற்றமும் மகத்தானவை, விரைவானவை.

18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழில் புரட்சி ஏற்பட்டது. உற்பத்தி சக்திகள் பிரமிக்கத்தக்க வளர்ச்சி பெற்றன. இதே 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட ‘பிரெஞ்சு புரட்சி’ பரம்பரை முடியாட்சியை ஒழித்து மக்களாட்சி ‘குடியரசு’ முறைக்கு வழி வகுத்தது.

19ஆம் நூற்றாண்டில் வறுமை, அறியாமை, சுரண்டலில் இருந்து மனித குலத்தை விடுவிக்க, 1848ஆம் ஆண்டு காரல் மார்க்சும் எங்கெல்சும் பொதுவுடமை அறிக்கை வெளியிட்டனர். அமெரிக்காவில், ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட நீக்ரோ இன அடிமைகளை விடுவிக்க ஆபிரகாம் லிங்கன் போராடினார். ரஷ்யாவில் பண்ணை அடிமைகள் விடுதலை செய்யப்பட்டனர். சீன நாட்டில் நடைபெற்ற தைப்பிங் - பாக் கலகங்கள் - இந்தியாவில் 1857இல் நடைபெற்ற முதல் இந்திய சுதந்திர போர், பிஸ்மார்க்கின் முயற்சியால் ஜெர்மனி ஒன்றுபட்ட நாடானது, போன்றவை மக்களின் விழிப்புணர்வையும், தேசிய எழுச்சியையும் பிரதிபலித்தன.

20ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தில் இருந்து ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் சுமார் 7 விடுதலை அடைந்தன. 20ஆம் நூற்றாண்டில் முதலாம் உலகப் போரின் (1914-18) போது இரஷ்யாவில் 1917 அக் டோபர் புரட்சி வெற்றி பெற்று உலகின் முதல் பாட்டாளிவர்க்க அரசு அமைக்கப் பட்டது.

இரண்டாம் உலகப் போரின் (1939 - 1945) முடிவில் பெரும் பாலான கிழக்கு ஐரோப்பிய நாடு களிலும் பொதுவுடமை புரட்சி அரசுகள் தோற்றம் பெற்றன. 1949ஆம் ஆண்டு சீனாவிலும் பொதுவுடமை அரசு நிறுவப்பட்டது.

இந்த எல்லா பொதுவுடமை அரசுகளுமே, 1990இல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், 1991இல் சோவியத் யூனியனிலும் வீழ்ச்சி அடைந்தது கவனத்தில் கொள்ளத் தக்கது.

இதற்குப் பிறகான மாற்றங்களில் கணிணி, தகவல் தொழில் நுட்பம், உயிரித் தொழில் நுட்பம், மரபு சாரா ஆற்றல்கள் - நானோ தொழில் நுட்பம் போன்ற வற்றிலும் மனித குலம் மகத்தான முன்னேற்றம் கண்டு, இன்றைக்கு உலகம் 21ஆம் நூற்றாண் டின் முதல் 10 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகிறது. இந்நிலையில் மனிதகுலம் மேன்மை அடைய - தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்ள, மேலும் பல போராட்டங் களை நடத்த வேண்டி யுள்ளது. அவை,

(1) வர்க்கப் போராட்டம், (2) தேசிய இனங்கள் விடுதலை போராட்டங்கள் (3) நிறவெறி, இனவெறிக்கு எதிரான போராட் டங்கள், (4) பெண்கள், விடுதலை, முன்னேற்றத்துக்கான போராட்டங்கள் (5) கலாச்சார சீர்கேடுகள், நுகர்வுக் கலாச்சாரத்திற்கு எதிரான போராட் டம் (6) சுற்றுப்புறச் சூழல் - இயற்கை வேளாண்மை - இவற்றை மக்களிடம் பரப்பவும் - பரப்புவதற்கு தடையாக உள்ளவற்றையும் எதிர்த்த போராட்டங் கள் என பலவகைப் படுத்தலாம்.

இவற்றுள் முதலிரண்டு போராட் டங்கள் பற்றி மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

முதலில் வர்க்கப் போராட்டம் என்றால் என்ன? தேசிய இன விடுதலைப் போராட்டம் என்றால் என்ன? என்று பார்ப்போம்.

மனித சமுதாயத்தில் செல்வம் உள்ளவர்களை எல்லாம் இருக்கின்ற வர்க்கமாகவும், ஏழை எளியவர்களை இல்லாத வர்க்கமாகவும் பொருளாதார அடிப்படையில் பிரித்து உணர்ந்து சுரண்டல், அறியாமை, அநீதி, ஏற்றத் தாழ்வு ஒழிய செல்வம் உள்ளவர் களிடம் உள்ள செல்வங்களை பொது வுடமை யாக்குவதற்கு மக்களைத் திரட்டி போராடுவது வர்க்கப் போராட்டம் ஆகும்.

இங்கு செல்வம் வளங்கள் என்பது உற்பத்திக் காரணங்கள். அதற்கான மூல ஆதாரங்கள் என்ப தாகும். தற்சமயம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ள சேவை துறையையும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்.

1. விளை நிலங்கள் 2. சுரங்கங்கள் 3. எண்ணெய் வயல்கள் 4. பணப் பயிர், மலைத் தோட்டங்கள்

5. தொழிற் சாலைகள் 6. விற்பனை, மருத்துவம், சட்டம் , தணிக்கை, போக்குவரத்து போன்ற சேவைத் துறைகள்,

இவையனைத்தும் தனியார் உடைமையில் இருப்பது தனியுடமை ஆகும். இதனால் செல்வம் ஓரிடத்தில் குவிந்து பெரும்பாலோர் மனித சமுதாயத்தில் 80% பேர் ஏழ்மை யிலேயே இருப்பார்கள். உலகின் இன்றைய மக்கள் தொகையில் 75% பேர் ஏழைகளே. 5% பேர் பெருஞ் செல்வர்கள். 10% பேர் நடுத்தர செல்வர்கள். 10% பேர் மத்திர தர வர்க்கத்தினர் எனலாம்.

பொதுவுடமை புரட்சி ஒரு நாட்டில் ஒரு சமுதாயத்தில் ஏற்பட்டு வெற்றி பெற்றால் அந்நாட்டில் அந்த சமூகத்தில் எல்லாம் அரசுடமையும் பொது மூலதனமும் ஆகிவிடும். இது சமதருமம் (ஷிஷீநீவீணீறீவீsனீ) எனப்படும். வெற்றி பெறுகிற பொதுவுடமை அரசு, மக்கள் எல்லோருடைய அடிப்படை தேவைகளுக்கும் சமுதாய திட்டமிடல் நடவடிக்கைகளில் ஈடுபடும். இத னால் வறுமை முற்றிலும் ஒழிய வாய்ப்பு ஏற்படும்.

இத்தகைய வர்க்கப் பார்வை, வர்க்க சிந்தனை, வர்க்கப் போராட் டத்துக்கும் ஒரு நெடிய சிந்தனை வரலாறு உண்டு. ஒரு ஆச்சரியமான செய்தி! உலகின் முதல் சமதரும சமுதாயம், 8ஆம் நூற்றாண்டில் “திபெத்” நாட்டில் முனிசன் போயா என்ற திபெத் நாட்டை ஆண்ட புத்த மத மன்னனால் நடைமுறைப் படுத்தப்பட்டது. நாட்டின் செல்வ வளங்களை அம்மன்னர் சமமாக பங்கீடு செய்தாராம். எனினும் இவர் காலத்திற்கு பிறகு இச்சமதரும சமுதாய அமைப்பு நிலைக்கவில்லை. காரணம் செல்வம் பெற்றவர்கள் உழைக்காமல் சோம்பேறிகளாகி விட்டதுதான். எனவே பொதுவுடமை பொருளா தாரத்திற்கு மக்களை விழிப்புணர் வுடன் பக்குவப்படுத்த வேண்டும் என இதில் இருந்து தெளிவாகிறது. இச் செய்தியை பிரபல மார்க்சிய தத்துவ அறிஞர் காலஞ்சென்ற பேராசிரியர் இராகுல் சங்கிருத்தியாயன் தம் நூல் களில் பதிவு செய்துள்ளார்.

அடுத்து இங்கிலாந்து நாட்டில் கிராமப்புற பாதிரியார் ஜோசப் மௌயே என்பவர் உற்பத்தி, வினி யோகம் இவற்றில் கிராமங்களில் சமதரும கூட்டுறவு ஏற்படவேண்டும் என 16ஆம் நூற்றாண்டிலேயே பிரச்சாரம் செய்தார். 18ஆம் நூற் றாண்டில் பிரான்சு நாட்டில் ஹென்றி சைமன், சார்லஸ் ஜோசப் பூரியர் போன்றவர்கள் செல்வம் சில பேரிடம் குவிவதால் வறுமை ஏற்படுகிறது. செல்வத்தை பரவலாக்க வேண்டும். தனியார் சொத்துக்களுக்கு உச்ச வரம்பு விதிக்க வேண்டும். அனைவரும் கைத் தொழில் கற்கின்ற சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும் என சமதரும பிரச்சாரம் செய்தனர். இராபர்ட் ஏலன் (1771 - 1858) இங்கிலாந்தில் கூட்டுறவில் தொழிற் சாலைகளை நிறுவி தொழிலாளர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார். 19ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் தோன்றிய காரல் மார்க்ஸ் (1881 - 1883) இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்கிறார். அவர், ‘இயற்கை பருப் பொருட்களால் ஆனது. பருப் பொருட்களின் சேர்க்கையே இவ் வுலகம், இப்பருப்பொருள்கள் தாமே இயங்கக்கூடியன. இவ்வுலக தோற்ற, முடிவுக்கு ஒரு கடவுள் என்பதும் ‘பரமாத்மா’ என்பதும் கிடையாது. இவ்வுலகில் உயிரினங்கள் தோன்றி, மனிதன் தோன்றி மனிதனால் மட்டும் உற்பத்தி சக்திகள் வளர்ச்சி அடை கின்றன. இந்த உற்பத்தி சக்திகளுக் கேற்ப மனித சமுதாயத்தில் அரசு வடிவம் மாறுகிறது அவை

(1) புராதனப் பொதுவுடைமை, (2) அடிமை - எசமான முறை

(3) நிலப் பிரபுத்துவ முறை (4) முத லாளித்துவ உற்பத்தி முறை என்ற முறைகளுக்கேற்ப அரசு வடிவம் மாறுகிறது. சுரண்டல், அநீதி போன் றவை புதிய, புதிய வடிவம் பெறு கின்றன. சுரண்டப்படுகிற தொழி லாளர்களிடம் சுரண்டல் பற்றிய விழிப்புணர்வை வளர்த்தால் புரட்சி செய்து பொதுவுடமை அரசு நிறுவி, வறுமை, அறியாமை, சுரண்டலை ஒழிப்பார்கள். இத்தகைய சோஷலிச சமூக அமைப்பில் நாடாளுமன்றம், நீதிமன்றம், காவல்துறை, இராணுவம் இவைகளை உள்ளடக்கிய சோஷலிச சமூகம் இருக்கும். சோஷலிச எதிர்ப் பாளர்களை ஒடுக்கும். சோஷலிச சமுதாயம் நன்கு நிலைப்பெற்ற பின், மனித சமுதாயம் நன்கு பண்பட்ட பின், சோஷலிச அரசு, சோஷலிச நாடாளுமன்றம், நீதிமன்றம், காவல் துறை, இராணுவத் துறை எல்லாம் தானே தகர்ந்து விடும். அரசு அற்ற சமதரும சமுதாயமான கம்யூனிச கூட்டு வாழ்க்கை சமுதாயம் ஏற்படும்’ என்ற தத்துவத்தை வகுக்கிறார்.

தன் எழுத்து, பேச்சு, வாழ்க்கை மூலம் தன் தத்துவம், கொள்கை, நடைமுறை களுக்கு சர்வதேச வடிவம் கொடுக்கிறார். இங்கு மார்க்சியத்தில் மார்க்ஸ் கண்ட நடைமுறை தெளிவில் கவனத்தில் கொள்ள வேண்டியது, முந்தைய பிரெஞ்சு சோஷலிஸ்டுகள் தனிவுடமை சீர்கேட்டை கண்டித் தாலும் சோஷலிசத்தை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகள் எடுக்க, சோஷலிசக் கொள்கை உடையவர்கள் அரசைக் கைப்பற்ற வேண்டும், சோஷலிச கொள்கையை நடைமுறை படுத்துவதற்கு, சோஷலிச அரசு வேண்டும் என்ற தெளிவுக்கு வர வில்லை. காரல் மார்க்ஸ்தான் இந்த தெளிவுக்கு வந்தவர். எனவே இவர் களின் மனிதாபிமான சிந்தனைகளை காரல் மார்க்ஸ் பாராட்டினாலும் இதை கற்பனாவாத சோஷலிசம் (ஹிttஷீஜீவீணீ ஷிஷீநீவீணீறீவீsனீ) என்று வரையறை செய்தார். 1883இல் மார்க்ஸ் மரணம் அடைந்தார். அவரின் மார்க்சிய தத்துவ அடிப்படையில் உலகமெங்கும் எல்லா நாடுகளிலும் பொதுவுடமை கட்சிகள் தோன்றி செயல்பட்டு வருகின்றன.

இப்படிச் செயல்பட்டு வரும் காட்சிகளில் தொழிற்சங்க போராட் டம் மட்டும் நடத்தும் பொதுவுடமை இயக்கங்கள், ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்துள்ள மார்க்சிய, லெனினிய பொதுவுடமை இயக்கங் கள், தேர்தல் பாதையை ஏற்றுக் கொண்டு முதலாளித்துவ அரசியல் கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி வைத்து சில இடங்களில் நாடாளு மன்றம், சட்டமன்றத்தில் வெற்றி பெறுவதுடன் நின்று விடுகின்ற பொது வுடமை இயக்கங்கள் என நிலவு கின்றன.

இந்தியாவில் மார்க்சிய லெனி னிய இயக்கங்கள் புரட்சிகர சமூக அமைப்பு அதைச் சார்ந்து தேசிய இன விடுதலை போராட்டங்கள் என்ற இலக்கை வைத்து செயல்படுகின்றன.

இவை தவிர மார்க்ஸ் காலத்துக்கு பிறகு தோன்றிய மார்க்சியத்துக்கு மாறான போக்கு கொண்ட பலவித சோஷலிச சிந்தனைப் போக்குகளும் நிலவுகின்றன.

பருப்பொருட்களினால் உலகம் தோன்றியது என்பதில் இருந்து மார்க்சியத்தை மறுத்து அதே சமயம் தனி உடமை கொடுமைகளால் உலகம் துன்பப் படுகிறது என்பதை ஏற்று தங்கள் நாட்டு சிந்தனை சூழலுக்கேற்ப சோஷலிச கொள்கையை முன்வைத்த வர்களும் உண்டு. காரல் மார்க்சுக்கு பிறகு உலகின் எல்லா நாடுகளிலும் இத்தகைய சோஷலிஸ்டுகள் தோன்றி உள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக இந்தியாவில் (1) ஆச்சார்ய நரேந்திர தேவா (1893 - 1956) (2) லோக் நாயக் ஜெயப் பிரகாஷ் (1902 - 1979) (3) டாக்டர். ராம் மனோகர் லோகியா (1910 - 1967) போன்ற தலைவர்களைக் குறிப்பிடலாம்.

இவர்கள் இந்தியாவில் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடு தலை போராட்டத்தில் சிறை தண்டனை பெற்றவர்கள். இதில் ஆச்சார்ய நரேந்திர தேவா, ஜெயப் பிரகாஷ் நாராயணன் என்ற இரு தலைவர்களும் தங்கள் பொதுவாழ் வின் ஆரம்ப கட்டத்தில் மார்க்சிய இயக்கத்தில் இருந்து பின் விலகி யவர்கள். பின்னர் தங்கள் சுய சிந்தனை, சோஷலிச கொள்கையை வெளியிட்டவர்கள். இதில் ஒரு நாட்டில் உள்ள தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் எல்லாம் தனி யுடமையில் இருக்கக் கூடாது. பொது வுடமையில் இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டவர்கள்.

தென் அமெரிக்க கண்டத்தில் 1950 - 1980ஆம் ஆண்டுகளில் மார்க்சிய சோஷலிசத்தின் பொருளா தார அம்சத்தையும் கிறித்துவ மதத்தின் அன்பு, இரக்கம் என்ற கொள்கை யையும் இணைத்து விடுதலை இறை யியல் சோஷலிசம் என்னும் தத் துவத்தை உருவாக்கினர். இதன் தொடர்ச்சியாக தற்சமயம் வெனிசுலா, பொலிவியா நாடுகளில் 2007ஆம் ஆண்டு முதல் ஏகாதிபத்திய எதிர்ப்பு சோஷலிஸ்டுகள் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து உள்ளனர். வெனிசுலாவில் ஹ்யூகோ சாவேஸ் தலைமையிலும் பொலிவியாவில் ஈலாமெலோரஸ் தலைமையிலும் தற்சமயம் ஏகாதிபத்திய எதிர்ப்பு சமதருமவாதிகள் ஆட்சி அமைத் துள்ளது உலகெங்கும் உள்ள முற் போக்குவாதிகளால் வரவேற்கத் தக்கதாகும். இந்நாடுகளில் உள்ள பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளுக்கு சொந்தமான எண்ணெய் வயல்கள், கனிம சுரங்கங்கள், தனியார் தொழிற் சாலைகள் எல்லாம் தேசிய மய மாக்கப்பட்டு மக்களுக்கு பல சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. சுருக்கமாக சொன் னால் அமைதியான முன்னேற்ற புரட்சி நடைபெற்று வருகிறது. இதுபற்றி எல்லாம் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.

அடுத்து தேசிய இன விடுதலைப் போராட்டம்.

தற்சமயம் உலகமெங்கும் மொழி வழி தேசிய இன விடுதலை போராட் டங்கள் வெவ்வேறு தளங்களில் நடைபெற்று வருகின்றன.

ஒருமொழி வழி தேசிய இனத் துக்கு ஒரு ஒருங்கிணைந்த அரசு என்ற சிந்தனை வளர்ச்சி. கடந்த 3 நூற்றாண்டு கால வளர்ச்சி ஆகும்.

மக்களை இணைப்பது, சேர்ந்து வாழ வைப்பது அவரவர் தாய்மொழி யேயாகும். மக்கள் கூடி செயல் படவும் தங்கள் உணர்வுகளை வெளிப் படுத்துவதும், பிறர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், பாலமாகத் திகழ்வது அவரவர் தாய் மொழியே யாகும். ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களை ஒரு குறிப்பிட்ட இனமாக, சமுதாயமாக அடையாளப் படுத்தி ஒருங்கிணைப்பது அவரவர் தாய் மொழியே. எனவே ஒரு மொழி பேசுபவரையே ஒரு மொழி இனம் எனலாம். ஒரு மொழி இனத்துக்கான நிலப்பகுதியைத் தேசம் எனலாம். ஒரு மொழி பேசும் மக்களையும் அதற்கான நிலத்தையும் மக்கள் தங்களைத் தாங்களே ஒழுங்குப்படுத்தி கொள்ள நிறுவும் அரசாங்கத்தை மொழி வழி தேசிய இன குடியரசு எனலாம்.

இப்படி மொழிவழி தேசிய இன அரசு அமையாமல் ஒடுக்கப்பட்டோ அல்லது சேர்ந்தோ வாழும் தேசிய இனங்கள், அரசுகள், பட்டியல்களைக் கீழே காண்போம்.

ஒடுக்கப்படும்    தேசிய இனம் - ஒடுக்கும் (அ) சேர்ந்துள்ள தேசிய இனம்

   1.         தமிழ் ஈழம் - சிங்களம்

2.         செசன்யா  -ரஷ்யா

3.         திபெத்  -   சீனா

4.         கிழக்கு துர்கிஸ்தான் -  சீனா

5,         பாலஸ்தீனம்  -  இஸ்ரேல்

6.         பாங்கு   -  ஸ்பெயின்

7.         க்யூபெக் -  கனடா

            (மொழி-பிரெஞ்சு) (மொழி-ஆங்கிலம்)

8.         வட அயர்லாந்து - இங்கிலாந்து

9.         பங்சோ மோஜா  - பிலிப்பைன்ஸ்

10.       குர்தீஸ்கான்   -  ஈராக்-ஈரான்-

                        துருக்கி -சிரியா

11.       குரசங்கான் - ஈரான்

12.       பக்டுனிஸ்தான் - பாகிஸ்தான்

            (பட்டானியர்கள்)

மேலே உள்ள பட்டியலில் குர்தீஸ் மொழி பேசும் மக்கள் சுமார் 3 கோடி பேர் நான்கு பிரதேசங்களில் சிதறிக் கிடக்கிறார்கள். மேற்படி பட்டியலில் உள்ள நான்கு நாட்டு ஈராக், ஈரான், துருக்கி, சிரியா ஆட்சியாளர்களுமே குர்தீஸ்கான் தேசிய இன விடுதலைப் போராட் டத்தைத் தொடர்ந்து நசுக்கி வருகின்றனர்.

இதற்கு அடுத்து இந்தியா. இது 1947இல் வெள்ளை ஏகாதிபத்திய காலனி ஆட்சியில் இருந்து விடுதலை அடைந்தது. 62 ஆண்டுகால முத லாளித்துவ ஆட்சியில் வறுமை, ஏழ்மை, சுரண்டல், வேலை இல்லா திண்டாட்டம் நாட்டைச் சீரழித்து வருகிறது. 1991ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தனியார் மயம், உலக மயம், தாராள மயமாக்கல் என்னும் பொருளாதார கொள்கை, இலஞ்சம், ஊழல், கருப்பு பணம், போதை பொருட்கள் கடத்தல் போன்ற சீரழிவுகளை வளர்த்து வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான உணர்வே அரசியலில் இந்திய தேசியமாக வளர்ச்சி பெற்றது. அன்றுள்ள சூழ்நிலையில் இது தவறு இல்லை. ஆனால் தொடர்ந்து வர்க்கப் போராட்டம், தேசிய இன விடுதலை என்ற ஒரு நேர்க் கோட்டு தத்துவத் துக்கு மக்கள் பக்குவப் படுகிற அரசியல் கடந்த 60 ஆண்டுகளில் நடைபெறவில்லை. காஷ்மீர் வட கிழக்கு மாநிலங்கள் தவிர வேறு எங்கும் மொழிவழி தேசிய உணர்வு வளரவில்லை.

சுதந்திரம் அடைந்தபின் நிர்வாக வசதிக்காக இந்தியா 26 மொழிவாரி மாநிலங்களாகவும் 7 மத்திய ஆட்சிப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலாளித்துவ வரம்பிற்குள்ளேயே கீழ்கண்ட புதிய மொழி வழி மாநில கோரிக்கைகள் பிறந்துள்ளன.

அவை பந்தல்கண்ட், வனாஞ்சல், பூர்வாஞ்சல், ஹரித் பிரதேஷ், கூர்க்காலாந்து, போடோலாந்து, சௌராஷ் டிரா, குடகு, மிதிலாஞ்சல், கிரேட்டர் கூச்பெக்கர், பாகல்கண்ட், மார்லார், மேலார், போஜ்புரி, ரோகில்கண்ட், லடாக், மால்வா, மகாகோடில், மால்லா, மார்லார், மேலார் எனப் பட்டியல் நீள்கிறது. ஒரு மொழி பேசும் மக்களே ஆந்திராவில் தெலுங் கானா கோரிக்கையையும், மகாராஷ்டி ராவில் விதர்பா கோரிக்கையையும் முன் வைக்கின்றனர். இது பற்றி பார்ப்போம்.

- மு.வேதரத்தினம் & க.செந்தில்குமார்

(தொடரும்)

Pin It