இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் பல பிரச்சனைகள் தீர்த்து வைக்கலாம். ஆனால், தீர்க்க முன்வரவில்லை. காரணம், ஆட்சியாளர்கள் நினைப்பது ஆட்சி நீடிக்க தொடர்ந்து பிரச்சனைகளை வளர்த்தே ஆட்சியை செய்கின்றனர். தமிழ்நாட்டில் மத்திய அரசு, மொழிப் பிரச்சனையை, கல்விப் பிரச்சனையை நதிநீர்ப் பங்கீட்டு பிரச்சனையை, வரிவசூல் பிரச்சனையை, விலை நிர்ணயம் போன்ற முதன்மையான பிரச்சனைகளைத் தீர்க்க முன்வரவில்லை.

ஒரே சீரான கல்விக் கொள்கையை நடைமுறை செய்ய வேண்டும். ஆனால் கல்வி கற்பிப்பதில் மத்திய கல்வி முறை, மாநிலக் கல்வி முறை என்று பிரித்து, இந்தக் கல்வி முறையில் படித்தால்தான் மேற்படிப் புக்குச் சேரமுடியும். மற்ற கல்வி முறைகளுக்கு வாய்ப்பு இல்லை என்பது வருங்கால மக்கள் வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கமாகும்.

அனைத்து மாநிலங்களிலும் நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும். நதிநீரை வீணாக்காமல் நதிகளை இணைத்து நதிநீர் இல்லா மாநிலங்களுக்கு தண்ணீர் பிரச்சனையை மத்திய அரசு முன்நின்று சமமாகக் கிடைக்க வழிவகுக்க வேண்டும்.

1. மழைப் பெய்தால் வறட்சியை மறந்துவிடுகின்றனர்.

2. கல்வியில் சேர்க்கை முடிந்தால் கல்விப் பிரச்சனையை அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போடுகின்றனர்.

3. மாநில மொழிகள் மீது மத்திய அரசு இந்தியை திணித்து மொழிப் பிரச்சனையை அவ்வப்பொழுது தூண்டிவிட்டு குளிர்காய்கிறது மத்திய அரசு.

4.  தொடர்ந்து அண்டை நாடுகளுடன் எல்லைப் பிரச் சனையை கிளப்பிக் கொண்டு பிரச்சனையை தீர்க் காமல் அண்டை நாடுகளுடன் விருந்துண்டு கொண்டு ஆட்சி செய்கின்றது.

5. மத்திய அரசு வங்கிகளில் 6000 கோடி கடனைக் கட்டாதவன் உலகம் சுற்றுகின்றான்; 30 ஆயிரம் கடன் வாங்கிய விவசாயியை உள்ளே தள்ளி அவன் சொத்தைப் பறிமுதல் செய்கின்றது.

மக்களை விழித்துக் கொள்ளாமல், சிந்திக்கவிடாமல், வறுமையிலிருந்து விடுபடாமல் பார்த்துக் கொள்கின்றது, பிரச்சனைகளைத் தீர்க்காத மத்திய, மாநில அரசு, மக்கள் விரோத அரசுகளேயாகும்.

Pin It