சென்னையில் தமிழர்க்கு எழுச்சி சேர்த்த மாநாடு சிந்தனையாளன் பொங்கல் மலர் -2015 வெளியீடு -மூன்று புதிய நூல்கள் வெளியீட்டுடன்‘இந்தி ஆட்சிமொழி எதிர்ப்பு, தேசிய இன உரிமை மீட்பு மாநாடு’!தமிழகம் முழுவதிலும் இருந்தும் தோழர்கள் திரண்டனர்

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் கடந்த 11-1-2015 ஞாயிறு காலை 10 மணியளவில் சென்னையில் மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தோழர் உலகஒளியின் காஞ்சிக்கலைக் குழுவினரின் எழுச்சிமிகுப் பாடல் களுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. முற்பகல் அமர்விற்கு மா.பெ.பொ.க. உயர்மட்டக்குழு உறுப்பினர் தோழர் க. முகிலன் தலைமை ஏற்றார். கட்சியின் மாணவர் இளைஞர் அணித் தோழர் இரா. பகுத்தறிவாளன் வரவேற்புரையாற்றினார். சிந்தனi யாளன் பொங்கல் சிறப்பு மலரை திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை க. இராசேந்திரன் வெளியிட்டார்.

முனைவர் அ. ஆறுமுகம் எழுதிய இரு பாட நூல்களில் ’வள்ளுவம்’ என்ற நூலை மாம்பலம் தோழர் ஆ. சந்திரசேகரும் ‘பௌத்தம்’ என்ற நூலை மா.பெ.பொ.க. துணைப் பொதுச் செயலர் தோழர் சி. பெரியசாமியும் வெளியிட்டனர். பொங்கல் மலரின் படிகளை வேளாண் அணிச் செயலாளர் அரங்க. சானகிராமன், மாவட்டச் செயலாளர்கள் திருவண்ணா மலை பொ. சுப்பிரமணியன், வேலூர் மோ.சி. சங்கர், விழுப்புரம் ஆ.கு. ஆறுமுகம் ஆகிய தோழர்கள் பெற்றுக்கொண்டனர்.

பாடநூல்களின் படிகளை மாவட்டச் செயலாளர்கள் சேலம் செ. ஆனையப்பன், அரியலூர் புலவர். இரா. கலியமூர்த்தி, திருச்சி இரா. கலியபெருமாள், வாணி யம்பாடி நகரச் செயலாளர் நா.மதனகவி, புதுக் கோட்டை மாவட்ட பு.க.இ.ம. செயலாளர் ந. கருணா கரன் ஆகிய தோழர்கள் பெற்றுக்கொண்டனர். புதுவை மாநிலச் செயலாளர் இரா. திருநாவுக்கரசு, காஞ்சி மாவட்டச் செயலாளர் சி. நடராசன், கடலூர் மாவட்டச் செயலாளர் பா. மோகன், திருவண்ணாமலை மாவட்ட வேளாண் அணிச் செயலாளர் கோ. கோதண்டராமன் ஆகிய தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக தோழர் விடுதலை க. இராசேந்திரன் எழுச்சிமிகு சிறப்புரையுடன், கட்சியின் தலைமையக மேலாளர் தோழர் ப.வடிவேலு நன்றி நவில, முற்பகல் நிகழ்வு கள் இனிதே நிறைவுற்றன.

பகலுணவிற்குப்பின் பிற்பகல் 3 மணியளவில் கலைக்குழுத் தோழர்களின் பாடல்களுடன் தொடங்கிய இந்தி ஆட்சி மொழி எதிர்ப்பு, தேசிய இன உரிமை மீட்பு மாநாட்டிற்கு மா.பெ.பொ.க. துணைப் பொதுச் செயலாளர் இரா. பச்சமலை தலைமை ஏற்றார். மாணவர் இளைஞர் அணித் தோழர் சோ. அண்ணா துரை வரவேற்புரை நிகழ்ச்சிக்குமுன், தமிழேந்தி, கவியன்பன் ஆகிய இருவரும் எழுச்சிக் கவிதைகள் படித்தனர்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு மாநாட்டைத் தொடங்கி வைத்து எழுச்சிமிகு உரை வழங்கினார். அடுத்து மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்து மா.பெ.பொ.க. மாணவர் இளைஞர் அணிச் செயலாளர் ஆ. முத்தமிழ்ச்செல்வன் உரையாற்றினார். அவற்றை வழிமொழிந்து கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர் வாலாசா வல்லவன், மாணவர்-இளைஞர் அணித் துணைச் செயலாளர் தி. துரைசித்தார்த்தன், தொழிலாளர் அணிச் செயலாளர் சா. குப்பன் மற்றும் தமிழ்நாட்டுக் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் பொழிலன் ஆகிய தோழர்கள் எழுச்சியுரை நிகழ்த்தி னர்.

நிறைவாக ‘Federalism in India in Peril' என்னும் ஆங்கில நூலை இயற்றியுள்ள கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் வே. ஆனைமுத்து அந்நூலை வெளியிட்டார். நூலின் முதல்படியை தோழர் செந்தலை கவுதமன் பெற்றுக் கொண்டார். பின்பொதுச் செய லாளர், ஆழமானதோர் விளக்கவுரை ஆற்றி மாநாட் டை நிறைவு செய்தார். மா.பெ.பொ.க.யின் செந்துறை ஒன்றியச் செயலாளர் தோழர் சா.சீனிவாசன் நன்றியுரையோடு அனைத்து நிகழ்ச்சிகளும் இரவு 8 மணி யளவில் நிறைவுற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலும் இருந்து வருகை புரிந்திருந்த தோழர்கள் பொங்கல் சிறப்பு மலரின் படிகளையும் புதியதாக வெளியிடப்பட்ட பாடநூல்களின் படிகளையும் ஆர்வத் துடன் வாங்கிச் சென்றனர். 

Pin It