நீடிய மலையும் மலைசூழ்ந்த
நிலமும் குறிஞ்சி அறிதம்பி!
காடும் காடு சூழ்இடமும்
கவின்மிகு முல்லை உணர்தம்பி!
வயலும் வயல்கள் சூழ்இடமும்
வளமார் மருதம் ஆம்பாப்பா!
பயிலும் நெய்தல் கடல், மற்றும்
கடல்சூழ் பகுதி அறி பாப்பா!
எரிக்கும் பாலை இங்கில்லை
எனினும் அறிவோம் அச்சொல்லை!
குறிக்கும் இந்தத் திணை வாழ்க்கை
கொண்ட தொல்குடி வேறில்லை!
பொங்கல் தைமுதல் பெருநாளாம்
போற்றும் தமிழர் திருநாளாம்!
வையப் புலவன் வள்ளுவனை
வாழ்த்த வருநாள் மறுநாளாம்!
வீட்டில் பொங்கல் பொங்கட்டும்
வேதனை போய்ஒளி தங்கட்டும்
கேட்டில் உழலும் ஈழத்தின்
கிழக்கில் வெளிச்சம் தோன்றட்டும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...