மரங்களைச் சுமந்து நிற்கும்
மழைமுகில் தவழ்ந்து ஓடும்
சரமலர் வாசத் தோடு
சந்தனம் கமழ்ந்து வீசும்
விரல்களை விரித்த காந்தள்
விளக்கென ஒளியைக் கூட்டும்
அரவென நெளிந்த ஓடை
அருவியாய்த் தரையில் வீழும்!
கிளையதன் மேலி ருந்து
கிளியொடு குயில்கள் பாடும்
வளைமுது கோடு மந்தி
வான்கனிக் கடுவன் தேடும்
விளைமணி மலையில் ஊறி
வியத்தகு ஓடை ஆகித்
திளைத்திடும் அருவி யேதான்
தீம்பொழில் வயல்கள் சேரும்!
மலையதன் மீது எங்கோ
மறைவினில் தோன்றி மெல்ல
அலையெது மின்றிச் சுற்றி
அத்தனை மருந்தும் சேர்த்துத்
தலையது குளிர ஊற்றித்
தளிருடல் நோயைத் தீர்க்கும்
விலையிலா அருவிப் பெண்ணே
வியந்துனை வாழ்த்து கின்றேன்!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- எங்களுக்கு வேலை இருக்கிறது
- காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
- பெரியார் முழக்கம் மார்ச் 28, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- தமிழிசையை புனிதத்தில் ஒளித்து வைத்த பார்ப்பனக் கூட்டம்
- பெரும்பான்மைவாதம் பேராபத்து
- அமைச்சரானார் பொன்முடி! அவமானப்பட்டார் ஆளுநர்!!
- விரல்கள் தோற்கடிக்கும்!
- இந்தியா முழுவதும் காவியா?
- மதம் ஏன் ஒழிய வேண்டும்?