அன்று
பார்த்தேன் அவளை
பார்த்தாள் அவளும்
காதல் இருந்தது கண்களில்
காலம் பிரித்தது எங்களை!
இன்று
எனக்கொரு பேரன்
அவளுக்கொரு பேத்தி
பார்த்தான் அவளை
பார்த்தாள் அவளும்
காதல் இருந்தது கண்களில்
காலம் சேர்த்தது அவர்களை!
தடுத்தது சாதி அன்று
உடைந்தது அதுவே இன்று!