பதவியேற்று 700 நாள்களுக்கு மேலாகிவிட்டது.. மத்திய அரசின் சாதனைகளைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போம்.
3 ரூபாய் இருந்த பிளாட்பார்ம் டிக்கட் இன்று 10 ரூபாய்
ஐந்து முறை இரயில் கட்டணம் உயர்வு
98 ரூபாய் இருந்த நெட்பேக் (data pack) இன்று 246 ரூபாய். 30 பைசா இருந்த கட்டணம் இன்று 1 ரூபாய்
கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு $ 119 இருந்த போது பெட்ரோல் விலை 67. ஆனால் பேரல் $30 என்று குறைந்த பிறகும் பெட்ரோல் 65 ரூபாய்.
70 ரூபாய்க்கு விற்ற பருப்பு இன்று 200 ரூபாய், இருந்தும் இது விவசாயிக்கு கிடைக்கவில்லை.
12.36% இருந்த சேவை வரி தற்போது 14.50%.
10% இருந்த கலால் வரி தற்போது 12.36%.
58.50 என்று இருந்த டாலர் மதிப்பு இன்று 68.50.
எரிவாயு மானியத்தில் கிடைத்த லாபம் சுமார் 100 கோடி. ஆனால் அதற்கு விளம்பரச் செலவு 250 கோடி.
‘க்ளீன் இந்தியா’ செலவு 250 கோடி, ஆனால் துப்புரவுத் தொழிலாளிகளுக்குச் சம்பளம் பாக்கி.
RSS மேற்பார்வையில் நடக்கும் கிசான் டிவிக்கு ஆண்டுக்கு 100 கோடி.
யோகா தினத்திற்கு 500 கோடி செல்வு. அரியானா மாநிலப் பள்ளிகளுக்கும் 700 கோடி ரூபாயில் பாபா ராம்தேவின் யோகா பயிற்சி.
பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு 20% வெட்டு.
கார்ப்பரேட் கம்பனிகளின் 64,000 கோடி வாராக் கடன்.
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி ஏதும் இல்லை.
2014 முதல் 2016 வரை விளம்பரச் செலவு மட்டும் 1,100 கோடி ரூபாய். அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 1.5 கோடி.
வெறும் 75,000 டாலராக இருந்த Liberalised Remittance Scheme (LRS) 2,50,000 டாலராக மாற்றி சுமார் 30,000 கோடி வெளிநாட்டில் பதுக்க உதவியது.
இறுதியாக ஒன்று - ஆக்ரா பேரணியில் பங்கேற்க நேரம் இருந்தது.
அங்கிருந்து 144 பேர் பலியான கான்பூரை வந்து பார்க்க நேரமில்லை.
மோடி ஒண்ணுமே செய்யலைன்னீங்க...
இவ்ளோ செஞ்சிருக்காரே...
நன்றிகெட்ட மக்களே...
இனியும் செய்வார். இப்ப தானே 500, 1000 ஒழிஞ்சுருக்கு. போகப் போகப் பாருங்க.
(கட்செவி (வாட்சப்) ஊடகத்திலிருந்து)