nayanthaara 450அண்மையில் வெளிவந்துள்ள சில தமிழ்த் திரைப்படங்கள் பல புதிய நம்பிக்கைகளை விதைத்துள்ளன.

அம்மா-பிள்ளை, அண்ணன்-&தங்கை, முக்கோணக் காதல், பழிக்குப் பழி வாங்கும் கதாநாயகன் போன்ற வழக்கமான வட்டத்தை விட்டு வெளியே வந்து, சமூகச் சிக்கல்களை இப்படங்கள்  முன்வைக்கின்றன.

குறிப்பாக இரண்டு படங்கள் -

1. அறம்

 2. அருவி.

இரண்டு படங்களும் இன்றைய சமூகச் சிக்கல்களைப் பேசுகின்றன. இரண்டு படங்களிலும் கதாநாயகிக்கே முதன்மை தரப்பட்டுள்ளது.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த ஒரு குழந்தையைச் சுற்றிச் சுழல்கிறது அறம். பொதுநலம் பற்றிய அக்கறையே இல்லாதவர்கள் பொதுவாழ்வில் பெரும் பொறுப்புகளில் இருக்கும் அவலத்தையும், கடமை உணர்வுள்ள ஓர் அதிகாரியையும் படம் பிடித்துக் காட்டுகிறது இப்படம்.  

மூடாமல் விடப்படுகின்ற ஆழ்துளைக் கிணறுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணரக்கூடிய அளவில் படம் அமைந்துள்ளது. கொஞ்சம் தவறினாலும், ஆவணப் படமாக ஆகியிருக்கும். ஆனால் சலிப்பே இல்லாமல் படம் நகர்ந்து செல்கிறது.

இன்றைய ஊடகங்களில் உள்ள போலித்தனத்தையும், சமூக அவலங்களையும் ஒரு சேரத் தோலுரிக்கிறது “அருவி”.  அதே நேரம்.

இளைஞர்களின் உணர்வுகளைச் சற்றும் புரிந்து கொள்ளாமல், உடனடியாக அவர்களைத் தீவிரவாதிகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் காவல்துறையின் போக்கையும் இப்படம் எடுத்துக்காட்டுகிறது.

மிகவும் அழுத்தமான ஒரு கருத்தை, மிகவும் எளிமையாக, நகைச்சுவையுடன் கூறியிருக்கும் இயக்குனரின் திறன் வியப்புக்குரியதாக உள்ளது.

இவை போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு என்ன செய்ய வேண்டும்? இப்படங்களைத் திரையரங்கிற்குச் சென்று மக்கள் பார்க்க வேண்டும்.

Pin It