“மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு சிந்தனை செழுமைப் படுத்தப்படாவிட்டால் தோன்றும் தேக்கநிலை எந்த அமைப்பையும் சீரழித்து விடும்”

தருணங்களும் காலகட்டங்களும் பலர் முன்வைப்பது போல் தலைமைகளை மட்டும் உருவாக்குவதில்லை. சரியான கருத்துக்கள் தோன்றுவதற்கும் அவையே வழிவகுக்கின்றன. ஆனால் அத்தகைய கருத்துக்கள் முன்வைக்கும் கண்ணோட்டங்கள் பல இயக்கங்களில் அவை உருவானபோது இருந்த முனைப்புடன் பின்னாளில் இருப்பதில்லை. இதற்குக் காரணம் அவற்றை உருவாக்கிய தலைவர்களின் மறைவிற்குப்பின் அவர்கள் உருவாக்கிய சரியான கருத்துக்கள் உரிய முறையில் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்பதை அதே முனைப்புடன் கண்காணிப்பவர்கள் அமைப்புகளில் இல்லாமல் போவதுதான்.

அவற்றை உருவாக்கிய தலைவர்களின் மறைவிற்குப்பின் அதே விழிப்புணர்வுடன் இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் தலைவர்கள் இல்லாமல் போய்விட்டால் அந்தச் சரியான கண்ணோட்டங்களும் கூட அவற்றின் தீவிரத்தன்மையை இழந்து விடுகின்றன. அது மட்டுமல்ல, பல சமயங்களில் அக்கண்ணோட்டங்கள் படிப்படியாக நீர்த்துப்போய் விடவும் செய்கின்றன. அவ்வாறு நீர்த்துப்போன கருத்துக்கள் ஒன்றுமில்லால் ஆகிவிடுவதுமில்லை. அக்கருத்துக்களைக் கொண்ட இயக்கமென்று மார்தட்டிக் கொள்ளும் இயக்கங்கள் அவற்றை முறையாகக் கடைப்பிடித்து அதற்காகத் தற்பெருமை அடித்துக் கொண்டால் பரவாயில்லை.

ஆனால் அவற்றைக் கடைப்பிடிப்பதற்குத் தேவைப்படும் ஜீவனுள்ள போராட்டத்தை இயக்கத்திற்குள் பராமரிக்க முடியாமல் போய் அதன் காரணமாக பெயரளவில் அவற்றைக் கடைப்பிடிப்பது போல் அவை காட்டிக் கொள்ள மட்டும் செய்கின்றன. அக்கண்ணோட்டத்தையும் கருத்தையும் உருவாக்கியவர்களோடு இணைத்து நின்றவர்களைப் போல் தரமிக்கவர்களைக் கொண்டவையாக அவ்வியக்கங்கள் தங்களை வைத்திருக்க முடியாத நிலையில் மிகமோசமான வேசதாரித்தனப் போக்குகளை ஒருகாலத்தில் மிக உயர்ந்தவையாய் இருந்த அக்கண்ணோட்டங்கள் அவ்வியக்கங்களில் ஏற்படுத்துகின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக பல மடாலங்களையும், தொண்டு நிறுவன ஆசிரமங்களையும் கூறலாம். இன்று பல மத ரீதியான நிறுவனங்கள் குறித்து மோசமான செய்திகள் வந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அதைப்போல் பல ஆசிரமங்களிலும் தவறுகள் பல நடப்பது அவ்வப்போது வெளிவந்து கொண்டேயிருக்கிறது. இதற்குக் காரணம் அந்த மடாலயங்கள் மற்றும் ஆசிரமங்கள் ஆகியவற்றை நிறுவியவர்கள் எந்த உணர்வுடன் அவற்றை நிறுவினார்களோ அதே உணர்வு அவற்றை அடுத்தடுத்து அவற்றை நிரப்புபவர்களிடம் இருப்பதில்லை. அவர்களை அதே உணர்வுடன் தக்கவைக்கக் கூடியது சேவை மனப்பான்மையும் பொதுநல நோக்கமுமே. அவற்றைக் கொண்டவர்களைக் கொண்டதாக ஒரு அமைப்பு இல்லாமல் போகும்போது அது சீரழிவு தொடங்கிவிடுகிறது.

மடாலயங்களும் ஆசிரமங்களும் இவ்வாறு சீரழிந்து போய்க் கொண்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனெனில் அவற்றை வழிநடத்தும் அடிப்படைகளான மத மற்றும் சீர்திருத்தவாதங்களே இப்போது காலவதியாகிப் போய்விட்டன. அந்த நிலையில் இன்றைய சமூகப் பொருத்தமற்ற தத்துவங்களை மையமாக வைத்து நடத்தப்படும் நிறுவனங்களில் வேசதாரித்தனம் தலைதூக்குவதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

ஆனால் இக்கால கட்டத்தின் மிக உயர்ந்ததும் மிகப்பொருத்தமுடையதுமான மார்க்சிசம் போன்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளிலும் இத்தகைய நிலை தோன்றிவிடுகிறது.

அமைப்பு வளரவளர சித்தாந்தமும் வளரவேண்டும்

இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்பு அந்த யுத்தத்தில் சோவியத் யூனியனின் செஞ்சேனை பாஸிசத்தை எதிர்த்துப் பெற்ற பெரு வெற்றி உலகம் முழுவதும் கம்யூனிஸத்திற்கு ஒரு மகத்தான நற்பெயரை ஈட்டித் தந்தது. அந்தப் போரின் முடிவில் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோசலிச மயமாயின. அதன் பின்னர் 1949 – ம் ஆண்டு மகத்தான மக்கள் ஜனநாயகப் புரட்சி மூலம் மக்கள் சீனம் மலர்ந்தது. அதையும் சேர்ந்து உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் சோசலிச நாடுகளாக ஆயின.

அந்நாடுகளை உள்ளடக்கிய சோசலிச முகாம் ஒருபுறம் ஏகாதிபத்தியங்களுக்குப் பெரும் சவாலாக ஆகியது. மறுபுறம் ஏகாதிபத்திய நாடுகள் தங்களது காலனிகளாகக் கொண்டிருந்த பல ஆசிய ஆப்பிரிக்க லத்தின் அமெரிக்க நாடுகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த தேச விடுதலைப் போராட்டங்களுக்கு சோசலிச முகாம் பின்பலமாகவும் ஆதராவாகவும் இருந்தது. அவற்றின் அரணாகவும் விளங்கியது. அதற்கு முன்பு செய்ததைப் போன்று பிற நாடுகளின் மீதான தலையீடுகளையும் அத்துமீறல்களையும் சோசலிச முகாம் தோன்றிய பிறகு ஏகாதிபத்திய நாடுகள் செய்ய முடியவில்லை. ஏனெனில் அவ்வாறு தலையீடு செய்தால் அதனைத் தட்டிக்கேட்க சோசலிச முகாம் என்ற தார்மீக வலுவோடு ராணுவ வலிமையும் பொருந்திய சக்தி இருக்கிறது என்ற அச்சம் ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஏற்பட்டது.

இதன் விளைவாகப் பல தேச விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்றுப் புதிதாக விடுதலை பெற்ற பல நாடுகள் ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்கக் கண்டங்களில் உருவாயின. ஒட்டுமொத்தத்தில் சமூகமாற்றச் சிந்தனைப் போக்குகளின் பாலான மிகப்பெரும் வரவேற்பு சாதாரண மக்கள் மத்தியிலும் கூட உலக அளவில் பெரிதும் இருந்தது. அதனால் கம்யூனிஸ அமைப்புகள் அனைத்து நாடுகளிலும் மிக வேகமாக வளர்ந்தன.

ஆனால் அவற்றின் அமைப்பு ரீதியான வளர்ச்சியுடன் ஒட்டிய சித்தாந்த ரீதியிலான தரமும் வளர்ச்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்களிடம் ஏற்படவில்லை. வருந்தத்தக்க விதத்தில் சித்தாந்த ரீதியான வளர்ச்சிக்குப் பல நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் உரிய முக்கியத்துவமும் தரவில்லை. அவை அவற்றின் அமைப்பு ரீதியான வளர்ச்சி குறித்துச் சுய திருப்தி கொண்டவையாகவே இருந்தன.

அதன் விளைவாக அரசியல், பொருளாதார, கலாச்சார, அறிவு சார்ந்த வி-யங்களில் தோன்றிய பல்வேறு புதுப் போக்குகள் அனைத்திற்கும் மார்க்சிய அடிப்படையில் விளக்கமளித்து மார்க்சிய விஞ்ஞானத்தைச் செறிவு செய்யும் போக்கில் தேக்கநிலை ஏற்பட்டது. இந்நிலையில் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் பட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை என்பதற்கு இலக்கணமாக விளங்கவில்லை. பல நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ளும் கம்யூனிஸ அகிலத்திலும் விமர்சன, சுயவிமர்சனப் போக்கு சரியான முறையில் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட ஏதுவான சூழல் பராமரிக்கப்பட வில்லை. இது கம்யூனிஸ்ட் கட்சிகளின் மிகப்பெரும் பலவீனமாக விளங்கியது.

யார் சிறந்த கம்யூனிஸ்ட்

சீர்திருத்தவாதத் தன்மைகளைக் கொண்ட மற்ற கட்சிகளைப்போல் அல்லாமல் அடிப்படை சமூக மாற்றத்திற்குப் பாடுபடும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் உறுப்பினர்களாக ஆவதற்குச் சில தகுதிகளும் தரங்களும் அத்தியாவசியமான முன் தேவைகளாக உள்ளன. மற்ற கட்சிகளின் தலைமைகளைப் போலல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் யார் அவனுக்கு இருக்க வேண்டிய தகுதி என்ன என்பதை வரையறுத்துக் கூற வேண்டியுள்ளது. மாபெரும் தலைவர் லெனின் தலைமை தாங்கிய ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டிற்கான தகுதியாக தன்னுடைய சொந்த நலனை கட்சியின் நலனுக்கு முன் அடிபணியச் செய்யும் தன்மையையும் குணத்தையும் சிறந்த கம்யூனிஸ்ட்டிற்கான குணமாகவும் தகுதியாகவும் கருதியது.

ரஷ்யக் கம்யூனிஸ்ட்களிடம் அத்தகைய தகுதியினைக் கொண்டுவருவதில் கட்சிக்கு மிகப்பெரும் சிரமம் ஏதும் இருக்கவில்லை. ஏனெனில் அக்கட்சியின் தொண்டர்கள் கட்சி தடை செய்யப்பட்டிருந்த சூழ்நிலையில் பல இன்னல்கள் மற்றும் அடக்கு முறைகளுக்கு மத்தியில் செயல்பட்டவர்களாக இருந்ததால் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தரத்தைக் காட்டிலும் கூடுதல் தரத்தைக் கொண்டவர்களாகவே அவர்கள் நடைமுறையில் இருந்தனர்.

அப்படிப்பட்ட சூழலில் வளர்க்கப்படாத உலகின் பிற நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே இந்தக் குறைந்தபட்சத் தகுதியைக் கைக்கொள்வதற்கான போராட்டதைத் தொண்டர்களிடையே ஊக்குவிக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அதுவும் இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்பு கம்யூனிஸ்ட் கட்சிகளில் லட்சோபலட்சம் தொண்டர்கள் புதிதாக இணைந்ததால் அவர்கள் அனைவரிடமும் இத்தகுதியினைக் கொண்டுவருவதற்காக முனைப்புடன் கூடிய உள்கட்சி விவாதங்களும் போராட்டங்களும் அதிகமாக நடத்தப்படுவது மிகமிக அவசியமாக இருந்தது.

தோழர் சிப்தாஷ் கோஷின் முன்முயற்சி

உலகின் பல கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் இந்தத் திசைவழியில் தங்களது இயக்கங்களை வழி நடத்தாத சூழ்நிலையில் இந்தியாவில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இவ்விசயத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் தரத்தினை உயர்த்தப் பெரிதும் பாடுபட்டார். அவர் சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா என்ற கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தோழர் சிப்தாஷ் கோஷ் ஆவார்.

அவர் எஸ்.யு.சி.ஐ. கட்சியை நிறுவி செயல்படத் தொடங்கிய காலகட்டத்தில் ஒரு மிகப்பெரும் தலைவர் தொண்டர் வலுவினைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் ஏற்கனவே இருந்தது. அந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்றுள்ளது போல் அன்று அத்தனை வர்க்க சமரசப் போக்கைக் கொண்டதாக இல்லை. மாபெரும் தியாகங்களைச் செய்த மிகப்பெரும் தலைவர்கள் அக்கட்சியில் இருந்தனர். போர்க்குணமும் போராட்ட மனநிலையும் கொண்ட எண்ணிறந்த தொண்டர்கள் அக்கட்சியின் உறுப்பினர்களாக இருந்தனர். பரவலான உழைக்கும் மக்களின் அபிமானமும் ஆதரவும் அக்கட்சிக்கு இருந்தது.

ஆனாலும் கூட அதன் அடிப்படை அரசியல் வழி தவறானதாக இருந்தது. அதாவது விடுதலை பெற்ற பின் இந்தியாவில் ஆட்சிக்கு வந்த தேசிய முதலாளிகளுக்கு முற்போக்கு முலாம் பூசும் வகையில் இந்தியப் புரட்சியின் கட்டம் அந்தத் தேசிய முதலாளிகளையும் உள்ளடக்கிய மக்கள் ஜனநாயகப் புரட்சிக் கட்டமே என்ற தவறான வழியையே அக்கட்சி தன் அடிப்படை அரசியல் வழியாகக் கொண்டிருந்தது. அதனால் அதன் செயல்பாடும் போராட்டங்களும் தவறானதும் தெளிவற்றதுமான இலக்குகளைக் கொண்டவையாக இருந்தன.

அந்த நிலையில் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த எஸ்.யு.சி.ஐ. கட்சியினால் அதன் அடிப்படை அரசியல் வழி மிகச்சரியானதாக இருந்தபோதும் அத்தனை வேகமாக அதனை மக்களிடம் கொண்டுசெல்ல முடியவில்லை. அது மக்களைச் சரியான அதன் கருத்துக்களைக் கொண்டு அணிதிரட்ட முயன்ற போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் விடுதலைப் போராட்டக் காலகட்ட நடவடிக்கைகளையும் அது நடத்திய மாபெரும் தொழிலாளர் போராட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு பெற்றிருந்த நற்பெயர் எஸ்.யு.சி.ஐ - யின் வளர்ச்சிக்குப் பல விதங்களில் குறுக்கே நின்றது. இந்தியா போன்றதொரு கல்வியறிவில் பின்தங்கிய நாட்டின் தொழிலாளி வர்க்கத்திடையே சரியான அடிப்படை அரசியல் வழியை மட்டும் அடிப்படையாக வைத்து வளர்வது பெரிய அளவில் உடனடி சாத்தியமாக இருக்கவில்லை.

இந்நிலையிலிருந்து படிப்பினை எடுத்துக்கொண்டு உயர்ந்த கம்யூனிஸ்ட் கலாச்சாரம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை முழுமையாகக் கைக்கொண்ட, தத்துவார்த்த ரீதியாகப் புடம் போடப்பட்ட தோழர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகத் தான் உருவாக்கிய கட்சியை வளர்த்தெடுத்து அதன்மூலம் இந்திய உழைக்கும் மக்களை மிகவும் வித்தியாசமான முறையில் தோழர் சிப்தாஷ் கோஷ் அணுகி ஆதரவைத் திரட்டினார்.

தன் நலனே கட்சியின் நலன். கட்சியின் நலனே தன் நலன்

கம்யூனிஸ்ட்களின் தனிநபர், தன்வய ரீதியான வளர்ச்சிக்குத் தேவையான பல வழங்கல்களை வழங்கும் விதத்திலும் அவர் தனது கட்சி அமைப்பினையும் தனது கட்சித் தோழர்களின் தரத்தினையும் உயர்த்தப் பாடுபட்டார். அதன்மூலம் வெளிப்படையாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எப்படி இருக்க வேண்டும் அதன் தலைவர்களும் தொண்டர்களும் அனைவரின் கண்களுக்கும் தென்படும் விதத்தில் எத்தகைய தன்னலமற்ற கலாச்சாரத்தைக் கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்பதை நடைமுறை ரீதியாகவே காட்டி தனது கட்சியை உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல விரும்பினார்.

அதற்காக ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் யார் என்ற கண்ணோட்டத்தையும் அவர் வாழ்ந்த காலகட்டச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு செறிவு செய்தார். ஒரு உயர்ந்த கம்யூனிஸ்ட் என்பவன் தன்னுடைய நலனைக் கட்சியின் நலனுக்கு முன் அடிபணியச் செய்பவனல்ல; அந்தக் கண்ணோட்டம் தனிமனித வாதம் தலைதூக்கி மிகப்பெரும் செல்வாக்கு செலுத்தும் இக்காலகட்டத்தில் ஒரு கம்யூனிஸ்டாக இருப்பதற்கான குறைந்தபட்சத் தகுதியாக ஆகிவிட்டது; இன்றைய நிலையில் யார் உயர்ந்த கம்யூனிஸ்ட் என்றால் தன் நலனே கட்சியின் நலன் கட்சியின் நலனே தன் நலன் என்று கருதக் கூடியவனே என்ற புதுக்கருத்தை முன்வைத்தார்.

கம்யூன் வாழ்க்கை அத்துடன் அத்தகுதியைப் பெறுவதற்கான போராட்டத்தை யாரும் தனியாக நடத்த முடியாது. அது நடத்தப்படுவதற்கு ஏற்ற சூழல் வேண்டும் என்ற அடிப்படையில் கூட்டு வாழ்க்கை முறையை அதாவது கம்யூன் வாழ்க்கை என்றழைக்கப்படும் வாழ்க்கை முறையை உயர்மட்டத் தலைவர்கள் நடத்த வேண்டுமென்று விரும்பினார். அதாவது முழுமையாகத் தனிச்சொத்து மட்டுமின்றி தனிச்சொத்து மனநிலையும் அற்றவர்களாக அக்கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் இருக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.

அதன்மூலம் மட்டுமே உயர்மட்டத் தலைவர்களிடம் உள்ள தனிமனிதவாதப் போக்குகள் அனைத்தும் அம்பலமாகி அவற்றிற்கு எதிரான விமர்சனங்கள் உயர்மட்டத் தலைவர்களிடையே உருவாகும்; அதன் விளைவாக அவர்களிடையே மிச்சம் மீதமிருக்கும் தனிமனிதவாதப் போக்குகளும் களையப்பட்டு அவர்களது சிந்தனை முழுமையுமே சமூக சிந்தனையாகவும் சமூகத்தை முற்போக்குத் திசைவழியில் முன்னெடுத்துச் செல்லும் தகைமை வாய்ந்த உழைக்கும் வர்க்க நலன் குறித்த சிந்தனையாகவும் அச்சிந்தனையின் சராம்சமாகவும் அதனை நடைமுறைப்படுத்த வல்ல கருவியாகவும் விளங்கக்கூடிய உழைக்கும் வர்க்கக் கட்சிச் சிந்தனையாகவும் ஆகும் என்று அவர் நம்பினார்.

அவருடன் அப்போது இணைந்து செயல்பட்ட தோழர்களும் தேச விடுதலைக்காகப் போரிட்ட சமரசமற்ற போக்கினை பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். தியாகம், அர்ப்பணிப்பு போன்றவற்றைக் கொண்டவர்களாக இருந்த அவர்களைக் கொண்டு இத்தகைய ஒரு தனித்தன்மை வாய்ந்த போராட்டத்தை அவரால் வெற்றிகரமாக நடத்த முடிந்தது.

அவ்வாறு தனிநலன் குறித்த சிந்தனை எதுவுமின்றி உழைக்கும் வர்க்க நலனையே பெரிதென எண்ணிய அவரது சக தோழர்களைக் கொண்டு வங்காளத்தில் குறிப்பாகவும் நாட்டின் இதரப் பகுதிகளில் ஓரளவும் அவர் இத்தகைய நடைமுறையில் கம்யூனிஸ்ட்கள் என்ற பெயரில் செயல்பட்ட பல கட்சிகளிலிருந்தும் வேறுபட்ட கட்சியாக அவர் நிறுவிய கட்சியை வளர்த்தார். அவரது சீரிய சிந்தனைகள் மூலம் உலக கம்யூனிஸ்ட் அமைப்பிற்கும் பல அரிய வழங்கல்களைச் செய்தார்.

ஆனால் அப்போதே உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் பல மிகவும் சரியயன்று கூறமுடியாத போக்குகளைக் கொண்டிருந்ததால் அவரது வழங்கல்கள் உலக க்கம்யூனிஸ்ட் இயக்கத்திளால் உரிய விதத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதாவது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கருத்தை முன்வைக்கும் போது அக்கருத்தின் சரியான தன்மைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்காது அக்கருத்தைச் சொல்லும் கட்சி எவ்வளவு பெரியது என்பதைக் கணக்கில்கொண்டு அக்கருத்திற்கு முக்கியத்துவம் தரும் போக்கு வருந்தத்தகுந்த விதத்தில் அக்காலகட்டத்திலேயே உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நிலவியது.

பொது மேடை

இவ்வாறு மிகச்சரியான விதத்தில் அவர் எஸ்.யு.சி.ஐ. கட்சியை நடத்திக் கொண்டிருந்த வேளையிலும் அதனை ஒரு பொது மேடையாகவே நடத்தி வந்தார். அகில இந்தியக் கட்சி காங்கிரஸ் நடத்தி அதன்மூலம் அதனை ஒருகட்சி என அவர் அறிவிக்கவில்லை. அதற்குக் காரணம் உள்ளடக்கத்தில் அது ஒரு சரியான கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்தாலும் அது அத்தகைய அகில இந்திய அளவிலான மாநாடு நடத்துவதற்குத் தேவைப்படும் ஸ்தாபன வலுவினையும் நாடு முழுவதுமான குறைந்தபட்ச ஸ்தாபனப் பரவலையும் கொண்டதாக இல்லை என்று அவர் கருதினார்.

அதுமட்டுமல்ல கம்யூனிஸ்ட் என்ற பெயரில் செயல்பட்ட பிறகட்சிகளோடு ஒப்பிடும் போது எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் உயர்ந்த தரத்தைக் கொண்ட தொண்டர்களையும் தலைவர்களையும் கூடுதலாகக் கொண்டிருந்தாலும், ஒரு கட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியக் கமிட்டியைக் கொண்டு செயல்படுவதற்குத் தேவையயன தான் எதிர்பார்த்த தரம் தான் உருவாக்கிய அமைப்பில் இல்லை என்றே அவர் கருதினார். அதன் காரணமாகவே அகில இந்தியக் கட்சிக் காங்கிரஸ் நடத்தி அதனைக் கட்சியாக மாற்றும் பணியினைத் தனது வாழ்நாள் காலம் முழுவதுமே அவர் செய்வதற்கு முன்வரவில்லை.

யாரும் எதிர்பாராத சூழ்நிலையில் மிகக்குறைந்த வயதில் அவர் காலமானது அக்கட்சிக்கு மட்டுமல்ல உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் ஒரு இழப்பாக ஆகியது.

இவ்வாறு எத்தனையோ வழங்கல்களைக் கம்யூனிஸ சிந்தனைக் கருவூலத்திற்கு வழங்கிய அவருக்கு அவர் உருவாக்கிய கட்சியும் ஒரு சமயத்தில் திருத்தல்வாதப் பாதையில் செல்லும் நிலை தோன்றலாம் என்பது தோன்றாமல் போனது; அது ஒரு குறையே. ஏனெனில் ரஷ்யாவில் அப்படிப்பட்ட போக்கு தோன்றியபோது ஸ்டாலினைப் பொறுத்தவரையில் தனக்குப்பின் கட்சி சீரழிவதற்கு வாய்ப்புள்ளது என்று கருத வழியில்லை. ஏனெனில் அதற்கான முன் உதாரணம் அவருக்கில்லை.

ஆனால் அதற்குப்பின் சீனாவில் மக்கள் ஜனநாயகப்புரட்சியை நடத்திய மாவோவிற்கு அத்தகைய முன் உதாரணம் இருந்ததால் அவர் புரட்சிகர உணர்வைத் தொடர்ச்சியாகப் பராமரிப்பதன் மூலம் அந்தப் போக்குகளைக் களைய முடியும் என்று நம்பினார். அதுமட்டுமின்றி முதலாளித்துவ சிந்தனைப்போக்கு எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் மக்கள் இயக்கத்தை, இளைஞர் படையை அணிதிரட்டி அப்போக்கிற்கு எதிராகக் கருத்து ரீதியாக நிறுத்தி அதனைக் களைவதற்காக மாபெரும் கலாச்சாரப் புரட்சியை நடத்தினார்.

இவ்விரண்டு முன் உதாரணங்கள் இருந்தும் தனது கட்சியில் இத்தகைய போக்கு தலைதூக்க வாய்ப்புண்டு என்பதைத் தோழர் சிப்தாஷ் கோஷ் முன்னறிந்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அவற்றை எடுத்திருந்தால் பின்னாளில் அவர் உருவாக்கிப் பராமரித்த கட்சிக்கு ஏற்பட்ட சீரழிவுகளைத் தடுத்திருக்க முடியும்.

தலைமை, தொழில் நுட்ப ரீதியாக அமைப்பை நடத்தும் திறன் கொண்டவரின் கையில்

முற்றிலும் எதிர்பாராத வகையில் நிகழ்ந்த சிப்தாஷ் கோஷின் மரணம் எஸ்.யு.சி.ஐ. கட்சியை ஒருவகையில் நிலைகுலையச் செய்துவிட்டது என்று கூறினால் அது மிகையாகாது. அவருக்குப்பின் அமைப்பை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காக ஸ்தாபனத்தைத் தொழில் நுட்ப ரீதியில் நடத்தும் திறன் பெற்றிருந்த மத்தியக்குழு உறுப்பினர் ஒருவரைப் பொதுச் செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுத்து அக்கட்சியினர்அமைப்பினை நடத்தத் தொடங்கினர்.

சித்தாந்த ரீதியாக சிப்தாஷ் கோஷின் வழங்கல்கள் குறித்து நாடு முழுவதிலும் அப்போதிருந்த தலைவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களைக் கொண்டு தொடர் விவாதங்கள் நடத்துவது; அதன் முடிவில் யார் கட்சியின் கூட்டுச் சிந்தனையின் நிதர்சன வடிவமாக வளர்ச்சியடைகிறாரோ அவரே சிப்தாஷ் கோஷிற்குப் பின் கட்சியை வழிநடத்துவது என அப்போது முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அத்தகைய விவாதம் ஓரிருமுறை கூட முழுமையாக நடைபெறாத சூழ்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர் அவர் முன்பு செயலாளராக இருந்த மேற்குவங்க மாநிலக்கமிட்டி உறுப்பினர்களைக் கொண்டு நாடு முழுவதும் இருந்த கட்சி அமைப்புகளைத் தனது கட்டுபாட்டிற்குள் கொண்டுவரும் ஏற்பாடுகளை மேற்கொண்டார். மாநிலக்கட்சி அலுவல்களுக்குப் பொறுப்பான மத்திய முழுநேரக் கட்சிப் பணியாளர்கள் என அவர்கள் அழைக்கப்பட்டனர். அதன்மூலம் கட்சி முழுமையாகப் புதிதாக வந்த பொதுச் செயலாளரின் கட்டுக் கோப்பிற்குள் வர அடித்தளமிடப்பட்டது.

தலைமை உருவாக்கிய இறுக்கம்

பிற மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் அவரவர் வேலை செய்து கொண்டிருந்த பகுதிகளில் தங்களுக்கு ஒப்படைக்கப் பட்டிருந்த கட்சிப் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். சிப்தாஷ் கோஷ் போன்றதொருவரின் தலைமையின் கீழ் காலங்காலமாகச் செயல்பட்ட அவர்களுக்குக் கடமைகள் பொறுப்புகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதில் கவனம் இருந்ததே தவிர கட்சியின் செயல் பாட்டில் புதிய பொதுச் செயலாளர் உருவாக்கிய இத்தகைய இறுக்கம் அப்போது பெரிதாகப்படவில்லை.

மாநிலக்கட்சி அமைப்புகளை மேற்பார்வை இடுபவர்கள் என்ற பெயரில் நியமிக்கப்பட்ட முன்னாள் மேற்குவங்க மாநிலக்கட்சியில் பொறுப்பு வகித்தவர்கள் பெயரளவிற்குப் பல மாநிலங்களில் மாநில அமைப்புக் கமிட்டிகளை ஏற்படுத்தினாலும் மாநிலக்கமிட்டி உறுப்பினர்களைக் கொண்டு மாநிலச் செயலாளர் கட்சிப் பணிகளைச் செய்யும் அமைப்பு ரீதியான செயல்பாட்டுப் போக்கினை வளரவிடவில்லை.

அவர்களது தலைமையில் மட்டுமே மாநிலக்குழுக் கூட்டங்கள் எப்போதும் நடக்கும் என்ற சூழ்நிலையை அவர்கள் பராமரிக்க விரும்பினர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் யார் யாரைப் பொறுப்பாளர்களாகப் போடுவது என்ற விசயத்தில் யாரை நியமித்தால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு கம்யூனிஸ்ட் அமைப்பு என்ற ரீதியில் கட்சி அமைப்பு வளரும் என்று பார்க்காமல், விமர்சனப் போக்கின்றி யார் யார் மாநிலக்கட்சியை மேற்பார்வையிடும் மத்தியக்கமிட்டியினால் நியமிக்கப்பட்டவருக்குச் சாதகமாக இருப்பார்களோ அப்படிப்பட்டவர்கள் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டனர்.

இவ்வாறு புதிதாகப் பொதுச் செயலாளர் பொறுப்பேற்றவர் ஸ்தாபனத்தை அத்தனை ஜனநாயக பூர்வமற்ற விதத்தில் நடத்தத் தொடங்கியதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. முதற்கண் முழுமையான ஜனநாயகச் செயல்பாட்டை அமைப்பிற்குள் கொண்டுவரும் எந்தக் கேள்வியையும் சித்தாந்த ரீதியாக எதிர்கொள்ளும் தத்துவார்த்த வலு அவரிடம் இல்லை. மேலும் அவர் விடுதலைப் போராட்ட காலத்தில் உறுப்பினராக இருந்து செயல்பட்ட அமைப்பு ஒரு உழைக்கும் வர்க்க அமைப்பல்ல. அந்தக் குட்டி முதலாளித்துவ அமைப்பில் அனைத்து விச யங்களையும் ஜனநாயக ரீதியில் கலந்து பேசி முடிவெடுக்கும் போக்கும் நடைமுறையும் இல்லை.

ஏனெனில் அமைப்பின் எந்த முடிவுகளும் வெள்ளை அரசாங்கத்திற்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் அதுபோன்ற அமைப்புகள் மிதமிஞ்சிய எச்சரிக்கை உணர்வுடன் இருந்தன. அனைத்துமே ரகசியமாகச் செய்யப்படுவது அதுபோன்ற அமைப்புகளில் ஒரு முக்கிய நியதியாக இருந்தது. சூழ்நிலை மாறி ஒப்பீட்டளவில் அமைதியான சூழலில் ஒரு உழைக்கும் வர்க்க அமைப்பாகச் செயல்பட வேண்டிய தருணத்திலும் கூட ரத்தத்தில் ஊறிப்போனவை போலிருந்த பழைய குட்டி முதலாளித்துவ ஸ்தாபனத்தன்மைகளும் போக்குகளும் அவரிடம் மாறவில்லை. இக்காரணங்களால் அவர் அவ்வாறு நடந்து கொண்டார்.

நியமனங்கள் இவ்வாறு நடைபெற்றதால் மாநிலக்கட்சியை ஏறக்குறைய முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் எந்த மாநிலப் பொறுப்பாளருக்கும் சிரமம் எதுவும் இருக்கவில்லை.

கோட்பாடற்ற விதத்தில் நிதிவசூல்

இவ்விசயத்தில் குறிப்பாகக் கட்சிக்காக என்ற பெயரில் செய்யப்படும் நிதி வசூலும் ஒரு மிகமுக்கியப் பங்கினை வகித்தது. பொதுவாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அது நடத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் இயக்கங்களை ஒட்டியே நிதி வசூலில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இவ்விசயத்தில் சிப்தாஷ் கோஷிற்குப் பின் வந்த எஸ்.யு.சி.ஐ. கட்சித் தலைமையின் போக்கே மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. பொதுவாகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிதிவசூல் குறித்த அணுகு முறை நிகழ்ச்சிகளுக்காகவும், இயக்கங்களுக்காகவும் தோழர்கள் வசூல் செய்து அவற்றை நடத்தி கட்சிப்பணி பரவலாக ஆவதற்கு வழி வகுப்பார்கள் என்ற வகையிலேயே இருக்கும்.

கட்சியின் முழுநேர ஊழியர்கள் அனைவரும் ஏதாவதொரு வெகுஜன ஸ்தாபனத்தில் செயல்படுவார்கள். அந்த ஸ்தாபனம் அவர்களுடைய செலவுகளைப் பார்த்துக் கொள்ளும். இத்தகைய நடைமுறையே பின்பற்றப்பட்டது.

ஆனால் எஸ்.யு.சி.ஐ. கட்சியில் மட்டும் கட்சியின் முழுநேர ஊழியர்களைப் பராமரிப்பதற்காகவும் வசூல் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதனை நியாயப்படுத்த அதன் தலைவர்கள் முன்வைத்த வாதம் நாங்கள் சமூகப் பணியில் முழுநேரமும் ஈடுபடுகிறோம். எங்களைப் பராமரிப்பது சமூகத்தின் கடமை என்பதாகும். இந்த வாதத்தில் ஒரு அடிப்படை இருந்தாலும் இதில் ஒரு அபாயமும் இருக்கவே செய்தது.

கட்சியின் முழுநேர ஊழியர்களுக்கு எந்தக் குறிப்பிட்ட வெகுஜன அமைப்புடனும் இணைந்து செயல்படாமல் அல்லது அதை நிர்வகிக்காமல் அவர் முழுநேர ஊழியராக இருக்கலாம் என்ற வாய்ப்பு இதனால் உருவாக்கப்பட்டது. அது போன்ற நிலைமைகள் நிலவுவது மத்திய அமைப்பிலிருந்து மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டவர்களுக்கும் வசதியாகவே இருந்தது. கட்சியை, அதன் வெகுஜன அமைப்புகளைக் கட்டியமைப்பதின் மூலம் வளர்ப்பவர்களுக்கு அதையயாட்டிய அனுபவமும், விமர்சனம் செய்யும் தார்மீக வலுவும் இருக்கும். அப்படியில்லாத முழுநேர ஊழியர்கள் கட்சித் தலைமையினைச் சார்ந்து இருக்க முழுமையாகப் பழகிவிடுவர். அந்தப் பழக்கம் எந்த அளவிற்கு ஆழமானதாகப் பல சமயங்களில் ஆகிவிட்டது என்றால் ஒப்புக்காக விமர்சனத்திற்கு வாய்ப்பளிக்கப் பட்டாலும் கூட யாரும் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்த மாட்டார்கள் என்ற அளவிற்கு அது அமைப்பை மிக ஆழமாகப் பாதித்துவிட்டது.

இந்தப் பின்னணியில் கட்சி அமைப்பின் செயல்பாடே அடிப்படையில் மாறிவிட்டது. நிதி வசூலே கட்சியின் மிகமுக்கியப் பணியாக ஆகிவிட்டது. அதனை ஏற்பாடு செய்வதே முழுநேர ஊழியர்களின் முக்கியப்பணி என்ற நிலையும் ஏற்பட்டுவிட்டது. அதனைத் திறம்படத் தயார் செய்யும் முழுநேர ஊழியர்களே முக்கியமானவர்களாகக் கருதப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அதிலும் அதிக நிதி வசூல் நடைபெற வாய்ப்புள்ள இடங்களில் மத்தியப் பொறுப்பாளர் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களைப் பொறுப்பாளர்களாக நியமிக்கும் போக்கும் தலைதூக்கியது.

நிதி வசூல் இயக்கங்களை மையமாக வைத்து நடைபெறும் நடைமுறை இல்லாமல் போனது ஒருபுறம்; வசூலான நிதியும் கூட எங்காவது இயக்கம் நடந்தால் அதற்கும் பயன்படாது என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டது. ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் பணம் ஈட்டித்தரும் துறைக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் போன்ற முக்கியத்துவம் அதிக நிதி வசூல் நடைபெறும் சென்னை மாவட்டக் கமிட்டி போன்ற கமிட்டிகளுக்குத் தரப்பட்டது.

சீரழிந்த நடைமுறை

சிப்தாஷ் கோஷ் அவர் வாழ்நாளில் பல புதுக் கண்ணோட்டங்களையும், நடைமுறைகளையும் அவர் உருவாக்கிய கட்சியின் மூலம் கொண்டு வந்தார் என்றால் அவருக்குப்பின் வந்த தலைமை இதுபோன்ற சீரழிந்த நடைமுறைகளை நாசூக்காகப் புகுத்திக் கட்சியின் உள்ளடக்கத்தையே ஒரு பாட்டாளி வர்க்கத் தன்மை அற்றதாக ஆக்கிவிட்டது. ஆனால் நிதிவசூலில் ஈடுபடும் தோழர்கள் மக்கள் இயக்கங்களை முனைப்புடன் கட்ட முயலாமல் மக்கள் இயக்கங்களுக்காகவே நிதிவசூல் செய்கிறோம் என்று கூறியே நிதிவசூலில் ஈடுபட்டு ஈடுபட்டுக் கூசாமல் உண்மைக்குப் புறம்பானவற்றைக் கூறும் ஒருவகை வேசதாரித்தத்தைக் கொண்டவர்களாக நாளடைவில் ஆகிவிட்டனர்.

சரியான சிந்தனையும் கருத்துக்களும் உருவாவதற்கு மகத்தான சிந்தனையாளர்கள் கட்சிகளின் தலைவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் கட்சி அச்சிந்தனை காட்டும் வழிமுறையில் நடைமுறை ரீதியாகச் செயல்பட்டு அந்த நடைமுறைகள் வழங்கும் படிப்பினைகளைச் சரியாக எடுத்துக்கொண்டு அதற்குகந்த வகையில் கட்சியின் நடைமுறைக்கு வழிகாட்டும் கட்சியின் சிந்தனையை மென்மேலும் செறிவு செய்யவும் வேண்டும்.

அத்தகைய நடைமுறை பின்பற்றப்படும் போது மட்டுமே கட்சிக்கு வழிகாட்டும் சிந்தனை பராமரிக்கப்படும் மேம்படுத்தப்படும் சூழல் உருவாகும். இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த சிந்தனை எத்தனை சரியானதாக இருந்தாலும் அது தொடர்ச்சியாகச் செழுமைப்படுத்தப் படாவிட்டால் அதுவும் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயம் பின்தங்கிய சிந்தனையாக ஆகிவிடும். அதை யாராலும் தடுக்க முடியாது.

சிப்தாஷ் கோஷின் மறைவிற்குப்பின் வந்த கட்சியின் தலைமையினால் சிப்தாஷ் கோஷ் அளவிற்கு மிகச்சரியாகக் கட்சியின் - பல்வேறு நாட்டின் நிலைமைகள் குறித்த - சிந்தனைகளை செழுமைப்படுத்த முடியவில்லை. அவரது சிந்தனைத் தரத்திற்கும் அடுத்து வந்த தலைவர்களது சிந்தனைத் தரத்திற்கும் இருந்த பெரும் இடைவெளி சிந்தனை ரீதியான கட்சியின் வளர்ச்சிப் போக்கில் ஒரு தேக்கநிலையை ஏற்படுத்தியது.

ஆனாலும் அவர் இறந்தபின்னும் கட்சி மிகவும் நன்றாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது என்று காட்டுவதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த அமைப்புகளைக் கொண்டும், பல மாநிலங்களில் புது அமைப்புகளை ஏற்படுத்தியும் எங்கும் கட்சி தன் தடத்தைப் பதித்துள்ளது என்ற உள்ளடக்கத்தில் வெறுமையையும் வெளியில் பிரகாசத்தையும் காட்டக்கூடிய ஒரு தோற்றத்தை புதிய பொதுச் செயலாளர் தனது முன்னாள் மேற்குவங்க சகாக்களைக் கொண்டு ஏற்படுத்தினார்.

அந்தந்த மாநிலங்களின் தொழில் வளர்ச்சி நிலை, நிலவும் சுரண்டல் ஆகியவற்றைக் கணக்கிலெடுத்து வர்க்கப் போராட்டங்களை மாநிலங்களில் அவர்கள் வளர்க்க முயலவில்லை. மாறாக அந்தந்த மாநில மக்களின் உணர்வுகளை அடிப்படையாக வைத்துக் காலூன்றுவதில் அக்கறை காட்டினர்.

உணர்வு அடிப்படையிலான இயக்கங்கள்

அந்த அடிப்படையில் தமிழ் நாட்டில் முன்பு இருந்த இந்தி எதிர்ப்பு மனநிலையைக் கருத்திற்கொண்டு மொழிப் பாதுகாப்பு மாநாட்டினை நடத்தினர். தமிழ் நாட்டில் அக்கட்சி எடுத்த முதற்பெரும் அரசியல் நிகழ்ச்சி அதுதான். அதைப்போல் எந்த உணர்வு சார்ந்த பிரச்னையை எடுத்தால் அதிகக் கூட்டத்தைக் கூட்டி கட்சி மிக வேகமாக வளர்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியுமோ அந்தப் பிரச்னைகளையே பல இடங்களில் கையிலெடுத்தனர்.

தலைவர் துதி

மறுபுறம் இந்தப் போதாமையை மறைக்க ஏறக்குறைய சிப்தாஷ் கோஷை ஒரு அரைக்கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தி அவரது சிந்தனை வட்டத்திற்குள் வராத விசயமே இல்லை; அவருடைய கருத்துக்கள் எக்கால கட்டத்திற்கும் வழிகாட்டப் போதுமானவை என்ற அடிப்படையில் அவரை ஒரு அமானுஷ்யனாக சித்தரிக்க தொடங்கும் போக்கு இடைவிடாத திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலம் செய்யப்பட்டது.

அவருக்குப்பின் கட்சி ஸ்தாபனங்கள் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் அம்மாநிலத்தின் அரசியல் நிலை அகில இந்திய அரசியல் நிலை ஆகியவற்றைச் சரியாக மார்க்சிய வெளிச்சத்தில் புரிந்து கொள்ளும் விதத்தில் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்களின் நூல்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உத்வேகமும் ஏற்படுத்தப்படவில்லை. இந்தியப் புரட்சியை நடத்துவதற்குத் தேவையான அனைத்துக் கருத்துக்களும் தோழர் சிப்தாஷ் கோஷ் முன்வைத்த கருத்துக்களிலேயே உள்ளன; அதைத்தாண்டி பெரிதாக ஒன்றும் படிக்க வேண்டியதில்லை என்ற மனநிலை சாதுர்யமாக உருவாக்கப்பட்டது.

தலைமையின் போதாமையைக் கருத்திற்கொண்டு, விமர்சனபூர்வ சிந்தனை, தலைமைக்குச் சிக்கலை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு வளர்ந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் நாசூக்காக இம்மனநிலை உருவாக்கப்பட்டது. அமைப்பிற்குள் புதிதாக வந்த தோழர்களை அவரவரின் தரத்திற்கு ஏற்றவாறு அடுத்தகட்டத் தரத்தை எட்டும் வகையில் அவரது வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் சரியான தலைமையின் கீழ் மேற்கொள்ளப்படுவது கைவிடப்பட்டு அமைப்பு தொடங்கப்பட்ட ஓரிரு ஆண்டுகளிலேயே கம்யூனிஸ மனநிலை கொண்டிராத சிலரைக்கூடத் தேர்தலில் தங்கள் சார்பாக நிறுத்தி குறுக்கு வழியில் கட்சியை பிரபலமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

குருட்டுத்தனம்

மேலே விவரித்த எதிர்மறைப் போக்குகள் அமைப்பில் அமைப்பு ரீதியாகத் தலையயடுத்த வேளையில் சித்தாந்த ரீதியான வளர்ச்சியின்மையும் அக்கோளாறுகளுடன் ஒத்துப்போகும் விதத்தில் அதன் பங்கினை ஆற்றியது. எஸ்.யு.சி.ஐ - ன் இன்றைய தலைமை சிப்தாஷ் கோஷைக் கொண்டாடுவது போல் சிப்தாஷ் கோஷ் மாமேதை லெனினைக்கூடக் குருட்டுத்தனமாகக் கொண்டாடவில்லை. மாமேதை லெனின் ஏகாதிபத்தியம் போரை உருவாக்குகிறது. ஏகாதிபத்தியங்கள் இருக்கும் வரை போர் இருந்து கொண்டேயிருக்கும் என்று கூறினார். ஆனால் 2வது உலக யுத்தத்திற்குப் பின்பு சோசலிச முகாம் உருவான வேளையில் குருச்சேவ் ஏகாதிபத்தியம் போரை உருவாக்குகிறது என்ற லெனினியக் கண்ணோட்டம் அதன் செல்லுபடித் தன்மையை இழந்து விட்டது என்று கூறினார். அத்துடன் அது அமைதியான பாராளுமன்ற முறையின் மூலம் சோசலிச மாற்றம் ஏற்படுவதைச் சாத்திய மாக்கியுள்ளது என்றும் கூறினார்.

அதனைத் திருத்தல்வாதம் என்று அடையாளம் காட்டிய தோழர் கோஷ் அதே சமயத்தில் தோன்றியுள்ள சில மாற்றங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அடிப்படையில் ஏகாதிபத்தியம் போர்களை உருவாக்கும் என்ற கோட்பாட்டில் மாறுதல் எதுவும் இல்லை என்றாலும் அந்த ஏகாதிபத்தியப் போக்கில் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய சில மாற்றங்கள் இருப்பதை உலகின் புரட்சிகர இயக்கங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கூறினார் ஏகாதிபத்தியங்கள் இப்போது தங்களது நலனுக்காகக் காலனிகளைக் கைப்பற்றும் அப்பட்டமான முழுமையான யுத்தங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக ஆங்காங்கே சிறுசிறு யுத்தங்களைத் தூண்டிவிடுவதாக ஆகிஉள்ளது. அவ்வாறு தூண்டிவிடுவது அமெரிக்க ஏகாதிபத்தியம் போன்ற தனது பொருளாதாரத்தையே யுத்தப் பொருளாதாரமாக மாற்றியுள்ள ஏகாதிபத்தியங்களின் ஆயுத விற்பனைக்குப் பெரிதும் தேவைப்படுகிறது; அந்த வகையில் சோசலிச முகாமும் போருக்கு எதிரான இயக்கங்களும் ஏகாதிபத்திங்களின் மேல் பெருமளவு அமைதியைத் திணிக்க வல்லவையாக வளர்ந்திருக்கின்றன என்று கூறினார். இக்கருத்து திட்டவட்டமாக மார்க்சிசத்தைச் செழுமைப்படுத்திச் செறிவு செய்யும் கருத்தாகும்.

கோஷின் மறைவிற்குப் பின் ஏற்பட்ட மாறுதல்கள்

தோழர் சிப்தாஷ் கோஷின் மறைவிற்குப் பின்பு பல குறிப்பிடத்தக்க மாறுதல்கள் உலக அளவில் ஏற்பட்டுள்ளன. உலகில் அவர் காலகட்டத்திலிருந்த சோசலிச முகாம் இன்று இல்லாமல் போயிருக்கிறது. தோழர் சிப்தாஷ் கோஷ் அவர் வாழ்ந்த காலகட்டத்தில் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் வகுத்தெடுத்த நான்கு உலக அளவிலான பெரிய முரண்பாடுகளோடு ஐந்தாவதாக ஒரு முரண்பாட்டையும் சேர்த்து உலகின் புரட்சிகர இயக்கங்கள் கருத வேண்டுமென வலியுறுத்தினார். இந்த நான்கு முரண்பாடுகள் ஸ்டாலின் காலத்தில் உருவாக்கப்பட்டவை. ஸ்டாலின் ஏற்றுக்கொண்ட கண்ணோட்டத்தை மாற்றுகிறோமே என்ற எண்ணம் அவருக்கு ஏற்படவில்லை.

வர்த்தகப் போட்டியின் காரணமாக ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நிலவும் முரண்பாடு, ஏகாதிபத்தியங்களுக்கும் அவற்றின் காலனி நாடுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடு, உலக அளவில் மூலதனத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான முரண்பாடு, ஏகாதிபத்திய சோசலிச முகாம்களுக்கிடையிலான முரண்பாடு என்ற உலக கம்யூனிஸ்ட் இயக்கம் வகுத்தெடுத்த நான்கு முரண்பாடுகளோடு ஐந்தாவது முரண்பாடாகப் புதிதாக விடுதலையடைந்த நாடுகள் தங்கள் நாடுகளில் முதலாளித்துவத்தைக் கட்டியமைப்பதற்காக சோசலிச நாடுகளுடன் உறவு கொள்வதுபோல் காட்டி சில ஏகாதிபத்தியங்களிடம் உதவிகளையும் சலுகைகளையும் பெறுவது; அதே சமயத்தில் ஏகாதிபத்திய நாடுகள் பக்கம் சாய்வதுபோல் காட்டி சோசலிச நாடுகளிடமிருந்து உதவிபெறுவது என்ற வகையில் காட்டிவரும் இந்தப் போக்கில் சம்பந்தப்பட்டுள்ள முரண்பாட்டினை ஐந்தாவது முரண்பாடாகச் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

இன்று சோசலிச முகாமே இல்லாமல் போய்விட்ட சூழ்நிலையில் இந்த முரண்பாடு அப்பட்டமாகச் செல்லுபடியற்றதாகி விட்டது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் உண்மைகளாகவும், நடைமுறை சாத்தியமானவைகளாகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் குறிப்பிட்ட காலகட்ட நிகழ்வுகளை விருப்பு வெறுப்பின்றி ஆய்ந்து அக்கருத்துக்களை முன் வைப்பதேயாகும். காலகட்டங்களும், சூழ்நிலைகளும் மாறும் போது அவற்றையயாட்டிய விதத்தில் புதிய கருத்துக்கள் நிச்சயம் உருவாக வேண்டும். அந்த வகையில் சிப்தாஷ் கோஷ் முன்வைத்த இக்கருத்து செல்லுபடியற்றதாக ஆகிவிட்டதைக் கொண்டு சிப்தாஷ் கோன் கணிக்கும் திறன் போதாததாகி விட்டது என்று கருதக்கூடாது.

சோசலிச முகாம் எங்குள்ளது

இருந்தாலும் எஸ்.யு.சி.ஐ. கட்சியின் இன்றைய தலைமை சிப்தாஷ் கோஷின் கணிப்பு பொய்யாகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் சோசலிச முகாம் இன்றும் இருக்கிறது; சீனா, வடகொரியா, கியூபா, வியட்நாம் ஆகிய நாடுகள் இப்போதும் சோசலிச நாடுகளே என்று கூறி வருகிறது. சீனா எத்தகைய முதலாளித்துவப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை முதலாளிகளையும் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக்கலாம் என்ற அளவிற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி அப்பட்டமாக மாறியுள்ளதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். வியட்நாமின் போக்கும் ஏறக்குறைய அந்தத் திசை வழியில்தான் இருந்து கொண்டிருக்கிறது. கியூபா, வடகொரியா ஆகிய இரு நாடுகளும் சோசலிச முகாம் இல்லாத நிலையில் சோசலிசத்தின் சாயல்கள் கொண்ட தங்கள் சமூக அமைப்புகளைச் சீரழிந்து விடாமல் எப்படிக் காப்பது என்ற கடுமையான போராட்டத்திலேயே இப்போது தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.

சோசலிச முகாம் என்று கூறுவதன் பொருளே அப்படி ஒரு முகாம் இருப்பதை மனதிற்கொண்டு ஏகாதிபத்தியத் தலையீடு கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும் படவேண்டும் என்பதே. எடுத்துக்காட்டாக உலகில் எந்த நாட்டிலாவது மூலதனத்திற்கும் உழைப்பாளருக்கும் இடையிலான முரண்பாடு முற்றி அங்கு சோசலிச ரீதியிலான சமூகமாற்றப் போக்கு உக்கிரமடைந்தால் அப்போது அதற்கு எதிராக இயற்கையாகவே ஏகாதிபத்தியம் அந்நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிட்டு சமூகமாற்றத்தைத் தடுக்க முயலும். அவ்வேளையில் அவ்வாறு நீ செய்தால் சமூகமாற்ற சக்திகளுக்கு ஆதரவாக நானும் தலையிடுவேன் என்று சோசலிச முகாம் ஏகாதிபத்தியத்தைத் தடுக்க முன்வர வேண்டும்; அப்போதுதான் அதனை முகாம் என்று அழைப்பதில் பொருள் இருக்கிறது. முன்பு சோசலிச முகாம் இருந்தபோது அதைக் கருத்திற்கொண்டே ஏகாதிபத்தியங்கள் பல காலம் பல நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட முடியாத நிலையிலிருந்தன.

இது வெறுமனே கருத்து ரீதியாக முன்வைக்கப்படுவதல்ல. ஈராக்கின் மீது அமெரிக்கா போர் தொடுக்க முனைந்த அந்த ஆரம்ப வேளையில் ராணுவ ரீதியான அதன் தலையீட்டை வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் ஓட்டெடுப்புக்கு வந்தது. அப்போது வீட்டோ அதிகாரத்தைத் தன் கைவசம் கொண்டிருந்த சீனா அதனை அத்தீர்மானத்திற்கு எதிராகப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனைச் செய்யாததன் மூலம் அமெரிக்காவின் தாக்குதலுக்கு சீனா மறைமுகமாக ஒப்புதல் அளித்தது. மேலே கூறிய நான்கு நாடுகளில் ஏதாவது ஒரு நாடு பொருளாதார ராணுவ வலுவுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த முயற்சிகளுக்கு எதிராக வலுவுடன் ஏதாவது செய்திருக்க முடியுமென்றால் அது சீனாவாகத்தான் இருந்திருக்க முடியும். ஆனாலும் அது ஒன்றும் செய்யவில்லை.

இந்நிலையில் சோசலிச முகாம் இருக்கிறது என்று கூறுவதன் பொருளென்ன? இருந்தாலும் எஸ்.யு.சி.ஐ - ன் தலைமைக்கு சிப்தாஷ் கோஷ் கூறியது எந்த வகையிலும் பொய்யாகிவிடக் கூடாது. அதாவது சோசலிச முகாம் ஏகாதிபத்திய முகாம் இவற்றிற்கிடையிலான முரண்பாடு சரியானதெனக் கருதப்பட்டால் தான் சிப்தாஷ் கோஷ் முன்வைத்த ஐந்தாவது முரண்பாட்டிற்குப் பொருத்தம் இருக்கும்; சிப்தாஷ் கோஷின் பெயரைச் சொல்லியே கட்சியை நடத்தும் தமக்கு அம்முரண்பாடு சரியானதென நிறுவுவது அவசியம்; அதனால்தான் பெயரளவிற்கு நான்கு நாடுகளை அவற்றில் இரண்டு நாடுகளில் சோசலிசத்திற்கு எதிரான பல்வேறு போக்குகள் அப்பட்டமாகத் தலைதூக்கிய நிலையிலும் - ஒன்றுசேர்த்துக் காட்டி இதோபார் சோசலிச முகாம் உலக நிகழ்வுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று காட்டுகிறது.

தோழர் சிப்தாஷ் கோஷ் தனது முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிப் பாதையை அனைத்து வகை தர்க்கபூர்வ வாதங்களுடன் நிறுவி இந்தியாவே ஒரு வளர்ந்து வரும் ஏகாதிபத்தியமாக ஆகியுள்ளது என்பதை நிறுவினார். புரட்சி சோசலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளும் இந்தியப் புரட்சியின் கட்டம் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சியே என்று கூறினாலும் இந்தியா எவ்வாறு ஏகாதிபத்தியக் கூறுகளைக் கொண்ட நாடாக வளர்ந்து வருகிறது என்பதை சிப்தாஷ் கோஷ் நிறுவியது போல் அவை நிறுவவில்லை. அந்த வகையில் சிப்தாஷ் கோஷ் முன்வைத்த சிந்தனை மட்டுமே தனித்தன்மை வாய்ந்ததாக அதாவது இந்தியப் புரட்சிக்கு வழிகாட்டும் ஒரு துருவ நட்சத்திரமாக விளங்கியது.

திசை திருப்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வாதம்

ஆனால் இன்றைய எஸ்.யு.சி.ஐ - ன் தலைமை ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாட்டினை அதன் முதலாவது கட்சி காங்கிரஸ்க்குப் பின் நடத்தி இந்தியாவின் இதர வர்க்க சமரச கம்யூனிஸ்ட் கட்சிகளின் பாதையில் அவற்றிற்கு பக்க வாத்தியம் வாசிக்கும் விதத்தில் ஏகாதிபத்தியச் சுரண்டல் முக்கியத்துவம் கொடுத்து மாநாடு நடத்தும் அளவிற்கு இருக்கவே செய்கிறது என்று காட்டியது. அதன்மூலம் சிப்தாஷ் கோஷ் கொண்டிருந்த அடிப்படை அரசியல் வழி குறித்த தனித்தன்மையும் முழக்கமும் நீர்த்துப்போக வழிவகுத்தது.

உலகமயம், இந்தியா போன்ற நாடுகளுக்குப் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியேயுள்ளது. அந்தச் சூழ்நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் அத்தியாவசியமே என்று அவர்கள் வாதிடலாம். உலக மயத்தின் விளைவாக இந்தியாவின் பல பாரம்பரியத் தொழில்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தத்தில் உலகமயத்தினால் பயனடைந்த நாடுகளான பிரேசில், சீனா, இந்தியா, ரஷ்யா ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிக் ( BRIC) என்று அழைக்கப்படக்கூடிய நாடுகளின் வட்டத்தில் இந்தியா சீனாவிற்கு அடுத்தப்படியாக மிகமுக்கிய இடத்தில் உள்ளது. இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

ஒட்டுமொத்தத்தில் உலகமயத்தினால் பயனடைந்த நாடுகளில் 2வது நாடாக இந்தியாவே விளங்குகிறது. இந்த நிலையில் தனது முதலாளிகளின் ஒட்டுமொத்த நலனுக்காகச் செயல்படும் இந்திய அரசினை எதிர்த்து தனது போராட்டங்களின் கூர்முனையைத் திருப்பாமல் சி.பி.ஐ., சி.பி.ஐ(எம்). கட்சிகளின் பாணியில் அன்னிய ஏகாதிபத்தியத்தை மக்கள் முன் கொண்டுவந்து நிறுத்தி சமுதாய மாற்றப் பாதையின் போக்கில் தடுமாற்றம் ஏற்பட வழிவகுப்பது ஒரு வகையில் சொல்லப் போனால் சிப்தாஷ் கோஷின் சிந்தனைக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.சிப்தாஷ் கோஷ் கூறினார் முதலாளித்துவ நெருக்கடியின் காரணமாக நமது மின்நிலையங்கள் அனைத்தும் அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு அளவிற்கே உற்பத்தி நடத்த இயலாத நிலையில் உள்ளன என்று. நீர் மற்றும் அனல் மின்சார உற்பத்தியையே முழு அளவில் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் இந்திய முதலாளித்துவம் தீராத மின் உற்பத்திச் சாதனமாக விளங்கும் அணு மின்உற்பத்தியை நோக்கி எப்படிச் செல்ல முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். ஆனால் இன்று அணு உலைகளை நிறுவ அமெரிக்காவுடன் இந்தியா பல ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது.

சூழ்நிலை மாற்றமும் கருத்து மாற்றத் தேவையும்

போர்க்குணமிக்க ஊழியர்களைக் கொண்ட முதலாளித்துவக் கட்சிகளே தங்களின் சமூக ஜனநாயகத்தன்மை வாய்ந்த முற்போக்கு முகத்திரை கொண்ட முழக்கங்களை முன்வைத்து பாசிஸத்தைக் கொண்டுவர முடியும்; அந்த அடிப்படையில் மிகப்பெரும் பாசிஸக் கட்சியாக இந்திரா காந்தி தலைமை தாங்கிய காங்கிரஸே இருக்க முடியும்; சி.பி.ஐ. கட்சி முன்வைப்பது போல் அப்போதிருந்த ஜனசங்கம் (தற்போதய பி.ஜே.பி) ஒரு பாஸிசக் கட்சியாக ஆக முடியாது என்று 1976 - ம் ஆண்டு அவசரநிலை அறிவிக்கப்பட்ட போது தோழர் சிப்தாஷ் கோஷ் கூறினார். அதாவது ஜனசங்கம் போன்ற பழமைவாதக் கட்சிகளைக் காட்டிலும் இந்திரா காங்கிரஸ் போன்ற கட்சிகளே பாசிஸ உள்ளடக்கத்தையும் அதனை நடைமுறைப்படுத்தும் தொண்டர்களின் வலுவினையும் கொண்டவை என்று அப்போது கூறினார். ஆனால் பாபர் மசூதி இடிப்பையும்அதனைத் தொடர்ந்த வகுப்புவாத பாசிஸத்தையும் வட மாநிலங்களில் கொழுந்து விட்டெரியச் செய்தது காங்கிரஸ் அல்ல - ஜனசங்கத்தின் வழிவந்த பி.ஜே.பி - யே.

இந்தக் கருத்துக்கள் சிப்தாஷ் கோஷினால் முன்வைக்கப்பட்ட போது சரியாகவே இருந்தன. அவரது தொலை நோக்குப் பார்வை மற்றும் பகுப்பாய்வுக் குறைபாட்டினால் அவை தவறாகிவிடவில்லை. மாறாக சமூகத்தின் பொருளாதாரம் அடிப்படையில் மாறாவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவு ரீதியான பல மாறுதல்கள் அதில் நிகழந்து கொண்டேயுள்ளன. உலகமயம் அதன் விளைவாக அந்நிய முதலீடுகளின் கூடுதல் வருகை, இந்திய உழைப்புத் திறனின் உலகளாவிய படையயடுப்பு ஆகியவை அதிகளவில் தகவல் தொழில் நுட்பத் தொழில்களை வளரச் செய்துள்ளன. ஓரளவு பொருள் உற்பத்தித்துறைத் தொழில்களின் வளர்ச்சியையும் அவை கொண்டுவந்துள்ளன. அந்நிலையில் கூடுதல் மின்னுற்பத்தி தேவைப்படுகிறது. அதனையயாட்டியே கோஷின் கணிப்பிற்கு விரோதமாக இந்திய முதலாளித்துவம் அணுமின் சக்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

முதலாளி வர்க்கத்திற்குச் சேவை செய்யும் கட்சிகள் அவற்றின் வளர்ச்சிக்காகவும் கூடப் பல பாஸிச யுக்திகளைக் கையாளுகின்றன. அவற்றின் மூலமாக பெரிய வளர்ச்சியைச் சாதித்து அமைப்பு ரீதியான வலுவினை ஒரு பழமைவாதக் கட்சி பெற்றால் அது பழமைவாதக் கட்சி என்பதனாலேயே ஆளும் முதலாளி வர்க்கம் அதனை ஏற்கத் தயங்குவதில்லை. ஒரு தருணத்தில் இதுவும் பயன்படும் என்ற அடிப்படையில் அதற்கும் தனக்குச் சேவை செய்யக் காத்திருக்கும் அமைப்புகளின் வரிசையில் ஒரு முக்கிய இடத்தை ஆளும் வர்க்கம் தரவே செய்யும். அந்த வகையிலேயே ஒரு பாசிஸ சக்தியாக பி.ஜே.பி. வளர்ந்துள்ளது. அது மட்டுமல்ல இன்றைய நிலையில் பாசிஸத்தைக் கொண்டுவர வாய்ப்புள்ள முதற்பெரும் சக்தியாக பி.ஜே.பி - யே உள்ளது.

சிப்தாஷ் கோஷ் மட்டுமல்ல; மாமேதை மார்க்ஸ் - ம் கூட வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் தொழிலாளி வர்க்கப் புரட்சி ஏற்படும் என எண்ணினார். அதைப்போல் புரட்சியின் மீதான நம்பிக்கை அதன் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் பல ஆசிய நாடுகள் முதலாளித்துவக் கட்டத்தை அடையாமலேயே கூட சோசலிசத்தை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என மாமேதை லெனின் நம்பினார். அவர்கள் எண்ணியதும், நம்பியதும் அவர்களது காலகட்டத்தில் நிலவிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு அவர்கள் முன்னோக்கிப் பார்த்ததன் விளைவாகத் தோன்றியவை. அச்சூழ்நிலைகள் அவர்களுக்குப் பின் எதிர்பாராத விதமாக சில அம்சங்களில் மாறும் போது அவர்களது எண்ணங்களும், எதிர சூழ்நிலை மாற்றமும் கருத்து மாற்றத் தேவையும்

போர்க்குணமிக்க ஊழியர்களைக் கொண்ட முதலாளித்துவக் கட்சிகளே தங்களின் சமூக ஜனநாயகத்தன்மை வாய்ந்த முற்போக்கு முகத்திரை கொண்ட முழக்கங்களை முன்வைத்து பாசிஸத்தைக் கொண்டுவர முடியும்; அந்த அடிப்படையில் மிகப்பெரும் பாசிஸக் கட்சியாக இந்திரா காந்தி தலைமை தாங்கிய காங்கிரஸே இருக்க முடியும்; சி.பி.ஐ. கட்சி முன்வைப்பது போல் அப்போதிருந்த ஜனசங்கம் (தற்போதய பி.ஜே.பி) ஒரு பாஸிசக் கட்சியாக ஆக முடியாது என்று 1976- ம் ஆண்டு அவசரநிலை அறிவிக்கப்பட்ட போது தோழர் சிப்தாஷ் கோஷ் கூறினார். அதாவது ஜனசங்கம் போன்ற பழமைவாதக் கட்சிகளைக் காட்டிலும் இந்திரா காங்கிரஸ் போன்ற கட்சிகளே பாசிஸ உள்ளடக்கத்தையும் அதனை நடைமுறைப்படுத்தும் தொண்டர்களின் வலுவினையும் கொண்டவை என்று அப்போது கூறினார். ஆனால் பாபர் மசூதி இடிப்பையும்அதனைத் தொடர்ந்த வகுப்புவாத பாசிஸத்தையும் வட மாநிலங்களில் கொழுந்து விட்டெரியச் செய்தது காங்கிரஸ் அல்ல, ஜனசங்கத்தின் வழிவந்த பி.ஜே.பி - யே.

இந்தக் கருத்துக்கள் சிப்தாஷ் கோ´னால் முன்வைக்கப்பட்ட போது சரியாகவே இருந்தன. அவரது தொலை நோக்குப் பார்வை மற்றும் பகுப்பாய்வுக் குறைபாட்டினால் அவை தவறாகிவிடவில்லை. மாறாக சமூகத்தின் பொருளாதாரம் அடிப்படையில் மாறாவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவு ரீதியான பல மாறுதல்கள் அதில் நிகழந்து கொண்டேயுள்ளன. உலகமயம் அதன் விளைவாக அந்நிய முதலீடுகளின் கூடுதல் வருகை, இந்திய உழைப்புத் திறனின் உலகளாவிய படையயடுப்பு ஆகியவை அதிகளவில் தகவல் தொழில் நுட்பத் தொழில்களை வளரச் செய்துள்ளன. ஓரளவு பொருள் உற்பத்தித்துறைத் தொழில்களின் வளர்ச்சியையும் அவை கொண்டுவந்துள்ளன. அந்நிலையில் கூடுதல் மின்னுற்பத்தி தேவைப்படுகிறது. அதனையயாட்டியே கோஷின் கணிப்பிற்கு விரோதமாக இந்திய முதலாளித்துவம் அணுமின் சக்தியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

முதலாளி வர்க்கத்திற்குச் சேவை செய்யும் கட்சிகள் அவற்றின் வளர்ச்சிக்காகவும் கூடப் பல பாஸிச யுக்திகளைக் கையாளுகின்றன. அவற்றின் மூலமாக பெரிய வளர்ச்சியைச் சாதித்து அமைப்பு ரீதியான வலுவினை ஒரு பழமைவாதக் கட்சி பெற்றால் அது பழமைவாதக் கட்சி என்பதனாலேயே ஆளும் முதலாளி வர்க்கம் அதனை ஏற்கத் தயங்குவதில்லை. ஒரு தருணத்தில் இதுவும் பயன்படும் என்ற அடிப்படையில் அதற்கும் தனக்குச் சேவை செய்யக் காத்திருக்கும் அமைப்புகளின் வரிசையில் ஒரு முக்கிய இடத்தை ஆளும் வர்க்கம் தரவே செய்யும். அந்த வகையிலேயே ஒரு பாசிஸ சக்தியாக பி.ஜே.பி. வளர்ந்துள்ளது. அது மட்டுமல்ல இன்றைய நிலையில் பாசிஸத்தைக் கொண்டுவர வாய்ப்புள்ள முதற்பெரும் சக்தியாக பி.ஜே.பி- யே உள்ளது.

சிப்தாஷ் கோஷ் மட்டுமல்ல; மாமேதை மார்க்ஸ் - ம் கூட வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் தொழிலாளி வர்க்கப் புரட்சி ஏற்படும் என எண்ணினார். அதைப்போல் புரட்சியின் மீதான நம்பிக்கை அதன் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் பல ஆசிய நாடுகள் முதலாளித்துவக் கட்டத்தை அடையாமலேயே கூட சோசலிசத்தை நோக்கிச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என மாமேதை லெனின் நம்பினார். அவர்கள் எண்ணியதும், நம்பியதும் அவர்களது காலகட்டத்தில் நிலவிய சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு அவர்கள் முன்னோக்கிப் பார்த்ததன் விளைவாகத் தோன்றியவை. அச்சூழ்நிலைகள் அவர்களுக்குப் பின் எதிர்பாராத விதமாக சில அம்சங்களில் மாறும் போது அவர்களது எண்ணங்களும், எதிர் பார்ப்புகளும் நிறைவேறாமல் போய்விடுகின்றன..

பாராளுமன்ற வாதமும், பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவதும்

1967 - ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஏற்பட்டபோது அதில் எஸ்.யு.சி.ஐ. ஒரு நிபந்தனையுடன் சேர்ந்தது. அதாவது தொழிலாளர் போராட்டங்களில் போலீஸ் தலையீடு கூடாது என்ற கொள்கையைத் திட்டவட்டமாக இடது முன்னணி அறிவித்தால் மட்டுமே அதில் எஸ்.யு.சி.ஐ. சேரும் என்று சிப்தாஷ் கோஷ் தலைமையிலிருந்த எஸ்.யு.சி.ஐ. அப்போது அறிவித்தது. அதைப்போல் பி.சி.சென் போன்ற ஒரு அப்பட்டமான கம்யூனிஸ விரோத மனநிலை கொண்டவர்கள் முதல்வர்களாக வர ஒத்துழைக்கக் கூடாது என்ற முடிவினையும் அவர் பெயர் முதல்வர் பதவிக்கு அடிபட்ட போது தெரிவித்தது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவது என்ற மார்க்சியக் கோட்பாட்டிற்கு உகந்த வகையில் சிப்தாஷ் கோஷ் அப்போது செயல்பட்டார்.

அதுபோன்ற எந்த முடிவினையாவது திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது எஸ்.யு.சி.ஐ. எடுத்ததா? எந்த நிபந்தனையை எந்தக் குறைந்தபட்ச திட்டத்தை முன்வைத்து அக்கட்சிகளுடன் எஸ்.யு.சி.ஐ. கூட்டு சேர்ந்தது? சிங்கூர், நந்திகிராம் இயக்கங்களை திரிணாமுல் காங்கிரஸ் நடத்தியது; அதில் எஸ்.யு.சி.ஐ -யும் சேர்ந்திருந்தது. எனவே அப்போராட்டத்தின் பங்கும் பகுதியுமாகத் தோன்றிய கூட்டணியில் நாங்களும் சேர்ந்தோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் உடன் கூட்டு சேர்ந்ததை வேண்டுமானால் எஸ்.யு.சி.ஐ - ன் இன்றைய தலைமை நியாயப் படுத்தலாம்.

ஆனால் எந்த மத்திய அரசின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற கண்ணோட்டத்தைப் பின்பற்றி நந்தி கிராமில் சி.பி.ஐ(எம்) அரசு விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கத் தொடங்கியதோ அந்த மத்திய அரசிற்குத் தலைமை ஏற்கும் காங்கிரஸ் உடனான கூட்டை எஸ்.யு.சி.ஐ - ஆல் எப்படி நியாயப்படுத்த முடியும்? மத்திய காங்கிரஸ் அரசிற்கு ஆதரவு வழங்க முன்வந்தபோது குறைந்தபட்சத் திட்டம் ஒன்றையாவது பெயரளவிற்கு சி.பி.ஐ(எம்). கட்சியினர் வலியுறுத்தினர். அந்த அளவிற்குக்கூட எதையும் வலியுறுத்தாமல் எப்படியேனும் பாராளுமன்றத்தில் கால்பதித்துவிட வேண்டும் என்பதற்காக முதலாளித்துவக் கட்சிகள் முன்வைக்கும் பசப்பு வாதங்களைப் போன்ற வாதங்களை முன்வைத்து திரிணாமுல் உடன் நாங்கள் சேர்ந்தோம், திரிணாமுலோடு காங்கிரஸ் - ம் சேர்ந்தது; நாங்கள் எங்கே காங்கிரஸோடு சேர்ந்தோம் என்று வாதிடும் நிலைக்கு எஸ்.யு.சி.ஐ - ன் தற்போதய தலைமை தள்ளப்பட்டுள்ளது.

இதில் இக்கட்சி பின்பற்றியது பாராளுமன்றத்தைப் பயன்படுத்துவதல்ல; அப்பட்டமான பாராளுமன்ற வாதமே அதை வைத்து நாடு முழுவதிலும் உள்ள தங்கள் கட்சி அணிகளிடம் நமது உறுப்பினர் நாடாளுமன்றத்திற்குச் சென்றுவிட்டார் என்று கூறிப் பெரும் வளர்ச்சியடைந்து விட்டதாக வெட்கமற்ற பிரச்சாரத்திலும் அக்கட்சி ஈடுபடுகின்றது. இந்த வெற்றி பாட்டாளி வர்க்க அரசியல் கண் கொண்டு பார்க்கையில் அரசியல் ரீதியான தோல்வியே. ஆம். சில பாராளுமன்றவாதத்தைப் பிரதிபலிக்கும் தேர்தல் வெற்றிகள் மார்க்சிய அரசியலைப் பொறுத்தவரை அப்பட்டமான அரசியல் தோல்விகளே.

தமிழ் நாட்டின் முன்னனுபவம்

எஸ்.யு.சி.ஐ - ன் இந்தப் பாராளுமன்ற வாதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. எப்படியாவது குறுக்கு வழியில் வளர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணபோக்கு சிப்தாஷ் கோஷின் மறைவிற்குப்பின் எஸ்.யு.சி.ஐ. கட்சியில் ஏராளமாகவே தலை தூக்கியது. தமிழ்நாட்டில் கட்சிப் பணிகளுக்கு அரிச்சுவடி போடப்பட்ட அந்த ஆரம்ப காலத்திலேயே சென்னையில் செயல்பட்டு வந்த ஒரு தனிநபர் தொழிற் சங்கத்தின் தலைவரை தனது ஆதரவு வேட்பாளராக 81 - ம் ஆண்டு தேர்தலிலேயே அக்கட்சி நிறுத்த முயன்றது. அன்றைய தி.மு.க. தலைமை முரசொலி பத்திரிக்கையில் வேலை செய்து கொண்டிருந்த அவரது மனைவியை அவர் போட்டியிட்டால் வேலை நீக்கம் செய்து விடுவோம் என்று மிரட்டியவுடன் அவர் நிற்க மறுத்து ஓட்டம் பிடித்துவிட்டார். அதைப் போலவே எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின்பு ஜானகி அணியுடன் உடன்பாடு செய்துகொண்டு ஓரிரு இடங்களைப் பெறவும் இக்கட்சி பிரம்மப் பிரயத்தனம் செய்தது. எனவே எஸ்.யு.சி.ஐ - ன் பாராளுமன்ற வாதம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கனவே அம்பலமான ஒன்றே.

உண்மைக்கு மதிப்பளிக்காத மிகைப்படுத்தல்

ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எப்போதுமே உண்மைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்; அதனை உயர்த்திப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் அக்கட்சியை படிப்படியாக வேணும் மக்கள் மதிப்பார்கள். தமிழ்நாட்டில் இருந்த இந்தி எதிர்ப்பு மனநிலையைப் பயன்படுத்தி வளரும் நோக்குடன் மொழியின் பாதுகாப்பிற்கு என்ற பெயரில் மொழிப் பாதுகாப்பு மாநாடு ஒன்றினை அக்கட்சி நடத்தியதென்பதைப் பார்த்தோம். ஆனால் பிற தென் மாநிலங்கள் எதிலும்‡ தமிழ் நாட்டில் இருந்த அளவு ஸ்தாபன வலு அக்கட்சிக்கு இருந்தும் கூட ‡அதைப்போன்ற மாநாடு நடைபெறவில்லை. அதற்கான காரணம் அம்மாநில மக்களுக்கு இந்தி மொழியினைக் கற்பதில் அவ்வளவு எதிர்ப்பில்லை என்பதே. ஆனாலும் ஒரு அகில இந்திய மொழிப் பாதுகாப்புக் கமிட்டி அதற்காக அமைக்கப்பட்டது. அதாவது அதுபோன்ற மாநாடுகள் நாடு முழுவதும் நடத்தப்படப் போகின்றன என்பது போன்ற பொய்த் தோற்றத்தைக் காட்டுவதற்காக.

அதைப்போல் நவீன தாராளவாதக் கொள்கைகளை நாட்டில் அறிமுகம் செய்த புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட போது அதற்கு முக்கியத்துவம் கொடுத்து எந்த இயக்கத்தையும் நடத்தாமல் அகில இந்திய மகளிர் மாநாட்டை பெங்களூரில் அக்கட்சி ஏற்பாடு செய்தது. ஏனெனில் பெண்களையும் மாணவிகளையும் பெரிய அளவில் அதிகச் சிரமமின்றித் திரட்டும் வாய்ப்பும், அவர்களை எளிதில் அணுக முடிந்த உயர்மத்தியதர வர்க்கப் பெண்களும் கர்நாடக மாநில அமைப்பில் இருந்தனர். கல்லூரிகளின் முதல்வர்களிடம் அனுமதி பெற்று ஓரளவு கூடுதல் எண்ணிக்கையில் அப்போது பெண்களை அணிதிரட்ட முடிந்த அந்த அமைப்பினால் அதன்பின் அவர்களை எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஈடுபடுத்த முடியவில்லை.

இவையனைத்தும் தங்கள் கட்சி ஒரு மிகப்பெரிய அமைப்பு என்று காட்டி அதன்மூலம் பாராளுமன்றவாதக் கட்சிகளின் பாணியில் மேலோட்டமான மக்கள் ஆதரவினைப் பெற வேண்டும் என்ற நோக்குடனேயே செய்யப்பட்டது. இப்படிப்பட்ட செயற்கையான வழிமுறைகள் மூலம் ஒரு சமுதாய மாற்றத்தைச் சாதிக்க விரும்பும் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் வளர முடியாது.

புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக பிற தொழிற்சங்க அமைப்புகளுடன் சேர்ந்து ஒருசில அடையாளபூர்வ போராட்டங்களைத் தவிர வேறெதுவும் செய்யாத அக்கட்சி அடுத்தபடியாகச் சிறிதும் கூச்சமின்றி உண்மைக்குப் புறம்பாகத் தனது யு.டி.யு.சி. (லெனின் சாரணி) தொழிற் சங்கத்தை இந்தியாவின் நான்காவது பெரிய தொழிற்சங்கம் என அறிவித்துக் கொள்ளவும் செய்தது. அதாவது எ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு - வைக் காட்டிலும் தொழிற்சங்க அரங்கில் தாங்கள் தான் பெரிய அமைப்பு என்று காட்ட முனைந்தது. ஒருமுறை கணக்கெடுப்பில் எ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு - யும் கலந்து கொள்ளாததை வைத்து தானே ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ் - க்கு அடுத்து நான்காவது பெரிய அமைப்பு என்று காட்ட முனைந்தது. விடுதலை பெற்றபின் உழைக்கும் வர்க்கத்தின் மீது மிகக் கொடுமையான தாக்குதலைக் கொண்டு வந்தது புதிய பொருளாதாரக் கொள்கையே. ஆனால் அதற்கு எதிராகக் கூட்டத்தில் கோவிந்தா போட்டதைத் தவிர அந்த இந்தியாவின் ‘நான்காவது பெரிய தொழிற்சங்கம்’ எதையும் செய்யவில்லை.

அதைப்போல் எஸ்.யு.சி.ஐ. நடத்தும் நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் கலந்து கொள்வோர் எண்ணிக்கையை யதார்த்தத்திற்குப் புறம்பாக மிகைப்படுத்திக் காட்டுவதில் அதற்கு நிகர் அதாகவே விளங்கியது. மேலும் ஏதாவதொரு இயக்கத்தில் தப்பித்தவறி அக்கட்சி பங்கேற்றால் அந்த இயக்கத்தை அக்கட்சியே நடத்தியது போன்ற ஒரு உண்மைக்குப் புறம்பான பிரச்சாரத்தைச் செய்வதும் அதன் வழக்கமாகிவிட்டது.

எடுத்துக்காட்டாக மேற்கு வங்கத்தில் ஏழை விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தி அன்னிய, உள்நாட்டு ஏகபோக முதலாளிகள் தொழிற்சாலைகள் தொடங்குவதற்காக வழங்க மேற்குவங்க அரசு சிங்கூர், நந்திகிராம் பகுதிகளில் எத்தனித்த போது அதனை எதிர்த்துத் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் ஒருமக்கள் இயக்கம் நடந்தது. அதில் சி.பி.ஐ(எம்.எல்), எஸ்.யு.சி.ஐ., சிறிய அளவிற்கு சி.டபிள்யு.பி. போன்ற பல அமைப்புகள் பங்கேற்றன. கண்ணும் கருத்தும் உள்ளோர் அனைவரும் அந்த இயக்கம் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் நடந்தது என்பதை அறிவர். ஆனால் எஸ்.யு.சி.ஐ. அவ்விசயத்தில் அவிழ்த்துவிட்ட பிரச்சாரமோ அந்த இயக்கத்தை அக்கட்சியே நடத்தியது; முதலாளித்துவப் பத்திரிக்கைகள் அதனை மூடிமறைத்துத் திரிணாமுல் போன்ற அமைப்புகளுக்கு முன்னுரிமை தருகின்றன என்பதாக இருந்தது.

மார்க்சிசம் ஒன்று மட்டுமே உண்மையை உயர்த்திப் பிடிக்கும் தத்துவம். ஆனால் கண்ணுக்கெதிரான உண்மைகளை இவ்வாறு அளவுக்கதிகமாக மிகைப்படுத்திக் கூறும் போக்கு எவ்வாறு ஒரு மார்க்சியக் குணாம்சம் ஆகமுடியும்?.

தலைவிரித்தாடும் தலைமைத்துதி

இவ்வாறு சிப்தாஷ் கோஷ் - க்குப் பின் ஏற்பட்ட எந்த வளர்ச்சிப் போக்கையும் கணக்கிலெடுத்துக் கொள்ளாது அவர் கூறிய அனைத்து விசயங்களும் இன்றுவரை மிகச் சரியானவையாகவே உள்ளன என்று காட்ட முயன்றதோடு அவர் அத்தனை உயர்ந்தவர் - அவரது வழிவந்த பின்னாள் தலைவர்களும் பெரிதும் உயர்ந்தவர்கள் என்ற தலைவர் துதி மனநிலை கட்சியின் கடைசி மட்டம்வரை பல்கிப்பரவ அக்கட்சி வழிவகுத்தது. அதற்குகந்த சூழ்நிலையை எவ்வாறு மாநிலங்களின் பொறுப்பாளர்களாக இருந்த மத்திய அமைப்பின் பிரதிநிதிகள் தங்களது தந்திரமான நடவடிக்கைகள் மூலம் நாசூக்காகச் செய்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சிப்தாஷ் கோஷ் கட்சியின் அத்தாரிட்டிக்கும் அத்தாரிட்டேரியனிஸத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்பதை சுட்டிக் காட்டியபோதிலும் அத்தாரிட்டேரியனிஸம் தலைதூக்காதிருப்பதற்கு அத்தியாவசியமான விமர்சன, சுயவிமர்சனப் போக்கினை அறவே வளரவிடாதிருந்த இச்சூழ்நிலை உள்ளடக்கத்தில் ஒரு அதிகாரவாதத் தலைமை கட்சியில் ஆழமாக வேரூன்ற வழிவகுத்தது. அதற்கு எப்போதுமே அடிபணியத் தயாராக இருக்கும் ஒரு குருட்டுத்தனமான மனநிலை கட்சி அணியினரிடையே திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. ஒருவகை மதவாதத்தன்மை வாய்ந்த பிரச்சாரம் மூலம் அது செய்யப்பட்டது.

எந்திரகதியிலான சிந்தனை

மாற்றங்கள் எதையும் அங்கீகரிக்காத, கணக்கில் கொள்ளாத, அவற்றின் அடிப்படையில் சிந்தனையைச் செறிவு செய்யாத நாம் மேலே விவரித்த போக்கு ஒரு எந்திர கதியிலான மனநிலையை அனைத்துத் தொண்டர்களிடமும் உருவாக்கியது. எந்தவொரு கேள்வியாக இருந்தாலும் அதற்கான தயார் நிலையில் வைத்திருக்கப்படும் பதில்கள் தலைவர்களிடமிருந்து உடனே வெளிவரும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.

யாரேனும் பகுப்பாய்வு செய்து தலைமையின் கருத்துக்கு மாறான கருத்தினை முன்வைத்தால் அவர் முன்வைக்கும் கருத்தின் தகுதியை வைத்து அதனைப் பார்ப்பதை விடுத்து அவர் ஏன் இவ்வாறெல்லாம் கருத்துக்கள் வைக்கிறார் என்று அவருக்கு எதிரான மனநிலையை நாசூக்காக உருவாக்கும் போக்கு எங்கும் பரவலாயிற்று. தகுதிக் குறைவான தலைமை தன்னை தகுதிமிக்க தலைமை என்று நிலைநாட்ட முயலும் போது ஏற்படும் அத்தனை எதிர்மறைப் போக்குகளும் கட்சிக்குள் தலைதூக்கின.

இப்படிப்பட்ட போக்கின் காரணமாகக் கட்சியில் புதிதாக உருவான சிந்தனை மற்றும் செயல்திறன் மிக்க பல புதிய தலைவர்களை அமைப்பால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. தோழர் கியான் சிங், தோழர் என்.ஆர்.சிங், தோழர் ஜேம்ஸ் ஜோசப் போன்ற கட்சியின் பிரகாசமான எதிர்காலமாக விளங்கிய தோழர்கள் கட்சியைவிட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. ஒரு எந்திரத்தால் உயிரோட்டமுள்ள எதனையும் உள்வாங்கிக் கொள்ள முடியாது. அதனால் உயிரற்ற நட்டுகள் போல்ட்கள் போன்றவற்றையே உள்வாங்கிக் கொள்ள முடியும் அத்தகைய நிலையே எந்திர கதியிலான சிந்தனைப் போக்கு கட்சியில் தலைதூக்கிய நிலையில் கட்சியில் நிலவியது.

ஒருபுறம் உயர்மத்தியதர வர்க்கத்திலிருந்து கட்சிக்கு வரக்கூடிய தோழர்களுக்கு அதீத முக்கியத்துவம் தந்து தாஜா செய்து வைத்திருக்கும் போக்கு கடைப்பிடிக்கப்பட்டது. அவர்களைக் கட்சியில் வைத்திருக்க அறிவு ஜீவித்தன்மை வாய்ந்த வாதங்களே போதுமானவையாயிருந்தன. ஆனால் அதைப்போல் கீழ்த்தட்டு மத்தியதர வர்க்க, உழைக்கும் வர்க்கப் பிரிவினரிடமிருந்து வரக்கூடிய தோழர்களை வைத்திருக்க முடியாது. அவர்களை எழுச்சி மனநிலையுடன் வைத்திருக்க வேண்டுமென்றால் அதற்குத் தேவைப்படக் கூடியது உழைக்கும் மக்கள் இயக்கங்களே. அதனைத் தட்டியயழுப்ப ஒரு ஈடுபாடும் ஒரு உழைக்கும் வர்க்க உள்ளுணர்வும் கொண்ட தலைமையும், அணுகுமுறையும் அவசியம்.

ஆனால் தலைமைப் பொறுப்பு மேற்கூறிய பண்புகள் இல்லாத உயர்மத்தியதர வர்க்க வகுப்பிலிருந்து வருபவர்களிடமே இருந்த சூழ்நிலையில் மக்கள் இயக்கங்களை அக்கட்சியினால் கட்டவும் முடியவில்லை; அந்த மக்கள் இயக்கப் பெருக்கங்கள் மூலம் முழுநேர ஊழியர்களை உருவாக்கவும் முடியவில்லை.

சூழ்நிலை உருவாக்கிய முழுநேர ஊழியர்கள்

எனவே முழுநேர ஊழியர்களாக வந்த மிகப் பெரும்பாலோர் புரட்சித்தீ அவர்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிந்ததனால் வந்தவர்களல்ல. பல்வேறு சூழ்நிலைகளில் கட்சி அலுவலகத்தில் தங்க நேர்ந்தவர்களில் பலர் முழுநேர ஊழியர் ஆனார்கள். இவ்வாறு மக்கள் இயக்கங்களுக்கு முன்னுரிமை தரப்படாத சூழ்நிலை முழுநேர ஊழியர்களின் கட்சிப்பணி முழுமையுமே நிதி வசூல், பத்திரிக்கை விற்பனை, ஆண்டுக்கு இரண்டு கட்டாயமான பொது நிகழ்ச்சிகள், பொது நிதி நிலை அறிக்கை, ரயில்வே நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் வேளைகளில் அதற்கு எதிரான இரண்டு ஆர்ப்பாட்டங்கள் இவையே கட்சியின் நிரந்தர மற்றும் வழக்கமான செயல்பாடுகளாக ஆகிவிட்டன. இதைப் போன்ற செக்குமாட்டுத் தனமான போக்கினால் ஒரு சலிப்புணர்வு தவிர்க்க முடியாமல் அவர்களிடம் தோன்றியது.

உழைக்கும் வர்க்க இயக்கத்தில் புடம் போடப்பட்டு அதில் அடிபட்ட அனுபவங்களுடன் பொது வாழ்க்கையில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் இவற்றையயல்லாம் அறியாத நிலையில் இவ்வாறு முழுநேர ஊழியர்களாக ஆக்கப்பட்ட சிலர் முழுநேர ஊழியர்கள் குறித்துச் செய்யப்பட்ட பிரச்சாரத்திற்குந்த வகையில் நடந்து கொள்ளவும் முடியாமல் தனிப்பட்ட வாழ்க்கைச் சபலத்தையும் தூக்கியயறியவும் முடியாமல் மனநிலை தடுமாறியும் போயினர்.

தலைமை குறித்து எவ்வாறெல்லாம் பொய்த் தோற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன என்றால் சில தோழர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் மூடப்படும் நிலையிலிருக்கும் போது அதிலிருந்து வெளியேறினர். அவர்கள் மட்டுமல்ல புத்திசாலித்தனமான சாதாரணத் தொழிலாளர்கள் பலரும் அவர்களுடன் வெளியேறினர். காரணம் ஆலை அதாகவே மூடப்பட்டுவிட்டால் தங்களது ஓய்வுகாலப் பலன்களைத் தாங்கள் பெற முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டதே. ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளியேறிய தோழர்கள் கட்சிக்காக வேலையைத் தூக்கியயறிந்துவிட்டு வந்தவர்கள் என்று மக்கள் மத்தியிலும், அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் உயர்த்திப் பிடிக்கப்பட்டனர். இதுபோன்ற போக்குகளினால் முழுநேர ஊழியர்களே இல்லாத பகுதிகளில் ஓரளவேணும் மக்கள் இயக்கங்கள் உருவானபோது முழுநேர ஊழியர்கள் கூடுதலாக உள்ள பகுதிகளில் மக்கள் இயக்கங்களே உருவாகாத ஒரு விநோத நிலையும் நிலவியது.

புரட்சிகரத் தன்னடக்கமற்ற போக்கு

பொதுவாக ஒரு புரட்சியாளனின் ஒரு அடிப்படைக் குணாம்சம் அவன் தன்னைப்பற்றி அதிகம் பேசமாட்டான். தன்னைப் பற்றியே தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருப்பவர்களை சாதாரணமாக மக்களுக்குப் பிடிப்பதில்லை. அவன் பேசாமலேயே அவன் ஆற்றும் செயல்கள் அவனைப்பற்றி மற்றவர்களைப் பேச வைக்க வேண்டும். அதுவே உண்மையான புரட்சியாளர் விசயத்தில் நாம் எதிர்பார்க்கும் குணாம்சம். அதைப்போலவே ஒரு புரட்சிகரக் கட்சிக்கும் தானாகவே அதைப்பற்றிப் பெருமை பாராட்டிக் கொள்ளும் அவலநிலை உருவாகிவிடக் கூடாது. அது முன்னெடுக்கும் மக்கள் இயக்கங்கள் அப்போது அதன் தலைவர்களும் தொண்டர்களும் பிரதிபலிக்கும் மனோதிடம், அர்ப்பணிப்பு, உயர்ந்த கலாச்சாரம் ஆகியவற்றை வைத்து மக்கள் அக்கட்சியைப் பற்றி பேசவேண்டும். ஆனால் தற்போதைய எஸ்.யு.சி.ஐ. கட்சியின் போக்கு அப்படிப்பட்டதல்ல. காலாவதியாகிப் போன மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகள் அவற்றின் காலாவதியாகிப் போன தன்மையை மூடிமறைக்க அவற்றைப் பற்றியே இடைவிடாமல் பேசிக் கொண்டிருக்கும் போக்கினைக் கொண்டவையாக இருக்கும். அப்படிப்பட்ட கட்டாயம் அவ்வமைப்புகளுக்கு உள்ளது. அதையயாத்த விதத்தில் அதைப்பற்றி அதனை உன்னதப்படுத்திப் பேசுவது எஸ்.யு.சி.ஐ - யின் ஒரு முக்கியக்கட்சிப் பணியாகிவிட்டது. புரட்சிகரத் தன்னடக்கம் மருந்திற்கும் இல்லாததாக அக்கட்சி ஆகிவிட்டது.

இவ்வாறு இந்தியாவில் செயல்பட்ட அனைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்தும் வேறுபட்டு முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சி என்ற அடிப்படை அரசியல் வழியைத் தர்க்கபூர்வ வாதங்களுடன் முன்வைத்து ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, பிற கட்சிகளுடன் சில சமயங்களில் உடன்பாடு வைத்து போட்டியிடும் போதும் அமைச்சரவைகளில் பங்கேற்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய நிலைபாடுகள் என்ன என்பது குறித்து பல வழங்கல்களைச் செய்தது மட்டுமல்ல அவற்றை நடைமுறையில் கடைப்பிடிக்கவும் செய்து, ஏகாதிபத்திய எதிர்ப்பு எவ்வாறு இந்திய முதலாளித்துவத்தை மூடிமறைத்துக் காக்கப் பயன்படுகிறது என்பதை அம்பலப்படுத்தி, அத்தாரிட்டி மற்றும் அத்தாரிட்டேரியனிஸம் ஆகியவை குறித்த மார்க்சிய விஞ்ஞான அடிப்படையிலான கருத்துக்களை முன்வைத்து தனித்தன்மையுடன் சிப்தாஷ் கோ ஷி னால் வளர்க்கப்பட்ட எஸ்.யு.சி.ஐ. கட்சி இன்று அப்படிப்பட்ட தனித்தன்மைகள் எதுவுமில்லாமல் பத்தோடு பதினொன்று என்ற ரீதியில் பரிதாபகரமாக நிற்கிறது.

ஆம். இன்று அவர் வளர்த்த கட்சியே முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிக் கண்ணோட்டத்தில் கேள்விக்குறியை முன்வைக்கும் விதத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாடு நடத்துகிறது. எப்படியாகிலும் வெற்றிபெற்று அதனைக்காட்டி வளர்ச்சி குறித்த ஒரு பிரமையை ஏற்படுத்தி தொண்டர்களைத் தக்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த வகையான குறைந்தபட்சத் திட்டமும் இன்றி தேர்தல் உடன்பாடுகளைத் திரிணாமுல் காங்கிரஸ், இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற அமைப்புகளோடு செய்துகொள்கிறது. அதனால் வெற்றிபெற்ற எஸ்.யு.சி.ஐ - ன் நாடாளுமன்ற உறுப்பினர் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் என அக்கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜியினால் குறிப்பிடப்படுகிறார்.

அடைப்புக்குறி கம்யூனிஸம்

தோழர் சிப்தாஷ் கோஷே அவருடைய காலகட்டத்தில் கட்சிக் காங்கிரஸ் நடத்தவில்லை. காரணம் அதற்குத் தேவையான வலிமை மட்டுமல்ல. சில வெளிப்படையாக அத்தனை உயர்ந்த தலைவர்கள் போல் காட்சியளிக்காத ஆனால் உண்மையில் உயர்ந்த தலைவர்களை அடையாளம் கண்டுகொள்ளும் அளவிற்குக் கட்சி உறுப்பினர்களின் உணர்வு மட்டம் இல்லை என்பதையும் அதற்கான காரணமாக அவர் கூறினார். அதுபோன்ற நுணுக்கமான ஆனால் சரியான காரணங்களால் கட்சிக் காங்கிரஸ் நடத்தாத நிலையில் தாங்கள் வளர்ந்துவிட்டோம் என்று காட்டுவதற்காக ஒன்றல்ல இரண்டு கட்சிக் காங்கிரஸ்களை நடத்தி இரண்டாவது காங்கிரஸில் தான் உண்மையான கம்யூனிஸ்ட் தானா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் எஸ்.யு.சி.ஐ(கம்யூனிஸ்ட்) என்று பெயர் மாற்றத்தையும் அக்கட்சி செய்து கொண்டுள்ளது.

வேசதாரித்தனமும், பாராளுமன்றவாதமும்

அனைத்துக் கலாச்சாரச் சீரழிவுகளிலும் தலையாய சீரழிவு வேசதாரித்தனம். அது எத்தனை மோசமான கலாச்சார சீரழிவுப் போக்குகளையும் நியாயப்படுத்த வல்லது. பொய்யாகப் பல சமயங்களில் குறுகிய காலத்திற்கு அவற்றை நிறுவவும் வல்லது.

உண்மையான உழைக்கும் வர்க்கக் கலாச்சாரத்தைக் கொண்ட புரட்சியையே தொழிலாகக் கொண்டவனின் வாழ்க்கை நிலை எந்தச் சூழ்நிலையிலும் ஒரு சராசரித் தொழிலாளியின் வாழ்க்கை நிலையைக் காட்டிலும் மேம்பட்டதாக இருக்கக் கூடாது என்பதே உயர்ந்த உழைக்கும் வர்க்கக் கலாச்சாரத்தைத் தோழர்கள் கைக்கொள்ள தேவைப்படும் முன்நிபந்தனை.

அத்தகைய மனநிலையோடு உழைக்கும் மக்களை அணிதிரட்டும் உறுதி கொண்டவர்களாக எஸ்.யு.சி.ஐ. கட்சி பல மாநிலங்களில் தங்களது அமைப்பின் முழுநேர ஊழியர்களாகக் காட்டுபவர்கள் இருந்தால் அவர்களைப் பராமரிக்க ஆகும் செலவுகளை அவர்கள் உருவாக்கும் வெகுஜன அமைப்புகள் மூலமே அதாவது பொதுவசூல் இன்றியே சமாளிக்க முடியும். பொதுவசூல் பொதுவாக மக்கள் இயக்கத்திற்காகத்தான் பிரதானமாக இருக்க வேண்டும். ஆனால் எஸ்.யு.சி.ஐ - ன் நிலைமையோ மாதம்தோறும் வசூல் வருடத்திற்கு இரண்டு இயக்கம், இரண்டு நிகழ்ச்சிகள் அவற்றிற்கும் தனிவசூல் என்ற வகையிலேயே நடைபெறுகிறது. ஆனால் நிதி வசூலின் முன்வைக்கப்படும் வாதம் நாங்கள் மக்கள் இயக்கம் கட்டுகிறோம் என்பதாகும் நாம் ஏற்கனவே பார்த்தவாறு மக்கள் இயக்கம் கட்டத் தேவையான உழைக்கும் வர்க்க மனநிலையும், உந்துதலும் தலைமைப் பொறுப்பிற்கு நியமிக்கப்படும் மத்திய தரவர்க்கத் தலைமையிடம் இருப்பதில்லை. உழைக்கும் வர்க்கம் குறித்துப் பலமடங்கு பேச்சுக்களுக்கும் அடிப்படையில் அப்பட்டமான மத்திய தரவர்க்க வாழ்க்கைக்கும் பழகிப்போன அக்கட்சியின் தலைமையிடம் எதையயடுத்தாலும் தலைதூக்குவது மிதமிஞ்சிய எச்சரிக்கை உணர்வே. அதனால் இயக்கம் எடுக்கும் மனநிலை உள்ளிருந்தே முடமாக்கப்படும் அவலநிலையே நிலவுகிறது.

ஒரு கட்சியில் தொடர்ச்சியான இயக்க மனநிலை பராமரிக்கப் படுவதற்கு இன்றியமையாத் தேவை அது அதன் வெகுஜன அமைப்புகள் அனைத்திலும் கூடுதல் முக்கியத்துவத்தை அதன் தொழிற்சங்க அரங்கிற்குக் கொடுத்துச் செயல்படுவதாகும். ஆனால் சென்னை போன்ற மிகப்பெரிய தொழில் நகரங்களில் கூட தொழிற்சங்க அமைப்புகள் எதையுமே பதிவு செய்யாமல் இக்கட்சியினால் செயல்பட முடிகிறது. இது எவ்வளவு தூரம் இயக்க மனநிலை அற்றதாக இக்கட்சி ஆகிவிட்டது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். தொழிற்சங்கங்களுக்கு முன்னுரிமை தராதிருப்பதற்கான உண்மைக் காரணம் மிதமிஞ்சிய எச்சரிக்கை மற்றும் தற்காப்பு உணர்வுகளே.

தொழிற்சங்க அரங்கில் மட்டுமல்ல மாணவர் அரங்கிலும் இக்கட்சியின் போக்கு இத்தகையதே. தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ஒழிப்பு போன்ற நடவடிக்கைகள் அரசால் கொண்டுவரப்படும் போது அதில் தங்கள் நிலை என்ன என்பதை வெளிப்படையாகக் கூறக் கூட இக்கட்சிக்கு ஏற்பட்டது ஒருவகை அச்சமே. காரணம் அதனால் அரசின் பொய்ப் பிரச்சாரத்தில் மயங்கியுள்ள கிராமப்புற மக்களின் எதிர்ப்பினைச் சந்திக்க வேண்டிவருமோ என்ற எண்ணமே அது சரியான நிலை எடுப்பதைத் தடுத்தது. இலங்கைத் தமிழர் பிரச்னை கொழுந்து விட்டெரிந்த நிலையிலும் இக்கட்சி அந்த இனப் பிரச்னையில் தனது நிலை என்ன என்பதை மேற்கூறியது போன்ற காரணங்களுக்காகவே கூற முன்வரவில்லை.

அதைப்போல் தஸ்லிமா நஸ் ரீன் , தமிழகத்தில் நடிகை குஷ்பு போன்றவர்களுக்கு எதிரான பாசிஸத்தன்மை வாய்ந்த தாக்குதல்கள் மதவாத, வெறிவாத அமைப்புகளால் தட்டி யெழுப்பப்பட்ட வேளையில் அதற்கு எதிராகக் குரல் கொடுக்காத நிலைக்குக் காரணம் எங்கே மதவாத, இன உணர்வு கொண்ட மக்களின் ஆதரவைத் தாங்கள் இழக்க நேருமோ என்ற அச்சமே. கம்யூனிஸ்ட்களுக்கும், பிற அமைப்புகளுக்கும் இருக்க வேண்டிய ஒரு முக்கிய வேறுபாடே கம்யூனிஸ்ட்கள் மற்ற சீர்திருத்தவாதப் பாராளுமன்றவாத அமைப்புகளைப் போலல்லாது, எந்தச் சூழ்நிலையிலும் உண்மையை உயர்த்திப் பிடிக்கக் கூடியவர்கள் என்பதே.

சரியில்லாத கருத்துக்களின் பால் புரிதலில்லாமையின் காரணமாக மக்களின் ஆதரவு செல்கிறதென்றால் கூட, அதனைக் களையும் விதத்தில் கருத்துப் போராட்டம் நடத்தக் கம்யூனிஸ்ட்கள் தயங்கக் கூடாது. இந்த போராட்ட அரசியலின் விதியினைக் கடைப்பிடிக்கத் திராணியற்றதாக இக்கட்சி ஆகிவிட்டது. அதாவது மக்களிடையே நிலவும் தவறான கருத்துக்களோடு சமரசம் செய்து கொண்டேனும் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற பாராளுமன்றவாதம், இக்கட்சியை அப்படியே பற்றிக் கொண்டுவிட்டது. அதாவது பல கம்யூனிஸ்ட் கட்சிகளில் பாராளுமன்ற வாதம் அவை சட்ட மற்றும் நாடாளுமன்றங்களில் பல இடங்களை வென்ற நிலையில் அவற்றைத் தக்க வைக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் தோன்றியது. ஆனால் இக்கட்சியிலோ சட்ட, நாடாளுமன்றங்களில், பார்வையில் படும் வண்ணம் தடம் பதிக்காத நிலையிலேயே பாராளுமன்ற வாதம் தோன்றி நிலை பெற்றுள்ளது.

மடாலயங்கள், ஆசிரமங்கள் பாணியில் கம்யூன்கள்

இவ்வாறு சிப்தாஷ் கோஷ் காட்டிய வழிமுறைகள் அனைத்திலிருந்தும் ஏறக்குறையத் தடம் புரண்டுவிட்ட இக்கட்சி இப்போதும் தான் மட்டுமே கம்யூன், சென்டர் கண்ணோட்டங்களை வைத்திருப்பதாகப் பெருமை பாராட்டிக் கொள்கிறது. ஆனால் கம்யூன் வாழ்க்கையில் இருந்த மேற்குவங்க மாநிலக் கமிட்டியைச் சேர்ந்த ஒரு தோழர் அக்கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் மீது பொதுமக்கள், தொண்டர்களின் பார்வையைத் திருப்ப வேறு வழியே இல்லை என்ற நிலையில் முன்கூட்டியே தனது தற்கொலைக்கான காரணங்கள் அடங்கிய கடிதத்தைப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவிட்டு அது பத்திரிக்கைகளின் கைகளில் கிடைத்த பிறகு தற்கொலை செய்து கொண்டார். அதுவே அக்கட்சி பராமரிக்கும் கம்யூன்களின் இன்றைய நிலை.

மத்திய அளவிலிருக்கும் கம்யூனின் நிலையே இதுவென்றால் மாநிலங்களில் சென்டர் என்ற பெயரில் இருக்கும் முழுநேர ஊழியர்களின் வசிப்பிடங்களின் நிலை என்னவென்பது யாரும் புரிந்துகொள்ள முடியாததல்ல.

சென்டர்களும் கட்சி அலுவலகங்களும் போராட்ட உணர்வு பீறிட்டுப் பிரகாசமாக வெளியேறும் கதிரியக்க மையங்களாக இருக்க வேண்டியவை. ஆனால் அவை உள்ளம் திறந்த விவாதங்கள் கூட நடைபெறாமல் போலியாகவும் செயற்கையாகவும் பேசிக் காலம் தள்ளும் உறங்கி வழியும் அமைப்புகளாக வெளிப்படையாகவே ஆகிவிட்டன. அந்நிலையில் மடாலயங்கள், ஆசிரமங்கள் போன்ற அமைப்புகளில் தலைதூக்கும் கோளாறுகள் அனைத்தும் தவிர்க்க முடியாமல் இந்த அமைப்பின் அலுவலகங்களிலும், கட்சி மையங்களிலும் தலைதூக்கத் தானே செய்யும்.

இதையயல்லாம் நாம் கூறுவது கம்யூன் முறையோ, சென்டர் முறையோ அடிப்படையில் தவறாக ஆகிவிட்டது என்று காட்டுவதற்காக அல்ல. அதை இனிமேல் யாராலும் கடைப்பிடிக்க முடியாது என்று காட்டுவதும் நமது நோக்கமல்ல. தோழர் சிப்தாஷ் கோஷ் கொண்டுவந்த அக்கண்ணோட்டங்கள் மார்க்சியக் கண்ணோட்டத்தின் மைல் கற்கள். அவற்றைக் கடைப்பிடிக்கும் ஊழியர்களை உருவாக்க ஜீவனுள்ள கட்சி வாழ்க்கை உத்திரவாதம் செய்யப்பட வேண்டும். அதற்கான முன்தேவை மார்க்சிய விஞ்ஞானம் மாறிவரும் சூழ்நிலைகளுக்கெல்லாம் ஏற்ற விதத்திலெல்லாம் செழுமைப்படுத்தப் பட வேண்டும் என்பதே. அது நடைபெறாத நிலையில் அதனை நடத்துவதற்குத் திராணியற்றதாக தலைமை ஆகிவிட்டால் ஜீவனுள்ள வாழ்க்கையைக் கட்சிக்குள் பராமரிக்க முடியாது.

சிப்தாஷ் கோஷ் அவர் வாழ்நாளில் செய்து முடித்ததே கட்சியின் காலங்காலமாக இருக்கப் போகும் கட்சியை வழிநடத்தப் போகும் கண்ணோட்டம் என்ற மனநிலையில் தலைமை இருந்தால் தற்போது சோசலிச முகாம் என்ற ஒன்றே இல்லாமல் போய், உலகமயத்தின் விளைவாக தேசியவாதக் கண்ணோட்டங்கள் அனைத்தும் காலாவதியாகிப் போயுள்ள சூழ்நிலையில் தர்க்கபூர்வ வாதங்கள் மூலம் சிப்தாஷ் கோஷ் கூறிய கண்ணோட்டங்கள் அனைத்தையும் எவ்விதச் செழுமைப் படுத்தலும் இன்றிப் பொருத்திக் காட்டும் வேலையை மட்டும் செய்து வார்த்தையிலும் உணர்விலும் அவையே சரியானவை சமூக மாற்றத்திற்கு வழிகாட்ட வல்லவை என்று யாராலும் நிலைநாட்ட முடியாது.

அது மக்கள் மனதில் இருக்கும் அனைத்துக் கேள்விகளுக்குமான பதிலினைக் கொண்டதாக இராது. எனவே தத்துவார்த்த ஆயுதம் தரித்தவர்களாக கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் இல்லாமற் போய்விட்டால் கட்சிப் பணிகளையும், இயக்கங்களையும் தன்னம்பிக்கையுடனும் ஆக்கபூர்வ மனநிலையுடனும் அவர்களால் ஆற்ற முடியாது. அத்தகைய செயலூக்கமும், இயக்க வளர்ச்சியுமே கட்சிக்குள் ஜீவனுள்ள போராட்டத்தை உருவாக்கி வளர்க்க முடியும். அப்படிப்பட்டவர்களைக் கொண்டதாகக் கம்யூன்களும், சென்டர்களும் இருக்கும் போதே அவை உழைக்கும் மக்களைக் கவர்வதாக ஆகின்றன. இல்லாவிடில் அவை உணவு விடுதிகள் போலவும், கட்சி அலுவலகங்கள் முதலாளித்துவ நிறுவனங்களின் அலுவலகங்கள் போலவும் அதிகார வர்க்கத் தலைமைக்கு அடிபணிபவையாகத் தவிர்க்க முடியாமல் ஆகிவிடுகின்றன.

அத்தகைய நிலை உருவாகும் சூழ்நிலைகளில் நல்ல தோழர்களின் வீடுகளைக் காட்டிலும் கூட ஜீவனற்றவையாக அந்தக் கம்யூன்களும், சென்டர்களும் மாறிவிடும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. அதிகாரம் என்றால் குற்றச்சாட்டுக் குறிப்பாணைக் காகிதங்களையும், வேலைநீக்க உத்தரவுப் படிவங்களையும் கொண்டவையாக இருக்க வேண்டும் என்பதில்லை. விமர்சிக்கும் உரிமை பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் நாசூக்காகப் பறிக்கப்பட்டாலும் அங்கு உருவாவது அதிகார வர்க்கப் போக்கே.

கட்சி மையங்கள் முறை சிப்தாஷ் கோஷால் காட்டப்பட்டதல்ல. அது அவருக்குப்பின் வந்த தலைவர்களின் மூளையில் உதித்த சிந்தனை. சிப்தாஷ் கோஷ் உருவாக்கிய கம்யூன் முறை உண்மையிலேயே அதை நிரப்பும் ஒவ்வொரு தலைவரும் அவர் காலத்தில் இருந்தவர்களைப் போல் தரமிக்கவர்களாக இருந்தால் அது ஒரு கட்சியமைப்பின் உன்னத வடிவமே. ஆனால் அந்த மனநிலை எட்டப்பட்டதற்குப் பின்பே ஒருவர் கம்யூனின் உறுப்பினராக ஆகமுடியும் என்ற நிலை அசலும் நகலும் எந்தவகைப் போலித்தனமும் இன்றிப் பராமரிக்கப்பட வேண்டும். அப்போது தான் அவை உயர்ந்தவையாக விளங்கும்.

கம்யூன் கண்ணோட்டத்தில் சமரசம்

அந்த நிலை இல்லாத நிலையில் இன்று நடப்பதென்ன? தனிப்பட்ட குடும்பமாக இருப்பது ஒரு உயர்ந்த தலைவருக்கு இலக்கணமல்ல என்பது கட்சியின் கண்ணோட்டமாக இருப்பதால் கம்யூனிஸ சிந்தனையின் மீது அனுதாபமே இல்லாத ஒரு தலைவரது மனைவி கூட கம்யூனில் உறுப்பினராக்கப் படுகிறார். அதற்காக அவர் கட்சி மாநிலக்குழுவின் உறுப்பினராக்கவும் படுகிறார். இதுபோன்ற சீரழிவுப் போக்குகள் ஏற்பட்டுவிட்டால் அது கம்யூனாக அதன் உண்மை அர்த்தத்தில் ஒருபோதும் விளங்க முடியாது.

சிப்தாஷ் கோஷ் முன்வைத்த கம்யூன் மனநிலை கொண்ட ஒருவர் கூட உருவாகாத நிலையிலும் கூட கம்யூனிஸ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு ஒன்று செயல்பட முடியும். ஆனால் அதன் இலக்கு அப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களை உருவாக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களை உருவாக்கவல்ல அமைப்பே சிப்தாஷ் கோஷ் உருவாக்க விரும்பிய கம்யூனிஸ்ட் அமைப்பு.

இது அனைவரும் கூறக்கூடிய ஒன்றுதானே? அதனை எப்படிச் செய்வது? என்ற கேள்விகள் எழலாம். மக்கள் இயக்கங்களுக்கான வாய்ப்பு வர்க்கங்களால் பிளவுபட்ட சமூகத்தில் எப்போதும் இருக்கவே செய்கிறது. அதனை மையமாகக் கொண்டு வெகுஜன, உழைக்கும் மக்கள் இயக்கங்களை நடத்தினால் அந்தப் பின்னணியில் நிச்சயமாகத் தனிச்சொத்து மனநிலை படிப்படியாக அகன்று தன்வயப்பட்ட சிந்தனை ஒழிந்து சமூக சிந்தனை அதாவது சமூகத்தை ஆளத்தகுதியுள்ள ஓரே வர்க்கமான உழைக்கும் வர்க்கச் சிந்தனையே தனது ஒட்டுமொத்தச் சிந்தனை என்ற தரத்தை எட்டிய தோழர்கள் நிச்சயம் உருவாவார்கள். அப்படிப்பட்ட தோழர்களைக் கொண்டு கட்சியில் ஜீவனுள்ள வாழ்க்கைமுறை மேலே விவரிக்கப்பட்ட வழி முறைகளின்படி பராமரிக்கப்படவும் முடியும். அப்போதே உண்மையான கம்யூன்கள் பரிணமிக்கின்றன.

வேசதாரித்தனத்துடன் அத்தகைய பலரைத் தாங்கள் உருவாக்கியிருப்பதாகப் பொய்யாகப் பெருமையடித்துக் கொள்வதைக் காட்டிலும் அப்படி யாரையும் தாங்கள் இதுவரை உருவாக்கவில்லை. ஆனால் அவர்களை உருவாக்கும் இயக்கப் பாதையில் உறுதியாகத் தடம் பதித்திருக்கிறோம்; கட்சியின் சிந்தனையை வளர்ந்துவரும் சூழ்நிலைகளுக்கேற்ற விதத்தில் செழுமைப் படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று புரட்சிகரத் தன்னடக்கத்துடனும், நேர்மையுடனும் கூற முடிந்த அமைப்பாக ஒரு அமைப்பு வளர்ந்தால் அதுவே சிப்தாஷ் கோஷின் வழியையும் எடுத்துக்கொண்டு வளரும் உண்மையான கம்யூனிஸ்ட் அமைப்பாக, அடைப்புக் குறிக்குள் கம்யூனிஸ்ட் என்று போட்டுக்கொள்ளும் அவலநிலையற்ற அமைப்பாகத் திகழும்.