உலகத்தமிழ் செம்மொழி மாநாடு  வரும் ஜுன் 23 முதல் 27 முடிய ஐந்து நாள்கள் கோவை மாநகரில் கோலாகலமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன. அதே வேளை இம்மாநாட் டின் நோக்கம் குறித்து  ஆங்காங்கே பரவலாக பல விமர்சனங் களும் எழுந் துள்ளன.

இந்திய, தமிழக அரசுகளின் துணையோடு சிங்களப் பேரினவாத இலங்கை அரசு  தமிழீழ விடுதலைப் போராளிகள் மீதும்  அப்பபாவித் தமிழீழ மக்கள் மீதும்  கடந்த ஆண்டு மே 17இல் ஈவு இரக்கமற்ற கொடுந் தாக்குதல் நடத்தி எண்ணற்ற உயிர்களைக் கொன்று குவித்த குரூரச் செயல்கள் தாய்த் தமிழக மக்களின் நெஞ்சில் ஆறாத ரணமாக வருத்த இம் மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் அக்காயங்களுக்கு ஒத்தடம் கொடுக்கவும் கூடவே ஒப்பு நோக்கில் கொங்கு மண்ட லத்தில் பலவீனமா யிருக்கும் கட்சியைப் பலப்படுத்தவுமான நோக்கிலேயே இம் மாநாடு அறிவிக்கப் பட்டிருப்பதாக தமி ழின உணர்வாளர்கள் மற்றும் மனித நேய ஆர்வலர்கள் தெரிவித்து வருகின் றனர்.

இந்நிலையில் எல்லோரும் சொல்வது போல்  இதையும் ஒரு கோலாக லமான கொண்டாட்டம் போல் ஆக்கி, மீண்டும் மீண்டும் தமிழுக்கும் தமிழர் களுக்கும் துரோகம், வஞ்சனைகள் செய்யாமல் உண்மை யாகவே தமிழக முதல்வர் தாய்த் தமிழுக்கு ஏதேனும் செய்ய விரும்பினால்  அதை எளிமையாக நிறைவேற்றும் நோக்கில் மிக முக்கியமான மூன்றே மூன்று கோரிக்கைகள்  மட்டும்  முதல்வரின் பார்வைக்கு முன் வைக்கப் படுகின்றன..

எந்த ஒரு மொழியும் வெற்று ஆரவாரக் கூச்சல்களால், படாடோபமான அலங்கார வார்த்தைகளால் வளாந்து விடாது, வாழ்ந்து விடாது என்பது வரலாறு கண்ட உண்மை. ஒரு மொழி வாழ வேண்டும் என்றால் அம்மொழி பேசும் இனம் வாழ வேண்டும்.  அதே போல  அந்த இனம் வாழ வேண்டும் என்றால் அந்த இனம் பேசும் மொழி வாழ வேண்டும். இவ்விரண்டும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை, ஒன்றின் மீது ஒன்று எதிர்வினை புரிபவை என்பது அறிவியல் கோட்பாடு. எனவே தமிழ் வாழ தமிழினம் வாழ வேண்டும், தமிழினம் வாழ தமிழ் வாழ வேண்டும் என்பது கண்கூடு

தமிழ் வாழவேன்டும்  என் றால் அது தமிழர்களின் வாழ்வியல் மொழியாக ஆக வேண்டும். அதாவது அன்னைத் தமிழை அரியணை ஏற்றுவோம், தில்லியிலும் அதை ஆட்சி மொழியாக்குவோம் என சும்மா வெறு மனே வெத்து வேட்டு சவடால் முழக் கங்களை எழுப்பிக் கொண்டிரு க்கா மல் தமிழைத் தமிழர்களின் வாழ்வியல் மொழியாக,  அதாவது தமிழை தமிழர் களின் சமூக, பொருளியல், பண் பாட்டு மொழியாக ஆக்கி, தமிழால் தான தமிழர்கள் வாழமுடியும் என்கிற நிலையை  ஏற்படுத்த வேண்டும்.  இதற்கு அரசு உடனடியாகச் செய்ய வேண்டுவன:

1. மழலையர் கல்வி முதல் பல்கலை மற்றும் ஆய்வுக் கல்வி வரை அனைத்துக் கல்வியையும் தமிழி லேயே தர அரசு எல்லா நிலைகளிலும்  தமிழை  முதலில் கல்வி மொழியாக்க வேண்டும். தற்போது பத்தாம், பன்னி ரண்டாம் வகுப்பு வரை மட்டுமே தமிழ்வழிக் கல்வி உள்ளது அதற்கு மேல் பெரும்பாலான எல்லா கல்வி யும் ஆங்கிலத்திலேயே உள்ளன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இத்து டன் அனைத்துக் கல்வியையும் தமிழி லேயே தரும் அதே வேளை அவரவர் விரும்பும் பிற மொழிகளையும் மொழிப் பாடமாகக் கற்க வாய்ப் பளிக்க வேண்டும்.

2.  கல்வியைத் தமிழிலே தந்து விட்டால் மட்டும் போதாது. அந்த தமிழ்க் கல்வி வாழ்க்கைக்கு,  வேலைக்கு  உத்திர வாதம் அளிப்பதாய் இருக்க வேண்டும். இதற்கு தமிழ் நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்க்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை எனத் தமிழக அரசு சட்டமியற்றி அதை சீரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இப்படி சட்டமியற்றினால் எதிர்த்து நீதி மன்றம் செல்வார்களே என்று சால்ஜாப்பெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காமல் எது வரினும் வரட்டும் அதைப் பிறகு பார்த்துக் கொள்வோம் என்று முதலில் களமி றங்க வேண்டும்.  களத்திலேயே இறங் காமல் சும்மா கதை சொல்லிக் கொண் டிருக்கக் கூடாது.

3. தமிழ் நாட்டில் அரசு சார் பில் அரசு நேரே நடத்தும் பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என  இரு வகைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதற்கு அப்பால் புற்றீ சல்கள் போல் தனியார் நடத்தும் ஆங்கில வழிப் பள்ளிகளும், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பற்றாளர் களால் ஆங்காங்கே நடத்தப்படும் தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளும் இருந்து வருகின்றன. இவற்றுள் ஆங்கிலவழிப் பள்ளிகள் மக்களிடமுள்ள ஆங்கில மோகத்தை மூலதனமாக்கி கொள் ளைக்  கட்டணம் வசூலித்து குபேர வாழ்க்கை வாழ்ந்து வர, தாய்த் தமிழ்ப் பள்ளிகள் மட்டும் மாணவர்களிடம்  கட்டணமாகவும் உணர்வாளாகளிடம்  நன்கொடையாகவும் பெறும் சொற்பத் தொகையைக் கொண்டு, பெரும் இழப்புகளோடும் இடுக்கண்களோடும் இப்பள்ளிகளை நடத்தி வருகின்றன. இக்குறையைக் களைய தமிழக அரசு இத் தாய்த் தமிழ்ப்¢பள்ளிகளை  அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளாக ஆக்கி இப்பள்ளிகளுக்கான ஆசிரியர் ஊதி யம் கட்டட வாடகை பிற கற்பிப்புச்  சாதனங்கள் அனைத்தையும்  அரசே வழங்க வேண்டும்.

மேலோட்டமாக நோக்க இவை மிகச் சாதாரணக் கோரிக்கைகள் தானே என்பது போலத் தோன்றலாம். ஆனால் இவை மிக ஆழமானவை தமிழ், தமிழர்களின் வாழ்வியல் மொழி யாக ஆவதற்கு மிக மிக அடிப் படை யானவை. காரணம் தமிழ் வழிக் கல்வி பற்றிப் பேசும் போதெல்லாம் ஆட்சி யாளர்கள் அதற்கு எதிராகச் சொல்லும் ஒரே காரணம், மக்களெல்லாம் ஆங் கில மோகத்தில் இருக்க அதற்கேற்பத் தானே ஆட்சி நடத்த முடியும், கல்விக் கொள்கையை வகுக்க முடியும் என்பது தான்.ஆனால் இது போலி யானது  மாயையானது என்பதே உண்மை. இந்த உண்மையை மெய்ப்பிக்கவே இக்கோரிக்கைகளை வலியுறுத்து கிறோம்

மேற்குறிப்பிட்டுள்ள இரண்டாம் மூன்றாம் கோரிக்கைகளை மட்டும் ஆட்சியாளர்கள் நிறைவேற் றினால் போதும். ஆங்கில வழிக் கல்வி மோகமெல்லாம் காற்றாய்ப் பறந்து போகும்.ஆங்கில வழியில் படிப்பவர் களெல்லாம்  தானாய்த் தமிழ் வழிக் கல்விக்குத் திரும்மபுவார்கள். அதே போல ஆங்கில வழிப் பள்ளிகள் நடத் துபவர்கள் எல்லாம் நிதியுதவி பெறுவ தற்காகத் தானாய்த் தமிழ் வழிப் பள்ளிகள் நடத்த முன் வருவார்கள். எனவே இவ்விரண்டு கோரிக்கைகளை மட்டும் தமிழக அரசு நிறைவேற்றி னால் போதும், தமிழ் தானாய்த் தழைக்கத் தொடங்கிவிடும்

இக்கோரிக்கைகளுக்கு அப்பால் நிறைவாக ஒன்று. ஒரு சமூகம் தன் கடந்தகால வரலாற்றை  அறிந் திருப்பது  அவற்றின் மூலம் பெருமிதம் கொள்ளவோ படிப்பினை பெறவோ அச்சமூகத்தின் கருத்தியல் கட்டமைப் புக்கு பெருமளவு தூண்டு தலாயிருக்கி றது. இந்த வகையில் இந்தத் தலை முறை இளைஞர்களுக்கு பள்ளிப் பாடப் புத்தகம் தாண்டிய தமிழ் தமிழர் வரலாறு தெரியாது. குறிப்பாக 1938 மொழிப் போரில் சிறையேகி உயிர் நீத்த நடராசன் தாளமுத்து ஆகியோர் பற்றியோ, அல்லது 1964-1965 மொழிப் போரில்  தீக்குளித்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம் பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், மயிலாடுதுறை சாரங் கபாணி, சிதம்பரத்தில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான மாணவன் இரா சேந்திரன் ஆகியோர் பற்றியோ தெரி யாது, தெரிய வாய்ப்பில்லை. எனவே இம் மொழிப் போரில் உயிர் நீத்த ஈகிக ளின் வீர வரலாற்றைப் பள்ளிக்கூடங் களில் பாடமாக கல்லூரிகளில் துணைப் பாடமாக வைக்க வேண்டும். இப்படி வைத்தால்தான் அதைப் படிக் கும் புதிய தலைமுறை தன் வேர்களை உணர்ந்து, தாய்மொழிக் கல்வியில் தமிழ் வழிக் கல்வியில் ஊக்கம் பெறும்.  மொழிப் பற்றும் இனப் பற்றும் கொண்டு வளரும்.

இப்படி மொழி வழி இனமும், இனத்தின்  வழி மொழியும் வாழ்வதும் வளர்வதுமே அறிவியல் நோக்கு. “தமிழினம்  வீழாமல் இருக்க கோவையில் தமிழுக்கு விழா எடுப்பதாக” உடன் பிறப்புகளுக்குக் கடிதம் எழுதி விழாவுக்கு அழைக்கும் தமிழக முதல்வர், தமிழ் வீழாமல் காக்க மேற்கண்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வருவாரா, தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இதுபற்றி   ஏதேனும் அறிவிப்பாரா, நம்பிக்கை யோடு காத்திருக்கிறது தமிழகம். காப்பாற்றுவாரா முதல்வர்

 

ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு வெண்ணெய்? தமிழ் வழிப் பள்ளிகளுக்கு சுண்ணமா ?

 தமிழ் நாட்டில் தமிழ் வழியில் படித்தவர்க்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க விரைவில் சட்டம் இயற்றப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி யைத் தருவதாக இருந்தாலும் இதுவும் வழக்கம் போல வெத்து வேட்டு அறிவிப்பாக ஆகிவிடுமோ என்றும் அஞ்சவேண்டியிருக்கிறது. காரணம் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 15 பள்ளிகள் ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றப்பட்டன. இந்த  ஆண்டு மேலும் 15 பள்ளிகள் மாற்றப்பட்டுள்ளன. ஆக மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள தொடக்கப்பள்ளிகள் மொத்தம் 120இல் 30 பள்ளிகள் அதாவது 25 விழுக்காடு பள்ளிகள் ஆங்கில வழி. இது அடுத்தாண்டு இன்னும் எவ்வளவு கூடும் என்பது தெரியவில்லை

இது ஒரு புறம் இருக்க மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள மழலையர் பள்ளிகளில் வரும் ஆகஸ்டு முதல் வாரம் 10 பள்ளிகள் ஆற்றல் சார் [ஷிநீலீஷீஷீறீ ஷீயீ ணிஜ்நீமீறீறீணீஸீநீமீ]   பள்ளிகளாக மாற்றப்படும் என மேயர் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. இப்பள்ளிகள் மழலையர் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இருக்குமாம்: இப் பள்ளிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு கவனம் காட்டப்படுமாம்.

இத்துடன் மேல்குறிப்பிட்ட ஆங்கில வழி மழலையர் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு 1, 30,153 ரூபாய்க்கு காலனிகளும் 2,67,880 ரூபாய்க்கு சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் தமிழ்வழி பால்வாடி மலையர் பள்ளிக் குழந்தைகள் அனாதைகள் போல் கிடக்கின்றன. அக்குழந்தைகளுக்கு பள்ளிகளில் சோற்றை தவிர காலணியோ சீருடையோ எதுவும் இல்லை ஆனால் சென்னை மாநகராட்சி பள்ளி ஆங்கில வழி பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் இவை. அதிலும் தமிழ் வழிப் பள்ளிகளுக்கு இவை எதுவும் இல்லை. ஆங்கில வழி கிண்டர் கார்டன் பள்ளிகளுக்கு மட்டுமே

இப்படி தமிழ்வழி ஆங்கிலவழி என அரசே பாகுபாடு படுத்தி, ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு சலுகையும் ஊக்கமும் அளித்தால் அப்புறம் மக்கள் தங்கள் குழந்தைகளை எப்படி தமிழ்வழிப் பள்ளியில் கொண்டு வந்து சேர்ப்பார்கள் ஆங்கில வழிப்பள்ளிகளில் தாளே கொண்டுபோய்ச் சேர்ப்பார்கள்.ஆங்கிலத்தை அரசு ஒரு மொழிப் பாடமாக பயிற்றுவிக்க எந்த தடையும் நாம் சொல்லவில்லை  ஆனால் ஆங்கிலத்தை வழிப்பாடமாக வைத்து தமிழை பின் னுக்கு தள்ளுவதையும் தமிழ்  வழிப்பள்ளிகளை புறக்கணிப்பதையுமே நாம் எதிர்க்கிறோம்.

இது இப்படி இருக்க ஒரு புறம் சமச்சீர்கல்வி என்று  அறிவித்துக்கொண்டு மறுபுறம் அரசே சிலப்பள்ளிகளை தேர்வு செய்து அவற்றை ஆற்றல் பள்ளிகள் என்று பெயரிட்டு அங்கு மட்டும் சிறந்த மாணவர்களை உருவாக்குவதென்றால் பின் மற்ற பள்ளிகள் மற்ற மாணவர் கள் கதி என்னாவது? விளையும் போதே இந்த மாணவர்கள் மத்தியில் இந்தப் பாகுபாடா இப் படி ஆங்கிலத்துக்கு துணை போய் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு சலகைகள் செய்யும் அரசு தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை எப்படி வழங்கும்? தரமான மாணவர்களை ஆங்கில வழியில் உருவாக்கி விட்டு தரமற்ற மாணவர்களை தமிழ் வழியில் உருவாக்கி தமிழ்வழிக் கல்வி மீதே மக்களுக்கு அவ நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கமா? ஒருபுறம் தமிழ்வழியில் படித்தவர்க்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்று அறிவித்து விட்டு, மறுபுறம் இப்படி ஆங்கில வழிப்பள்ளிகளை ஊக்குவிக்கும் அதற்குப் பல சலுகைகள் அளி=க்கும் அரசின் வாக்குறுதிகளை நாம் எப்படி நம்புவது?