பொது வாழ்வில் அடியெடுத்து வைத்தது முதல் தன் வாழ் நாள் முழுக்க தன் மரியாதை, பகுத்தறிவு கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு முதலான சமூக சீர்திருத்த விழிப்புணர்வுச் சிந்தனைகளைப் பேசியும் எழுதியும் வந்த பெரியாரின் கருத்துகளை நூல்களாக வெளியிட தங்களுக்கு மட்டுமே உரிமையுண்டு, வேறு யாருக்கும் அந்த உரிமை கிடையாது என அதற்குச் சொந்தம் கொண்டாடி அவற்றைச் சிறைப்படுத்தி வைத்திருந்த திராவிடர் கழகம் வீரமணிக்கு சென்னை உயர்நீதி மன்ற இருவர் ஆயம் ஒரு திருப்பு முனைத் தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதிபதிகள் கலிபுல்லா, மற்றும் கிருபாகரன் ஆகிய இருவர் கொண்ட ஆயம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பின்படி பெரியாரின் சிந்தனைகளை இனி யார் வேண்டுமானாலும் நு£லாக வெளியிடலாம். தனித்த குறு நு£ல்களாகவோ கனத்த தொகுப்புகளாவோ எப்படி வேண்டுமாமனாலும் கொண்டு வரலாம் தனிப்பட்ட யாரும் அதற்கு உரிமை கொண்டாடவோ சொந்தம் கொண்டாடவோ முடியாது. ஆக பொது நல நோக்கோடு வாழ்ந்த பெரியாரின் சிந்தனைகளை தனக்கு மட்டுமே சொந்தம் எனத் தன்னல நோக்கோடு சிறைப்படுத்தி வைத்திருந்த ஆதிக்கவாதி களிடமிருந்து பெரியாருக்கு விடுதலை கிடைத்ததில் உண்மையான பெரியார் தொண்டர்களுக்கும், சமத்துவ சமூக நீதிச் சிந்தனையாளர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.