‘தமிழக மாணவர்கள், 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும்’ என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக மாணவர் போராட்டம் குறித்தான ‘அறப்போர்’ ஆவணப்பட வெளியீட்டு நிகழ்வில் பேசினார்.

2013 மார்ச் மாதத்தில், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் அமெரிக்கா தாக்கல் செய்த மோசடியானத் தீர்மானத்தை எதிர்த்து நடைபெற்ற தமிழக மாணவர்களின் எழுச்சியை ஆவணப்படுத்தும் வித மாக, ‘அறப்போர்’ ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. மரணதண்டனைக்கு எதிரான ஆவணப் படமான ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’ படத்தை இயக்கிய பத்திரிக்கையாளர் திரு. வெற்றிவேல் சந்திரசேகர், ‘அறப்போர்’ படத்தை இயக்கியுள்ளார். செங்கொடி மீடியா ஒர்க்ஸ் சார்பில், திரு. சி.கபிலன் படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டு விழா 28.07.2013அன்று மாலை சென்னை அண்ணாசாலை புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்கு முன்னதாக, ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட் ராமன் தலைமையேற்றார். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், மே பதினேழு இயக்கத் தலைமை ஒருங் கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, இயக்குநர் ம.செந்தமிழன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இயக்குநர் அமீர் சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சென்னை செயலாளர் கவிஞர் கவிபாஸ்கர் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

தலைமையுரையாற்றிய, தோழர் கி.வெங்கட்ராமன் பேசியதாவது:

அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்துக்களம் கண்ட தமிழக மாணவர்களின் போராட்டத்தை ஆவணப் படுத்தும் விதமாக ‘அறப்போர்’ ஆவணப்படம் உருவாக் கப்பட்டிருக்கிறது. 1965இல் தமிழகத்தையே புரட்டிப் போட்ட, இந்தி எதிர்ப்புப் போராட்டம் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை. அது போன்ற குறை களை இல்லாமல் செய்வதற்காக, நமது கண் முன்னே நிகழ்ந்த மாணவர் போராட்டத்தை இங்கு ஆவணப் படுத்தியிருக்கிறார்கள். அதற்கு, முதலில் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகமாணவர்களின் போராட்டம், எவ்வளவு வீரியமான தாக இருந்தாலும் அது இன்னும் தனது இலக்கை அடையவில்லை. நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்கு, அமைதி நிலவும் இந்த இடைப் பட்ட காலத்தை மாணவர்கள் அடுத்தக் கட்டப் போராட்டங்களுக்கான தயாரிப்புக் காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமது கொள்கைகளில் முழுமையானத் தெளிவு பெற வேண்டும்.

அதில் முதலாவதாக இருக்க வேண்டியது, இந்திய அரசு தமிழி னப் பகை அரசு என்ற புரிதல்தான். தமிழர்களுக்கென ஒரு நாடு அமைவதை இந்திய அரசு ஒருகாலத்திலும் ஏற்றுக்கொள்ளாது. ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை என்பது, உள்நாட்டில் என்ன கொள்கை நிலவுகிறதோ அதன் நீட்சியாகவே இருக்க முடியும். உள்நாட்டில், தமிழ்நாட்டிற்கு எதிராக அனைத்து சிக்கல்களிலும் எதிராக நிற்கும் இந்திய அரசு, அதன் நீட்சியாகத் தான் தமிழீழ விடுதலைக்கு எதிராக நிற்கிறது என்ற புரிதலை நாம் பெற்றாக வேண்டும். தமிழர்களுக்கு எதிரான அனைத்து சிக்கல்களிலும், இந்திய அரசு முதன்மை எதிரியாக வந்து நிற்க, அதன் ஆரிய இனவெறித் தமிழினப் பகையே முக்கியக் காரண மாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத் தில், இந்தியாவை பாரத் (BHARAT) எனக் குறிப்பிடுகிறார்களே? இது எங்கிருந்து வந்தது? ஆரியப் பார்ப் பனர்களின் வரலாற்றிலிருந்து எடுத் தாண்ட பெயர் அது. ஆரியத்தின் அடையாளம் இந்திய அரசின் அசோகச் சக்கர சின்னமாக, ஆரிய பட்டாவாக, பத்மபூசனாக, பத்ம சிறீயாக வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. நாம் தான் இதைக் காணத் தவறுகிறோம். இவையெல்லாம் தற்செயல் நிகழ் வல்ல. தமிழர்களுக்கு எதிரான ஆரியத்தின் பகைவெறி, இன்றும் இந்திய அரசு மூலமாகத் தொடர் கிறது. இது தான் நாம் பெற்றாக வேண்டிய முதல் கொள்கைத் தெளிவு.

இரண்டாவதாக, வல்லரசுகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ் வொரு உத்தியைக் கொண்டு நமது போராட்டங்களை நசுக்குவதற்கான முயற்சிகளில் இருக்கின்றனர். இந்தியாவும், அமெரிக்காவும் இன் றைக்கு ஒரே புள்ளியில் நின்று செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். தமிழர்களுக்கு எந்த வகையிலும் அதிகாரமளிக்காத மோசடியான 13ஆவது சட்டத் திருத்தத்தை நிறை வேற்ற வேண்டுமெனக் கூறும் விவாதங்களுக்குப் பின்னணியில் இந்தியா இருக்கிறது. அதே போல, அமெரிக்கா வேறொரு முயற்சியில் இருக்கிறது.

அண்மையில் 2013 சூலை 23 அன்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மெடலின் ஆல்பிரைட் மற்றும் சூடானுக்கான அமெரிக்க முன் னாள் வெளியுறவுத் தனித்தூதர் வில்லியம்சன் ஆகியோர் ஒரு அறிக்கை தயாரித்து அமெரிக்க அரசுக்குஅளித்துள்ளனர். “அமெரிக்க ஐக்கிய நாடுகளும் பாதுகாக் கும் பொறுப்பு குறித்த சிக்கலும்” என்ற தலைப்பிலான அறிக்கை இது.

இந்த அறிக்கை இலங்கை பற்றியும் பேசுகிறது. அதில் 2009 ஆம் ஆண்டு நடந்த படுகொலையில் அமெரிக்கா வெறும் பார்வையாளராக இருந்தது எனக் கண்டிக்கும் ஆல்பிரைட்- வில்லியம்சன் அறிக்கை இனி “இலங்கையில் இன நல்லிணக்கத்திற்கு அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கு துணை புரிய வேண்டும்” என அறிவுறுத்து கிறது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் 13 ஆவது திருத்தத்தின் படியான தீர்வு என்ற இந்தியாவின் நிலை பாடும் அமெரிக்க வல்லரசின் “நல்லிணக் கத்திற்குத் துணை புரிவது” என்ற நிலைபாடும் சந்திக்கிற புள்ளி இது. 13ஆவது சட்டத் திருத்தம் என்ற வரம்புக்குள் தமிழீழ விடுதலைக் கோரிக்கையை புதைக்க பன்னாட் டுச் சதிவலை விரிக்கப்படுகிறது.

13ஆவது சட்டத்திருத்தத்தில் தமிழர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்ற போதும், அதைக் கூட ஏற்கமறுக்கிறது சிங்களம். போருக்குப் பின்னால், தமிழீழப் பகுதிகளில் மிகப் பெரும் பிரச்சினையாக இருப்பது அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கேள்வி கேட்பாரற்ற, மிகத்தீவிரமான சிங்களக் குடியேற்றமாகும். இதற்கு, 13ஆவது சட்டத் திருத்தம் ஏற்கெனவே அங்கீகாரம் வழங்கியி ருப்பது இங்கு பலரும் அறியாத செய்தி.

13ஆவது சட்டத்திருத்தத்தில், தமிழர் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது, கவனமாக தமிழர்களும் பிற இனத்தவர்களும் வாழும் பகுதி எனக் குறிப்பிடுகிறது. இதன் பொருள், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் தாயகம் மட்டுமல்ல, அங்கு பிற இனத்தவர்களும் வாழ்கிறார்கள் எனக் காட்டுவது. இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சிங்களக் குடியேற்றங்களை அப்பகுதிகளில் தீவிரப்படுத்துவதே இதன் நோக்கம். அரசாங்கம், வடக்குகிழக்குப் பகுதிகளில் ஏழைகளுக்கு நிலத் தைப் பகிர்ந்தளிக்கும் போது இலங்கை முழுவதுமுள்ள இனத்த வர்களின் விகிதாச் சாரத்திற்கு ஏற்ப பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறது. அதன்படி, சிங்களர்களுக்கு நிலங்கள் வழங்க வழிவகை செய்யப் பட்டது. இந்தியாவும் இதைத்தான் விரும்புகிறது.

இதை நாம் மட்டும் சொல்ல வில்லை, 13ஆவது சட்டத் திருத்தத்தை அமலாக்குகிறோம் எனச் சொல்லிக் கொண்டு, வரதராஜ பெருமாள் என்ப வரை இந்திய இராணுவ வண்டியில் கொண்டு வந்து தமிழர் மாகாணத்தின் முதல் வராகப் பதவியேற்க வைத்தார் களே, அவர் சொன்னார். இந்திய அமைதிப்படை திரும்பச் செல்லும் போது, அவரும் இந்திய இராணு வத்துடன் இணைந்து இந்தியா விற்கு ஓடினார். அவர் சொன்னார், எனது அலுவலகத்தில் ஒரு நாற் காலி வாங்குவதற்கக் கூட, ஜனாதி பதி மாளிகைக்கு விண்ணப் பித்துக் காத்திருக்க வேண்டும், எனக்கு எந்த அதிகாரமுமில்லை எனச் சொன் னார்.

இன்றைக்கு டெசொ சார்பில் பேசும் தி.மு.க.வினர் என்ன சொல் கிறார்கள்? எங்களது இலக்கு என்பது தமிழீழம் தான் என்றா லும், இடைக் காலத்தில் தமிழீழத் தமிழர்கள் மூச்சு விடுவதற்காக 13ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றக் கோருகிறோம் என் கின்றனர். முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு, 13ஆவது சட்டத் திருத்தம் ஒரு முதல்படிதான் என்றும் சொல்கின்றனர். சட்டப் பேரவையில், தமிழீழம் அமையப் பொதுவாக் கெடுப்பு வேண்டு மெனத் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் செயலலிதாவும் இதையேதான் கருத்தாகக் கொண் டுள்ளார். செயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் எழுதியதை, அ.தி.மு.க.வினர் ஆரவாரத்துடன் காண்பிக்கிறார்கள்.

இந்தப் பெரியக் கட்சிகள், 13ஆவது சட்டத் திருத்தம் அதிகா ரப் பகிர்வுக்கான முதல் படி என் கின்றன. இதை யார் சொன்னது? இலங்கை அரசு சொன்னதா? இந்திய அரசு சொன்னதா? இலங்கை - இந்திய அரசுகளைப் பொறுத்தவரை, 13ஆ வது சட்டத் திருத்தம்தான் இறுதித் தீர்வு என்கின்றனர். ஆனால், பெரியக் கட்சிகள்தான் இவ்வாறு கூறி ஏமாற்றுகின்றனர்.

எப்படி ஐ.நா. மனித உரிமைகள் அவையில் தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் மோசடியா னது என தமிழக மாணவர்கள் போராடினார்களோ, அதைப் போல 13ஆவது சட்டத் திருத்தம் மோசடி யானது, அதை ஏற்க மாட் டோம் எனப் போராட வேண்டும். அமரிக்கத் தீர்மானத்தை எரித்துப் போராடியதைப் போல, 13ஆவது சட்டத் திருத்தத்தை எரித்துப் போராட வேண்டும்.

இந்தப் போராட்டத்திற்கான தயாரிப்புக் கால எல்லையாக, இலங் கையில் காமன் வெல்த் மாநாடு நடக்க விருப்பதை எடுத்துக் கொள்ள வேண்டும். காமன் வெல்த் மாநாட்டை, ஒரு நாட்டில் நடத்து வதை நாம் சாதாரணமாக, பொதுப் பார்வையுடன் பார்த்து விட முடியாது. எங்கு காமன் வெல்த் மாநாட்டு நடக்கிறதோ, அதன்பின், 2 ஆண்டு களுக்கு அந்த நாட்டு அதிபர்தான் காமன் வெல்த் கூட் டமைப்புக்குத் தலைவராக இருப் பார். அதனால் தான், இந்திய அரசு இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தி, இராசபக் சேவுக்கு முடிசூட்டி அழகுப் பார்க்க விரும்புகிறது.

இன்றைக்கு ஒரு நாட்டின் அதிபராக இருக்கும் இராசபக் சேவையே, தமிழினப் படுகொலைக் காக நாம் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடிய வில்லையெனில், நாளை அவர் காமன் வெல்த் கூட்டமைப்பின் தலைவரானால் என்ன செய்வது? அவரை ஒன்றும் செய்யக்கூடாது என்பதற்காகத்தான், இந்திய அரசு திட்டமிட்டு இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்துகிறது. அதை நாம் முறியடிக்க வேண்டும்!

தமிழீழ விடுதலைக்கு எதிரான இந்தியாவின் செயல் பாடுகள் வெறும் பொருளியல் ஆதிக்க நலன் களுக்காக மட்டுமே இல்லை. இந்தி யாவின் தமிழினப் பகையே அதைத் தீர்மானிக்கிறது. இந்தியாவின் பொருளியல் நலன்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என தமிழீழ விடுதலைப்புலிகள் திரும்பத் திரும்பக் கூறினார்கள். சுதுமலை யில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நிகழ்த்திய வரலாற் றுச் சிறப்பு மிக்க உரையில், தெற் காசியாவில் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களை ஏற்போம் எனத் தெரிவித்தார்.

புலிகளின் கடற்பிரிவான, கடற் புலிகள் வலுவாக இருந்தக் காலத் தில், அவர்கள் கட்டுப் பாட்டில் இருந்த கடற்பகுதிகளில் சீனா, பாகிஸ்தான் என எந்த நாடும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. புலிகளின் அரசியல் மதியுரைஞ ரான அண்டன் பாலசிங்கம் ஒருபடி மேலே போய், மேற்காசி யாவில் எப்படி அமெரிக்காவிற்கு இசுரேல் பாதுகாவலனாக இருக்கி றதோ, அதே போல் தெற்காசி யாவில் இந்தியாவின் பாதுகாவல னாக தமிழீழம் இருக்கும் என்றார். இதில் எங்களுக்கு பல கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், இந்தியாவின் பொருளியல் நல னுக்கு எதிராக நிற்கமாட்டோம் எனப் புலிகள் அறிவித்திருப்பதை எடுத்துக் காட்டவே இதைச் சொல் கிறேன்.

இப்படி இந்தியாவின் நலன் களுக்கு ஆதரவாக இருந்த புலி களை, இந்திய அரசு அடியோடு ஒழித்தது. தமிழர்களை இனப்படு கொலை செய்தது. ஏன்? காரணம், இந்திய அரசின் முதன்மையான தமிழினப் பகை. அமெரிக்காவிற்கு வேண்டுமானால் புவிசார் நலன்கள் இருக்கலாமேத் தவிர, இந்திய அரசு தமிழீழ இனப்படுகொலையை நடத்த உதவியது அதன் தமிழினப் பகை யையே காட்டுகிறது. இதைப் புரிந்து கொண்டு தான் நாம் அடுத்தக் கட்ட நகர்வுகளுக்குத் திட்டமிட வேண்டும்!”.

இவ்வாறு தோழர் கி.வெங்கட் ராமன் பேசினார்.

திரளான உணர்வாளர்களும், மாணவர்களும், பத்திரிக் கையாளர் களும் திரண்டிருந்த இந்நிகழ்வின் முடிவில், பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க ‘அறப் போர்’ ஆவணப்படம் மீண்டும் திரையிடப் பட்டது.

Pin It