நேற்று நான் விடுதலைப் போராளி இன்று நான் பாலியல் தொழிலாளி ஒரு பெண் போராளியின் வாக்குமூலம் என்ற தலைப்பில் 07--11--2012 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் மாணவ நிருபர் ம.அருளினியன் செய்ததாக 'நேர்காணல்’ வெளிவந்துள்ளது. 

அது இதுதான். 

30 ஆண்டுகாலம் ஈழத்தில் நடைபெற்ற இன விடுதலைப் போராட்டம் குறித்தும், தற்பொழுது அது எதிர்நோக்கியுள்ள நிலை குறித்தும் அதில் பங்கு பெற்ற ஒரு 'போராளி' இப்பொழுது அனுப விக்கும் துயரத்தையும் பகிர்வதாகச் சொல்லும் இந்த நேர்காணல் 6 பக்கங்களில் விரிவாக வெளி யிடப்பட்டது.

இதில் நேர்காணல் அளித்தவர் ஒரு முன் னாள் ’பெண் போராளி’ என்றும் சொல்லப்பட் டுள்ளது. ஆனால் பாதுகாப்புக் கருதி அவரது புகைப்படம் வெளியிடப்படவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

முதலாவது கேள்வி.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து மிக உயர்வாக சொல்லியிருக்கிறார். உண்மை என்னவென்றால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகள் யாரும் பிரபாகரன் என்று அழைப்பதில்லை. அண்ணன் என்றோ தலைவர் என்றோதான் அழைப்பார்கள். அவர் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவர்கள் தங்களில் ஒருவராகத்தான் அவரைக் கருதினார்கள். அதுவும் இவர் மூத்த போராளி. அந்த அடிப்படையில் பார்த்தால் இந்தக் கேள்வியும் பதிலும் உண்மையான நேர்காணல் தானா என்னும் சந்தேகத் தொனியை எழுப்புகிறது.

அடுத்ததாக 2 ஆவது கேள்வி 

இந்தக் கேள்வியே செயற்கையாகத் திட்ட மிட்டதாகத் தெரிகிறது. முந்தைய கேள்வியி லேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்து உயர்வாகவும் பெருமிதமா கவும் சொல்கிறார். அதே போன்ற கேள்விதான் இதுவும். பதிலும் ஏறக்குறைய அதுதான். ஆனால் கூடுதலாக இடம் பெற்ற தகவல் என்னவென்றால் பிரபாகரன் இறந்து விட்டார், ஈழப்போர் முடிந்து விட்டது. இனி ஈழம் சாத்தியமில்லை என்பவை.

இதற்கு அடுத்து வந்த கேள்விகள் மிக நீண்ட தூரம் தூரப்போய் பயணிக்கிறது.

இந்த இடத்தில் சில செய்திகளை நினைவு கூறுதல் அவசியம்.

பேட்டி அளித்தவராகச் ’சொல்லப்படுபவர்’ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் ஈழத் தின் பெரும் போர்களில் பங்கெடுத்தவர், பல்லா யிரக்கணக்கில் தமிழர்களைப் பலிகொண்ட முள்ளிவாய்க்கால் போரில் இறுதிவரை களத்தில் இருந்தவர் என்பதையும், உலகையே அதிரவைத்த முள்ளிவாய்க்காலில் கடைசிக் கட்டத்தில் அரங்கேறிய கொடூரம் இன்னும் முழுமையாக வெளிப்படாமல் எவ்வளவோ அந்தக் கடலில் புதைந்து இருக்கிறது என்பதையும் நேர்காணல் வெளிவருவது தமிழின் முன்னணி இதழில் என்பதையும் விடுதலைப்புலிகளை ஆதரித்து பெரும்பாலான நேரத்தில் (வணிக நோக்கம் என்றாலும்) எழுதிய இதழ் என்பதையும் இங்கு நினைவில் கொள்ளுங்கள்.
 
உண்மையான நேர்காணல் என்றாலோ, சமூகப் பொறுப்புடைய பத்திரிகையாளர் என் றாலோ அடுத்த கேள்விகள் எப்படி நிருபரிடம் இருந்து வந்திருக்க வேண்டும்..?
 
முள்ளிவாய்க்காலில் கடைசிக் கட்டத்தில் என்ன தான் நடந்தது..? மக்கள் இறுதி நாட்களில் என்னென்ன துயரத்தை எதிர்கொண்டார்கள்..? மக்கள் மீது என்ன வகை குண்டுகளை வீசினார்கள்.? பிரபாகரன் இறந்ததாகச் சொல் கின்றீர்களே எப்படி நிகழ்ந்தது என்று துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாக்களைப் போல ஒன்றன்பின் ஒன்றாக சரமாரியாக வெளிப் பட்டிருக்க வேண்டுமா இல்லையா..?

ஆனால் எந்தக் கேள்விகளும் இல்லை. அப்படியே கடந்து செல்கின்றார். நேர் காணலின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் வலுக்கிறது.

சரி அடுத்த பகுதியைப் பார்ப்போம்.

இந்தக் கேள்வியையும் அதன் பதிலையும் பார்க்கும் பொழுது நமக்கும் சில கேள்விகள் எழுகிறது. சிங்கள அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் எங்களைக் கற்பழித்தார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு வருகிறது. அவர்கள் பெயரைச் சொல்வதில் என்ன தயக்கம். ஒரு காமுகனைப் பெயர் சொல்வதில் என்ன பின்வாங்கல்? பேட்டி கொடுத்தவரின் பெயர் வெளி யிடப்படவில்லை. இத்தனைக் கும் குற்றச்சாட்டிற்கு உள்ளான வர்கள் சிங்கள அமைச்சர்கள். இதழ் அச்சாவது இந்திய நாட் டில். வெளிவருவது உண்மையை உரக்கச் சொல்வதாகச் சொல்லும் விகடன் குழும இதழில். சர்வதேச விசாரணை அமைப்புகளுக்கு அளிக்க வேண்டிய செய்தியை ஏன் விகடன் அமைதியாக கையாளு கின்றது.? பெண்ணின் குரலை மட்டுமாவது வெளிக்காட் டலாமே?

//சிறிது காலத்தில் அவர்க ளாகவே என்னை விடுவித் தனர்.//

1995 இல் இருந்து இயக்கத் தில் இருக்கும் ஒரு மூத்த பெண் போராளியை, சிங்கள ராணு வத்துடன் பல்வேறு போர்களில் பங்கெடுத்த ஒரு போராளியை உலகின் மிக மோசமான ராணுவம் அவ்வளவு விரைவாக விடு வித்துவிடுமா என்ன.? இயக்கத்தில் இருந்த பல போராளிகள் இப்பொழுது புனர்வாழ்வு முகாமில் பயிற்சிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் 1995 இல் இயக்கத்தில் சேருகிறார். சகபோராளி ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்கிறார்.

2009ஆம் ஆண்டு போர் முடிவுறுகிறது. அதன்பின் அகதிகள் முகாமில் சிறிது காலம் இருந்திருக்கிறார். அந்தக் காலம் ஒரு 6 மாதம் என வைத்துக் கொள்வோம்.

இரண்டு குழந்தைகள் இருப்பதாய்ச் சொல்கிறார்.

இந்தச் சமயத்தில் அவரது குழந்தைகள் கண்டிப்பாய் பெரியவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் பாலுக்காய் அழுவதாகவும் எழுதியிருக்கிறார்.

குழந்தைகள் பிறந்ததில் இருந்துவளரவே இல்லையா..? கட்டுக்கதைகளில்தான் இது சாத்தியம்.

//ஈழத் தமிழர்கள் நாங்கள் தோற்றுவிட்டோம் என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக் கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.//

இந்த வார்த்தை போராளியின் வார்த்தையாக வெளிவந்திருக்கிறது. ஆனால் இந்த வார்த் தைகள் ஆனந்த விகடன் மாணவ நிருபர் அருளினியன் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எழுதிய பதிவில் இருக்கிறது.

//நாம் ஈழ தமிழர் தோற் கடிக்கப்பட்டு விட்டோம் என்ற ழிகிரிணிஞி ஜிஸிஹிஜிபி புரியாத வரை என்னத்த சொல்ல.//

ஆக இது மூத்த பெண் போராளி என்று சொல்லப்படுபவரின் வார்த்தையா அல்லது நிருபர் அருளினியனின் கற்பனையா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

அடுத்த கேள்வியையும் அதற்கான பதிலையும் குறித்து நாம் இறுதியில் பார்ப்போம்.

இந்த நேர்காணலில் பொது வான விஷயங்களாக நாம் அறிவது.

விடுதலைப்புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரனை பொதுவாகப் புகழ்வது போல் தோன்றினாலும் ஈழப் போராட்டத்தின் தோல்வியை மிக மோசமான ஒப்பீடுகளுடன் விமர்சிக்கிறது. வன்மம் தோய்ந்த வார்த் தைகளால் அவதூறு செய்கிறது.

இதைவிட இன்னொரு முக்கிய செய்தி என்ன வென்றால், சிங்கள இனவாதம் குறித்தும் இறுதிக்கட்டப் போரில் அது பயன்படுத்திய மனித நாகரிக நெறிமுறையற்ற போர்முறைகள் குறித்தும் இன்றும் அங்கு நிலவும் கொடுமைகள் குறித்தும் மறந்தும் பேச மறுக்கிறது. (சிங்கள அமைச்சர்கள் குறித்து மட்டும் ஒருவரி விமர்சனம் இருக்கிறது.)

தமிழ்நாட்டுத் தலைவர்கள் குறித்தும் ஈழத்தில் உள்ள தமிழ்த் தலைவர்கள் குறித்தும் விமர்சன எல்லையைத் தாண்டி மிக இழி வான வார்த்தைகளில் விமர் சனம் செய்கிறது. அதைப் போல இனி அங்கு போருக்கு சாத்தியம் இல்லை என்று உறுதி யாகச் சொல்கிறது.

மேற்கண்டவை அனைத் தும் பொதுவாக யாருடைய வார்த்தைகள் என்றால் சிங்கள இனவாதம் மற்றும் அதற்கு இந்தியா மற்றும் இலங்கையில் துணைபோகும், அதற்கு சாமரம் வீசும் நபர்களுடையவை.

சரி இனி இதை பிறிதொரு கோணத்தில் பார்ப்போம்.

விடுதலைப்புலிகளையும் அவர்களின் அரசியலையும், தமிழ்நாட்டில் அதனை முன் வைத்துச் செயல்படும் கட்சி களையும் அதன் தலைவர்களை யும் அவர்களின் தவறுகளையும் யாரும் விமர்சிக்கக்கூடாதா என்ற கேள்வி எழலாம். விமர் சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. கண்டிப்பாய் விமர்சிக் கலாம்.

இவ்வாறு விமர்சிப்பவர்கள் இருவகை.

இவ்வாறு விமர்சிப்பவர்கள் தமிழ்நாட்டிலும் ஏன், புலம் பெயர் தமிழர்களில் ஒரு பிரிவி னரும் இருக்கின்றனர். விடு தலைப் புலிகளின் அரசியலை விமர்சிக்கும் அதே சமயம், சிங்கள இனவாதத்தையும், அதற்குத் துணை போகும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஏகாதிபத்தியத்தையும் மிகத் தீவிரமாய் எதிர்க்கின்றனர்.

வைகோ, நெடுமாறன், திரு மாவளவன், சீமான், மணியரசன், போன்றோர்களின் செயற் பாட்டை விமர்சிப்பது தவறு என்று ஒருக்காலும் சொல்லி விட முடியாது. தவறல்ல. விமர்சனத்திற்கு உட்படாத மனிதர், அரசியல் என்று யாரும் கிடையாது. ஆனால் விமர்சன நோக்கம் உண்மையாய் இருக்க வேண்டும்.

ஆனால் சிலர் இருக்கின்றனர். விடுதலைப்புலிகளின் செயற்பாட்டை மட்டும் விமர் சிப்பர். அதே சமயம் சிங்கள அரசின் இனவாதத்தை கமுக்கமாக கண்டு கொள்ளாமல் சென்றுவிடுவர். இந்திய அரசின் செயற்பாட்டைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். இவர்கள் நோக்கம் விடுதலைப் புலிகளை விமர்சித்துப் பிழைப்பு நடத்துவது. அதற்கு விடுதலைப் புலிகளின் பின்னடைவைப் பயன் படுத்திக் கொள்வது. வெளித் தோற்றத்தில் மக்கள் மீது அக் கறை இருப்பதைப் போல் காட்டிக் கொள்வது.

டக்ளஸ் வகையறாக்கள் இதில் முதலிடம் பிடிப்பர். தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்றொழித்த இலங்கை அரசின் ஊதுகுழலாய்ச் செயல்படும் இவர்களின் நோக்கம் பிழைப்புவாத அரசியல். தங்களின் சுயநலனுக்காய் சிங்கள அரசையும் அதற்குத் துணை போகிறவர்களையும் நத்திப் பிழைப்பது. 

நேர்காணலை படிக்கும் பொழுது டக்ளஸ் வகையறாக் களின் குரலுக்கும் வார்த்தை களுக்கும் செயல்பாடுகளுக்கும் சிறிதும் குறைவில்லாமல் இருக்கிறது.

நேர்காணலைச் செய்தவர் பெயர் ம. அருளினியன். விகடன் மாணவ நிருபர். 22 வயதுதான் ஆகிறது. பத்திரி கைத்துறையிலும் அரசியல் துறையிலும் எந்த அனுபவமும் இல்லாத பின்னணியும் இல்லாத ஒருவர் தான் இந்தக் காரி யத்தைச் செய்துள்ளார். ஈழத்தைச் சேர்ந்தவர்.

அவரைப் பற்றியும் அவரது பின்னணி குறித்தும் அறிவதற்கு முன்னர் அவரது எழுத்துக் களை நாம் அறிவோம்.

இவர் ’அருளினியன் பதிவு கள்’ என்றொரு பெயரில் பிளாக்கில் எழுதுகிறார். (அதை அவர்எந்தக்கட்டத்திலும் அழிக்க வாய்ப்பு இருக்கிறது.)

2010 ஆம் ஆண்டில் இருந்து தனது கருத்துகளை அதில் எழுதுகிறார். அதனை படித்துப் பார்த்தால் நமக்கு அவரைப் பற்றி ஒரு சித்திரம் வருகிறது.

ஆனந்த விகடன் நேர்கா ணலில் என்ன சொல்லப் பட்டி ருக்கிறதோ அதுதான் அவரது கருத்து. அவரது பதிவுகளைப் படித்தால் அவை அனைத்தும் நேர்காணலில் போராளியின் வார்த்தைகளாகச் சொல்லப் பட்டிருக்கிறது என எண்ண முடிகிறது.

ஒன்று மட்டும் வித்தியாசம் இருக்கிறது. தனது பதிவுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரனை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நேர்காணலில் வெளிப் படையாய் விமர்சிக்கவில்லை.

புகழ்வது போல் இகழ்வதும், நடுநிலையாய்ப் பேசுவது போல் நடித்து தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதும் கைக்கூலிகளுக்கு கைவந்த கலை. அவர் பதிவுகளின் சுருக்க மாக நாம் அறிவது இதுதான்.

சிங்கள இனவாதத்தை வார்த்தைகளால் கூட எதிர்க் காதவர். விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிப்பவர். தமிழ்நாட்டுத் தலைவர்களை மிக மிகக் கடுமையாக விமர்சிப் பவர். இந்தியாவில் விதிக்கப் படும் மரணதண்டனை முறை யை எதிர்க்கிறார். ஆனால் பேரறிவாளன் குற்றமற்றவரா என்று எனக்குத் தெரியாது என் கிறார்.

//பேரறிவாளன் உட்பட மூவரும் அப்பாவிகளா எனக் கூறும் அளவிற்கு எனக்கு அரசி யலும் தெரியாது, இந்தியாவின் நீதித்துறையின் நம்பகத் தன்மை யின் அளவும் தெரியாது//

அதே சமயம் அப்துல்கலாம் மிகப்பெரிய அறிவாளி என்று கண்டுபிடித்து துதிபாடுகிறார். அவர் தான் ஈழ மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்.

(அதென்ன பாஸ்? பேரறி வாளன் தனக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கும் தொடர் பில்லை என்று எத்தனையோ ஆதாரங்கள் கொண்டு அவரே புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அதைப்படித்தும் அவர் குறித்து உங்களுக்கு ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால் அப்துல்கலாம் உலக மகா அறிவாளின்னும் அவர்தான் எங்கட மக்களுக்கு அறிவு கொடுக்க வரணும்னு எதை வைத்து கண்டுபிடித்தீங்க..?)

அதே சமயம் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை) ஆங் கிலம் வடிவாத் தெரியாததால் யாழ்ப்பாணத்தில் பெண்டு பிள்ளைகளை கரெக்ட் செய்ய முடியவில்லை என்றும் அங்க லாய்க்கிறார். முகநூலில் மட்டும் தோராயமாக தனது 1000 புகைப்படங்களைப் பதிந் துள்ளார்.

ஈழத்தவர் அனுபவிக்கும் கொடுமை குறித்த புகைப் படங்கள் அதில் நம் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.

இவரைப் பற்றி அறிய இவரது குடும்பப் பின்னணி யையும் அறிய வேண்டும். இவரது குடும்பம் போர்கள் பல கண்டு மாவீரர் ஆன குடும்பம் அல்ல.

இவரது சொந்த ஊர் யாழ்ப் பாணம் மாவட்டத்தில் உள்ள வலிகாமம் அருகேயுள்ள குப்பி ழான் கிராமம். இவர் ஆரம்பப் பள்ளிக் கல்வி பயின்றது விக்கினேஸ்வரா மகாவித்தி யாலயம். உயர் கல்வி பயின்றது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி. படித்து முடித்தபின் இங்கு பெங்களூர் வந்து கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். விகடன் நிறுவனத்தில் மாணவ நிருபராய்ப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இவரது தந்தைசிவ. மகாலிங்கம் சைவ சமய பேச்சாளர். ஆன்மீகக் கட்டுரைகள் எழுதுபவர். 

இவர் 2009 ஆம் ஆண்டு எழுதிய ஞானதீபம் என்ற நூல் 2009ஆம் ஆண்டு வெளி வந்த தில் சிறந்த நூல் என்று யாழ் இலக்கிய வட்டம் தேர்ந் தெடுத்து இலங்கை இலக்கிய விருதினை வழங்கியுள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கை யில் நடைபெற்ற இனப்படு கொலையை உலகமே மனம் பதைபதைத்து பார்த்துக் கொண்டிருந்த பொழுது தமிழ் நாட்டில் அதற்கு எதிர்வினை யாய் 17 பேர் மாண்ட பொழுது, கூப்பிடுதூரத்தில் உள்ள குழப் பானில் இருந்து கொண்டு சிவ. மகாலிங்கம் ஒய்வை அனுப வித்துக் கொண்டும், சைவசமய நூல் எழுதுவதிலும், விருதுகள் வாங்குவதிலும் பட்டிமன்றங்களுக்குச் சென்று சைவ சமயத்தைப் பரப்புவதிலும் மூழ்கியிருந்தார்.

படைப்பு மனம் எவ்வளவு கொடூரமாய் இருந்திருக்கிறது பாருங்கள். அவர் மகனும் இப் பொழுதைய விகடன் மாணவ நிருபருமானம. அருளினியன் கொழும்பு சார்ஜா மைதானத்தில் இங்கிலீசு வடிவாத் தெரியாததனால் பொம்பளப் பிள் ளைகளைக் கரெக்ட் பண்ண முடியலைன்னு வருத்தத்தில் அரற்றிக் கொண்டு இருந்திருக்கிறார்.

சரி இவரது குடும்ப அரசியல் பின்னணி என்ன..?

பொதுவாக இவரது குடும்பம் டக்ளஸ் தேவானந்தாவின் மீது அன்பு உள்ளவர் என்று சொல்கிறார்கள். இவர்களது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆவார்.

2 விஷயங்களை குறிப்பாகச் சொல்லலாம்.
 
விகடன் நிருபர் ம.அருளினி யனின் தந்தை சிவ.மகாலிங்கம் கல்லூரி விரிவுரையாளர் பதவி யில் இருக்கும் பொழுதே அதை விடக் கூடுதல் சம்பளம் கிடைக் கும் என்பதற்காய் அதைப் பாதியில் விட்டுவிட்டு இந்து சமய கலாச்சார தினைக்களத் தின் உதவிப் பணிப்பாளர் பதவி யைப் பெற்றுள்ளார். இந்தப் பதவியை அவருக்குப் பெற்றுத் தந்தது டக்ளஸ் தேவானந்தா என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் காலகட்டத்தில டக்ளஸ் தேவானந்தாவின் 2004 - 2005காலப்பகுதியில் கீழ் உதவிப் பணிப்பாளராய் சிவ. மகாலிங்கம் பணியாற்றியுள்ளார்.

ஒட்டு மொத்தத்தில் பார்த் தால் இவரையும் இவரது குடும் பத்தையும் சுற்றி சந்தேகத்தின் நிழல் நன்கு படிந்துள்ளது.

இத்தனை சொன்ன பின்னும் உங்கள் மனதில் ஒரு சிறிய எண்ணம் இருக்கலாம். இந்த நேர்காணல் உண்மையானது தான். ஆனந்த விகடனும் அதன் நிருபரும் உண்மையைத் தான் வெளிக்கொணர்ந்துள்ளார்கள் என்று துளியாவது எண்ணலாம்.

உங்களுக்கு ஒரு கூடுதல் ஆதாரம் தர வேண்டியுள்ளது. நேர்காணலின் இறுதிக்கேள்வி யும் பதிலும் இதுதான். வலிய இந்தக் கேள்வி கேட்கப்பட்டி ருகிறது என்பதை உணரமுடியும்.

//நான் எனது உடலைத் தான் விற்கிறேன். ஆன்மாவை அல்ல.//

இதே வார்த்தையை அவர் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எழுதிய தனது பதிவில் எழுதியுள்ளார்.

//ஈழத் தமிழரை வைத்து அரசியல் செய்யும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விட பெங் களூரில் எம்.ஜி.ரோட்டில் விபச் சாரம் செய்யும் பெண் எவ் வளவோ மேல். அவள் உட லைத்தான் விற்கிறாள். ஆன் மாவை அல்ல.//

இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது. தனது வன்மத்தில் தோய்த்த வார்த்தைகளை மூத்தபெண் போராளியின் பெயரில் நேர்காணல் என்று வெளியிட்டமைக்கு வேறு என்ன ஆதாரம் உங்க ளுக்கு வேண்டும்.?

பரந்துபட்ட மக்கள் திரள் கொண்ட ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்திய இயக் கத்தை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் எந்தவித அரசியல் அறிவும் இல்லாத ஒரு, கைக் கூலியான நிருபர். போகிற போக்கில் எழுதுவதை எப்படி விகடன் நிர்வாகம் அனுமதித்தது..?

கழிசடையான திரைப் படங்களைக்கண்டு ஒரு பக்கம் விமர்சனம் எழுதுவதற்கே மிகவும் அக்கறையுடனும் பொறுப்புடனும் தலைமை, மூத்த நிருபர்களை மட்டும் அனுமதிக்கும் நிர்வாகத்திற்கு இது ஏன் தெரியவில்லை.?

இது சமூகத்தில் எவ்வளவு பெரிய விளைவுகளையும் உள வியல் ரீதியாக அவர்களிடத் திலும் எவ்விதப் பாதிப்புக் களை ஏற்படுத்தும் என்று அறியவில்லையா..?

பதில் சொல்லுமா விகடன்.?

நன்றி: 4.11.2012, கலகக் குரல் வலைத்தளம் http://kalakakkural.blogspot.in/

இந்த நேர்காணல் குறித்து பூங்குழலி உள்ளிட்ட பலர் எதிர்வினை எழுதியுள்ளனர். ஆனால் அவற்றில் ஒன்றைக் கூட, சுருக்கமாக வேனும் வெளி யிட மறுத்துவிட்டது ஆனந்த விகடன்.

அதற்குப் பதிலாக அடுத்த இதழில் (14.11.2012) ஆசிரியர் ஒரு தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். நேர்காணல் செய்யப்பட்டதாகச் சொல்லப் படும் பெண் போராளியின் பதில் என்பதாக ஒரு பெட்டி செய்தியும் வெளியிடப் பட்டுள்ளது.

இவை இரண்டுமே விகடனின் மதிப்பை குறைக்கவே செய்கின்றன. செய்ததவறை நியாயப்படுத்துவதாகவே விகடனின் முயற்சி அமைந்துள்ளது.

Pin It