அன்பிற்கினிய நண்பர்களே!

“மனித குலமே தாயகம்” என்றார் ஹொஸெ மார்த்தி. அவரது வழித்தோன்றலான சேகுவேரா, “கியூபப் புரட்சியின் வெற்றி கியூப மக்களை மட்டுமின்றி உலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்” என்றார். அவரது சர்வதேசியத்தின் செயல்வடிவமாகவே கடந்த ஐம்பது ஆண்டுகளாக உலகெங்கும் இலவசமாக மனிதநேய மருத்துவப் பணியாற்றி வருகிறார்கள் கியூப மருத்துவர்கள். உலகெங்கிலும் பேரிடர் துயர் துடைப்பில் அரும்பணி ஆற்றுகிறார்கள். நாடு திரும்பி ஏழை மக்களுக்கு மருத்துவ உதவியாற்ற உறுதியேற்கும் உலகின்பல நாட்டு ஏழை மாணவர்கள் ஹவானாவில் இலவச மருத்துவப் பட்டப்படிப்பை மேற் கொள்கிறார்கள்.

ஆனால் மார்த்தியும் சேகுவேராவும் ரத்தம் சிந்திய கியூப மண்ணின் இன்றைய தலைவர்கள் ஈழத்தமிழர் படுகொலையை ஏன் ஆதரித்தார்கள்? ஈழத்தமிழர் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டபோது, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசைப் பாராட்டி தீர்மானம் கொண்டு வந்த இந்தியாவின் வழியை ஏன் பின்பற்றினார்கள்? 21ஆம் நூற்றாண்டு சோசலிச முன்னெடுப்புகளின் களமான “ஆல்பா” நாடுகளின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு வாழ் தமிழர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத்தைச் சேர்ந்த எங்களைக் கடும் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது. கியூபாவும் பிற இலத்தீன் அமெரிக்க நாடுகளும் ஈழத் தமிழர்கள் குறித்த நிலைபாட்டினை மாற்றிக் கொண்டு முன்னர் செய்த தவற்றினை சரி செய்யும் தருணம் வந்துவிட்டது.

2011 ஏப்ரல் 25 அன்று “சிறீலங்கா குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை” வெளியிடப் பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்துலகத் தமிழர்களும் கூறியபடி, 2009 மே 19 அன்றோடு முடிவடைந்த ஈழப்போரில் ஈழத்தமிழ் மக்கள் பெரும் எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்டது உண்மை என்று இந்த அறிக்கை ஆணித்தரமாக அறிவித்துள்ளது.

சிறீலங்கா அரசு போர்க்குற்றங்களையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்தது. அதுமட்டுமின்றி, அவற்றை மூடி மறைக்கும் முயற்சியில் சிறுபான்மை தேசிய இனங்களின் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் மீறியுள்ளது' என்று உறுதிப்படுத்துகிறது.

அதாவது 2009 மே 27 அன்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின் கடும் முயற்சியால் இயற்றப்பட்டு, கியூபாவினால் ஆதரவு திரட்டப்பட்டு பெரும்பான்மை வாக்குகளோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத் திலிருந்த தகவல்கள் அனைத்துமே பொய்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. விசாரணைக் குழு அறிக்கை மேலும் பல உண்மைகளை வெளியிட்டுள்ளது:

(அ). இலங்கை அரசு இறுதிக்கட்ட போரின் போது பற்பல வகையான குண்டுகளை வீசி ஏறத்தாழ ஒரு இலட்சம் தமிழ் மக்களைப் படுகொலை செய்துள்ளது. பள்ளிகள், மருத்துவ மனைகள், குழந்தைக் காப்பகங்கள், பிற மனித நேய நிறுவனங்கள் இவையனைத்தும் இலங்கை இராணுவக் குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்டன.

(ஆ). போரில் உயிர் பிழைத்த தமிழ் மக்கள் - குறிப்பாக உள்நாட்டில் இடம்பெயர வைக்கப் பட்ட மக்களும் விடுதலைப்புலிப் போராளிகள் என்ற சந்தேகத்திற்கு உரியவர்களும் தொடர்ச்சி யான மனித உரிமை மீறலுக்கு ஆளாகியுள்ளனர்.

(இ). போரை எதிர்த்துக் குரல் எழுப்பிய அறிவுஜீவிகளும், ஊடகத்துறையினரும் கொல்லப் பட்டனர் அல்லது சித்திரவதைகளால் ‘மௌ னிக்கப்பட்டனர்’.

(ஈ). இலங்கை அரசு ‘போரில்லா பகுதி’ என்று அறிவித்த பகுதிகளில் நம்பிக்கையோடு வந்து சேர்ந்த மக்கள் மீது இலங்கை இராணுவம் எறி கணைத் தாக்குதல் நடத்தியது.

(உ). போர் முடிந்த பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், உணவு, மருந்துகள், மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து மனித நேய உதவிகளும் கிடைக்காமல் தடுத்துள்ளது இலங்கை அரசு.

(ஊ). முகாம்களில் தங்கியுள்ள இடம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பன்னாட்டு மனித நேய உதவிகள் எதுவும் போய்ச் சேராமல் தடுப்பதோடு தொடர்ந்து அம்மக்களை துயரத்தில் ஆழ்த்தி வைத்துள்ளது இலங்கை இராணுவம். தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகள், தீக்குண்டுகள் ஆகியவற்றை வீசி பல்லாயிரம் பேரைக் கொன்றது, முடமாக்கியது, மருத்துவ உதவியின்றி தொற்று நோய்களுக்கு இரையாக்கியது.

(எ). போரில் உயிர்தப்பியவர்களுள் பலர் புலிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு விசாரணையின்றி சித்திரவதைக்குப்பின் படு கொலை செய்யப்பட்டார்கள். பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுத்தப்பட்டார்கள். எண்ணற்றோர் கடத்தப்பட்டு ‘காணாமல் போனார்கள்’.

(ஏ). இலங்கையின் நீதித்துறையின் வரலாற் றைக் கொண்டு ஆராய்ந்தால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஞாயம் கிடைப்பது அரிது என்பது தெளிவாகிறது. கடந்த 30 ஆண்டுகளில் அங்கே நிறுவப்பட்ட பல்வேறு விசாரணை ஆணையங்களும், மனித உரிமை ஆணையமும் ஒருபோதும் சட்டங்களை மதித்து பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டதாக சான்றே கிடையாது.

(ஒ). இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலாக கடந்த 60 ஆண்டுகளில் இயற்றிய பல சட்டங்களினால் மொழி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, தொழில், அரசியல் என அனைத்துத் துறைகளிலும் தமிழினம் ஒதுக்கப்பட்டுள்ளதால், தமிழர்கள் தங்கள் உரிமைகளை மீட்க போராட வேண்டிய அவசியம் உருவானது. முதல் 30 ஆண்டுகள் வரை அறவழிப் போராட்டங்கள் நடத்தி எந்தப்பயனும் கிட்டாத நிலையில், 1977ஆம் ஆண்டுக்குப் பின்புதான் தமிழர்கள் தங்கள் தாயகத்தை மீட்க ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

(ஓ). போர் முடிந்த பின்பும் போர்க்காலச் சட்டங்கள் நீடிப்பதும், ஊடகத்துறை மீதான தடைகளும் மக்களை நிரந்தர அச்சத்திலும் நம்பிக்கையற்ற நிலையிலும் இருத்தி வைத் துள்ளன. அனைத்து மீறல்களும் சாட்சியின்றி நடைபெற்று வருகின்றன.

(ஓள). தமிழீழ விடுதலைப்புலிகள் மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியது, சிறுவர்களை போராளிகளாகச் சேர்த்தது, போர்க்கருவிகளை மக்கள் வாழிடங்களுக்கு அருகாமையில் சேமித்து வைத்தது ஆகிய குற்றங்களைப் புரிந்திருக் கிறார்கள். எனினும், உலகச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது இலங்கை அரசுதான். இவற்றை அறிந்திருந்தபோதும் போரின் இறுதிக் காலத்தில் ஆயிரக்கணக்கில் பொது மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யாமல் ஐ.நா.வின் நிறுவனங்கள் தவறிவிட்டன. இதன் தொடர்ச்சியாக ஐ.நா. மனித உரிமை மன்றமும் இந்த விடயத்தில் தவறு செய்தது.

எனவே, இந்த விசாரணைக் குழு,

“2009 மே 27ஆம் நாள் ஐ.நா. மனித உரிமை மன்றம் தனது சிறப்புக் கூட்டத்தில் சிறீலங்கா நிலைமை குறித்து இயற்றிய தீர்மானத்தை (கி/பிஸிசி/8-11/லி.மி.-ஸிமீஸ்.2) எங்களது இந்த அறிக்கை யின் வெளிச்சத்தில் மீளாய்வு செய்ய வேண்டும்” என்று ஐ.நா. தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்துகிறது.

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம் கியூபா, பொலிவியா, நிகராகுவா, வெனிசுவேலா உள்ளிட்ட ‘ஆல்பா’ நாடுகளுக்கும், இதர இலத்தீன் அமெரிக்க முற்போக்கு அரசுகளுக்கும் கூடுதலாக சில தகவல்களைக் கூற விரும்புகிறது:

(1). ஈழத்தமிழ் மக்களைப் பெருமளவில் கொன்று குவித்த (2008-2009) காலத்தில் இந்திய அரசு இப் போரில் நேரடியாகப் பங்கேற்றுள்ளது. உளவு பார்ப்பதற்கான செயற்கைக் கோள்கள், ராடார்கள் உள்ளிட்ட பற்பல கனரக போர் ஆயுதங்கள், பல்லாயிரம் கோடி ரூபாய் பண உதவி என அனைத்து உதவிகளையும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு அளித்துள்ளது.

(2). இதற்குக் காரண மில்லாமல் போகவில்லை. இலங்கை போலவே இந்தியாவும் பிரிட்டனின் காலனியாக இருந்த நாடு. நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு இருநாடு களிலுமே காலனி ஆட்சியின் போது பல் வேறு தேசிய இனங்களின் வரலாற்றுத் தாய கங்கள், செயற்கையாக ஒன்றிணைக் கப்பட்டன. காலனி ஆட்சியின் முடிவில், தன்னாட்சி பெற்ற போது வெவ் வேறு தேசிய இனங்களுக்கு தனிஆட்சி அதிகாரமும் ஆட்சிப்பரப்பும் வழங்கப்பட வில்லை. இந்த முறையற்ற காலனிய நீக்கமே இரு நாடுகளிலும் தனி தேசிய இனங்கள் தாயக மீட்புப் போராட்டங்களில் ஈடுபடக் காரணமாயிற்று. காஷ்மீர், வடகிழக்கு தேசங்கள், தமிழ் நாடு என இந்தியாவிலும், ஈழப்போராட் டமாக இலங்கை யிலும் தொடர்வது தேசிய இன விடுதலைப் போராட்டங்களே.

(3). இந்திய வல்லரசு இந் தியப் பெருங்கடல் பகுதியில் தனது மேலாதிக்கத்தை நிறுவு வதற்காகவே தனி ஈழக்குடியரசு ஏற்படுவதைத் தடுத்து ஈழ விடுலைப் போராட்டத்தை ஒடுக்கியது என்பதே உண்மை. ஆனால், இதன் மூலம் தன் னாட்சி கோரிப் போராடும் காஷ்மீரிகளுக்கும், இந்தியாவில் உள்ள தமிழருக்கும், இன்னபிற தேசிய இனங்களுக்கும் மறை முகமாக இந்திய அரசு அச் சுறுத்தல் விடுத்துள்ளது என் பது கவனிக்கத்தக்கது.

மேற்கூறிய தகவல்களின் அடிப்படையில் “ஆல்பா” உறுப்பு நாடுகள் உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க முற் போக்கு அரசுகளிடம் இலத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகம் பின்வருமாறு கோருகிறது:

(அ). 2009 மே 27 அன்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பொய்யென விசாரணைக்குழு நிரூபித்துவிட்ட நிலையில், அத் தீர்மானத்தை மன்றத்தின் பதிவி லிருந்து நீக்கக் கோர வேண்டும்.

(ஆ). இன ஒதுக்கலுக்கும், இனப்படுகொலைக்கும் ஆளான ஈழத்தமிழ் மக்களது போராட்டம் தாயக மீட்புக்கான தேசிய விடு தலைப் போராட்டமே என்று அங்கீ கரிக்க வேண்டும்.

(இ). தமிழ் இனப்படுகொ லையை நிகழ்த்திய இலங்கையில் இராசபட்சே அரசும், அதற்குத் துணை போன இந்திய அரசும் சர்வதேச சட்டங்களை மீறிய குற்றவாளிகள் என்னும் தீர்மா னத்தை இயற்ற வேண்டும். இவ் வழக்கினை சர்வதேச நீதி மன்றத்தில் கொண்டு சென்று இலங்கை, இந்தியா மட்டுமின்றி, மறைமுகமாகப் போரில் பங் கேற்ற சீனா உள்ளிட்ட நாடு களையும் குற்றவாளிகளாக விசாரிக்க வேண்டும்.

(ஈ). தமிழர் தாயகப் பகுதி களில் நடைபெற்று வரும் திட்டமிட்ட சிங்களக் குடி யேற்றத்தையும், பன்னாட்டுக் கொள்ளை நிறுவனங் களின் படையெடுப்பையும் தடுத்து நிறுத்தக் குரல் கொடுக்க வேண்டும்.

(உ). ஈழத்தமிழ் மக்கள் தங்கள் மரபான வாழிடங் களுக்குத் திரும்பி கௌரவமான குடிமக்களாக உரி மையுடன் வாழ்வதற்கான கட்ட மைப்புகள் உருவாகவும் அவர்தம் கருத்துகள் அரங்கேறி சுமூகமான வாழ்நிலை திரும்பவும் அனைத் துலக ஈழத்தமிழர் ஆதரவு சக்தி களுடன் கைகோக்க வேண்டும்.

இதுவே ஒடுக்கப்பட்ட/சிறுபான்மை தேசிய இனங் களுடைய விடுதலைப் போராட் டங்களின் ஞாயத்தை நிலை நாட்ட உதவும். சற்றேறக்குறைய பத்து இலட்சம் ஈழத்தமிழர் உலகெங்கிலும் புலம் பெயர்ந்து வாழ்வதும், மூன்றரை இலட்சம் மக்கள் இலங்கை அரசின் இனப்படுகொலையில் மாண்டு போனதும் இன ஒதுக்கலுக்கு ஆளான ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் ஞாய மானது என்பதற்கு போதுமான சான்றுகளாகும்.

தற்போது ஐ.நா. விசாரணைக் குழு அளித்திருக்கும் வாய்ப் பைப்பயன்படுத்தி ஈழத் தமிழரின் தார்மீக போராட் டத்தினை அங்கீகரிப்பதே மனித குலத்தின் மீதும் மனித உரிமை களின் மீதும் நம்பிக்கை கொண்டோரின் கடமையாகும்.

கியூபாவும் ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகளும் ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதன் மூலம் மீண்டும் மாவீரன் சேகுவேராவின் சர்வ தேசியத்தை நிலை நாட்ட வேண்டும்.