ஒரு தொடர் மழை நாளின்
இடைநில்லா
பேருந்து பயணத்தின்
ஒரு நிமிட நிறுத்தத்தில்
வேகமாக ஓடிச் சென்று
ஓரம் ஒதுங்கி
தன்னை
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
திரும்பும் அவனை
பொறாமையுடன் பார்க்கும்
அவள் கண்களில்
அவளின் அவஸ்தை

ஏக்கம்

பக்கத்து வீட்டு
சிறுவர்கள்
விளையாட
வரும் பொழுது மட்டும்
பரணில் ஏற்றப்படும்
பொம்மைகள்

கூட்டாளிகளுக்கான
ஏக்கத்தில்
குழந்தையும்
பொம்மைகளும்.

- பரமக்குடி சோ.சுரேஷ்