கருப்புப் பணம் இருவகையில் உள்ளது. ஒன்று உள் நாட்டிலேயே புழக்கத்தில் உள்ளது. இது பல லட்சம் கோடியாக இருக்கும் எனப்படுகிறது. மற்றொன்று வெளிநாட்டு வங்கி களில் தூங்கும் கறுப்புப்பணம். இந்த இரண்டு கறுப்புப் பணங்களும் திரளக் காரணம் அதீத லாபம்தான். இது வெளியே தெரிந்தால் அரசுக்கு வருமானவரி 40 சதம் வரை கட்ட வேண்டியது வரும். அடுத்து வருமானத்துக்கான வழிமுறை என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும். நமது பணம் அரசுக்கு ஏன் வரியாகப் போக வேண்டும் என்பதுதான் கருப்புப் பணம் உருவாகும் அடிப்படையாகும்.

அதைவிட சம்பாதித்த வழிமுறை பற்றிய விசாரணைகள் மிகப்பெரியது. அதிலிருந்து சாமானியமாக மீள முடியாது. எனவே கணக்கில் காட்டாமல் பணத்தைப் பெருக்குவதற்கு பெரும் வணிகர்கள், ஆட்சி பீடத்திலிருந்த, இருக்கிற முதலாளித்துவக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், பெரும் தொழிலதிபர்கள் யோசித்து இந்த முடிவுக்கு வருகிறார்கள். லஞ்ச ஊழல், கொள்ளை லாபம் உட்பட சட்ட விரோதமான வழிமுறையில் வந்த பணத்தைப் பற்றி வெளியே சொல்ல முடியாது. சொன்னால் தேவையற்ற பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படும். ஆகவே கணக்கில் வராத பணத்தை உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் மறைக் கிறார்கள்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள பணம் 1.4 டிரில்லியன் டாலர் என்றும், 96 லட்சம் கோடி ரூபாய்கள் என்றும் மதிப்பிடப்படுகிறது. பாபா ராம் தேவ் 400 லட்சம் கோடி என்று கூறுகிறார். அவருக்கு யார் கணக்குக் கொடுத்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்திரா காந்தியின் மருமகள் மேனகா காந்தி “வெளிநாடுகளில் காங்கிரஸ் தலைவர்களின் பணம் ஏராளமாக குவிந்திருப்பதால் மத்திய அரசு கருப்புப் பணத்தை மீட்க முயற்சி செய்யாது” என்று கூறியுள்ளார். ஒரு வேளை பாம்பின் கால் பாம்பறியும் போலும். ஆனால் சோனியாவே தனது மகன் ராகுல் காந்தி பெயரில் பல்லாயிரம் கோடி டிப்பாசிட் செய்திருக்கும் செய்தி ஆதாரத்துடன் ஏற்கெனவே வெளிவந்துள்ளது.

இந்தியா சுதந்திரமடைந்ததிலிருந்து வெளிநாடுகளுக்குக் கருப்புப் பணம் பயணமாகி யிருக்கிறது. இன்று வரை தொடர்கிறது. இந்தப் பணம் சுமார் 70 நாடுகளில் பாதுகாக்கப் படுவதாகவும், பெரும்பான்மை சுவிட்சர்லாந்தில் பதுக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன் வெல்த் ஊழல், எரிவாயு-பெட்ரோல் ஊழல் என்று லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் வெளிநாடுகளில் பதுக்கப்படுகின்றன. இதற்கு இடம் தருவதில் மொரீசியஸ், மலேசியா முதல் மாலத்தீவு வரை சிறிய நாடுகளும் கூட உள்ளன. இந்நாடுகள் கொள்ளைக்காரர்களின் அலிபாபா குகைகளாக உள்ளன.

முன்னாள் அமைச்சர் ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் சிறையில் உள்ளதால் கருணாநிதி கதிகலங்கி உள்ளார். ரூ.76 ஆயிரம் கோடி காமன்வெல்த் ஊழலில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் கல்மாடியும் திகார் சிறைக்குள் இருக்கிறார். ஆனால் சோனியாவும் ராகுலும் கலங்காமல் இருக்கிறார்கள். எய்தவர்கள் வெளியே இருக்க, அம்புகள் சிறையில் கிடக்கின்றன.

கனிமொழிக்கும் தயாளு அம்மாவுக்கும் ஊழல் புரிவதில் என்ன தெரியும்? இந்த நாடகத்தில் கதை-வசனம்-இயக்கம் அனைத்தும் கருணாநிதிதான். குட்டு அம்பலமானதும் குற்ற மனப்பான்மையில் தத்தளிக்கிறார். கருணாநிதி குடும்பத்தில் 42 பேர் உள்ளதாகவும், அத்தனை பேருமே பணத்தைப் பல வழிகளிலும் அள்ளிக் குவித்து விட்டார்கள் என்றும் செய்திகள் கூறுகின் றன. திமுக முன்னாள் அமைச்சர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாக மாறியுள்ளனர். சில அமைச்சர்கள் பொறியியல், மருத்துவம், கலை போன்ற கல்லூரிகளைக் கட்டியுள்ளனர்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ராசா ஊழலை முதலில் பிரபலப்படுத்தியவர் தயாநிதி மாறன்தான். சன் டி.வி. தான் முதலில் ஒளிபரப்பியது. இப்போது தயாநிதிமாறன், ஊழல் ராசா மூலம் அம்பலமாகி யுள்ளது. முறைகேடாக 323 இணைப்புகள் மூலம் ரூ.440 கோடி ஊழல், மலேசிய நிறுவனம் மூலம் ரூ. 840 கோடி சன் டி.விக்குப் பங்குகளாக வந்தது போன்ற அடுக்கடுக்கான ஊழல்கள் வெளிவந் துள்ளன. ஏற்கனவே தயாநிதிமாறன் கருணாநிதி யின் துணைவியார் தயாளு அம்மாவுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்து மத்திய ஜவுளித்துறை அமைச்ச ரானார். இது விபரம் நீராராடியா டேப்பில் உள் ளது. கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் அம்பா னிகள் எரிவாயு எடுத்ததில் 45 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ் ஊழலில் மத்தியப் பெட்ரோலியம் அமைச்சரும் அதிகாரி களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

டாட்டாவும், ராஜாத்தியம்மாள், கனிமொழி கூட்டணிதான் பெருமுயற்சி செய்து ராசாவைத் தொலைத்தொடர்பு அமைச்சராக்கினர். இதற்காக டாடா சென்னையில் உள்ள ரூ.300 கோடி பெறு மானமுள்ள மனைகளைப் பரிசாக வழங்கினார். திமுக வின் ஏராளமான ஊழல்களால் மக்கள் திமுக ஆட்சியை வீழ்த்தித் துடைத்தெறிந்தனர். திமுக என்ற கட்சி முழுமையாக கருணாநிதி குடும்பம் ஊழல் புரிவதற்கே பயன்பட்டுள்ளது. ஊழலில் கருணாநிதி குடும்பத்தினர் பிடிபட்டு திகார் சிறை வரை போய் விட்டதால் இப்போது திமுக முழுமையாகப் பாதுகாப்பதற்குப் பயன்பட்டு வருகிறது. பெரியார் கொள்கைகள், அண்ணா கொள்கைகள் அனைத்தும் கருணாநிதி கூட்டத்தின் ஊழல்களால் மூழ்கடிக்கப்பட்டுவிட்டன. நடந்து முடிந்த தேர்தலில் கூட ஏராளமான திமுகவினர் திமுகவுக்கு எதிராகவே வாக்களித்தனர். ஜெய லலிதா அரசு சமச்சீர் கல்வி விசயத்தில் எடுத்த நிலைப்பாடு பெற்றோர், மாணவர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை திமுக பயன்படுத்தமுயல்கிறது.

இந்தியா முழுவதும் மத்திய-மாநில அரசு களும், பன்னாட்டுக் கம்பெனிகளும் விவசாயி களிடமுள்ள நிலங்களைப் பறிப்பதால் பெரும் கலவரங்கள் வெடித்து வருகின்றன. விவசாயிகள் மீது தடியடி, கண்ணீர்ப் புகைவீச்சு, சிறைவாசம் என்று அடக்குமுறைகள், தாக்குதல்கள் நடை பெறுகின்றன. இந்திய அரசு மிகப்பெரிய நிறுவனங்களின் தொழில்திட்டங்களுக்காக அவர் களது கொள்ளை லாப பேராசைக்காக நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறித்துத் தருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் யமுனா மகா நெடுஞ் சாலைத் திட்டத்தில் ஜேப்பி இன்ஃப்ராடெக் நிறுவனத்திற்கும், ஒரிசாவில் தென்கொரிய நிறு வனமான போஸ்கோவுக்கும் விவசாய நிலங்களை நம் அரசு தாரை வார்த்துக் கொடுத்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வில் ஜெயப் பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் டவுன்சிப், குடியிருப்புகள், கார் பந்தய மைதானம் கட்டுவதற்காக 6000 ஏக்கர் நிலம் விவசாயிகளி டமிருந்து பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. யமுனா எக்ஸ் பிரஸ்வே என்ற 165 கி.மீ. சாலைக் காக 1225 கிராமங்கள் வரைபடத் திலிருந்தே நீக்கப்பட்டுள்ளன. இதற்கு நஷ்ட ஈடாக கேவலமான குறைந்த தொகை அளிக்கப்பட்டுள்ளது.

ஜெய்தாபூரில் பிரான்சின் அரேவா நிறுவனம் 1680 மெகாவாட் திறன் கொண்ட 6 மெகா மின் உலைகளை ஒரிசாவில் நிறுவ இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு 15 ஆயிரம் ஏக்கரை வளைக் கிறது. இதை எதிர்த்த விவசாயிகளை அரசு வன் முறையாக அடக்குகிறது.

அதேபோல் போஸ்கோ உருக்குத் தொழிற் சாலைக்காக 40ஆயிரம் ஏக்கர் பறிக்கப்படுகிறது. பெரிய வெற்றிலைப் பண்ணைகளை அழிக்க முயற்சி நடக்கிறது. இந்த விவசாயிகளிடம் நிலப் பறிமுதல் சோனியாவின் அனுமதியோடு நடை பெறுகிறது. இதில் மாநில முதலமைச்சர்களுக்கும் கோடிக்கணக்கில் பணம் கைமாறுகிறது.

பாபா ராம்தேவ் போன் றோர் உண்ணாவிரதம் என்ற பட்டினிப் போரைக் கொச்சைப்படுத்தி விடுகிறார்கள். நம் நாட்டைப் பொறுத்த வரை இப்போராட்டம் எல்லாக் காலங் களிலும் மகத்தானதாகவே இருந்து வந்துள்ளது. ஐரோப்பா-அமெரிக்கா போன்ற நாடுகளில் இதற்கு முக்கியத் துவமில்லை.

பசியில் வறுமையில் வாடும் மக்கள் பல காலமாய் நமது நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். பசி-பசி-தீராத பசிதான். பேசுவது கூடப் பசியோடு தான். நீண்ட காலமாய், ‘பசியாறியாச்சா, பசியா றீட்டுப் போங்க’ என்பது தான் நமது பேச்சு. சாப் பிட்டயா, சாப்பிட்டுப் போக லாம் என்பதெல்லாம் இப்போது கலாச்சார வளர்ச்சியில் வளர்ந்துள்ளது. பசி நிரந்தரமானது. பசிக்கு இரவுமில்லை, பகலு மில்லை. இது உயிரினங் களின் பொதுவான குண மாகும். வயிற்றுக்கு எதுவும் தராமலிருப்பதைத் தவம் என்கிறார்கள்.

இதனால்தான் இங்கு உண்ணாவிரத மிருந்து உண்பதை நிறுத்தினால் அவ ருக்குத் துறவிக்குரிய மரியாதை கிடைக் கிறது. காந்தி பதவியை விரும்பாதவ ராக இருந்தார். அவர் தாமாக உண்ணா விரதமிருந்தார். மக்கள் அவரைப் பின் பற்றினர். திரண்டு வந்து மரியாதை அளித்தனர். ஆவேச மடைந்து போராட் டங்களில் ஈடுபட்டனர்.

நமது சங்க இலக்கியத்தில் “பசிப் பிணி தீர்க்கும்” மருத்துவன் வருகிறான். மணிமேகலையில் அமுத சுரபி வரு கிறது. இங்கு வளம் நிறைந்திருந்த போது அமுதசுரபி தேவையில்லை என்று கருதித் தூக்கி எறிந்தனர். பின்பு பஞ்சம் வந்ததும் சுரபியைத் தேடிப் பசிதீர்த்ததாய் காப்பியம் கூறு கிறது. வள்ளலார் “பசி உள்ளவரை மனிதன் கீழ் நிலையிலேயே இருப்பான், அறம் கை விடப் படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பட்டினிப் போர்களை நியாயமான காரணங் களுக்காக, நியாயமானவர்கள் நடத்தினால் மக்கள் திரண்டு வெற்றி பெறுகிறது.

1990ல் ஓட்டை சைக்கிளில் தனது மருந்துகளை எடுத்துக் கொண்டுபோய் ஊர்சுற்றி வியாபாரம் செய்தார். மருந்து தயாரிக்கும் பாத்திரங்களைக் கூட வாடகைக்கே எடுப்பார். அரித்துவாரில் ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்த ராம்தேவ் கடந்த இருப தாண்டுகளில் பெரும் பணம் சேர்த்துவிட்டார். இன்று ஆறு ஏக்கர் நிலத்தில் முப்பது கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வசந்த மாளிகையில் வாழ்கிறார்.

அரித்துவாரில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ராம் தேவ் தனது பதஞ்சலி ட்ரஸ்ட், திவ்யா யோக் மந்திரை நிறுவியுள்ளார். இதன் மதிப்பு ரூபாய் 1115கோடியாகும். இவர் 200 நிறுவனங்களில் ஆயுர் வேதம் முதல் ஒளிபரப்புவரை முதலீடு செய் துள்ளார். திவ்யா பார்மசி மூலம் ஆண்டுக்கு 300 கோடி கிடைக்கிறது. அரித்துவாரில் 95 ஏக்கர் நிலத் தில் ரூ. 500 கோடி செலவில் பெரிய உணவுப் பூங்கா அமைத்துள்ளார். உலகமுழுவதும் இவரது யோகா மையங்கள் 40 உள்ளன.

இவருக்கு ஸ்காட்லாந்து அருகே லிட்டில் கம்ப்ரே என்ற தீவு உள்ளது. இதன் மதிப்பு பல நூறு கோடிகளாகும். பாபா பெரும் மண்ணாசை கொண்டவர். நிலங்களை வாங்கிப் போடுவதில் அவருக்கு அதீத ஆசை உண்டு. டில்லி அருகே 19 ஏக்கரில் ரூ. 500 கோடி செலவில் மிகப்பெரிய ஆடம்பரமான வர்த்தக, குடியிருப்பு வளாகம் கட்டு கிறார். மருந்து விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ. 3000 கோடியும் யோகா மையங்கள் மூலம் ரூ. 3000 கோடியும் கிடைக்கிறது. இவரது கருப்புப் பணமே கேள்விக்குரியதாக உள்ளபோது இவர் நடத்தும் கருப்புப் பண எதிர்ப்பும் நாடகமே என்பது அம்பலமாகிவிட்டது.

பாபா ராம்தேவின் மருந்துகள் போலியான வை. சுடுகாட்டில் கிடைக்கும் மனித எலும்பு கள், மண்டையோடுகளை வைத்து பாபா லேகியம், பஸ்பம் செய்வதாக செய்தி வந்தது. இதை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத், “மருந்துகள் செய்வதற்கு மனித எலும்புகளைப் பயன்படுத்துவது குற்றம்” என்று கூறினார். பாபா கோபமுற்று தனது குண்டர்களை ஏவிவிட்டு டில்லி மார்க்சிஸ்ட் கட்சி யின் அலுவலகம் மீது கல்வீசித் தாக்கினார்.

பாபா வரி கட்டாமலேயே வருமானத்தைப் பெருக்கி பல ஆயிரம் கோடி பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுத்தி வருகிறார். அரசின் பல்வேறு இலாக்காக்கள் இவர் மீது போலி மருந்துகள் குறித்து வழக்குகள் தொடுத்தன. ஆனால் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன் படுத்தித் தப்பவிட்டார். கடந்த பத்தே பத்து வருடங் களில் பாபா தனது சொத்து சாம்ராஜ்யத்தை பெரு மளவு விஸ்தரித்துள்ளார். இப்போது குறுக்கு வழி யில் அரசியலுக்கு வரவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குச் செல்வாக்குத் தேடவும் களமிறங் கினார். மத்திய அரசு பாபா ராம்தேவை தங்கள் கையாளாக்கி அன்னா ஹசாரேக்கு எதிராகத் திருப்ப முயற்சித்து அவருக்கு ராஜ மரியாதை கொடுத்தது. பின்பு அவர் ஆர்.எஸ்.எஸ், பிஜேபிக்கு ஆதரவான வர் என்று தெரிந்ததும் சுதாரித்துக் கொண்டு பாபா வின் உண்ணாவிரதத்தை அடித்து உதைத்துக் கலைத்து விட்டனர். டில்லி போலீசின் வெறி யாட்டத்தில் பலர் காயமடைந்தனர். ரூ.18 கோடி செலவில் போடப்பட்ட பிரம்மாண்டமான ஐந்து நட்சத்திரப் பந்தல் பிரித்தெறியப்பட்டது.

அரித்துவாரில் உண்ணாவிரதமிருக்க தனது சொந்த விமானத்தில் வந்திறங்கிய பாபா ராம் தேவுக்கு மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில்சிபல், பன்சால், சுபோத்காந்த் சகாய் ஆகி யோர் சிவப்புக் கம்பள வரவேற்பளித்தனர். நான்கு அமைச்சர்களும் பாபாவுடன் பேசினர். அவர் களிடம் பாபா “நான் மூன்று நாள் தபஸ் (தியானம்) மட்டுமே செய் வேன்-உண்ணாவிரதம் இருக்க மாட்டேன்” என்று எழுதிக் கொடுத்தார்.

ஆனால் அதை மீறி உண்ணா விரத முடிவை பாபா மேற் கொண்டார். இதைத் தொடர்ந்து சோனியா காந்தியும் பிரதமரும் சந்தித்துப் பேசினர். தொடர்ந்து டில்லி காவல்துறை ஆணையர் பி.கே.குப்தாவுக்கு உத்தரவிடப் பட்டது. நள்ளிரவு 1.30 மணிக்கு 3000 போலீசார் இறங்கி தடியடி, கண்ணீர் புகை வீச்சை நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். பந்தல் முழுவதையும் அகற்றினர். உண்ணா விரதத்தில் கலந்து கொண்ட 50000 பேரில் பாபாவின் சீடர்களோடு பிஜேபி கட்சியினரும் இருந்தனர்.

பாபாவின் உண்ணாவிரதத்தை தொலைக் காட்சி மற்றும் பத்திரிகை ஊடகங்கள் பிரம் மாண்டப்படுத்திப் பிரச்சாரம் செய் தன. கூடவே பிஜேபி கட்சியின் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் காந்தி சமாதியில் ஆடிய ஆனந்த நாட்டி யத்தையும், பாபா ராம்தேவ் பெண்கள் அணியும் சுடிதார் உடை யில் தப்ப முயற்சித் ததையும்கூட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. தொடர்ந்து இன்று வரை ஊடகங் கள் பாபாவுக்குப் பெரிய அளவுக்கு விளம்பரம் தந்து பிரச் சாரம் செய்து வருகின்றன.

டில்லி போலீஸ் பாபாவைப் அரித்துவாரில் கொண்டுபோய் இறக்கிவிட்டதும் தனது ஆர்.எஸ். எஸ். அடையாளத்தைக் காட்டி னார். இனி ஆயுதமேந்தப் போவ தாகவும், அதற்காக தனது சீடர் களுக்குப் பயிற்சியளித்து 11000 பேர் கொண்ட படையை உருவாக்கப் போவதாகவும் கொக்கரித்தார். இப்போது அனைத்தும் அம்பலமாகி நிற் கிறார். பாபா தனது உண்ணா விரதத்தை மத அடையாளத்தை முன்வைத்து இயக்கினார். ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியின் கருவியாகவே செயல் பட்டார். 18 கோடி ரூபாய் செலவில் படா டோபமான முறையில் பந்தல் போடு வதற்கு வேறு மதத்தவரை டில்லி போலீஸ் அனுமதிக்குமா என்பதும் கேள்விக்குரிய விசய மாகும். ஊழல், கருப்புப் பணத்தை எதிர்த்து மதத்தை முன் னிறுத்தி வெற்றி பெற முடியாது.

ஊழல், கருப்புப் பணம் போன்றவை தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையின் தவிர்க்கமுடியாத விளைவுகள். ஊழல், கருப்புப் பணத்திற்கு எதிரான போராட்டம் தாராள மயமாக்கல் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகவே அமைய முடியும். அன்னா ஹசாரே போன்ற திடீர்க் காந்திய வாதி களும் ராம்தேவ் போன்ற ஆர்.எஸ்.எஸ். சாமியார் களும் இந்தப் போராட்டத்திற்குத் தலைமை ஏற்க முடியாது.

ஊழலுக்கு எதிராக ஜூலை 15 முதல் 25 வரை நாடு தழுவிய அறப்போருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.

முழுமையான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்; நீதித்துறையின் உயர் மட்டத்தில் ஊழலைத் தடுக்க தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்; அலை வரிசைக் கற்றை முறைகேடு போன்ற மிகப்பெரிய ஊழல்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ள பெருமுதலாளிகள், அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள் இடையிலான தீய கூட்டணியினால் நடத்தப்படும் ஊழல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தேர்தலில் பணபலத்தைத் தடுக்க விகிதாச் சாரப் பிரதிநிதித்துவ முறைபோன்ற தேர்தல் சீர்திருத்தங்களைச் செயல் படுத்த வேண்டும். கருப்புப்பணத்தைக் கண்டறியவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

ஊழலின் சாயல்கூடப் படியாத இடதுசாரிக் கட்சிகளால்தான் மெய்யான ஊழல் எதிர்ப்புப் போரை நடத்தமுடியும்.

Pin It