சிறுகதைத் தொகுப்புகள் வழியாக நாவல் உலகத்திற்குள் பிரவேசித்த எழுத்தாளர் சோலை. சுந்தரபெருமாள் ‘செந்நெல்’, ‘தப்பாட்டம்’, ‘மரக்கால்’ போன்ற நாவல்களின் மூலம் கூடுதல் கவனிப்புக்குள்ளானவர். ‘தாண்டவபுரம்’ என்ற புதிய நாவலின் வழியாக வரலாற்று நாவலாசிரி யராக நம்முன் இருக்கிறார்.
எழுநூறுபக்க நாவல். மிகப் பெரிய நாவல். நல்ல காகிதத்தில் கச்சிதமான வடிவமைப்புடன், கவனிப்புக்குரிய அட்டை ஓவியத்துடன், புத்தகத் தயாரிப்பில் பாரதி புத்தகாலயத்தின் நல்ல நேர்த்தியும், பிரம்மாண்டமான உழைப்பும் தென்படுகிறது. நாவலாசிரியரின் தேடல் தீவிரமும், தயாரிப்பு முயற்சியின் உக்கிரமும் நன்றாகப் புலப்படுகிறது.
பறவைகள் குறித்த சித்தரிப்புகள், வயல் பரப்புகள், புல்வெளிகள், பூத்திருக்கிற பூக்களின் பருவம், நடக்கிற வெள்ளாமையின் வேலைப்பாடுகள் போன்றவை குறித்த பல விவரிப்பு கள் என்று வரலாற்று நாவல் அந்தக் காலத்துக்கே நம்மை இழுத்துச் சென்று விடுகிறது.
இளம் வயதுத் தோற்றமும், பழுத்த சிவஞானப் பேரறிவும் இணைந்த ஆளுடையாப் பிள்ளையின் நிதானமும், சாந்த அமைதிச் சுபாவமும் நன்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கான ஞானஒளிகாட்டியாக வருகிற பெரியப்பா சிவநாதவைபாடியார், ஆளுடையாப்பிள்ளையின் மனசையும் உடம்பையும் கவர்ந்த மனோன்மணி, ஒற்றன் மித்திரன், தேவதானக் கட்டளையின் அதிபர்களாக வருகிற பிள்ளை கள் என்று நூற்றுக்கும் மேலான பாத்திரங்கள் அவரவர் சுபாவத்தோடும் தனித்துவத் தோற்றத்துடன் நாவலுக்குள் உலவுகின்றனர். மதுரை ஒற்றன் அய்யங்கொண்டான், பாண்டிமாதேவியர், அமைச்சர் குலச்சிறையார், சேனாதிபதி ராஜகீர்த்தி, மன்னர் மாறவர் மனின் நோய்த்தன்மை எல்லாமே அதற்குரிய தனித்தன்மை யுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். ஆளுடையாபிள்ளையின் திருமணம் நிகழ இருந்த வேளாளக் கிராமம் தீக்கிரையாகிற காட்சி மித்திரனின் தூரப்பார்வையில் புலப்படுத்தப்படுகிறது. மனோன்மணியின் பிரசவக் காட்சியும், அதற்கான இடச்சூழலும், பெண்களின் மனோ பாவமும் கண்முன்னால் வருகின்றன.
யாழ்ப்பாணரின் யாழிசையும், சூளாமணியாரின் பாவோசையும் இடையறாது நம்மைப் பின் தொடர்கிறது.
இப்படிப் பாராட்டி எழுத நிறைய இருக்கிறது. இருப்பினும் நாவலின் உள்ளடக்கமும், நோக்க மும் நம்மை கவலைப் படவைக்கிறது.
இந்த நாவல் ஒருமுற்போக்கு நாவல்தானா என்ற கேள்வி எழுகிறது.
இந்த நாவல் சிவமதத்தின் மேன்மையையும், சிவபெருமான் - உமையவள் வழிபாட்டுப் பண்பாட்டு உன்னதத்தையும் பெருமைப்படுத்திக் கொண்டே நகர்கிறது. சிவபெருமானின் தாண்டவத் தோற்றம் முழுக்க ஆராதிக்கப்படுகிறது. ஆளுடையாப் பிள்ளையின் சேத்தி ராடனப் பயணம் துவங்கி, இயங்கி முடிவதுதான் மொத்த நாவல். சைவ வேளாள மக்களின் பக்கபலத்துடன் நடக்கிற இந்தச் சேத்திராடனப் பயணம், ஊர் ஊராக நகர்ந்து, மூடிக்கிடக்கிற சிவாலயங்களைத் திறந்து, சிவா கமப்படி வழிபாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய் வது தான். நாவலின் முடிவில் பாண்டிய - சோழ அரசர்களின் ஆதரவைப் பெறுவதில் முழு நிறைவான வெற்றி பெற்று, சிவமதம் அரசமதமாக மாறுவதுடன் நாவல் நிறைவடைகிறது.
மக்கள் நலன் எதுவும் முன்னிலைப்படுத்தப்படாமல், மதநலன் மட்டுமே முன்னிலைப் படுத்துகிற இந்த நாவல், பிற மதங்கள் மீது வெறுப்பையும் துவேஷத்தையும் மூட்டுகிறது.
மதப்பற்று வேறு, மதவெறி என்பது வேறு. இறை நம்பிக்கையும் பேரன்பில் கனிந்த இதயமும் கொண்டு, ஒரு மதத்தைப் பின்பற்றி வாழ்வது, மதப்பற்று, நம்பிக்கைச் சார்ந்தது குற்றமில்லை.
மதத்தின் மீதான தீவிரப்பற்றால், தான் சார்ந்த மதத்தின் நலனுக்காக பிற மதத்தினரையும், பிற மதங்களையும், வெறுப்பதுவும், துவேஷிப்பதுவும், பகைமை பாராட்டுவதுவும் மத வெறியின் சுபாவம். இது நம்பிக்கை சார்ந்ததல்ல... ஆதிக்கம், அதிகாரம், ஆட்சியதிகாரம் சார்ந்தது, குற்றமானது.
இந்த நாவல் நெடுகிலும் மதவெறியே பயணப்படுகிறது. சமண மதத்திற்கும், பௌத்த மதத்திற்கும், பிராமண மதத்திற்கும் எதிரான பகைமை உணர்வு நாவல் நெடுகிலும் பீறிட்டுப் பாய்கிறது. வாக்கியத்துக்கு வாக்கியம் நீச அமணர்கள், பர பௌத்தர்கள் என்ற வசவுகள். எறும்புக்குக்கூட தீங்கிழைத் துவிடக்கூடாதே என்று மயில் தோகைக் கட்டோடு நடக்கிற சமணத் துறவிகளை கொலைகாரர்களாகவும், சதிகாரர்களாகவும், கொடூரமானவர்களாகவும் சித்தரிக்கிறது.
பாண்டிய மன்னர் மாறவர்மன் உடம்பெல்லாம் வெட்கை நோய். கொப்புளங்கள். அவரது நோயை ஆளுடையாப்பிள்ளையின் மூலிகை கலந்த “துண்ணூறு” குணப்படுத்துகிறது.
வருடக் கணக்கிலான நோய், நிமிடக் கணக்கில் தீர்ந்துபோக... அனைத்து சமணத் துறவி களையும் கழுவிலேற்றிக் கொல்லும்படி மன்னன் உத்தரவிடுவது போகிற போக்கில் உதிர்க் கப்படுகிறது.
சைவமதத்தின் வாதும் சூதும் கலந்த பந்தய ஏற்பாட்டுச் சதியின் மூலமாக சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்ற சதி குறித்த வரலாற்றுத் தகவல் போகிற போக்கில் மறைக்கப்படுகிறது.
சிவமதத்தை உயர்த்திப்பிடிப்பதற்கு நாவல்முன் வைக்கிற காரணங்கள் நான்கு:
தமிழை ஆலயமொழியாக்கும் ஆகமவிதிப்படி ஆலய வழி பாடு, மண்ணின் பூர்வீக மக்க ளுக்குள் ஆதியில் வேர் பிடித்தது சிவமதம்-வைணவ மதம், ஆவு டைலிங்க வழிபாடு மூலம் இல்வாழ்க்கையை கௌரவப்படுத்துவது, தாந்திரீகப் பண்பாட்டின் மூலம் மூலிகைத் திருநீறு உட்பட சித்த வைத்தியம்.
தமிழ்நாடு தவிர்த்து பாரத தேசத்தின் பிற மாநிலங்களில் பரவுகிறபோது சிவமதம், தமிழை ஆலயமொழியாக்குமா?
அந்த மக்களுக்கு சிவமதம் அந்நிய மதம்தானே? ஆவுடை லிங்க வழிபாடும், தாந்திரீகமும் சிவமதத்தின் கண்டுபிடிப்பல்ல. இனக்குழு மக்களின் வாழ்முறைப் பண்பாட்டிலிருந்து தன் வயப்படுத்திக் கொண்டது. இனக்குழு மக்களிடமிருந்த இயற்கை வழிபாட்டை இறைவழி பாடாக மாற்றியதுதான் சிவமதம். அவர்களிடமிருந்த மூலிகை வைத்தியத்தைத் தன்வயப் படுத்தி சுவடியாக்கியது சிவமதம்.
ஊர்ஊராகப் பயணப்பட்டு சிவாலயங்களைத் திறந்து பூஜை நடத்திய ஆளுடை யாப்பிள்ளையும், வேளாள, வைசிய மக்களின் ஆதரவையும் அரவணைப்பை யும் பெற்றுக் கொண்டாரே தவிர, பண்ணையடிமைகளாக சேற்றில் கால்வைத்து உலகுக் கெல்லாம் சோற்றைத் தந்த மண் ணின் மைந்தன்மீது அன்புமில் லை, அரவணைப்புமில்லை. ஆலயத் தமிழ்வழிபாடுமில்லை.
பூர்வீகக்குடிகளின் வம்சாவளி களான சேற்று மனிதர்களுக்கும் கறுப்புத் தமிழர்களுக்கும் சிவாலயக் கதவுகள் திறந்து வரவேற்க வில்லை என்ற பேருண்மையை நாவல் நினைவுபடுத்தாமல் மௌனமாக நகர்கிறது.
வேலையில்லாத காலத்தில் பண்ணையடிமைகளுக்கு கூடை பின்னுகிற தொழிற் கல்வி தந்து, பின்னப்பட்ட கூடைகளை விற்றுத்தருகிற சேவையையும் சமணப்பள்ளி செய்கிறது என்கிற உண்மையை போகிற போக்கில் உதிர்த்துவிட்டுப்போகிறது நாவல்.
பெரும்பான்மை அடித்தட்டு மக்களுக்கு வாழ்வுரிமையும், ஜாதி கடந்த சமத்துவ உரிமை யும், கல்விகற்கிற உரிமையும் சமணமடம் தந்தது என்கிற வர லாற்றுப் பேருண்மையைக் கண்டுகொள்ளாமல் நழுவுகிறது இந்த நாவல்.
தமிழின் மகுடமாக இன்றும் திகழ்கிற திருக்குறள், சமண பௌத்த தத்துவக் கொடை என் பது யாரும் மறந்துவிட முடியாத பேருண்மை. தமிழின் மிகப்பெரிய அணிகலன்களாக கருதப்படும் ஐம்பெரும் காப்பியங்கள் சமணர்கள் காலத்தில்தான் படைக்கப்பட்டன. தமிழுக்கு சமண பௌத்த மதத்தினரின் மகத்தான சேவைகள் கிட்டி யுள்ளன. சூத்திரசாதி மக்கள் மதச் சுரண்டலிலிருந்து மீட்கப்பட்டார்கள் சமணத்தால்.
வர்ணாசிரமம் என்ற மாயக்கயிறு சிவத்தையும் வைணவத்தையும் கட்டிப்போட்டது. அரியும் சிவனும் ஒண்ணாகி, அறியாதவன் வாயில் மண்ணாயிற்று.
அந்தக் கயிறை அறுத்ததால் தான், சமணத்தின் மீதும், பௌத்தத்தின் மீதும் சிவ - வைணவ மதங்களுக்குப் பகைமை ஏற்பட்டது என்ற வரலாற்றுப் பேருண்மையை இந்த வரலாற்று நாவல் மறக்கடிக்கப் பார்க்கிறது.
இந்த நாவலின் மொழி, மிகுந்த அலுப்பூட்டக்கூடியது. வாசிப்பு சுவாரஸ்யம் சுத்தமாக இல்லை. எழுநூறு பக்கத்தை வாசித்து முடிப்பதற்குள் மிகப் பெரும் சுமையாகிவிட்டது.
வர்ணாசிரமத்துக்கும், வேள்விகளுக்கும் எதிரான மக்கள் மதமாக திரண்டெழுந்து கால்நடைகளையும் வேளாண் மையையும் காப்பாற்றிய சமண, பௌத்தத்தின் முக்கியத்துவமிக்க வரலாற்றுப் பேருண்மையை மூடி மறைத்து சரித்திரப் பாடப் புத்தகம் இப்படிப் பேசும், “சைவ சமய மறுமலர்ச்சியால் தமிழகம் விடுதலைபெற்று, தமிழ் வளர்ந்தது. தேவாரம், திருவாசகம் திருவிளையாடற் புராணம் போன்ற தமிழ்நூல்கள் மலர்ந்தன”.
அதே பணியை ஒரு முற்போக்கு முகாமின் முன்னணி எழுத்தாளரும் நாவல் இலக்கியத்தின் மூலம் செய்திருப்பது துரதிருஷ்டவசமானது.
-மேலாண்மை பொன்னுச்சாமி
வெளியீடு: பாரதி புத்தகா லயம், 421, அண்ணா சாலை
வரலாறை அடிப்படையாகக் கொண்ட புதினங்களும், நாவல்களும் தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல. அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘பார்த்திபன் கனவு’, அமரர் சாண்டில்யனின் ‘கடல் புறா’ என பல நாவல்கள் தமிழர்களின் நெஞ்சில் என்றும் நீங்காத இடம் பெற்றவை. வரலாற்று உண்மைகளைச் சிதைக்காத வகையில் சில புனைவு கதாபாத்திரங்கள் மேற்கூறிய நாவலுக்கு வளம் சேர்த்திருக்கின ்றன. ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்த ‘ஆழ்வார்க்கடியா ன்’, உயிரோட்டமுள்ள சிறந்த ஒரு புனைவுக் கதாபாத்திரத்திற ்கு இலக்கணமாக விளங்குகின்றான் . திருஞானசம்பந்தர ் வரலாறை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புனைவு நாவல் என அறிமுகம் கூறி எழுதப்பட்ட ‘தாண்டவபுரம்’ நாவல் பெரும் எதிர்ப்பையும், தடைகோரிய போராட்டங்களையும ் எதிர்கொண்டது. ‘தாண்டவபுரம்’ நாவலின் உள்ளீடற்ற சொத்தைகளையும், பொத்தல்களையும் அறிவுபூர்வமாக வெளிப்படுத்தாமல ், பெரும் எதிர்ப்புக்களைய ும், போராட்டங்களையும ் நடத்துவதன் மூலம் அந்நாவலுக்கு பெரும் விளம்பரத்தையும் , அந்த கீழ்த்தர, அருவெருக்கத்தக் க, கக்கூஸ் நாவலின் ஆசிரியர் திரு.சோலை சுந்தரப்பெருமாள ுக்கு ‘பெரும் அறிவுஜீவி’ என்ற பட்டத்தையும் அவ்வெதிர்ப்பாளர ்கள் வழங்குகின்றார்க ள் என்பதை அவர்கள் அறிவது நல்லது. ‘தாண்டவபுரம்’ நாவலாசிரியர் திரு.சோலை சுந்தரப்பெருமாள ் கூறுவதுபோல ஒரு வரலாற்றுப் புதினமே அல்ல; இந்நாவலாசிரியரி ன் கூற்றுப்படி அவரின் நண்பரும், இந்து அரநிலயத்துரையில ் பணிநிறைவு பெற்றவருமான திரு சி.செயராமன் என்பவரால் நாவல் எழுத உசுப்பிவிடப்பட் டு, இந்நாவலாசிரியரி ன் அரைகுறை பொத்தல் வாசிப்பின் பின்புலத்தில், சொந்தக்கற்பனையி ல், இந்நாவலாசிரியரி ன் ‘கொழகொழா மொடமொடா’ உள்ளிட்ட அருவெறுப்பான சுயஅனுபவங்களை திருஞானசம்பந்தர ின் வாழ்க்கையில் வந்ததாக ஏற்றி எழுதப்பட்ட, ‘திரு.சோலை சுந்தரப்பெருமாள ின் ‘கொழகொழா மொடமொடா’ சுயவரலாறே’ ‘தாண்டவபுரம்’ நாவல். இந்நாவலாசிரியர் திருஞானசம்பந்தர ின் ஒருசில பாடல்களையும், பெரியபுராணத்தில ் ஒருசில பகுதிகளை மட்டும் விரைவு வாசிப்பு செய்துவிட்டு, அரைவேக்காடு அறிவுடன் எழுதியதே இந்நாவல் ஆகும்; மேலும், இந்நாவலாசிரியர் திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல்களை முழுமையாகப் படித்தவர் அல்லர் என்பதும், இவர் ‘திருஞானசம்பந்தர ின் அகச்சான்று’ என்று கூறுவது ‘அப்பட்டமான பொய்’ (அல்லது ‘அகச்சான்று என்றால் என்ன என்பது இந்நாவலாசிரியரு க்கு புரியவில்லை) என்பதும் இங்கு அம்பலமாக்கப் போட்டிருக்கின்ற து; புரியாத ஒன்றைப் பற்றிப் புரிந்ததைப்போல் எழுதிய அறிவாளியே இந்நாவலாசிரியர் என்பதும் இங்கு வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டிருக ்கின்றது. இதற்கான சில நிரூபணங்கள் தாண்டவபுரம் நாவல் குறித்து ‘இப்புதின’ எழுத்தாளர் சோலைசுந்தரபெரும ாள் எழுதிய இந்நாவலுக்கான முன்னுரையிலிருந ்து சில பகுதிகளும், ‘சிவ ஒளி’ மாத இதழுக்கு அவர் அளித்த விளக்கங்களிலிரு ந்து சிலபகுதிகளும் (விளக்க எண்களுடன்) அவைகளில் பொதிந்துள்ள முரண்பாடுகளும் இங்கு உதாரணங்களுக்காக தரப்பட்டிருக்கி ன்றன.
நாவலாசிரியரின் (‘சிவ ஒளி’ மாத இதழுக்கு அளித்த’) விளக்கம்1. தாண்டவபுரம் நாவலுக்கு அடிப்படையான அகச்சான்றாக, வரலாறாக அமைந்திருப்பதுதிருஞானசம்பந்தர ின் தேவாரப்பாடல்களே .
முரண்பாடுகள்: அகச்சான்று என்பது படைப்பாளியின் கவிதைப் போக்கில் இயல்பாக வெளிப்படும் அவரைப் பற்றியோ அல்லது மற்றவற்றைப் பற்றியோ அவர்தம் திருப்பாடல்களில ் பொதிந்துள்ள சான்றுகளே அகச்சான்றுகள் ஆகும். ஞானசம்பந்தப் பெருமானின் அகச்சான்றுகள் அவருடைய குழந்தைப் பருவத்தை நிரூபிக்கின்றன. ஆனால், இந்த நாவலாசிரியர் ஞானசம்பந்தப் பெருமானைக் கட்டிளம் காளையாகச் சித்தரிக்கிறார் . இது “தாண்டவபுரம் நாவலுக்கு அடிப்படையான அகச்சான்றாக, வரலாறாக அமைந்திருப்பது திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல்களே ” என்ற இவரது விளக்கத்திற்கு முற்றிலும் முரணானது. திருஞானசம்பந்தர ின் தேவாரச் சான்றுகள் பின்வருமாறு:
பாண்டிய மன்னன் கூன் பாண்டியன் முன்பிலேயே சமணர்கள் ஞானசம்பந்தப் பெருமானை வெருட்டும் வண்ணம் நடந்துகொள்ள, குழந்தைப் பருவத்திலுள்ள சம்பந்தப்பெருமா னைக் காக்கத் தாயுள்ளம் கொண்ட பாண்டிமாதேவி மங்கையர்க்கரசிய ார் பரிவுகொள்கின்றா ர்; இந்தச் சூழலில் அன்னையைத் தேற்ற சம்பந்தப் பெருமான் பாடிய பாடல் இதோ:
மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு மா பெருந்தேவி! கேள்
“பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு எய்திடேல்!
ஆனைமாமலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர்
ஈனர்கட்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.
இந்தப் பாடலில் ஞானசம்பந்தப்பெர ுமான் தன்னை ‘பால் மணம் மாறாத பாலகன்’ என இரக்கம் கொள்ள வேண்டாம் என்னும் பொருள்பட, “பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன்” என்று நீ பரிவு எய்திடேல்! என்று பாண்டிமாதேவிக்க ுக் கூறுவது ஒரு சிறந்த அகச்சான்று. அகச்சான்றிபடி பால் மணம் மாறாத பாலகனை, கட்டிளம் காளையாக கற்பனை செய்து, கடும் வக்கிரபுத்தியுட ன் இந்நாவலாசிரியர் எழுதிய பாலுணர்வைத்தூண் டும் நாவலின் பகுதி இதோ:
"அவர் மனசும் உடம்பும் ஒரே திக்கில் நெளுநெளுப்பைத் தூண்டிக் கொண்டிருந்தன.அத ில் இருந்து விடுபட தன்னைத் தயார்படுத்திக் கொள்வதில் ஈடுபட்டு இருந்தார்"
"எப்போது அசந்து உறங்கிப் போனாரோ அவருக்கே நினைவில்லை. அவர் உடம்பிலும் மனசிலும் ஏறி முறுகிக் கிடந்த நெளுநெளுப்பு முற்றிலும் வடிந்து போய் சாசுவதமாய் உணர்ந்தார்."
(தாண்டவபுரம் நாவல் : பக்கம் 320)
"இடுப்பில் இருந்த உத்தரியத்தில் திட்டுதிட்டாய் படிந்திருந்த கொழகொழப்பு இப்போது காய்ந்து முடமுடப்பாக ஆகியிருந்தது. அதிலிருந்து வெளிப்படும் மெல்லிதான இனம் புரிந்து கொள்ளக் கூடிய அம்மணத்தை தன்னோடு நிழலாக இருக்கும் சரணாலயரோ யாழ்ப்பாணரோ உணர்ந்துவிடக் கூடாது என்ற பரபரப்பில் எழுந்தார்"
(தாண்டவபுரம் நாவல் : பக்கம் 321)
முதலில், இந்த நாவலாசிரியருக்க ு அகச்சான்று என்றால் என்ன என்றே தெரியவில்லை. ஐந்து வயதுக்குட்பட்ட, இறையருளால் ஓதாது உணர்ந்த ஞானசம்பந்தப்பெர ுமானை, கட்டிளம் காளையாகச் சித்தரித்து, தினம் கன்னிக் கனவினில் மூழ்கி, விந்து விரையமாகியதில் அவமானப்படும் ஒரு சராசரி மனிதராகக் காட்ட முயல்வதில் இவர் என்ன சமூகச்செய்தி சொல்லவருகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அது நாவலாசிரியரின் சுய அனுபவமாக இருக்கக்கூடும்? இவர் தமிழாசிரியர் என்பது இன்னும் வெட்கக்கேடான ஒன்று. அருவெறுப்பான, அழுகிப்போன சிந்தனைகளைக் கொண்ட இவர் பாலுணர்வைத்தூண் டும் செக்ஸ் கதை எழுதமட்டுமே லாயக்கானவர். இவர் போன்றோருக்குச் சாகித்திய அகாடமி விருது கொடுக்கும் அறிவுஜீவிகள் உள்ளவரை இவர் போன்றோரின் சொத்தை ஆய்வுகள் தொடரும். இந்த நாவலைத் தடை செய்யக் கூடாது. இந்த அழுகிய மனம் கொண்ட அசிங்கம் பிடித்த ‘படைப்பாளி’ என்ற போர்வையில் திரியும் கொக்கோகம் எழுதும், கீழ்த்தர வார்த்தைகளின் சாக்கடை வணிகனை தமிழ்ச் சமூகத்துக்குத் தோலுரித்துக் காட்டும் சான்றாவணம் அல்லவா இந்த அழுகல் நாவல். இவரைப் போன்ற அழுகிய சிந்தனையாளருக்க ு கவிஞர் மேத்தாவின்
“காளைப்பருவத்தி ல் எல்லாம் சுகக் கன்னிக் கனவினில் மூழ்கி
நிதம் வேளை தவறாமல் உண்டு திண்ணை வீழ்ந்து துயில் கொண்டதல்லால்”
என்ற மணியான வரிகளே இலக்கணம்.
நாவலாசிரியரின் (‘சிவ ஒளி’ மாத இதழுக்கு அளித்த’ விளக்கம்5. ஆளுடையப்பிள்ளை, குருகுலப்பயிற்ச ிப் பெற்று தான் இருக்க வேண்டும் என்பதைஉறுதியாக நம்பமுடிகிறது. அவ்விடத்தில் தான் சிவவாழ்முறையைக் கற்றதோடுதமிழ்மக ்களின் வாழ்வியலைச் சொல்லும் தொல்காப்பியத்தை த் தெளிவாக கற்றத்தேர்ந்திருக்கிறார்.
முரண்பாடுகள்: இந்த விளக்கத்திற்கான எந்தச் சான்றும் தரப்படவில்லை.
நாவலாசிரியரின் (‘சிவ ஒளி’ மாத இதழுக்கு அளித்த’ விளக்கம்6. `சிவம்’ தொல்குடி சமூகத்தின் இறுதியில் திணைச்சமூகம் நிலஉடமைச் சமூகமாகஅரும்பும ் நிலையில் ஐந்திணைக்குரிய தெய்வங்கள் இணைக்கப்பட்டு சிவம் பெரும்தெய்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.
முரண்பாடுகள்: இந்த விளக்கத்திற்கான எந்தச் சான்றும்(அகம்/ப ுறம்) தரப்படவில்லை. ஐந்திணைக்குரிய தெய்வங்கள் குறிக்கப்பட்ட திணைச்சமூக காலத்திலேயே சிவபெருமானைக் குறித்த பதிவுகள் சங்க இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்றன.
“தாண்டவபுரம்” நாவலுக்கான முன்னுரையில் சோலை சுந்தரப் பெருமாளின் பிதற்றல்
பிதற்றல்1:
“தாண்டவபுரம்” நாவலுக்கான முன்னுரையின்1௦3 - ம் பத்தியில் ஆசிரியர் சோலை சுந்தரப்பெருமாள ின் தீர்ப்பு பின்வருமாறு:
"ஆளுடையப்பிள்ளை , பாலகனாக சேத்திராடனம் மேற்கொண்டார் என்பதும் அவருக்கு சிவபார்வதி முலைப்பால்அமுது ஊட்டினாள் என்பதும் புராணக் கற்பனையே. மிகைபட ஏற்றிக் கூறும் சேக்கிழாரின் கற்பனையே அன்றி வேறில்லை. புராணப் படைப்பாளிகளுக்க ு இப்படியான கற்பனை செய்து படைப்பைச் செய்திடும் உரிமை உண்டு."
ஆனால், திருஞானசம்பந்தர ின் அகச்சான்று அடங்கிய பின்வரும் தேவாரப் பாடல்கள் இந்நாவலாசிரியரி ன் வாசிப்புக் குறைபாட்டையும், அரைவேக்காட்டுத் தனமான ஆணவத் தீர்ப்புகளின் ஓட்டைகளையும் வெட்ட வெளிச்சமாக்கும் .
போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்
தாதையார் முனிவு உற, தான் எனை ஆண்டவன்;
காதை ஆர் குழையினன்; கழுமல வள நகர்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே!
3ம் திருமுறை: 24:திருக்கழுமலம ்:3053-ம் பாடல்
இப்பாடலின் பொருள் பின்வருமாறு: பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப ் பெருமானுக்கு ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து "யார் தந்த அடிசிலை உண்டனை?" என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியின ை நல்கி என்னை ஆட்கொண்டார். அத்தகைய பெருமையுடைய சிவபெருமான் காதிற் குழையோடும் பேதையாகிய உமாதேவியோடும் கழுமலம் என்னும் வளநகரில் வீற்றிருந்தருளு கின்றார். ( போது - மலர். போதை ஆர் - மலரை யொத்த; பொற்கிண்ணம், அடிசில் - சோறு. போனகம்; இங்கே அடிகளார் உண்டருளியது பாலேயாயினும், அதிற்குழைத்த உணவு ஞானம் ஆதலால் அடிசில் எனப் பட்டது. )
கடல் வரை ஓதம் மல்கு கழி கானல் பானல் கமழ் காழி என்று கருத,
படு பொருள் ஆறும் நாலும் உளது ஆக வைத்த பதி ஆன ஞானமுனிவன்,
இடு பறை ஒன்ற அத்தர் பியல் மேல் இருந்து இன் இசையால் உரைத்த பனுவல்,
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க, வினை கெடுதல் ஆணை நமதே.
2ம் திருமுறை: பதிக எண்.84 - திருநனிபள்ளி : 2387ம் பாடல்.
இப்பாடலின் பொருள், "கடல் எல்லையில் உள்ள வெள்ளம் மிக்க கழிகளையும் சோலைகளையும் உடையதாய்க் குவளைமலரின் மணம் கமழும் காழி என்று கருதப்படும் பதியின்கண் நால்வேத, ஆறங்கங்களை அறிந்துணர்ந்தவன ாய்த் தோன்றிய ஞானமுனிவன், தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதிப்பறை ஓசையோடு நள்ளிருளில் நடனமாடும் எந்தை நனிபள்ளியை உள்க வினைகள் கெடும் என்பது நமது ஆணையாகும். (ஆறும் நாலும்-ஆறங்கங்க ளும் நால்வேதங்களும், அத்தர்பியல்மேல் இருந்து-தந்தையா ர்
திருத்தோள்மிசை அமர்ந்து, பிடரியின் மேல் அமர்ந்து)
மேலே குறிப்பிட்ட இரண்டு பாடல்களிலும் உள்ள அகச்சான்றுகளின் அடிப்படையில்
1. பொற்கிண்ணத்தில் ஞானம் பெருகும் அடிசிலை இறைவனின் ஆணைப்படி உமாதேவியார் திருஞானசம்பந்தப ் பெருமானுக்கு ஊட்ட, பால் அறாவாயராக விளங்கிய அவரைப் பார்த்து "யார் தந்த அடிசிலை உண்டனை?" என்று தந்தையார் கோபித்து வினவ இறைவர் தம் திருக்காட்சியின ை நல்கி என்னை ஆட்கொண்டார் என ஞானசம்பந்தரே பாடியிருப்பதும்.
2. ஞானசம்பந்தர் திருத்தலங்களுக் கு யாத்திரை மேற்கொள்ளும்போத ு பாலகனாக இருந்ததும், தந்தையின் பிடரியின் மேல் அமர்ந்து பாடியருளியதும் ஞானசம்பந்தரின் திருவாக்கின் அடிப்படையிலேயே சேக்கிழார் பெருமான் பாடினார் என்பதும்
உள்ளங்கை நெல்லிக்கனியாக அனைவருக்கும் விளங்கும். சேக்கிழாரின் புராணக் கற்பனை என்று அறிவுஜீவி சோலை சுந்தரப் பெருமாள் கூறுவது எவ்வளவு அபத்தம் என்பது வாசகர்களுக்கு விளங்கும். இந்தப் பேத்தல் நாவலுக்குத் தடையாம்! அந்தத் தடைகளை இந்த ஆல் இன் ஆல் அழகு சுந்தரம் தகர்த்தாராம்!!
தமிழ் ஆர்வலர்களுக்கும ் சைவ சமய ஆர்வலர்களுக்கும ் ஓர் அன்பான வேண்டுகோள்! இது போன்ற கால் காசுக்குப் பெறாத கொக்கோகம் தர அசிங்கங்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று வீண் விளம்பரம் தராதீர்கள். கக்கூஸில் வைத்துப் படிப்பதற்குக் கூடத் தரமில்லாத நாவல்கள் எழுதவும் படைப்பாளிகள் என்று பட்டம் கட்டிக்கொண்டு திரியும் அற்பர்களுக்கும் எழுத்துரிமை உண்டு. அத்தகையவர்களால் சைவத்துக்கோ, திருஞான சம்பந்தப்பெருமா னுக்கோ எந்தக் குறைவும் ஏற்பட்டு விடாது. தமிழில் அரிச்சுவடி கற்கும் என்னைப் போன்றோருக்கே இந்நாவலின் தரம் விளங்கும்போது, மற்றவர்களுக்கு புரியாதா? எழுதுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு; அவர்களை அடையாளம் காட்டி விமர்சிப்பதற்கு வாசிப்பாளர்களுக ்கு உரிமை உண்டு. விமர்சனம் தொடரும்.
பேரா.முனைவர். ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை, ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
பிதற்றல்2:
“தாண்டவபுரம்” நாவலுக்கான முன்னுரையின் 118 - ம் பத்தியில்
"தஞ்சை மண்ணின் கீழக்கோடியில் உள்ள சீர்காழி என்று அழைக்கப்படும் சிவபுரமே ஆளுடையப்பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட திருஞானசம்பந்தர ் பிறந்த ஊராகும். " என்று பிதற்றியுள்ளார் இந்நாவலாசிரியர் .
சமயக் குரவர்கள் நால்வரில், திருஞானசம்பந்தர ை 'ஆளுடைய பிள்ளை' என்றும், திருநாவுக்கரசரை 'ஆளுடைய அரசு' என்றும், சுந்தரமூர்த்தி பெருமானை 'ஆளுடைய நம்பி' என்றும், மாணிக்கவாசகப் பெருமானை 'ஆளுடைய அடிகள்' என்றும் அழைப்பது சைவ மரபு. 'ஆளுடைய' என்ற அடைமொழி இறைவனால் ஆட்கொள்ளப்பட்டவ ர்' என்ற பெருமைக்காகவும் , 'பிள்ளை' என்பது குழந்தைப் பருவத்தில் இருந்தமையால் சம்பந்தருக்கும் , 'அரசு' என்பது 'நாவுக்கரசே' என்று இறைவனால் அழைக்கப்பட்டமைக ாக அப்பருக்கும், 'நம்பி' என்பது 'தம்பிரான் தோழன்' என்ற பெருமைக்காக சுந்தரருக்கும், 'அடிகள்' என்பது அழுது அடியடைந்த அன்பராம் மாணிக்கவாசகருக் கும் வழங்கப்படுவது சைவசமயிகள் அனைவரும் அறிந்த ஒன்று. சிறப்புப் பெயரை இயற்பெயரென சாதிக்கும் நாவலாசிரியரின் கண்டுபிடிப்பு ஒன்றுக்காகவே சாகித்திய அகாடமி விருது வழங்கப்படலாம்!! ! வெட்கக்கேடு!!!!
பேரா.முனைவர். ந. கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை, ம.சு. பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
பல்கலைக்கழகம்
RSS feed for comments to this post