இயற்பியல்:

இயற்பியலுக்கான நோபல் பரிசு அக்டோபர் 6ந் தேதி அறிவிக்கப்பட்டது. தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் 2 புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த விருது கிடைத்து உள்ளது. சீனாவைச் சேர்ந்த சார்லஸ் கே காவ் (75), அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் இஸ்மித், கனடாவைச் சேர்ந்த வில்லார்ட் எஸ்பாய்லே (85), ஆகிய மூவர் இந்தப் பரிசை பகிர்ந்து கொள்கின்றார்கள்.

வேதியியல்:

வேதியியலுக்கான பரிசையும் 3 பேர் பகிர்ந்து கொள்கின்றார்கள். அமெரிக்க வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இஸ்ரேலைச் சேர்ந்த பெடா இயோனந்த, அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டீட்ஸ் ஆகியோர் வேதியியல் நோபல் பரிசை பெறுகிறார்கள். அக்டோபர் 7 ந்தேதி இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டது.

இலக்கியம்:

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அக்டோபர் 8ந் தேதி அறிவிக்கப்பட்டது. ருமேனியா நாட்டைச் சேர்ந்த ஹெர்டா முல்லர் என்பவரின் படைப்புக்கு இந்த பரிசு கிடைத்துள்ளது.

அமைதி:

அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 9 ந் தேதி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அறிவிக்கப்பட்டது. உலக சமாதானம் மற்றும் உலக நாடுகளில் அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளுக்காக பாடுபட்டதற்காக, ஒபாமாவுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

மருத்துவம்:

இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எலிஷபெத் எச். பிளக்பர்ன், கேரோல் டபுள்யு கிரிடியர், ஜேக் டபிள்யூ. ஷீஸ்டாக் ஆகியோர் இந்தப் பரிசை பெற தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

பொருளாதாரம்:

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்டோபர் 12ந் தேதி அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த எலினோர் ஆஸ்ட்ரோம், ஆலிவர் இ.வில்லியம்சன் ஆகியோர் இந்தப் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பரிசுக்குழு அறிவித்தது. 

Pin It