பெண்கள் போராட்டத்தை முன்னின்று நடத்துவது பலருக்கு முதலில் வியப்பாக இருக்கிறது, எப்படி இது நடந்தது?

என்னுடைய சொந்த ஊர் கன்னியாக்குமாரி சின்னமுட்டம். எனக்கு இங்கே கல்யாணம் நடந்து இருபத்தி ஜந்து வருடம் ஆகிறது. எங்களுக்கு மூன்று குழந்தைகள், இரண்டு ஆணும் ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். ஒருவன் கொச்சியில் பாதிரியாருக்கு, ஒருவன் திருநெல்வேலியில் கல்லூரிலும், பெண் பத்தாம் வகுப்பும் படிக்கிறாள். கணவர் வெளிநாட்டிலும் இருக்கிறார். நான் படிபறிவு இல்லாதவள். ஆனால், போராட்டத்தில் கலந்து கொண்ட பிறகுதான் பல விசயங்களை கற்றுக்கொண்டேன்.

அணு உலைப் பற்றியும் பிற விசயங்களைப் பற்றி தெரிந்தவர்தான் போராட்டத்தில் எங்களை வழி நடத்துகிறார். அவர் ஒன்றும் பாமரர் இல்லை. எங்கள் அம்மா என்னை பதினைந்து வயதிலேயே போராட்டதிற்கு அழைத்து போனார். அது போல போராட்டதிற்கு என் மகளை நான் அழைத்து கொண்டு போகிறேன். நாங்களாவது வாழ்ந்து முடித்து விட்டேம் எங்கள் குழந்தைகளும் அவர்கள் சந்ததியினரும் வாழ்வதற்குகாக போராடும் தேவை ஏற்ப்பட்டது.

ஒரு விமானம் மோதினால் கூட வெடிக்காது என்கிறார்கள். அப்படி என்றாள் பிரதமரையோ முதல்வரையோ நாராயசாமியையோ அங்கே வைத்து ஒரு பரிசோதனை செய்யுங்கள் நாங்கள் போராடமல் இருகிறோம்.

தன் முனைப்பாக எப்படி போராட்டம் அமைந்தது. குடும்பத்தையுயும் போராட்டத் தையும் எப்படி சாமளித்திற்கள்?

இந்த அணு உலை வந்தால் வேலை கிடைக்கும் வாழ்வாதாரம் உயரும் என்று சொன்னார்கள். ஜப்பான் விபத்திற்கு பிறகு தான் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை கண்கூடக் பார்த்தோமே. நாடு வல்லரசாக ஆக வேண்டும் என்றால் சில கிராமங்கள் அழிய வேண்டும் என்கிறாகள். அப்படி என்றால் எங்கள் மரணத்தில் தான் நாடு வல்லரசாக வேண்டுமா?

அணுக்கழிவை கடலில் கொட்டப் போவதாகவும் கூறுகிறார்கள், நாங்கள் பிடிக்கிற மீன்கள் விஷமாக மாறிவிடும் எப்படி நாங்கள் வாழ்வது? அணு உலை கதிவீச்சு பாதிப்பால் பாதிக்கப் பட்டால் யார் எங்களுடன் பழகுவார்கள் நாங்கள் அந்நியகளாக மாறிவிடுவோம். பல ஊர்களில் லிருந்து எங்களுக்காக போராட வருகிறார் கள் என்கிற போது ஒரு வேலை உணவுடன் போராடுவது பசி தெரியாமல் போகிறது.

எப்படி பட்டினி போராட்டம் என்கிற முடிவுக்கு வந்தீர்கள்? எத்தனை பேர் அதில் கலந்து கொண்டார்கள்?

நூற்றி இருபத்தி ஏழு பேர் கலந்து கொண்டாம். பனிரெடு நாள்கள் தொடர்ந்து இருந்தோம். நாங்கள் உங்களுடன் இருப்போம் என சொன்ன தால் பட்டினி போராட்டத்தை கை விட்டோம், ஆனால் சங்கரன் கோவில் இடைத்தேர்தல் வரை எங்களுடன் இருந்தவர்கள் அது முடிந்த உடன் எங்களை போலிஸை கொண்டு அடக்கி ஒடுக்கினார்கள்.

சுற்றுசூழல் பிரச்சனைகளில் எப்போது பெண்கள் தான் முன்னின்று நடத்துகிறார்களே?

நான் சிறு வயதில் இருந்தே கடலில் சென்று சிப்பி எடுத்து விற்பனை செய்வேன். எங்கள் அம்மாவிடம் பத்து மாதம் தான் கருவில் இருந் தேன். ஆனால் கடலில் பல வருடங்களாக கடல் வசிக்கிறேன். கடலோடு இருக்கும் போது அம்மா தொட்டில் ஆட்டுவது போல் இருக்கும். போலிஸ் எங்களை தாக்கிய போது கடலோடு உறவாடிய தால் தான் நீச்சல் அடித்து தப்ப முடிந்தது. இல்லை என்றால் கடலில் மூழ்கி இறந் திருப்போம்.

நீங்கள் மகிழ்சியுற்ற தருணம் எது?

சுந்தரி,செல்வி, செவியர் அம்மா நான் என எந்த கூட்ட்த்திற்கும் ஒன்றாக செல்வோம். கோயமுத்தூருக்கு தொழிலதிபகர்லிடம் அணு உலை பாதிப்பு பற்றி எடுத்து சொல்வற்காக ஜந்து போனோம். அதி முக்கியமானவர் லிட்வின் அக்கா, கல்யாணம் ஆகதவர். உதயக்குமார் அமைப்புடன் இணைந்து பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். அவர்தான் எங்களுக்கு அதிகம் ஊக்கத்தையும், ஆக்ரோசத்தையும் ஊட்டினார்.

போலிஸ் தடியடி நடந்த அன்று நான் கைதாவதை பார்த்த மகள் தலையில் மண்ணை வாறி போட்டுக்கொண்டு அழுது கொண்டிருந்தால். எனது போனும் தொலைந்து போய் விட்டது. என் கண்வர் வெளிநாட்டிலும் மகன் கொச்சியிலும் மகள் மஞ்சகாமாளையுடன் வீட்டில் இருந் தார்கள் யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு மகள் இறந்தாலும் கவலையில்லை இனி மேல் ஒராயிரம் மகள்கள் வாழ்வார்கள் என்பதால் எல்லா துன்பங்களையும் பொருத்து கொண்டோன். எனக்கு சுகர் இருக்கிறது ஜந்து மாதமாக செக் பண்ண முடியவில்லை, கண் கூட மங்கிவிட்டது. கண்ணாடி கூட வாங்க போக முடியவில்லை என்ன செய்வதென்று தெரியவில்லை.

எத்தனை பேர் மேலே வழக்கு இருக்கிறது?

நாயிரம் பேர் மேலே வழக்கு இருக்கிறது. என் மேல் தனிப்பட்ட வழக்கும் தொடுத்திருக் கிறார்கள். என் தங்கைகள், கொச்சியில் இருக்கிற மகன் என யாரையும் பார்க்க போக முடியவில்லை நான் அனாதையாக இருக்கிறேன். கணவர் வெளிநாட்டில் மாதம் ஏழாயிரம் வரை சம்பாதிக்கிறார் மகனுக்கே பாதருக்கு படிக்க ஒரு லட்சம் பணம் கெட்ட வேண்டி இருக்கிறது இதை சமாளிப்பதற்கு மிகவும் கஷ்டப்படதான் செய்கிறோம்.

பக்கத்து ஊர் பெண்கள் எல்லாம் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்களா? அவர்களை ஈடுபாடு கொள்ள வைத்தீர்கள்?

நேரடி பிரச்சாரம் மூலமும், துணு அறிக்கை மூலமும், அந்தந்த ஊர் பாதர்கள் மூலமும் அவர்களுக்கு எடுத்துரைத்தோம்.

இனி உங்கள் போரட்டத்தின் திட்டம் என்ன?

அகிம்சை வழிப் போராட்டம்தான். அவர்கள் அணு உலை மூடுவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.

சந்திப்பு: சின்னக்காரி