யாருடைய மாணவர்கள் தைரியசாலி என்று ஒரு அமெரிக்க பிரின்சிபலுக்கும், ஒரு இந்திய பிரின்சிபலுக்கும் போட்டி வந்துவிட்டது. அமெரிக்க பிரின்சிபல் தனது மாணவரை அழைத்து, ஓடும் படகிலிருந்து கடலில் குதிக்கச் சொன்னார். தாமதிக்காமல் அவனும் குதித்தான்.
"பார்த்தீரா...! எனது மாணவனின் தைரியத்தை..."
இந்திய பிரின்சிபல் தனது மாணவனை அழைத்து அதேபோல் செய்யச் சொன்னார். அவன், 'போடா லூசு' என்று சொல்லிவிட்டு போய்விட்டான்.
"பார்த்தீரா...! எனது மாணவனின் தைரியத்தை..."