ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?
மாணவன்: 5 இருக்கும் சார்!
ஆசிரியர்: நல்லா கேளு! முதல்லே இரண்டு கோழி தர்றேன். மறுபடியும் இரண்டு தர்றேன். இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?
மாணவன்: 5 தான் சார்!
ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்! சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?
மாணவன்: 4 சார்.
ஆசிரியர்: குட்!. இப்ப, 2 கோழி தர்றேன். பிறகு 2 கோழி தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழி இருக்கும்?
மாணவன்: 5 சார்!
ஆசிரியர்: அது எப்படிறா 5 கோழி வரும்?
மாணவன்: என்கிட்டே ஏற்கனவே ஒரு கோழி இருக்கு சார்.
ஆசிரியர்: !!!!
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- 39 இனி 31 என்றாவதா?
- வாடிய மாலைகளிலும் வாசம் கமழ்த்தும் பூக்கள்
- தொடரட்டும்...!
- எளியவனின் நீதி
- இந்திய சட்டசபை
- கருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
குட்டீஸ்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: குட்டீஸ்